Thursday, May 6, 2010

கொஞ்சம் ராவா...


குடிகாரனை விட
கொலைகாரன் மேல்
என்றாள் மனைவி
அவளை கொன்றதற்கு
இதுதான் காரணம்

தம்பதியராய் சிரிக்கிறார்கள்
விஷ்ணு,மகாலட்சுமி
பார்வதி, சிவன்
முருகன் ,வள்ளி
வண்ணப்படங்களில்
கொஞ்சம் எண்ணெய் கறை
படிந்த காலண்டர்களில்
கொழுக்கட்டைகள்
கிடைப்பதில்லை
பார்களில்

எத்தனை சுறுசுறுப்பு
அந்த குழந்தை தொழிலாளர்களிடம்
எவன் சொன்னான்
வேலையத்தவன் குடிக்கிறான் என்று
பின் அவர்களுக்கு யார்
வேலை கொடுப்பது
ஆனால் ஒன்று
“69” பற்றியும் அவனுக்கு
தெரிந்திருக்கிறது
குழந்தை தொழிலாளான்?

27 comments:

ரமேஷ் வைத்யா said...

walking on razor's edge

Paleo God said...

ராவோட ராவா..!

அகல்விளக்கு said...

நிறைய ராவா....

நல்லாருக்கு...

Santhappanசாந்தப்பன் said...

கலக்கல், கடைசி வரி என்னமோ செய்யுது!!

உண்மைத்தமிழன் said...

ராவா அடிச்சா இப்படித்தான் எழுதத் தோணும்..!

கொஞ்சம் தண்ணி கலந்து அடிண்ணே..!

வால்பையன் said...

“69” பற்றியும் அவனுக்கு
தெரிந்திருக்கிறது
குழந்தை தொழிலாளான்?


69 க்கு முன்னாடி vat ஐ சேருங்க!
தொழிலாளி, தொழிலை மாத்துற மாதிரி இருக்கு!

VISA said...

//69 க்கு முன்னாடி vat ஐ சேருங்க!
தொழிலாளி, தொழிலை மாத்துற மாதிரி இருக்கு!//

VAT- ஐ சேர்த்தால் கூடுதலாக வரி விதிப்பதாய் படுகிறது.

Starjan (ஸ்டார்ஜன்) said...

உள்ளேன் ஐயா..,

T.V.ராதாகிருஷ்ணன் said...

//“69” பற்றியும் அவனுக்கு தெரிந்திருக்கிறதுகுழந்தை தொழிலாளான்?//

!!!!!

செ.சரவணக்குமார் said...

//Starjan ( ஸ்டார்ஜன் ) said...

உள்ளேன் ஐயா..,//

இங்க என்ன அட்டன்டென்ஸ் ஆ எடுக்குறாங்க? எப்ப பார்த்தாலும் உள்ளேன் ஐயா சொல்லிக்கிட்டு இருக்கீங்க. ராஸ்கேல், என்ன இது சின்னப்புள்ளத்தனமா? கவிதை நல்லா இருக்கா, இல்லையா அத மட்டும் சொல்லுங்க.

செ.சரவணக்குமார் said...

மணிஜீ, தலைப்பே கவிதை மாதிரிதான் இருக்கு.

நேசமித்ரன் இன்னும் வரலயா? சரி சரி, பா.ரா சொன்ன மாதிரி இயற்பியல், வேதியியல் மிக்ஸ் பண்ணிட்டு இருப்பாரு. சீக்கிரம் வாங்கண்ணே இன்னுமா மூக்குல வேர்க்கல.

vasu balaji said...

ஆரம்பிச்சாச்சா?

பா.ராஜாராம் said...

//walking on razor's edge//

yes,ofcourse.

but,

இது பிடிச்சிருக்கு.

//தம்பதியராய் சிரிக்கிறார்கள்
விஷ்ணு,மகாலட்சுமி
பார்வதி, சிவன்
முருகன் ,வள்ளி
வண்ணப்படங்களில்
கொஞ்சம் எண்ணெய் கறை
படிந்த காலண்டர்களில்
கொழுக்கட்டைகள்
கிடைப்பதில்லை
பார்களில்//

ரொம்ப.

பா.ராஜாராம் said...

சரவனா,

டாடா.. :-)

அடுத்த களத்தில் சந்திப்போம்.

க ரா said...

நல்லாருக்கு ஜீ.

எல் கே said...

en moolaiku ithu puriyala ji

நேசமித்ரன் said...

நல்லாருக்கு... இது புது மொழி

//ரமேஷ் வைத்யா said...
walking on razor's edge
//

Exactly .....!

தேவன் மாயம் said...

வியப்பாக இருக்கிறது!!!

Sanjai Gandhi said...

முதல் கடைசி 4 வரிகள் ஹிஹி.. :)

சிநேகிதன் அக்பர் said...

கவிதை ரொம்ப அருமை

//சரவனா,

டாடா.. :-)

அடுத்த களத்தில் சந்திப்போம்.//

அப்போ இன்னிக்கு கும்மி இல்லையா!

Chitra said...

ஆஹா..... இப்படியும் சொல்லலாமோ?

Vidhoosh said...

//SanjaiGandhi™ said...

முதல் கடைசி 4 வரிகள் ஹிஹி.. :)
////

சஞ்சயி.. என்னய்யா சொல்ல வரீரு...
மணிஜி... கவுஜல்லாம் எழுதாதீங்கன்னு சொன்ன கேட்கிறதில்லை... இப்போ பாருங்க சின்னபுள்ள சஞ்சயி பயந்துருச்சு... சைடு டிஷ்ஷுக்கு கூப்பிட்டு குமுறினாத்தான் சரிபடுவீங்க.

அப்புறம், ரொம்ப பிரபல பதிவர்னு நினைப்போ, நேத்து பின்னூட்டங்களுக்கு தனித் தனியா பதில் சொல்றதில்லை... மெனெக்கெட்டு பேசி பஞ்சாயத்து பண்ணி இருக்காய்ங்கல்ல ... என்னா மேன் சொல்றே மொத்தமாய் நன்றி....??

Jerry Eshananda said...

Erotic.....

மரா said...

அற்புதமா இருக்கு சார் கவித.

Unknown said...

ஹி... ஹி .....

கமலேஷ் said...

ரொம்ப நல்லா இருக்குங்க....

மணிஜி said...

வழக்கம் போல் எல்லோருக்கும் ஒட்டு மொத்த நன்றி..

கேட்டுக்கொண்டதால் வித்யாவுக்கு தனியாக ஒரு ஸ்பெஷல் நன்றி..