
இவரை உங்களுக்கு தெரியாமல் இருக்கும் சாத்தியம் மிக குறைவு. தினம் காலையில் நீங்கள் கணினியை திறந்ததும், அல்லது வரி விளம்பரங்களிலோ ,அங்கு சிரிப்பது இவர் எழுத்துக்களே. என்னால் எழுதாமல் இருக்கவே முடியாது என்று சொல்லும் இவருக்கு எழுத ,படிக்க தெரியாது என்பதுதான் விசேஷம் . கெட்ட வார்த்தையகராதி ஒன்றும் வெளியிட்டுருக்கிறார் . அதை பற்றிய கலந்துரையாடல் ஒன்றும் “உள்” விளையாட்டரங்கில் நடை பெற இருக்கிறது. செம்மொழி மாநாட்டில் செருப்பு மாலையிட்டு சிறப்பிக்கப்பட இருக்கும் இவர் எழுதிய கதைதான் பீடி . பீடி உருவான விதம் பற்றி அவருடன் ஒரு நேர்காணல்
முதல்ல உங்க பேர் சொல்லுங்க ?
முதல்ல உங்க பேர் சொல்லுங்க ?
கோணவாயன்ங்கிற பேர்ல எழுதறேன்.
நல்ல நேரான பேராத்தான் இருக்கு . எப்ப முதல்ல எழுத ஆரம்பிச்சீங்க?
நான் பொறந்தவுடனே கக்கா போனேன் . அது “அ” மாதிரி இருந்துச்சாம் . அடுத்து வாட்டி போனேன் . அது “ஆ “ . இப்படியே இ, ஈ...
அப்ப அன்னிக்கு 12 வாட்டி போனிங்க அப்படித்தானே ?
இல்லை . 30 வாட்டி . க ,ங , சன்னு கழிஞ்சு கிட்டேயிருந்துச்சு
கொஞ்சம் வெற்றிலை காம்பை வச்சுப் பார்த்திருக்கலாம் . முதல்ல எழுதின கதையை பத்தி சொல்லுங்களேன்
இப்ப பீத்துணி . அது ஒரு பின்னநவீனத்துவ கதை . அடுத்து ஆய்க்கறைன்னு ஒன்னு எழுத உத்தேசம் .
சரி உங்க பீடி கதையை பத்தி சொல்லுங்க . பீடின்னு பேர் வச்சதுக்கு எதாவது காரனம் உண்டா ?
பீடி நமக்கு ரொம்ப விசுவாசமான பொருள். கொஞ்சம் பொஸசிஸ்வான வஸ்து . அடிக்கடி அணைஞ்சிடும் . புதுசா ,புதுசா தீக்குச்சி தேவைப்படறாதாலே , அதை வேற மாதிரி உருவகப்படுத்தறவங்களும் இருக்காங்க . சரி கதைக்கு வருவோம்.
ஆதி அந்தமா சொல்லனும்னா பீடி கதை மதுரை ஒத்தகடை நரசிம்மர் கோயில் வாசல்ல தொடங்குது . அங்க மஸ்கோத்து அல்வா கடை போட்டிருக்கிற தேவேந்திரனுக்கும் , மைக் செட் வாடகை கடை வச்சிருக்கிற சிங்கமுகத்துக்கும் ஒரு சின்னப் பிரச்சனை . இந்தியாவின் தேசிய பறவை பெயர் உங்களுக்கு தெரியுமா ?
அதுல பீடி எங்க வருது ?
நீங்க நினைக்கறாப்ல பீடிங்கிறது அந்த லாகிரி வஸ்து இல்லை. பீடிகைங்கிற பொருள்ல இது வருது . துண்டு பீடி, சுட்ட பழம், சுடாத பழம்ன்னு சில பல குறியீடுகளை உள்ளடக்கி அந்த கதை புனையப்பட்டிருக்கும் .
சரி . ஏன் சண்டை வந்துச்சு ?
அதை ஏன் சண்டைன்னு கொச்சைப்படுத்தறீங்க ? எளக்கிய சர்ச்சைன்னு சொல்லுங்க .
ஏதோ ஒரு இழவு . புலவர்களுக்குள் ஏன் சர்ச்சை ? இணைந்து தமிழ் தொண்டு ஆற்றலாமே ?
ஏன்யா தமிழ் என்ன டீயா ? இல்லை தமிழை வெள்ளாவில ஊற வச்சிருக்கீங்களா? அதை கொஞ்சம் வாழ விடுங்கய்யா . அடுத்த மாசம் தமிழ் மரணவாக்குமூலம் வேற கொடுக்கணும் . அட்லீஸ்ட் அதுவரைக்குமாவது .
பீத்துணி கதையோட கரு என்ன ?
பன்னி மேய்க்கிறவன் ஒருத்தனோட கோமணம் காணாம போகுது . அதை தேடி போகும் அவன் பயண அனுபவங்கள்தான் கதை .
எளக்கிய உலகத்துல நிறைய சர்ச்சையை கிளப்ப போகுதுன்னு சொல்லுங்க
நீங்க எழுதறதுக்கு வரவேற்பு எப்படியிருக்கு?
நல்லாத்தான் இருக்கு . என்ன சாணி நாத்தம்தான் தாங்கலை.
ஏங்க?
பின்ன கரெக்டா குறி பார்த்து மூஞ்சியில இல்ல அடிக்கிறானுங்க வவுத்தெரிச்சல் பிடிச்சவனுங்க
ஆய்க்கறை கதையை பத்தி கொஞ்சம் சொல்ல முடியுமா?
பீத்துணி கதையோட நீட்சியாத்தான் இந்த கதையும் . பீத்துணியோட படிமங்கள் இதிலும் இருக்கும் . இதுவும் ஒரு எடுபட்ட எழுத்தாளனோட பதிவுதான் .
அப்ப கிட்ட தட்ட சுயசரிதைன்னு சொல்லுங்க .
கிட்ட வந்து தட்டு . இல்ல எட்ட இருந்து தட்டு . தட்டறதுன்னு முடிவாயிடுச்சுல்ல.
ரொம்ப சலிப்பா பேசறீங்க . எளக்கிய உலகம் உங்களுக்குரிய மருவாதையை கொடுக்கலைங்கிற வருத்தம் தொனிக்குது .
ஒரு மனுஷன் கேள்வி கேட்டா , பதில் சொல்றது தப்பா ? சில பேரை பார்த்து பேர் என்னன்னு கூட கேக்க மாட்டேங்கிறாங்கன்னு பொச்சரிப்பு . இவனை என்ன பேர் கேக்கறது . இதான் இவன் பேரா இருக்குன்னு போயிடறாங்கன்னு வவுத்தெரிச்சல் .
உங்க வாசகர்களுக்கு என்ன சொல்ல விரும்பறீங்க ?
கேள்வி கேக்கறவனை நம்பாதீங்க . பதில் சொல்றவனையும் நம்பாதீங்க . உங்களையும் நம்பாதீங்க . எவனையும் நம்பாதீங்க .
அப்ப உங்க வாசகர்கள் கதி ?
அரணாக்கயிறுல நாண்டுகிட்டு சாக வேண்டியதுதான்