Showing posts with label விளம்பரம்/சுயதம்பட்டம்/தற்பெருமை/பீற்றிக்கொள்ளுதல்/. Show all posts
Showing posts with label விளம்பரம்/சுயதம்பட்டம்/தற்பெருமை/பீற்றிக்கொள்ளுதல்/. Show all posts

Wednesday, July 7, 2010

ஜெயா தொலைகாட்சி காலைமலரில் நான்


ஜெயா தொலைகாட்சி அலுவலகம் . அம்மாவின் ராசி நிறம் . பார்க்கும் இடங்களிலெல்லாம் பச்சை வண்ணம்தான் . நல்லவேளை ! பச்சை , பச்சையாக பேசவில்லை . காலை மலர் நிகழ்ச்சியில் விளம்பரத்துறை பற்றிய நிகழ்ச்சிக்கு , விருந்தினராக அழைத்திருந்தார்கள் . நான் அவ்வளவு ஒர்த் இல்லையப்பா என்று சொன்னேன் . அட ...ரொம்பத்தான் ஃபீல் பண்ணாதீங்க என்று உட்கார வைத்து விட்டார்கள் .

“எப்படி இந்த துறைக்கு வந்தீங்க ?

ஜஸ்ட் பிடிச்சுது . வந்துட்டேன் என்றேன்

சார் இந்த மாதிரி ஒன் வேர்டு ஆன்சர் சொன்னால், எப்படி நாங்க அரை மணி நேரத்தை கடத்தறது ? இந்த ஒரு கேள்விக்கே ஒரு மணி நேரம் பேசணும் என்றார் சரவணன் . நிகழ்ச்சி தயாரிப்பாளர் . வாழ்க கலைஞர் என்று சத்தமாக கோஷம் போட்டால் அங்கிருப்பவர்கள் ரியாக்‌ஷன் எப்படி இருக்கும் என்று ஒரு நினைப்பு ஓடியது . உள்ளேயே சமாதி கட்டி , அதற்கும் பச்சை பெயிண்ட் அடித்து விடுவார்கள் . என் பிளாக் ஐடி கேட்டார்கள் . சொன்னேன். ஜெயலலிதாவிடம் நான் கேட்ட 32 கேள்விகளை படித்தால் கன்ஃபார்ம் சமாதி

கொஞ்சம் கஷ்டப்பட்டுதான் பேச வேண்டியிருந்தது . பத்து மணிக்கு மேல் என்றால் பிரச்சனையேயில்லை . ஏன் என்றால் நான் பேசப் போவதில்லை. உள்ளம் பேசுமே...moreeeeeeeeee... (இந்த பொன்னான தருணத்தில் பத்து மணிக்கு மேல் என் மொக்கைகளை சகித்துக் கொண்ட அன்பு உள்ளங்களுக்கு நன்றியையும் ,அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்ள கடமை பட்டிருக்கிறேன் .)

பேட்டி நாளை வியாழன் காலை மலர் நிகழ்ச்சியில் (08/07/2010) ஒளிபரப்பாகும் . நேரம் காலை 8.00 மணியளவில்

...........................................................................................................................................................................