Saturday, May 29, 2010

கழிவிறக்கம்



இவரை உங்களுக்கு தெரியாமல் இருக்கும் சாத்தியம் மிக குறைவு. தினம் காலையில் நீங்கள் கணினியை திறந்ததும், அல்லது வரி விளம்பரங்களிலோ ,அங்கு சிரிப்பது இவர் எழுத்துக்களே. என்னால் எழுதாமல் இருக்கவே முடியாது என்று சொல்லும் இவருக்கு எழுத ,படிக்க தெரியாது என்பதுதான் விசேஷம் . கெட்ட வார்த்தையகராதி ஒன்றும் வெளியிட்டுருக்கிறார் . அதை பற்றிய கலந்துரையாடல் ஒன்றும் “உள்” விளையாட்டரங்கில் நடை பெற இருக்கிறது. செம்மொழி மாநாட்டில் செருப்பு மாலையிட்டு சிறப்பிக்கப்பட இருக்கும் இவர் எழுதிய கதைதான் பீடி . பீடி உருவான விதம் பற்றி அவருடன் ஒரு நேர்காணல்


முதல்ல உங்க பேர் சொல்லுங்க ?



கோணவாயன்ங்கிற பேர்ல எழுதறேன்.


நல்ல நேரான பேராத்தான் இருக்கு . எப்ப முதல்ல எழுத ஆரம்பிச்சீங்க?


நான் பொறந்தவுடனே கக்கா போனேன் . அது “அ” மாதிரி இருந்துச்சாம் . அடுத்து வாட்டி போனேன் . அது “ஆ “ . இப்படியே இ, ஈ...


அப்ப அன்னிக்கு 12 வாட்டி போனிங்க அப்படித்தானே ?


இல்லை . 30 வாட்டி . க ,ங , சன்னு கழிஞ்சு கிட்டேயிருந்துச்சு


கொஞ்சம் வெற்றிலை காம்பை வச்சுப் பார்த்திருக்கலாம் . முதல்ல எழுதின கதையை பத்தி சொல்லுங்களேன்


இப்ப பீத்துணி . அது ஒரு பின்னநவீனத்துவ கதை . அடுத்து ஆய்க்கறைன்னு ஒன்னு எழுத உத்தேசம் .


சரி உங்க பீடி கதையை பத்தி சொல்லுங்க . பீடின்னு பேர் வச்சதுக்கு எதாவது காரனம் உண்டா ?


பீடி நமக்கு ரொம்ப விசுவாசமான பொருள். கொஞ்சம் பொஸசிஸ்வான வஸ்து . அடிக்கடி அணைஞ்சிடும் . புதுசா ,புதுசா தீக்குச்சி தேவைப்படறாதாலே , அதை வேற மாதிரி உருவகப்படுத்தறவங்களும் இருக்காங்க . சரி கதைக்கு வருவோம்.

ஆதி அந்தமா சொல்லனும்னா பீடி கதை மதுரை ஒத்தகடை நரசிம்மர் கோயில் வாசல்ல தொடங்குது . அங்க மஸ்கோத்து அல்வா கடை போட்டிருக்கிற தேவேந்திரனுக்கும் , மைக் செட் வாடகை கடை வச்சிருக்கிற சிங்கமுகத்துக்கும் ஒரு சின்னப் பிரச்சனை . இந்தியாவின் தேசிய பறவை பெயர் உங்களுக்கு தெரியுமா ?


அதுல பீடி எங்க வருது ?


நீங்க நினைக்கறாப்ல பீடிங்கிறது அந்த லாகிரி வஸ்து இல்லை. பீடிகைங்கிற பொருள்ல இது வருது . துண்டு பீடி, சுட்ட பழம், சுடாத பழம்ன்னு சில பல குறியீடுகளை உள்ளடக்கி அந்த கதை புனையப்பட்டிருக்கும் .


சரி . ஏன் சண்டை வந்துச்சு ?


அதை ஏன் சண்டைன்னு கொச்சைப்படுத்தறீங்க ? எளக்கிய சர்ச்சைன்னு சொல்லுங்க .


ஏதோ ஒரு இழவு . புலவர்களுக்குள் ஏன் சர்ச்சை ? இணைந்து தமிழ் தொண்டு ஆற்றலாமே ?

ஏன்யா தமிழ் என்ன டீயா ? இல்லை தமிழை வெள்ளாவில ஊற வச்சிருக்கீங்களா? அதை கொஞ்சம் வாழ விடுங்கய்யா . அடுத்த மாசம் தமிழ் மரணவாக்குமூலம் வேற கொடுக்கணும் . அட்லீஸ்ட் அதுவரைக்குமாவது .

பீத்துணி கதையோட கரு என்ன ?

பன்னி மேய்க்கிறவன் ஒருத்தனோட கோமணம் காணாம போகுது . அதை தேடி போகும் அவன் பயண அனுபவங்கள்தான் கதை .


எளக்கிய உலகத்துல நிறைய சர்ச்சையை கிளப்ப போகுதுன்னு சொல்லுங்க


நீங்க எழுதறதுக்கு வரவேற்பு எப்படியிருக்கு?


நல்லாத்தான் இருக்கு . என்ன சாணி நாத்தம்தான் தாங்கலை.


ஏங்க?


பின்ன கரெக்டா குறி பார்த்து மூஞ்சியில இல்ல அடிக்கிறானுங்க வவுத்தெரிச்சல் பிடிச்சவனுங்க


ஆய்க்கறை கதையை பத்தி கொஞ்சம் சொல்ல முடியுமா?



பீத்துணி கதையோட நீட்சியாத்தான் இந்த கதையும் . பீத்துணியோட படிமங்கள் இதிலும் இருக்கும் . இதுவும் ஒரு எடுபட்ட எழுத்தாளனோட பதிவுதான் .


அப்ப கிட்ட தட்ட சுயசரிதைன்னு சொல்லுங்க .


கிட்ட வந்து தட்டு . இல்ல எட்ட இருந்து தட்டு . தட்டறதுன்னு முடிவாயிடுச்சுல்ல.


ரொம்ப சலிப்பா பேசறீங்க . எளக்கிய உலகம் உங்களுக்குரிய மருவாதையை கொடுக்கலைங்கிற வருத்தம் தொனிக்குது .


ஒரு மனுஷன் கேள்வி கேட்டா , பதில் சொல்றது தப்பா ? சில பேரை பார்த்து பேர் என்னன்னு கூட கேக்க மாட்டேங்கிறாங்கன்னு பொச்சரிப்பு . இவனை என்ன பேர் கேக்கறது . இதான் இவன் பேரா இருக்குன்னு போயிடறாங்கன்னு வவுத்தெரிச்சல் .


உங்க வாசகர்களுக்கு என்ன சொல்ல விரும்பறீங்க ?


கேள்வி கேக்கறவனை நம்பாதீங்க . பதில் சொல்றவனையும் நம்பாதீங்க . உங்களையும் நம்பாதீங்க . எவனையும் நம்பாதீங்க .


அப்ப உங்க வாசகர்கள் கதி ?


அரணாக்கயிறுல நாண்டுகிட்டு சாக வேண்டியதுதான்


60 comments:

மணிஜி said...

இது யாருக்கும் எதிர்வினை இல்லை.

அத்திரி said...

ஏன் இந்த கொலைவெறி அண்ணே

யுவகிருஷ்ணா said...

:-)

பின்னூட்ட ஃபாலோ அப்புக்கு

Vidhoosh said...

என்ன எழவாப் போச்சு?


//ஒரு எடுபட்ட எழுத்தாளனோட பதிவுதான் .

அப்ப கிட்ட தட்ட சுயசரிதைன்னு சொல்லுங்க .
////


:))

க ரா said...

மணிஜீ ஒங்க வீட்டுக்கு இன்னுமா ஆட்டோ வராம் இருக்கு.

butterfly Surya said...

அய்யோடா....

butterfly Surya said...

இந்த பதிவையும் படியுங்கள்..

http://chudachuda.blogspot.com/2010/05/blog-post.html

இரும்புத்திரை said...

கா‌ய்க‌றி பா‌ல் குழ‌ம்பு

தேவையானவை
உருளைக் கிழங்கு - 2
கேரட் (சிறியது) - 1
காலிஃப்ளவர் துண்டுகள் - 1 கப்
தேங்காய் - அரை மூடி
பிரிஞ்சி இலை, கிராம்பு, ப‌ட்டை - ‌சி‌றிது
தேங்காய் எண்ணெய் - 1 தே‌க்கர‌ண்டி
பெரிய வெங்காயம் - 3
பட்டாணி - 1 கப்
நூல்கோல் - 1
பூண்டு - 6 பல்
பச்சை மிளகாய் - 5
த‌னியா தூ‌ள் - 1/2 தே‌க்கர‌ண்டி
உப்பு - தேவையான அளவு

செ‌ய்யு‌ம் முறை

எ‌ல்லா‌க் கா‌ய்க‌றிகளையு‌ம் நறு‌க்‌கி வை‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம்.

வெங்காயம், பூண்டைத் தோலுரித்து நறுக்கிக் கொள்ளவும்.

தேங்காயைத் துருவி, கெட்டிப் பாலையும், இரண்டாம் பாலையும் தனித் தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும்.

எல்லாக் காய்களையும், கீறிய பச்சை மிளகாய், மசாலாப் பொருள்களையும், இரண்டாம் தேங்காய்ப் பாலுடன் கலந்து, ஒரு பெரிய பாத்திரத்தில் போ‌ட்டு 15 ‌‌நி‌மிட‌ம் வேக ‌விடவு‌ம்.

வெந்த காய்கறிகளை லேசாக மசித்துக் கொள்ளவும்.

மசித்த காய்கறிகளுடன் கெட்டியான தேங்காய்ப் பால், உப்பு, தேங்காய் எண்ணெய் சேர்த்து, திறந்த பாத்திரத்தில் வைத்து, 5 நிமிடங்கள் வேக ‌விடவு‌ம்.

இதை அப்படியே பீத்துணி மீது கொட்டி விடவும்.கரை கொஞ்ச நாளில் காணாமல் பொய் விடும்

எறும்பு said...

நல்லா இருக்கு... கும்மி அடிக்க யாராவது இருக்கீங்களா

மணிஜி said...

அரவிந்த் கறை நல்லது . சர்ஃப் எக்ஸெல்..

இரும்புத்திரை said...

அண்ணா இன்னொரு சமையல் குறிப்பு இருக்கு.அதை சாப்பிட்டா வரவே வராதாம்.வந்தா தானே கறை இலக்கியம் எல்லாம்.

மணிஜி said...

ஒரு வாசல் மூடினால் , இன்னொன்று திறக்கப்படும். தேவன் சொன்னது..

இரும்புத்திரை said...

அதுக்கும் மருந்து கண்டுப்பிடிச்சாச்சு.ஒரே வழி சிமென்ட் தான்.போட்டு எல்லா பக்கமும் அடைச்சிருவோம்.

யுவகிருஷ்ணா said...

//ஒரு வாசல் மூடினால் , இன்னொன்று திறக்கப்படும். தேவன் சொன்னது..
//

என்னா டைமிங்? :-)

அது சரி(18185106603874041862) said...

//
அரணாக்கயிறுல நாண்டுகிட்டு சாக வேண்டியதுதான்
//

இல்லாதவங்க என்ன ஓய் பண்றது?? எல்லாருக்கும் இலவச அரணாக்கயிறு தர்ற திட்டம் இருக்கா??

எறும்பு said...

//எல்லாருக்கும் இலவச அரணாக்கயிறு தர்ற திட்டம் இருக்கா??//

செம்மொழி மாநாட்டுல தராங்களாம்
:)

இரும்புத்திரை said...

லக்கி ஆமால்ல அங்க மூடிட்டாங்க இனி நமக்கு இது தான் போக்கிடம்.

லக்கி இங்கேயும் என் பெயர்ல கமெண்ட் போடுறது யாரு நீங்களா அதிஷாவா இல்ல தண்டோ"ராவா"

இரும்புத்திரை said...

//அங்க மஸ்கோத்து அல்வா கடை போட்டிருக்கிற தேவேந்திரனுக்கும் , மைக் செட் வாடகை கடை வச்சிருக்கிற சிங்கமுகத்துக்கும் ஒரு சின்னப் பிரச்சனை .//

இது என்ன புது கதை.இதை விளக்காம கதை வேற எங்கேயோ போகுது.

மணிஜி said...

என் பேர்லயே யாரோ கமெண்ட் போடறாங்க ..(எல்லா இடத்துலையும்)

இரும்புத்திரை said...

சரி எனக்கு டாக்குமெண்டேஷன் வேலை இருக்கு.கதையை அப்பாலிக்கா வந்து கேட்டுக்கிறேன்.

இந்த பதிவு போட்டது கூட கேபிள் தானே?

உண்மைத்தமிழன் said...

எல்லாத்தையும் எழுதித் தீர்த்துட்டு யாருக்கும் எதிர்வினை இல்லைன்னு சொன்னா எப்படிங்கண்ணா..?

உண்மைத்தமிழன் said...

[[[Vidhoosh(விதூஷ்) said...

என்ன எழவாப் போச்சு?

//ஒரு எடுபட்ட எழுத்தாளனோட பதிவுதான். அப்ப கிட்டதட்ட சுயசரிதைன்னு சொல்லுங்க.////

:))]]]

மேடத்துக்கு இருக்குற தைரியம்கூட இங்க யாருக்கும் இல்லை..!

என்னண்ணே நான் சொல்றது..? மேடம் சொன்னது சரிதானே..?

உண்மைத்தமிழன் said...

இரும்புத்திரை இந்தக் கறையைப் போக்குறதுக்கு எதுக்கு இவ்ளோ சிரமம்..?

ஒரு குவார்ட்டரை வாங்கி அதுல கொட்டி பத்த வைச்சிர வேண்டியதுதான..?

உண்மைத்தமிழன் said...

யோவ்.. இன்னாங்கய்யா இது உங்களோட ஒரே ரோதனையா போச்சு..

இப்ப என் பேர்ல இங்கன கமெண்ட் போட்டது யாருய்யா..?

அதெப்படி என்னைக் கேக்காம. என் பெர்மிஷன் இல்லாம, என் பேர்ல கமெண்ட்டு போடலாம்..?

உண்மைத்தமிழன் said...

தண்டோராஜி..

பாதில விட்டக் கதையை சொல்லிருங்க..

அப்புறம் நான் சாபம் விட்ருவேன்..!

எறும்பு said...

அண்ணன் உண்மைத்தமிழன் ஆள் இல்லாத கடையில் டீ ஆத்தி கொண்டிருக்கிறார்.

அகநாழிகை said...

:)

:(

எறும்பு said...

//தண்டோராஜி..

பாதில விட்டக் கதையை சொல்லிருங்க..//

எனக்கு தனியாகவாது மெயில் பண்ணவும்

geethappriyan said...
This comment has been removed by the author.
மணிஜி said...

பாதியில் விட்ட கதை..விட்ட கதைதான்

மணிஜி said...

வாசு..சூப்பர்..ரெண்டு பக்கமும் சிரிச்சது

Athisha said...

கும்தலக்கடி கும்மா!

எறும்பு said...

கும்தலக்கடி கும்மா!

தண்டோரான்னா சும்மாவா

:)

உண்மைத்தமிழன் said...

இதென்ன அக்கிரமமா இருக்கு..? பதிவு போட்டு அரைமணி நேரத்துக்குள்ள தமிழ்மணத்துல எட்டு ஓட்டு கிடைக்குது..!

எனக்கெல்லாம் ஏழு வாங்குறதுக்குள்ளேயே எத்தனை போன் செய்ய வேண்டியிருக்கு.. நாக்குத் தள்ளிருது..!

அண்ணே.. அந்த தமிழ்மணம் ஸ்கிரிப்ட்டை ஏமாத்துறது எப்படிண்ணே.. எனக்கெல்லாம் சொல்லித் தரக் கூடாதா..?

எறும்பு said...

//எனக்கெல்லாம் ஏழு வாங்குறதுக்குள்ளேயே எத்தனை போன் செய்ய வேண்டியிருக்கு.. நாக்குத் தள்ளிருது..!//

என்ன நாக்கு தள்ளுதா,அப்ப உங்க பெரிய பெரிய பதிவெல்லாம் படிச்ச எங்களுக்கு?

அத்திரி said...

எறும்பு said...
//எனக்கெல்லாம் ஏழு வாங்குறதுக்குள்ளேயே எத்தனை போன் செய்ய வேண்டியிருக்கு.. நாக்குத் தள்ளிருது..!//

என்ன நாக்கு தள்ளுதா,அப்ப உங்க பெரிய பெரிய பதிவெல்லாம் படிச்ச எங்களுக்கு?//


repeaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaatttttttttttttttttttttuuuuuuuuuuuuu

butterfly Surya said...

அண்ணே.. அந்த தமிழ்மணம் ஸ்கிரிப்ட்டை ஏமாத்துறது எப்படிண்ணே.. எனக்கெல்லாம் சொல்லித் தரக் கூடாதா./////////

ஒரு நானூறு பக்கம் நோட்புக் வாங்கிட்டு வாங்க...

உண்மைத்தமிழன் said...

[[[எறும்பு said...

//எனக்கெல்லாம் ஏழு வாங்குறதுக்குள்ளேயே எத்தனை போன் செய்ய வேண்டியிருக்கு.. நாக்குத் தள்ளிருது..!//

என்ன நாக்கு தள்ளுதா,அப்ப உங்க பெரிய பெரிய பதிவெல்லாம் படிச்ச எங்களுக்கு?]]]

மூளை வெளில தள்ளிருக்கும்.. அவ்ளோதான..? இதெல்லாம் ஒரு விஷயமா..?

vasu balaji said...

/கொஞ்சம் வெற்றிலை காம்பை வச்சுப் பார்த்திருக்கலாம் . முதல்ல எழுதின கதையை பத்தி சொல்லுங்களேன்/

வரலைன்னாதானே இந்த வைத்தியம். இன்னும்ல பிச்சுக்கும்.:))

உண்மைத்தமிழன் said...

[[[butterfly Surya said...
அண்ணே.. அந்த தமிழ்மணம் ஸ்கிரிப்ட்டை ஏமாத்துறது எப்படிண்ணே.. எனக்கெல்லாம் சொல்லித் தரக் கூடாதா./////////

ஒரு நானூறு பக்கம் நோட்புக் வாங்கிட்டு வாங்க...]]]

எனக்கா..? எனக்கேவா..? சூர்யாஜி.. இது நல்லாயில்லை.. சொல்லிட்டேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[வானம்பாடிகள் said...

/கொஞ்சம் வெற்றிலை காம்பை வச்சுப் பார்த்திருக்கலாம். முதல்ல எழுதின கதையை பத்தி சொல்லுங்களேன்/

வரலைன்னாதானே இந்த வைத்தியம். இன்னும்ல பிச்சுக்கும்.:))]]]

வானம்பாடிகள் ஐயா.. கொழப்புறீங்களே..?

இப்ப வெத்திலை என்ன செய்யும்னு தெளிவா சொல்லுங்க..!

அடைச்சுக்கும்மா? கொட்டுமா..?

butterfly Surya said...

நானூறு பக்கம் நோட்புக்குடன் உங்க மொபைலை ஐநூறு ரூபாய்க்கு ரீசார்ஜ் பண்ணிட்டும் வரணும்..

அத்திரி said...

காலையில நர்சிம் பதிவுல ஆரம்பிச்சது........இன்னும் முடியலையா??.......................போதும் இத்தோட நிறுத்திக்குவோம்

கடல்புறா said...

//இந்தியாவின் தேசிய பறவை பெயர் உங்களுக்கு தெரியுமா ?//


மயில் இங்க எங்க வந்துச்சு ? கோயம்புத்தூர்லேர்ந்து பறந்தா ?

கடல்புறா said...

// அதிஷா said...

கும்தலக்கடி கும்மா!//

எங்க பார்த்தாலுமா ?உங்களுக்குத்தான் வெத்தலை காம்பு சொருகணும்யா

நேசமித்ரன் said...

//மணிஜீ...... said...
இது யாருக்கும் எதிர்வினை இல்லை.//

:)

Cable சங்கர் said...

எதிர் வினையில்லை.. நேர் வினையால்ல இருக்கு

ஈரோடு கதிர் said...

செய்வினை மாதிரி இருக்கு

மரா said...

anna,what is going on there? I am out of country for the past 15 days......

மரா said...

will call u tonite...

அகல்விளக்கு said...

//ஈரோடு கதிர் said...

செய்வினை மாதிரி இருக்கு
//

:-)

அ.முத்து பிரகாஷ் said...

நன்னாத் தானிருக்கு மணிஜி ....
இதுக்கு பேர் தான்
கொஞ்சம் பேசுறது ....
சிரிச்சு சிரிச்சு வலிக்குது ...

மதார் said...

இதுவல்லவோ தமிழ் . வார்த்தைகள் சும்மா தாண்டவமாடிருக்கு . உங்க பதிவு படிச்ச பிறகுதான் தெரியுது ,12 வருஷம் என் தமிழ் வாத்திகள் எனக்கு நிறைய சொல்லிதராம ஏமாத்திருக்காங்க.லேட்டா தெரிஞ்சுகிட்டாலும் இது லேட்டஸ்ட் .கடவுளே தமிழில் எவ்வளவு வார்த்தைகள் தெரியாம இருந்திருக்கேன் . கோனார் நோட்ஸ் கூட தேவை இல்லை , செலவு மிச்சம் . இந்த பதிவை இலக்கியவாதிகளுக்கு பரிந்துரை செய்வோம் . (இதிலும் பரிந்துரையா )பின்ன நம்ம தமிழ் அறிவு பத்தி தெரியாம தமிழ் என்ற பெயரில் எழுதி கொல்றாங்க , ஒன்னும் புரியவே மாட்டேங்குது . இது எவ்வளவு சுலபமா இருக்கு படிக்க . மைக் இருந்தால் என்ன வேணா பேசலாம் இது அரசியல்வாதிகளுக்கு . ப்ளாக் இருந்தால் என்ன வேண்டுமானாலும் எழுதலாம் இது பதிவர்களுக்கு . இதை சொல்லித்தந்த பதிவுலகமே நீ வாழ்க , வளர்க உன் புகழ் . இதில் எந்த உள்குத்தும் இல்லை என்பதை சத்தமாக முரசு கொட்டிலாம் சொல்ல முடியாதுங்க . வாய்ப்பு குடுத்தமைக்கு நன்றி . செம்மொழி மாநாடு வார்த்தை தாக்கம் கொஞ்சம் அரசியல்வியாதி மாதிரி முடிக்க வருது .ஆட்டோ ஆட்டோ னு ஒன்னு சொல்வீங்களே அனுப்புறதா இருந்தா மாதச் சம்பளம் குடுத்து ஒரு டிரைவர் சேர்த்து அனுப்புங்க . எனக்கு எட்டு கூட போட தெரியாதுங்க . பஸ்ல இடி தாங்க முடியல .ஆபீஸ் போக ரொம்ப கஷ்டமா இருக்கு .


பின்குறிப்பு :இதில் சொதி குழம்பு செய்முறை குடுத்த இரும்புத்திரை அவர்களுக்கு சிறப்பு நன்றிகள் . எனக்கு போன் செலவை மிச்சப்படுத்திடீங்க . சண்டே ஸ்பெஷல் சொதி குழம்பு .

Unknown said...

அரணாக்கயிறுல நாண்டுகிட்டு சாக வேண்டியதுதான்...

cheena (சீனா) said...

ஹல்லோ - இது வரைக்கும் என் பேர்ல யாரும் கமெண்டு போடல் - பொளச்சேன்பா - ஆமா தண்டோரா - இது யாருக்காக எழுதப்பட்டது ......

ம்ம்ம்ம்ம்ம்

நல்வாழ்த்துகள் ம்ணி
நட்புடன் சீனா

மணிஜி said...

அன்பின் மதார்.

இது உங்கள் முதல் வருகையா என்று தெரியாது. ஆனால் முதல் பின்னூட்டம் என்று தெரியும். அதற்கு நன்றி. 12 வருடமாக தமிழே கற்றுக் கொண்டிருந்த உங்களுக்கு வாழ்த்துக்கள் . உண்மையில் ஒரு பதிவில் உங்களுடன் முரண்பட நேர்ந்தாலும் , நீங்கள் நன்றாக எழுதுகிறீர்கள் என்பது என் எண்ணம். இந்த பின்னூட்டம் உட்பட. இது ஒரு மொக்கை பதிவு .இதில் இலக்கிய சுவையை எதிர்பார்த்து நீங்கள் வந்திருந்தால் அது உங்கள் தவறு.இல்லாவிட்டாலும் நாங்கள் இலக்கியம் எல்லாம் எழுதி கிழித்து விடப் போவதில்லை. நன்றி. அப்புறம் உங்க ஊர் பிரச்சனை தீர்ந்ததா ?

ஜோதிஜி said...

. இது ஒரு மொக்கை பதிவு .இதில் இலக்கிய சுவையை எதிர்பார்த்து நீங்கள் வந்திருந்தால் அது உங்கள் தவறு.இல்லாவிட்டாலும் நாங்கள் இலக்கியம் எல்லாம் எழுதி கிழித்து விடப் போவதில்லை.

உங்க நேர்மை புடுச்சுருக்கு........

Sanjai Gandhi said...

இப்டி நேரடியா எழுதி தொலைச்சா நீர் எல்லாம் எப்போ தான் விளம்பரப் படம் எடுத்து காசு சம்பாதிச்சு ஷாப்பிங்க் மால் கட்டுவது? மங்குனி மாமா..

விளம்பரம்னா என்னன்னா, சொல்ற விஷய்ங்கள நேரடியா சொல்லக் கூடாது.. நச்சினு இருக்கனும்.. ஆனா புரியக் கூடாது.. குத்து குத்துனு குத்தனும்.. ஆனா கும்மி அடிக்கிற மாதிரியும் இருக்கனும்..

மீதியை விலம்பர உலக அதிபர் லக்கியார் சொல்வார்.. :)

Sanjai Gandhi said...

சொல்ல மறந்துட்டேன்.. இதுல உம்ம டச் நச் டச் :))

Sanjai Gandhi said...

சொல்ல மறந்துட்டேன்.. இதுல உம்ம டச் நச் டச் :))