1. உங்க ஊர்,பெயர் சொல்லுங்க.. உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?
தண்ணில பாயுரோம்...
வெயில்ல காயுரோம்.
போதைல சாயுரோம்..
என் ஊர் மாயுரம்
ஷங்கர் எடுக்கிரார் எந்திரன்.
என் பெயர் ராஜேந்திரன்..
T.T.R ஆ என்னை ஆக்க ஆசைப்பட்டார் எங்கப்பா.
ஆனா நா T.R ஆ ஆயிட்டேன் தப்பா.
2.கடைசியாக அழுதது எப்பொழுது?
இந்த டிஆர் எப்பவும் எதுக்கும் அழ மாட்டான்
மாடிலேர்ந்து கீழே விழ மாட்டான்
ஆனா இப்ப மன்சூரலிகான் குடிச்சதுக்கு நா தண்டம் அழுதேன்
3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
பேப்பர்ல எழுதுவேன் எழுத்து..
பெப்பர் சிக்கனை நீ அழுத்து..
மைல போடுவேன் கையெழுத்து...
டைல போட்டா அது தலையெழுத்து....
4).பிடித்த மதிய உணவு என்ன?
தங்கச்சி...முள்ளுல சேலை விழுந்தாலும்..சேலை முள்ளுல விழுந்தாலும்
சார்..நா பிடிச்ச மதிய உணவு என்னன்னு கேட்டேன்..
யோவ்..தண்டோரா..அதைத்தான்யா சொல்ல வர்றேன்..ஆத்துக்கு தங்கச்சி தண்ணி எடுக்க போயிருக்கு
புரியலயே சார்..
தங்கச்சி தண்ணி எடுத்துட்டு வந்தவுடனே சோத்துல தண்ணி ஊத்தி சாப்பிடுவேன்..
5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?
ரெண்டு நண்பர்கள் காட்டுக்கு போனாங்க..அப்ப திடீர்னு ஒரு கரடி வந்துச்சு.ஒருத்தன் மரத்துல ஏறிட்டான்...கரடிக்கு மரம் ஏறத் தெரியாது...இன்னொருத்தன் மூச்சை அடக்கிட்டு படுத்தானா?
சார்..இப்ப எதுக்கு இந்த கதை..
யோவ் அந்த கரடி நாந்தான்யா..
6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?
ஏன் நீ முதுகு தேச்சு விடப்போறியா?
7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?
இப்ப நீ இங்க வந்தப்ப நா எங்க பார்த்தேன்...அதை எழுதிக்க...
8. உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?
பிடிச்ச விஷயம்: எதிர்ல இருக்கிறவங்களை அடிக்கிறது
பிடிக்காத விஷயம் : அடிச்சப்புறம் கடிக்கிறது...
9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?
சரி பாதி இல்ல..அவ சரீரத்துல நான் தான் பாதி..
அவ உயிருள்ளவரை நான் உஷார்...
10.யார் பக்கத்தில் இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?
என் பக்கத்தில யாரும் நிக்க முடியாது...
11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?
நாலு வாழை இலையை இடுப்புல சுத்திகிட்டிருக்கேன்...
12.என்ன பாட்டு கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?
மச்சி...அவ மூஞ்சில துப்பினா எச்சி...
13.வர்ண பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?
சொர்ணம்..கர்ணம்..புர்....கரடி கலர்
14.பிடித்த மணம்?
கோமணம்...
15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?
உஷாதான்..ஒட்டியாணம் கேட்டு உயிரை எடுக்கிறாள்.....
16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு ?
மன்சூரலிகான்...கழுதைக்கு கருத்தடை பண்றதை பத்தி எழுதியிருந்தார்..படிச்சுட்டு பின்னங்காலால எத்திட்டு வந்தேன்..
17. பிடித்த விளையாட்டு?
திருடன்,போலிஸ்
18.கண்ணாடி அணிபவரா?
இல்லன்னா வேற எங்கயாவது கடிச்சுடுவேன்...
19.எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?
ஒரு கிரேன் ஷாட் வச்சுக்குவமா?
20.கடைசியாகப் பார்த்த படம்?
சிம்புவும்,நயனும் ஓட்டல்ல எடுத்துகிட்ட படம்..
21.பிடித்த பருவ காலம் எது?
வீட்டுக்கு போன உடனே ஊசி போட்டுக்க..இல்லன்னா செப்டிக் ஆயிடும்...
22. இப்பொழுது படித்துக்கொண்டு இருக்கும் புத்தகம்:
சிம்புவுக்கு வந்த லவ் லெட்டரையெல்லாம் அழகா பைண்ட் பண்ணி வச்சிருக்கான்..அதைத்தான்....
23.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?
என் கிட்ட ஹார்மோனியம்தான் இருக்கு...
24.உங்களுக்கு பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?
நா கடிக்கும்போது நீ கத்துன சத்தம் பிடிச்சது...கடிச்சு அரை மணி நேரமாச்சு..இன்னும் அழுதுகிட்டிருக்க..அந்த சத்தம் பிடிக்கலை..
25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?
வண்டலூர்
26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
இன்னொருவாட்டி கேளு..சொல்றேன்...
27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
விஜயகாந்த்
28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
எவ்ளொ பட்டாலும் உனக்கு புத்தி வராது போலிருக்கே...
29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?
சினிமா தியேட்டர் கக்கூஸ்...
30.எப்படி இருக்கணும்னு ஆசை?
இப்ப இருக்கிறா மாதிரிதான்
31.கணவர்/மனைவி இல்லாம செய்ய விரும்பும் காரியம் ?
சவரம் பண்றது
32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க..?
பொழைச்சு..போயிடு...