

கூகுள் சவுத் இந்தியா ஹெட் ஆராவிற்கு தொலைபேசி அழைப்பு வருகிறது
ஆரா..நான் சொல்றதை கவனமாக கேளுங்க..உங்க ஜாயிண்ட்ல இருக்கிற ஆறு பேர் பிளாக்கை நான் ஹேக் பண்ணியிருக்கேன்
வாட்..யார் நீ பிளாகரா?
பிளாகாட்...
அனானியா?மாடரேட்டரா?இல்லை டெரரிஸ்டா?
நான் ஒரு சாதாரண பின்னுட்டமிஸ்ட்
உன் டிமேண்ட் என்ன மேன்?
என் கிட்ட ஒரு சாப்ட்வேர் இருக்கு..அதை நீங்க இன்ஸ்டால் பண்ணனும்.
வொய்?அதெல்லாம் முடியாது..நீ ஹேக் பண்ண பிளாக்கெல்லாம் பயங்கர டிராபிக் வர இடம்...சரி அதை இன்ஸ்டால் பண்றதால உனக்கு என்ன யூஸ்?
எந்த லிங்கை கிளிக் பண்ணாலும் அது நான் கிரியேட் பண்ணப்போற பிளாக்குக்கு வந்துரும்..நிறைய விளம்பரம் வாங்கி அலெக்ஸா ரேங்கிங்கில சீக்கிரம் வந்துருவேன்..
அப்புறம் வேற என்ன ?
அந்த ஆறு பேரோட பிளாக்கையும் குளோஸ் பண்ணிடுவேன்..அவங்க வேற பிளாக் ஓப்பன் பண்ணக்கூடாது மிஸ்டர் ஆரா..
புல்ஷிட்..லாஜிக் இடிக்குது..உனக்குத்தெரியலையா?நம்ம ரெகவரி டீம்ல மூர்த்தியை கூப்பிடுங்க...அவர் இதை ஹேண்டில் பண்ணட்டும்
என்னது ..மூர்த்தியா?மிஸ்டர் ஆரா...அவனா?
எப்படி நாங்க பேசறது உனக்கு தெரியுது?
உங்க பக்கத்திலயே ஒரு ஜாலி காண்டு இருக்கான்.முடிஞ்சா கண்டுபிடிங்க.நான் குப்பனோ,சுப்பனோ இல்லை.தமிழுக்கு உண்மையானவன்.என்னோட சாப்ட்வேர்ல அதுக்கு புரொவிஷன் இருக்கு...அவங்க மீறி ஓப்பன் பண்ணா?
பண்ணா? எனன ஆகும்?
ஒன்னும் பெரிசா ஆகாது மிஸ்டர் ஆரா..கூகுள் சர்வர் அவுட்டாயிரும்..
மை காட்..யூ ஆர் தட் மச் டேன்சரஸ்?அப்ப எனக்கு வேலை போயிருமா?
மிஸ்டர் ஆரா..பீச்சுல நீங்க சுண்டல் விக்கலாம்...என்ன சொல்றீங்க?
யூ ஆர் எ சைபர்கிரிமினல்..
நோ..ஐயம் சைபர் இன் கிரைம்..சீக்கிரம் முடிவு பண்ணுங்க..
சரி..யார் அந்த ஆறு பேர்?
போய்யா...வம்பா?ஏற்கனவே என்னை குமுறிகிட்டு இருக்காங்க...