
சைதாபேட்டை பேருந்து நிலையத்தில் கண்ட ஒரு காட்சி.ஒரு இளம் தம்பதி..அருகில் அவன் தாய்..அவன் சூழலை மறந்து மனைவியை கொஞ்சி கொண்டிருந்தான்..மற்றவர்கள் பார்ப்பதை அவர்கள் சட்டையே செய்ய வில்லை..அவன் தாய் முகத்தில் ஒரு இனம் புரியாத கவலை இருப்பதாக எனக்கு பட்டது.அவள் மகன் கவனத்தை திசை (மனைவியிடமிருந்து)திருப்பும் வண்ணம் செயல் பட ,அவனுக்கு வந்ததே கோபம்.தாயை திட்டி தீர்க்க இளம் மனைவி கண்கள் கலங்க.ஒரு மினி சீரியல் பார்ப்பது போல் இருந்தது.சற்று நேரம் ஆயிற்று.அவர்கள் பஸ் வரவில்லை.இளம் மனைவி ஆட்டோவில் போகலாம் என்றாள்.தாய் வெட்டி செலவு என்று மறுக்க மீண்டும் மனைவியின் கண்ணீர்.இளமை வென்றது.ஆட்டோ வந்தது.மனைவி முதலில் ஏறினாள்.மகன் ஏற முற்படுகையில் தாய் அவனிடம் ஆட்டோவின் பின்னால் எழுத பட்ட வாசகத்தை காட்டினாள்.நானும் அதை படித்தேன்..நீங்களூம் படித்திருப்பீர்கள். "சீறும் பாம்பை நம்பு..சிரிக்கும் பெண்னை நம்பதே.." அவர்கள் போய் விட்டர்கள்.
நான் யோசிக்க ஆரம்பிதேன்.ஏன் அந்த தாய் அப்படி நடந்து கொண்டாள். ஒரு வித insecurity யா?கணவனை இழந்த அந்த விதவை தாய்க்கு மருமகள் மகனை தன்னிடமிருந்து பிரித்து விடுவாளோ? என்ற பயம் காரணமா?எப்படி அவர்கள் ஒத்து குடும்பம் நடத்த போகிறார்கள்.காலம் காலமாய் இந்த பிரச்சனை இருந்துதான் வருகிறது.
அமரர் சுஜாதா ஒரு முறை வினோதமாக ஒரு விளக்கம் எழுதி இருந்தார். "தாய் தன் மகன் உருவில்,ஜாடையில் தன் புருஷனை பார்ப்பது போல் உணர்கிறாள்.ஆனால் அவன் இன்னொரு பெண்ணுடன் (மனைவியுடன்)வரும் போது அவளை தன் சக்களத்தியாக பார்க்க தொடங்குகிறாள்.
பெண் குழந்தைகள் இல்லாத வீட்டிற்கு மருமகளாக வருபவர்கள் மகளாக நடத்த படுவதாக ஒரு ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.ஆனால் கணவர்களுக்கு உத்தரவாதம் இல்லை.பெண்களோடு வளராததால் அவர்கள் அருமை தெரியாமல் துச்சமாக பெண்டாட்டியை மதிக்கிறார்களாம்.