Showing posts with label ஜ்யோவ்ராம்/அனுஜன்யா/வாசு/பா.ரா/உண்மத்தமிழன்/கேபிள். Show all posts
Showing posts with label ஜ்யோவ்ராம்/அனுஜன்யா/வாசு/பா.ரா/உண்மத்தமிழன்/கேபிள். Show all posts

Tuesday, November 3, 2009

கவிதை பலாப்பட்டறை----பதிவர்கள் கும்மி---பாகம்- 2


ஹைக்கூ கவிதை எழுதுவது எப்படி என்று ஒரு பட்டறை நடத்தப்பட்டது.அது பற்றிய ஒரு மொக்கை பார்வை..

உங்க எல்லாரையும் பஸ்சுல வரசொன்னதுக்கு காரணம் தெரியுமா?

(கோரசாக) தெரியாது சார்

நீங்க பஸ்சுல வாங்கின டிக்கெட் பின்னாடித்தான் பட்டறை முடிஞ்சவுடனே ஹைக்கூ கவிதை எழுதணும்

தண்டோரா : சார் ,நான் வித்தவுட்ல வந்தேனே.

ஆரம்பத்துலயே கிளப்பாதய்யா..நம்ம ஊர்சுற்றிகிட்ட நேத்து டிக்கெட் இருக்கும்.அதை வாங்கிக்க.இப்ப பொத்திகிட்டு உக்காரு.

அனுஜன்யா..என் பஸ் டிக்கெட் ரொம்ப பெரிசா இருக்கே..அதுவுமில்லாம அதுல ஏற்கனவே யாரோ எழுதியிருக்காங்க.

அப்படியா?நீங்க எந்த பஸ்சுல வந்தீங்க?

ஏர்பஸ்சுல

உக்காருங்க யூத்து.எப்படியும் நீங்க எழுதறது யாருக்கும் புரியபோறதில்லை

சாரி..கொஞ்சம் அக..சாரி நாழிகை ஆயிடுச்சு..வர்ற வழியில வண்டலூர்ல ஒருத்தர் கட்டுரை தரேன்னாரு..அதான்.நான் கவிதை படிச்சுட்டு கிளம்பவா?
ஜி.எச் ல ஒரு கவிஞர் மரணவாக்குமூலம் தரேன்னாரு..இதழ் ரெடியாகிட்டு இருக்குல்ல...

சரி வாசுங்க..சீ..சீ வாசீங்க

சிறைபட்ட காற்றை
உள்வாங்கி
வெளியிட்டது
வால்குழவை

மூச்சின் வெப்பம்
தணித்தது
உள்ளாடை
வியர்வையை

மேல்பாதியில்
வந்தமர்ந்த
யட்சிணி
கீழ்பாதியை
கேட்டாள்
நடுநிசி
கனவில்
நாயூறும்
போர்வையானேன்..

வாசு..இதுக்கு அர்த்தம் அடுத்த அகநாழிகை இதழில் வருமா?

அதற்குள் உண்மைத்தமிழன் யார் கிட்டயாவது ஏ-3 சைஸ் பேப்பர் இருக்கா?

எதுக்கு?

இல்லை.பஸ் டிக்கெட்டை அதுல ஒட்டி பெரிசாக்கத்தான்..

பேப்பர் அடியில ஒட்டி அதுல உங்க பேரையும்,நம்பரையும் எழுதுங்க.உக்காருங்க..

ஹைக்கூ எழுதறது எப்படின்னு இப்ப ஜ்யோவ்ராம் சொல்லுவார்.

எல்லாருக்கும்..ம்ம் எதுக்கு எல்லாருக்கும்..அந்த வார்த்தை தேவையே இல்லை..
வணக்கம்..ம்ம்ம் வணக்கம்ன்னு சொல்லி வேஸ்ட் பண்ணாம கூட இருக்கலாம்
கையை கூப்புகிறார்.

கேபிள்..குரு ஒரு சந்தேகம்...அந்த நல்ல மீன்கள் காமெடி டிராக் நீங்க எழுதினதா?

ஜ்யோவ் கையை குறுக்கால் வீசி வாயை பொத்துகிறார்.

ஆதி...குறுக்கால பேசாதீங்கன்னு சொல்றீங்க..சரியா?

ஜ்யோவ் தலை ஆட்டி விட்டு அமர்ந்து விடுகிறார்..

மைக்கை பிடிக்கும் பைத்தியக்காரன்..இதுவரை ஹைக்கூ கவிதை எழுதுவது எப்படின்னு சுந்தர் அருமையாக வகுப்பு எடுத்தார்..அடுத்து அண்ணன் உண்மைத்தமிழன் வகுப்பு எடுப்பார்..

அண்ணே நானா?

ஆமாம் ..நீங்கதான்..ஆனா ஒரு சின்ன திருத்தம் .நீங்க எப்படி எழுதக்கூடாதுன்னு எடுக்கப்போறீங்க..

அண்ணே மன்னிச்சுடுங்க..இப்ப நான் பிஸியா ஒரு கவிதை எழுதிகிட்டிருக்கேன்..அதானால நர்சிம்..

பாஸ் எப்பவும்
நான் கடைசிகேஸ்
இப்ப முதலில்
ரேஸ்..

பரவாயில்லை நர்சிம்..பேசுங்க

பேசறதா?அதுதாங்க நான் எழுதின ஹைக்கூ

கிளிஞ்சது..அடுத்தது யாருப்பா?

கேபிள் வருகிறார்...

வாராவாரம்
சினிமா வியாபாரம்
சிக்சருக்கு சித்து
குத்துக்கு
கொத்து..

ஜ்யோவ்ராம்...உங்க யாருக்கும் கவிதை இலக்கணமே தெரியலை..பா.ராஜாராம் நீங்க வாங்க

சுந்தரா..அன்பு மக்கா..சிவகங்கையில சாப்பிட்டமே மட்டன் சுக்கா..

அது சரி நீங்க எழுதுங்க

கன்ன சுருக்கிலிருந்து
காசு கொடுத்தாள்
கூன் கிழவி

முக்கு கடையில்
வாங்கின முறுக்கு
வாசம் அவள்
இடுப்பு சுருக்கு
பையில்..

அடுத்து மும்பையிலிருந்து நையாண்டி நைனா.

தியேட்டருக்கு
கேபிள்
குவார்ட்டருக்கு
லேபிள்
அவ்வ்வ்வ்வ்..அவ்வள்வுதாங்க..யாராவது எழுதுங்க..நா ஊருக்கு போய் எதிர் கவுஜ போடறேன்..எந்தந்த வகையிலன்னா

அனுஜன்யா பற்றியும்,பற்றாமலும்

எதுங்க?

காலையில டிபன் பத்தலை.அதை சொன்னேன்

நிகழ்வொன்று
நிகழும்போது
நிகழ்ந்தது
நிகழாதென்று
சொன்னது
நிகழ்ந்தது...

ஜ்யோவ்ராம்.. சுத்தம்.இதுக்கு நீங்க என்னை...எனக்கே புரியலை..ஒருவேளை நேசமித்ரனுக்கு புரியலாம்..ஆனா நல்லவேளை .அவர் இங்க வரலை

ஜ்யோவ் உங்க கவிதையையும் படிச்சிட்டீங்கன்னா,நாங்க இருக்கிற ரெண்டு சிண்டையும் பிச்சுகிட்டு..

இந்த கவிதை இப்ப எழுதினது இல்லை.இப்பன்னா ஒரு மூணு நிமிழத்துக்கு முன்னாடின்னு வச்சுக்கலாம்.

அய்யோ..அய்யோ

பாதி படித்த எமிலி டிக்கின்ஸ்
மீதமிருந்த எல்கான்ஸா ரம்
படித்த போதையும்
மீதிக்கு குடித்த களைப்பும்
மட்டையாகிவிட்டேன்
காலையில் பார்த்த
எமிலி டிக்கின்ஸின்
நான்கு பக்கங்களில்
பச்சை நிறத்தில் பற்குறிகள்
வெளியில் சென்று
அரை போத்தல் எல்கான்ஸாவுடன்
வீடு திரும்பினேன்
என் புத்தக அலமாரியை
பீராஞ்சு கொண்டிருந்தது
அதே திருட்டுப் பூணை

இறுதியாக அண்ணன் உண்மைத்தமிழன் வருகிறார்.

அன்புள்ள
என் இனிய வலையுலக
தமிழ் பெருங்குடி மக்களே.
நான் எழுதிய இந்த ஹைக்கூ...
சாரி ஹைட்கூ
உங்களுக்கு பிடிக்கும்...

தண்டோரா..அண்ணே சூப்பர்..ஷார்ட்டா முடிச்சுட்டீங்க

இருங்கப்பா..இப்பத்தான் முன்னுரையே ஆரம்பிச்சிருக்கேன்.அதுக்குள்ளார..ஊடால,ஊடால பேசினீங்க..முருகன் வேல்கம்பை வாங்கி கண்ணை குத்திடுவேன்

சிவராமன்..அண்ணனுக்கு மூடு கிளம்பிடுச்சு.தொடருங்க அண்ணே

ஏனிந்த
ஏணிக்கு
இப்படி
ஆசை

எத்தனை
படிகள்
தனக்கென
எண்ணி
பார்க்க

இறங்கியவனை
கேட்டதாம்
ஏறிப்பார்த்து
சொல்கிறேன்
என்றானாம்

இறங்கும்போது
கேட்டதாம்
ஏறிப்பார்த்து
சொல்கிறென்
என்றானாம்

கோணிக்கு வந்த
கோணல் ஆசை
தோனிக்கு ஒரு
மசால் தோசை

குனிந்த தலையை நிமிராமல் படித்துகொண்டிருந்தவர் நிமிர்ந்து பார்த்தால்

-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
--
-

-
-
-
-
-
-
-

-
-
-
-
-

-
-
-
-
-

-
-
-
-
-
-
--
-
-
-
--
-
-
-

-

-
-






..