Showing posts with label ஒன்று/இரண்டு/பெண்டு. Show all posts
Showing posts with label ஒன்று/இரண்டு/பெண்டு. Show all posts

Tuesday, July 21, 2009

அர்த்தமில்லாத கதைகள்----2

அக்கா...

என்ன?

நா போயிட்டு ஒரு நாள்ல திரும்பிடறனே..

எனக்கும் அந்த ஆளுக்கும் ஆகாதுன்னு தெரியுமில்ல..

தெரியும்..இருந்தாலும்,ஊர் உலகம்னு ஒண்ணு இருக்கே..

இங்க பாருடி..எனக்கு அதை பத்தி கவலை இல்லை...பழசு எல்லாம்
மறந்துட்டியா நீ? பட்டு புடவைக்குள்ள ஒளிச்சு வச்சிருந்த வீட்டு பத்திரத்தை எடுத்து ரெட்டியார் கிட்ட கொடுத்து என் மானத்தை வாங்கினானே....அன்னையோட அந்தாளை வெட்டி விட்டுட்டேன்

இருக்கலாம்கா..ஆனா நமக்கு அவரு எவ்வளவோ உதவியும் செஞ்சிருக்காரு..அதை நினைச்சு பார்க்ககூடாதா?

என்ன பெரிய உதவி..பதிலுக்கு எவ்ளோ பணத்தையும் அடிச்சிருக்கான்.குத்தகை பணத்தையும் தராம,வயலையும் அவன் பேருக்கு எழுதிகிட்டானே..அதுக்கு என்ன சொல்றே?மதுரை ஆண்டியாரை கூட்டு சேர்த்துகிட்டு தோட்டத்தையே வளைக்க பார்த்தானே..அதுக்கு என்ன சொல்றே?

அக்கா என் நிலைமையையும் கொஞ்சம் பாரு..ஒரு கடை,கண்ணிக்கு போக முடியல...ஒரு காது குத்து,கல்யாணம்னு போக முடியுதா?எல்லாரும் நாக்கை புடுங்கறா மாதிரி பேசறாங்க..இம்புட்டு புடைவையும்,நகையும் இருந்து என்ன பிரயோசனம்?நீயும் நானும் போட்டுகிட்டு போஸ் கொடுத்ததுதான் மிச்சம்...

அடிப் போடி..பைத்தியம்..நீ பேப்பர் படிக்கிறது இல்லை..அட..”நம்ம” டிவியை கூட பாக்குறது இல்லை..சுப்ரீம் கோர்ட்லயே அதை சரின்னு சொல்லிட்டாங்கடி.போய் இளநீயை வெட்ட சொல்லு..
-------------------------------------------------------------------------------------------------

என்னங்க ..நாந்தான்..

ம்ம்..சொல்லு..

எவ்வளவு சேர்ந்திருக்கும்?

அதை எண்ணி முடிக்க இன்னும் அஞ்சு வருஷம் ஆகும்

சரி..அங்க,இங்கன்னு அலைஞ்சீங்க.. கூட அலையறவளை தொலைச்சிடுவேன்..