Showing posts with label செம்மொழி/மாங்கனி/கொடநாடு/விருதகிரி. Show all posts
Showing posts with label செம்மொழி/மாங்கனி/கொடநாடு/விருதகிரி. Show all posts

Monday, June 28, 2010

சொங்கியார் நேரடி ரிப்போர்ட்


புலனாய்வு பத்திரிக்கைகளில் செய்தி சொல்ல ஒரு பறவையையோ , அல்லது எதாவது கேரக்டரையோ வைத்திருக்கிறார்கள் . கழுகார் , வம்பு சாமியார் , அலெக்ஸ் பாண்டியன் ..இத்யாதிகள் . சும்மா நானும் கொஞ்சம் பேசுகிறேன்.


சொன்ன நேரத்துக்கு சொங்கி நடை போட்டு தேவாங்கார் உள்ளே நுழைந்தார் . வாய் நிறைய குமபகோணம் வெற்றிலை
சீவல் . நல்ல நாளிலேயே நாயகம் நம்மாளூ . இன்னிக்கு என்னத்தை பேசி கிழிச்சு... வாருங்கள் சொங்கியாரே..வரவேற்பில் ஏனோ திருப்தியில்லை சொங்கியாருக்கு . குறிப்பறிந்து பாக்கு மட்டை தட்டில் பன்னீர் புகையிலையை வைத்து நீட்டினோம் . அதை போட்டு கொண்டே தாங்க்ஸ் என்றார் சொங்கியார் . நம் முகத்தில் குற்றால சாரல் . கோபிக்காதீர் . சீசன் நெருங்கி விட்டதை நினைவூட்டுகிறேன் என்றார் சொங்கி .

சரி விஷயத்துக்கு வாருங்கள் என்றோம் .

இதோ . கோயில்பட்டி கடலை மிட்டாய் இருக்கிறதா?


யோவ் சொங்கி . ஒரு ரெண்டு மேட்டராவது சொல்லுமய்யா . உமக்கு தீனி போட்டு மாளாது போலிருக்கிறது .


செம்மொழி மாநாட்டின் நிறைவு உரை கேட்டீரா ? அங்கிருந்து ஆரம்பிக்கிறேன் .


சீக்கிரம் தொலயும் .


முதலில் வரிசையாக மத்திய அமைச்சர்கள் பிரணாப் , சிதம்பரம் ,ராசா என்று பெயர்களை குறிப்பிட்ட முதல்வர்
அழகிரியை விட்டு விட்டார் . துணைமுதல்வர் ஸ்டாலின் பெயருக்கு பின்னால் அழகிரியை சொன்னதை அஞ்சாநெஞ்சன் ரசிக்க வில்லை. முகத்தில் புன்னகை மிஸ்ஸிங் . அது மட்டுமல்ல . ஸ்டாலின் பெயரை சொன்னபோது உடன்பிறப்புகளின் ஆரவாரமும் , விசிலும்... அண்ணன் அப்செட் . அவர் முகம் அநியாயத்துக்கு இறுகி போய் கிடந்தது .

அதெல்லாம் தலைவர் சமாளிச்சுடுவார் . நீங்க அடுத்த மேட்டருக்கு வாங்க என்றோம் .


அந்த பால் சர்பத் என்று சொங்கியார் இழுக்க ,

கொடுத்து தொலையறோம் . மேட்டருக்கு வாங்க .


ஆட்சிக்கு வாரிசு ரெடி . ஆனால் தன் தமிழுக்கு யார் வாரிசு என்பதையும் முதல்வர் இந்த மாநாட்டில் கண்டு கொண்டு
விட்டார் . கவிதாயினிதான் அது .

அங்கு ரெண்டு கவிதாயினிகள் இருக்கிறார்களே . யாரை சொல்கிறீர் என்றோம் குறும்பாக .


மாடு கழனி தண்ணீரை உறிஞ்சுவது போல் சத்தமாக சர்பத்தை உறிஞ்சி கொண்டே

“ இந்த விகட குறும்புதான் உம்மிடம்
பிடித்தது என்று நம் தலையில் செல்லமாக குட்டினார் .

சிஐடி நகர் வீட்டம்மாவுக்கும் ஏக திருப்தியாம் . அடுத்து மந்திரி பதவிதான் என்று மிதக்கிறார்களாம்.


அதை விடுங்கள் . செம்மொழி மாநாட்டிற்கு பிறகாவது தமிழனுக்கு விடிவுகாலம் வருமா ?


என்ன இப்படி கேட்கிறீர் ? செம்மொழி மாநாட்டு மேடையிலிருந்த அத்தனை தமிழனுக்கும் இனிதான் விடிய வேண்டுமா
என்ன ? வழக்கமாக சீவி , சிங்காரித்து அறுப்பார்கள் . இந்த முறை அறுத்தாயிறுற்று . சீவி, சிங்காரித்தார்கள் .

சரி , உணர்ச்சி வசப்படாதீர் சொங்கியாரே என்றவுடன்

அப்ப கொஞ்சம் பானகம் கிடைக்குமா என்றார் சொங்கி .


மாம்பழம் கதை எதாவது ?


மாழம்பழ சீசந்தான். ஆனால் மாம்பழ கட்சிதான் கார்பைடு போட்டு பழுக்க வச்ச மாதிரி வெளிறி போயிருக்கிறது . செம்மொழி மாநாட்டில் கலந்து கொண்டாலும் தமிழ் குடிதாங்கியின் முகம் களையில்லாமல்தான் காணப்பட்டது . தான் ஆடா விட்டாலும் சதையாடாதா என்ன? புத்திரன் வேலையில்லாமல் வெட்டியாக இருப்பதை எந்த தகப்பன்தான் சகிக்க முடியும் ?


சரி அம்மா கதை ?


அம்மாவும் , கேப்டனும் சேர்வதற்கு எல்லா முயற்சிகளும் நடக்கின்றன . சீட்டு , ரேட்டு , அமவுண்டு , பதவி , தேர்தல் செலவுகள் எல்லாம் போட்டு காய்ச்சி கொண்டிருக்கிறார்கள் . கொதி வந்ததும் சியர்ஸ்தான் .


உம்ம குடி புத்தி போகாதே . வேலை நேரத்தில் குடிக்காதீர்கள் என்றோம்.


அப்படி இல்லை . சில சோர்ஸ்களிடம் செய்தி வாங்க குடித்துதான் ஆக வேண்டியிருக்கிறது . பதிவுலகம் மீண்டும் சலசலக்கும் என்கிறார்கள் .



அப்படியா ? இப்போதுதானே கொஞ்சம் அமைதியாக இருக்கிறது .


நான் அப்படித்தான் கேள்விப்பட்டேன் . இந்த முறை நீதிமன்ற காட்சிகளும் அரங்கேறலாம் .


விவரமாக சொல்லுங்களேன் .


ம்ம்..மூச்.. எனக்கு கீழ்ப்பாக்கத்தில் ஒரு சின்ன வேலை இருக்கிறது என்று சொங்கியார் விஷமமாக கண்ணடித்தபடி , நொண்டிக் கொண்டே வெளியேறினார் .