தேவையானப்பொருட்கள்:
யாராவது எழுதிய பழைய பதிவுகள்- 2 (திருடியதாய் இருந்தால் உகந்தது)
கூகிள் ஸ்டோரில் வாங்கிய பாடாவதி இணைப்பு அல்லது தொடுப்பு
கடுப்புபருப்பு - 1 டேபிள்ஸ்பூன்(யாராவது “நீ” பெரிய பருப்பான்னு கேட்டால்?
உளுத்துப்போன பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
கூரான பற்கள் - 32 (நற நறன்னு கடிக்க)
புளி - ஒரு நெல்லிக்காயளவு(வயித்துல கரைக்கரதுக்கு)
விளக்கெண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்( மாந்தத்துக்கு நல்லது)
கடுகு - அது பின்னூட்டத்தில் தாளிக்கறதுக்கு)
வேப்பிலை - சிறிது (அடிக்கறதுக்கு)
உப்பு - கொஞ்சம் உறைக்கறதுக்கு
கொழுப்பு - நிறைய தேவைப்படலாம் (நல்ல கொழுப்புதான். திருப்பி தாக்கறதுக்கு)
செய்முறை:
பழைய பதிவுகளை கண்ணில் விட்டுக் கொண்டு பார்க்க வேண்டும். அதில் தாளிக்க எதாவது கிடைக்கிறதா என்று ஆராய வேண்டும். நிச்சயம் கிடைக்கும். முயற்சிதான் முக்கியம்.
அப்புறம் சமீபத்திய இடுகைகளையும் நோக்க வேண்டும். நிச்சயம் அதில் உங்களுக்கு ஒரு க்ளூ கிடைக்கும். அப்புறம் என்ன? வறட்டு மொளகாய் சட்னி ரெடி. முக்கியமான விஷயம். படிக்கிறவனுக்கு பேதி புடுங்க வேண்டும். அது சீதா பேதியாகவோ அல்லது சாதா பேதியாகவோ இருக்கலாம்.
என்ன கொடுமைன்னா? உடனே உங்களுக்கு பதில் உபசாரத்திற்காக அந்த பழைய சோறு பார்ட்டிகள் வேறு எதையாவது கலந்தும் சட்னி அரைப்பார்கள்.
இப்ப வறட்டு மொளகாய் சட்னி ரெடி. தமிழ் மணத்தோடு பறிமாறுங்கள். நிறைய பேர் வந்து மொய் வைப்பார்கள். சிலர் இலைக்கு அடியிலும் வைக்கலாம்.
டிஸ்கி: இது முற்றிலும் சமையல் குறிப்பு மட்டுமே. கொஞ்சம் பின் நவீனத்துவம் கலந்து என்.ஆர். ஐ களுக்காக எழுதப் பட்டது. தயை கூர்ந்து தனிப்பட்ட பெயர்களையும், அரசியலையும் தவிர்க்குமாறு சாப்பிட வருபவர்களை கேட்டுக் கொள்கிறேன்.

”புநகோ” என்றால் என்னவென்று தெரியுமா உங்களுக்கு?எழுத்துக்களை தனித்தனியா பிரித்தும், விரித்தும் அர்த்தம் எடுத்துக்கொள்ளலாம்..ஆனால் உண்மையில் ”புநகோ” மொசாம்பிக் மொழியில் வெளிவந்த ஒரு நூல் ..கிட்டதட்ட 3000 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து இப்போது சிதைந்து போகும் அபாயத்தில் இருக்கும் ஒரு பரிதாப வஸ்து..
இரண்டு வாசல் இருக்கும் ஒரு வீடு..முன் வழி மற்றும் பின் வழி..முன் புறம் நுழைந்தால் பின் புறமும் வெளியேறலாம்..ஆனால் பின் புறம்??அது இலக்கணம் மீறும் விதி என்று வகுக்கப்பட்டுள்ளது....எக்ஸ்ட்ரா லார்ஜ் எலாக்ஸ்டிக் ஜட்டியில் இதைத்தான் விரிவாக உவ்வே எடுக்க உள்ளோம்..எச்சரிக்கை..அவாமின் கைவசம் இருக்கிறதா?
தம்பிக்கு எந்த ஊரு என்று கேட்டால் “அது இதுக்கு” பொருந்தாது...அட தம்பியுடையான் படைக்கு அஞ்சான்” அப்படி சொல்லாமா? ம்ஹீம்...இது பற்றி மொசாம்பிக் இலக்கியத்தில் “முன்,பின்,மேல் நவினத்துவங்களில் விரிவாக பார்க்கலாம்..
முன்... ஜட்டி என்றும் ,பின்.. பேண்டிஸ் என்றும் குறியீடுகள் சொல்கிறது..அப்ப மேல்...இல்லை முன் மேல் எதுவென்று யாராவது “கச்சை”கட்டி கேட்கும் பட்சத்தில் இச்சை வருகிறது....ஆனால் கட்டை உடைத்து பார்க்கும் பட்சம் மேல் முன் நவினத்துவம் ஒரு கேள்விக்குறி போல் தொங்கி விடும் அபாயமும் இருக்கிறது.. இதை பட்டவர்த்தனமாய் சொல்வதுதான் ”புநாகோ”...
ஆலயத்தின் உள்ளே 50 பக்தர்கள்..வெளியே 500 பிச்சைகாரர்கள்..இப்படி ஒரு விதி...இந்த நாட்டில்தான்...மொசாம்பிக்கில் ஒவ்வொரு பிச்சைக்காரனும் விபச்சாரம் செய்கிறான்..ஆமாம்...அங்கே பிச்சை எடுத்தல் விபச்சாரம் செய்வதுபோல்...
எதையும் குடி..யாரையும் அடி...முன்,பின் எங்கும்....அந்த கலாசார உணர்ச்சி இங்கு எப்போ வரும்...ஒரு மழை நாளில் நான் சந்தித்த ஒரு விலைமகளின் உண்மை பெயர் மகாலட்சுமி இல்லை..பின் என்ன? அதை நான் எழுதினால் நான் அந்த பெயரை களவாடினேன் என்று கீழ்பாக்கத்திலிருந்து ஒரு பிதற்றல் வரும்.....
கத்தரிக்காய் கறி செய்ய மட்டும்தான் என்று ஏன் நினைக்க வேண்டும்..அது ஒரு சிறந்த கருத்தடை சாதனம்...என் எழுத்தும் அப்படித்தான்..வெண்டைக்காயில் ”வெ” யை வெட்டி விட்டு வெறோரு எழுத்தை “பு’குத்தினால் என்ன? ஒலியில் சிறிய மாற்றம் அவ்வளவே..ஆனால் அதற்காய் அலையாதார் உண்டா என்ன?
மலச்சிக்கலை போல்தான் மனச்சிக்கலும்...என்னை ஒரு மன நிலை பிறழ்ந்தவன் என்று அழைத்துக் கொள்ள அனுமதிக்காத தேசம்..என்ன தேசம்....இப்படித்தான் ஒரு முறை என் டிராயரில் இருந்த கருத்தடை மாத்திரையை ஒரு பித்தன் களவாடி போய் விட்டான்..என்ன ஆகும் என்று மாத்ரூபூதத்திடம் கேட்டேன்..சிரித்துக் கொண்டே குதிரைக்கு கொள்ளுக்கு பதில் சுண்ட கஞ்சி கொடுத்தால் குதிரை குட்டியா போடும்..முட்டிதான் போடும்...
எழுத்தின் வெற்றி...விருதிலா? இல்லை ராயல்டியிலா? என்னை கேட்டால் சுகித்து எழுதலில்தான் என்பேன்...இரவில் கொட்டமடிக்கும் கூத்தாடிகளிடம் மடிப்பிச்சை கேட்டு துரிதஸ்கலிதம் செய்யும் பெட்டை எழுதிகளுக்கு தெரிய வாய்ப்பில்லை..தெரியவும் வேண்டாம்...கொடுப்பதை கொடு...முடிந்தவரை உன் வீட்டு குப்பையை அள்ளிவிடுகிறேன்...இவர்கள் என்ன முனிசிபாலிட்டியா? தீபாவளி படத்தில் வாய்ப்பு கொடு..பணம் வேண்டாம் ..மீந்து போகும் பலகாரம் மட்டுமே போதுமானது...இதற்கு ”கண்ணகி” சிலைக்கு அடியில் 5 ரூபாய்க்கு ”கையில்” சுண்டலும் ,10 ரூபாய்க்கு ”வாயில்” செட் தோசையும் வாங்கி சாப்பிடலாம்....
உனக்கும்,எனக்கும் சண்டை....அவிழ்ந்து போச்சு...மூதேவி கொண்டை....
இதில் என்ன கொறச்சீற்றம் ....ஒரு நண்டையும் காணும்....ஆனாலும் சிண்டை பிடிச்சு ஆட்டிகிட்டு த்தான் இருக்கிறார்கள்..அம்மாவாசைக்கு அடுத்த நாள் நண்டு சினையா கிடைக்கும்....தினம் அம்மாவாசையா இருந்தால் அடுத்த நாள் எப்ப வரும்??
மெசபடோமியாவில் “க்மாஸ்டா” என்ற உலகப் புகழ் பெற்ற(எங்க அளவுக்கு இல்லை என்றாலும்) ஒரு கவி இருந்தார்..அவரின் ஒரு கவிதை நம்மூர் பார்ட்டி
”யாரோச்சீ” யின் மொழிபெயர்ப்பில்....
“நொண்டி மாட்டை.வச்சுகிட்டு
வண்டி ஓட்ட முடியுமா?
இல்ல..சண்டி மாட்டைதான்
சவாரிக்கு பூட்டலாமா??
அட..ரெண்டையும் அடிமாடாக்கி
அண்டை மாநிலத்துக்கு
அனுப்பிடுங்க..
தமிழனுக்கு தவிடாவது
மிஞ்சட்டும்...
இப்பல்லாம்..
தவிடுலேர்ந்து
எண்ணெய் எடுக்கிறாங்கவோய்..