Showing posts with label நகைச்சுவை. Show all posts
Showing posts with label நகைச்சுவை. Show all posts

Tuesday, August 24, 2010

முன்னாளும் , இந்நாளும் சந்திக்கிறார்கள்


அத்வானி மன்மோகனை சந்தித்து வாழ்த்து சொகிறார்..நிதிஷ் லாலு சந்தித்து கொள்கிறார்கள்.. ராகுல் அத்வானியிடம் ஆசி பெற்றுக் கொள்கிறார்..தமிழகத்தின் முன்னாள் உபத்திரமும் , இன்னாள் மூலப்பத்திரமும் (சேலத்தில் மு.கவை வாழ்த்தி இந்த வாசகம் பார்த்தேன் ) நேற்று சந்திப்பார்கள் என்று நவ”கிரக”ங்களும் ஆவலுடன் இருந்ததாம் . ஆனால் அந்த சரித்திர பிரசித்தி பெற வேண்டிய சந்திப்பு நடைபெறவில்லை . சந்தித்திருந்தால் எப்படி இருந்திருக்கும் . கடும் முயற்சிக்குப் பிறகு....


அண்ணா சமாதிக்கும், எம்ஜிஆர் சமாதிக்கும் இடையில் மேடை அமைக்கப் பட்டு இருக்கிறது.. கருணநிதி சரியான நேரத்துக்கு வந்து விடுகிறார்.. அண்ணா சமாதியை பார்த்தவுடன் அவருக்கு உண்ணாவிரதம், இருக்கும் ஆசை வருகிறது . உதவியாளர் முதல்வர் காலையிலேயே செட் தோசை சாப்பிட்டதை நினைவுபடுத்துகிறார் . சரிய்யா..அந்தம்மா வரும் வரைக்கும் நான் உண்ணாவிரதம் என்று சொல்ல , கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி கொண்டிருந்த “மாரியம்மன் மகிமை “ சீரியல் நிறுத்தப்பட்டு , உண்ணாவிரதம் நேரடி ஒளிபரப்பு .

அம்மாவை பற்றி சொல்ல வேண்டுமா? தூங்கி முழிச்சு , அணிந்திருந்த நகைகளை கழட்டி விட்டு வழக்கம் போல் லேட்டாக வர. கருணாநிதி விரல்களால் முகத்தை மூடிக் கொண்டு விரலிடுக்கு வழியாக அம்மையாரை பார்க்கிறார்..

”என்ன என் முகத்தை நேருக்கு நேர் பார்க்க பயமா?

இல்லை அம்மணி “கிரகணத்தை” அப்படித்தான் பார்க்கனும்..கேள்விப் பட்டதில்லையா?

வார்த்தை விளையாட்டு வேண்டாம்..மக்களுக்காக என்ன செஞ்சிருக்கிங்க..

இன்னிக்கு முரசொலி வாசிக்கலையா ? கின்னஸ்ல என் பேர் வந்திருக்கு . அதிகமா தபால் எழுதினதுக்காக .எல்லாருக்கும் எல்லாம் செஞ்சாச்சு..இனி கனி மட்டும்தாம் மீதம்.அதையும் செஞ்சுட்டா என் தலைவலி ஒழியும்..

நான் தமிழக மக்களுக்கு என்ன செஞ்சிங்கன்னு கேட்டேன்..உங்க ஆட்சியில எத்தனை அதிகார மையங்கள்..ஆளாலுக்கு ஆடறாங்க..

அதிகாரம் பரவலாக்கபட வேண்டும் என்பதுதானே அண்ணனின் ஆசையும் கூட..ஆமாம்..உங்களுக்கு இலவச தொலைகாட்சி கிடைத்ததா ? ஒரு ரூபா அரிசிதான் நீங்களும் சாப்பிடறீங்கன்னு உளவுத்துறை ரிப்போர்ட்

நான்சென்ஸ்..நான் இப்ப பிஸ்ஸாவுக்கு மாறியாச்சு . உங்க கையை வீக்காக்க போறேன். விலைவாசிய பாத்திங்களா? விலைன்னு எழுதி வாசிக்கத்தான் முடியுது...

அம்மையாரே..மக்களின் வாங்கும் சக்தி அதிகமாகிவிட்டது..அதை விட மக்களை வாங்கும் சக்தியும் அதிகமாகி விட்டது...இந்த தேர்தலில் தெரிந்து கொண்டோம்..

ரொம்ப பீத்திக்காதீங்க...கோவையையும் , திருச்சியையும் பார்த்தீங்கள்ளே . அடுத்த ஆட்சி என்னுடையதே..அப்ப வச்சுக்கறேன்...ஆமாம்..எனக்கு எதாவது மிச்சம் இருக்குமா ? சசி ரொம்ப நாளா ஒரு மூக்குத்தி கேட்டு கிட்டு இருக்காங்க


மதுரை தம்பி கிட்ட கேளுங்க.. கம்மல் ,கால் கிலோ கறி எல்லாம் உண்டு . ஓட்டை சூரியனுக்கு போடுங்க போதும்

இந்த முறை அது நடக்காது . அடுத்த மைனாரிட்டி ஆட்சி என்னுதுதான்

அம்மணி....இனி வெற்றி என்பது வாங்கபடவேண்டிய ஒன்று.. 2011 தேர்தலுக்கு நாங்க இப்பவே பட்டுவாடாவை ஆரம்பிச்சுட்டோம்..எப்புடி??

வாக்கு சீட்டு முறை வந்துட்டா நீங்க ஜெயிக்கவே முடியாது..

அறியாமையில் அரற்றுகிறீர்கள்..அது இன்னும் சொர்க்கம்...உங்களுக்கு சுத்தம்..ஒன்னு காந்தி, இல்லன்னா கத்தி..எவனாச்சும் எதிர்ப்பான்?

இடையில் தண்டோரா குறுக்கிட்டு..நீங்க மக்கள் பிரச்சனையை பத்தி ஒன்னுமே பேசலையே..

கருணாநிதி..அம்மையாரே, நம்ம லாவணியை அப்புறம் கூட வச்சுக்கலாம்..முதல்ல இந்த மாதிரி புல்லுருவிகளை என்ன பண்ணனும் தெரியுமில்ல...

ஆமாமாம்..இந்த விஷயத்துல நீங்களும் நானும் ஒரே கட்சிதானே..

அப்புறம் என்ன? ஸ்டார்ட் மூஜிக்....



Monday, August 2, 2010

எந்திரன்


எந்திரன் ஃபீவர் ஆரம்பமாகி விட்டது . தமிழ் திரையுலகின் மைல் கல்லாக இந்த படம் இருக்கும் என்று சொல்கிறார்கள் . இசையை பற்றி சொல்வதற்கு பெரிதாக ஒன்றும் இல்லை . (இப்போதைக்கு ) . எல்லோருக்கும் எந்திரன் படத்தின் கதை என்ன என்று ஆவல் இருக்கும் . உங்களுக்காக எந்திரன் விமர்சனம் .. முன்பே எழுதியது . மீண்டும்..


எப்போது.. எப்போது ? என்று எதிர்பார்த்த எந்திரன்வெளியாகிவிட்டது..ஆனால் ரோபோ? என்ற பெயரில்..(தமிழ்தலைப்புக்கு வரிச்சலுகை கிடையாது..என்ற புதிய அறிவிப்புதான்காரணம்...(என்ன ஒரு தமிழ் பற்று..) சன் டிவி பிரமாண்டதயாரிப்பு (200 கோடி என்று பேச்சு). இன்னும்
கண்டு பிடிக்காத இடங்கள் தவிர எல்லா இடங்களிலும் படம்பிடித்தது. ரஜினி.. முன்னாள் உலக அழகி...ஷங்கர்..ஆஸ்கார்ரகுமான். அதை விட சன் குழுமத்தின் 24 சானல்கலிளும் 24 மணிநேரமும் விளம்பரம் . பணம் போடுவதற்க்கு ஆள் கிடைத்தால் எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்வேன் என்று மீண்டும்நிருபித்திருக்கிறார் காதல், கல்லுரி, வெய்யில் போன்ற பட்ஜெட் படங்களின் தயாரிப்பாளர் ஷங்கர்


எட்டு ஹெலிகாப்டர்கள் ( ஷங்கரின் ராசி எண் ) வானில் வட்டமடிக்க, பூனாமும்பை சாலையில் 24 பி.எம்.டபிள்யூ கார்கள் பறக்க(எவன் அப்பன்வீட்டு காசு), ஒரு காரில் ரஜினி உலக அழகியுடன் பறக்க பின்னால்இன்னொரு ரஜினி துரத்த.படம் சூடு பிடிக்கிறது.
தனது வழக்கமான பார்முலாவை தள்ளி வைத்து விட்டு புதியபாதையில் பயணித்திருக்கிறார் இயக்குனர். சைன்டிஸ்ட் ரஜினி? அவரை துரத்தி துரத்தி காதலிக்கும் ஐஸ்.....ரஜினி தந்தையாக நாட்டின் தலைவராக சாருஹாஸன்.. அவரை கொன்று விட்டு நாட்டை ஆள நினைக்கும் வில்லன்.. வில்லனின் திட்டத்தைதெரிந்து கொள்ளும் சாருஹாசன் தான் ஒரு பனிப்புயலில் சிக்கிமறைந்து விட்ட்து போல் ஒரு நாடகம்போடுகிறார். சந்தானமும்,கருனாசும் இதற்கு உதவுகிறார்கள்...நாட்டின் தலைமை பொறுப்பு ரஜினியிடம்வருகிறது. ஆனால் ரஜினியோ ஐஸை விட்டு பிரியமனமில்லாமல் (இருவரும் வேறு நாட்டில் படித்துகொண்டிருக்கும்போது காதலிக்கின்றனர்) தன்னை போலவே ஒருபிம்பத்தை உருவாக்குகிறார். அதுதான் ரோபோ..??? ரோபோவை நாட்டின் தலைவராக இருக்கும்படி ப்ரொக்ராம் செய்துவிடுகிறார். பின் என்ன?ஐஸ்வர்யாவுடன் கும்மாளம்தான்?




முதல் டூயட் பாடலான

"ஐஸ்..ஐஸ்.. வர்ரியா..கிஸ்..கிஸ்..தர்ரியா..
மெர்க்குரி உதடுதான்... ஸ்டிராபெரி கனவுதான்
பாஸ்பரஸ் படுக்கையில் பகலும் இரவும் பாம்பிங்க்தான்..
வாலி எழுதிய இந்த தமிழ் பாடல் 185 நாடுகளில் 186 நாட்கள் படம்பிடிக்கபட்டது...1500 டான்சர்கள்,1501குதிரைகள்,1502 மான்கள்,1503மயில்கள்...1000 டன் சாம்பிராணி..2000 டன் தக்காளி மொத்த செலவு 40 கோடி..

சரி
.. கதைக்கு வரலாம்...நாட்டை கைப்பற்ற நினைக்கும் வில்லன்ரோபோ வை ரஜினி என்று நினைத்து கொல்லமுயற்சிக்கிறான்.. இந்த காட்சிகளில் ஹாலிவுட்டை அசால்ட்டாகமுந்தியிருக்கிறார் இயக்குனர்.. திடீர் திருப்பமாக ரோபோவின்சாப்ட்வேர் கரப்ட் ஆகி மனிதனை போல் காதல் உணர்வு வந்துவிடுகிறது.. வில்லன் ஒரு பெண் ரோபோவை (ஐஸ்வர்யாவைபோலவே) உருவாக்கி ரஜினி ரோபோவுடன் நெருங்கவிடுகிறார்கள்.. நாட்டுக்கு ஐஸூடன் ரகசியமாக வரும் ரஜினிஇரண்டு ரோபோக்களும் நெருக்கமாக இருப்பதை பார்த்துவிடுகிறார்....தான் செய்த ப்ரொக்ராம் மாறி விட்டது என்றுஉணருகிறார்...(முதல் பாதி முடிவு)

இடைவேளை வரை ரோபோ விமர்சனம்பார்த்திருப்பீர்கள்.. மன்னிக்கவும் நண்பர்களே.நான் அதுவரைதான்படம் பார்த்தேன்..அதன் பின்......கறுப்பு சட்டை அணிந்தகுண்டர்களின் தடியடி,ஆசிட் முட்டை வீச்சு.....பெட்ரோல் குண்டுகள்வீச்சு..எங்கும் கலவரம்.....ரத்த ஆறு...????காரணம்..அஞ்சாநெஞ்சன் அழகிரி.... மதுரை மா நகராட்சி பொறுப்பு குழு உறுப்பினர் மாண்புமிகு "அட்டாக்" பாண்டி தலைமையில் வந்தகும்பல்...ரோபோ திரையிடப்பட்டிருந்த அத்தனை இடங்களிலும்இந்த கதிதான்...இந்த சம்பவத்தில் மதுரை ஆட்கள் யாரும்ஈடுபவில்லை...கோர்ட் மூடி விட்டதால் வக்கீல்களுக்கு இந்தபணியை கொடுத்து விடுமாறு அண்ணன் பெருந்தன்மையுடன் கூறிவிட்டதாக அவர் மேலும் கூறினார்.

சம்பவ இடத்தில் பேட்டி அளித்த காவல் துறைதலைவர்..."அனைவரும் அமைதியாக அலறிக் கொண்டே"கலைந்து விட்டதாகவும், நிலைமை இப்போது கட்டுக்குள்இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் அட்டாக் பாண்டி" அண்ணன் ஆணையின்படி 1500 மொபைல் ஹோம் தியேட்டர்கள் தமிழ் நாடுமுழுவதும் உலவிக்கொண்டிருக்கும்.. பொது மக்கள் படம்இலவசமாக ரோபோ வை பார்க்கலாம்... மேலும் படம் பார்க்கும்அனைவருக்கும் ஒரு பவுன் தங்க நாணயம் பரிசாகவழங்கப்படும்..என்றும் அவர் மேலும் கூறினார். மீறி படத்தை யாராவது திரையிட்டால் அவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டம்பாயும் என்றும் கூறினார். காவல் துறை தலைவரும் அதைஆமோதித்தார்.

காற்று கூட எங்கள் இடையில் இனி நுழையாது என்று அழகிரி,மாறன் சகோதரர்களை பற்றி சொன்னது என்னவாயிற்று?? கலவரம்எப்படி நுழைந்தது?? பின் வரும் ரோபோ உருவாக்கம்...பரபரப்புசெய்திகளில்...................

ரோபோ.....திரைக்கு பின்னால்.....

முதலில்
மீண்டும் எப்படி பிரிவு/பிளவு ஏற்பட்டது..


இதற்கு
மூலக் காரணம் ஷங்கர்தான்எங்கின்றனர்..தகவலறிந்தவர்கள்..

சன் பிக்சர்ஸ் லோகோவை சூரியனில் போய் ஷுட் பண்ணலாம் என்று ஷங்கர் பிரியப்பட்டிருக்கிறார்.. இதற்காக திரு. மயில்சாமிஅண்ணாதுரை, திரு.அப்துல் கலாம் ஆகியோரிடமும் ஆலோசனை கேட்கபட்டிருக்கிறது..ஆனால் அருகிலிருந்த தயாநிதிஎன்னது? சூரியனுக்கா..நாங்க இங்கிருந்தே சூரியனை(உதய)சுடுவோம்..தெரியுமில்லே..என்று வாய்த் துடுக்காக சொல்லிவிட்டாராம்..இது அழகிரி காதுக்கு போக ..வந்தது வினை...
"நாங்கள் சிறியவர்கள்தானே, எங்களை மன்னிக்கக் கூடாதா..என்றுசெல்வி மூலம் தூது அனுப்பியதாக ஒரு தகவல்???

ஜில்.. ஜில்.. ஜில்... ஜொள்...ஜொள்... ஜொள்....
ஆர்.டி. எக்ஃஸ்.... உன் விழியில்....
என் மடியில் .... டைனமைட்
அண்டார்டிகாவில் செய்வோம்...லவ் ஃபைட்.
பிப்பெட் நீதான்.... பீயுரெட்.நாந்தான்..
டெஸ்ட் டீயூபில்... ரெஸ்ட் இனி ..அதை
யூ ட்யூபில் கண்டு நீ களி ஹனி.....
கூகுளில் தேடி...... குயிக் டைமில் கூடி...
பிளாக்குகளில் பாடி.....பாரடைஸ் போகலாம்...
என் பிளாக் பெர்ரி நீ வாடி....

கலைமாமணி
,வித்தக கவிஞர் பா.விஜய் ..எழுதிய இந்தப் பாடல்பனிப் பிரதேசமான அண்டார்டிகாவில் நடைபெற்றது...இப்பாடலுக்கு 5000 குளிர்சாதன பெட்டிகள் கொண்டு செட்அமைக்க வேண்டும் என்று ஷங்கர் பிரியப்பட....உடனேகொரியாவிலிருந்து சாம்சங்க் கம்பெனியிலிருந்துவரவழைககபட்டது.


இங்கு
பிரிட்ஜ் விற்ற முதல் கம்பெனி நாங்கள்தான் என்றுஅக்கம்பெனியின் தலைமை

நிர்வாகி சூ சென் பெருமையுடன் கூறினார்..

படபிடிப்பு
முடிந்தவுடன் 5000 குளிர் பெட்டிகளையும் அங்கிருந்தஎஸ்கிமோக்களுக்கு இலவசமாகவே வழங்க வேண்டுமென்றுரஜினி கூறி விட கலாநிதி மாறன் மிகவும் பெருந்தன்மையுடன்சம்மதித்து விட்டார்.


கரு விழி..குரு பார்வை
சுரு..சுரு நாசி..என் பெயரை நீ சுவாசி
செவ செவ அதரம்..நீ என் மதுரம்...
பழ ..மலை...கீழே நூலிடை
அதன் பின் ஆலிலை..

வாலி எழுதிய இந்த பாடலும் சீரோ டிகிரி குளிரில் படமாக்கபட்டபோது ரஜினி எவர் சில்வரில் செய்யபட்ட முழுஆடை அணிந்திருந்தார்( மனிஷ் மல் ஹோத்ரா)..ஐஸ்புதுமையாக(3) இலைகளினால் வடிவமைக்கபட்ட இலக்கிய நயம்சொட்டும் உடை அணிந்திருந்தாராம்.


ஒரு முக்கிய செய்தி...
இயக்குனர் ஷங்கரின் அடுத்த சொந்த படத்தை அவர் உதவியாளர்இயக்குகிறார்.
படபிடிப்பு முழுவதும் "எஸ்" பிக்சர்ஸ் அலுவலகத்திலேயே நடைபெறும்...என்று ஒரு பத்திரிக்கை செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Sunday, May 2, 2010

தண்டோரா விருதுகள்............... 2010


தண்டோரா குடும்ப விருதுகள் -2010

வணக்கம். தண்டோரா குடும்ப விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு உங்களை வரவேற்கிறோம். அன்புடனா என்றால் இல்லை என்றும் ,ஆமாம் என்றும் இரண்டு விதமாகவும். இந்த விருது வழங்கும் விழாவிற்கு வந்திருக்கும் சிறப்பு விருந்தினர்களையும் வரவேற்கிறோம். பரிசு வழங்க வந்திருக்கும் முக்கிய பிரமுகர்களையும் வரவேற்கிறோம்.ஆக்சுவலா நாங்க அவங்களை கூப்பிடலை.அவங்களேதான் வந்தாங்க. சரின்னுட்டோம்
முதலில் சிறந்த நடிகர் விருது. வழங்க வருபவர் ராதிகா .

வனக்கம் அன்பு நேயர்கலே.(அவருக்கு இன்னும் மழலை போகலைங்க)

எங்கப்பாவோட காலத்துலேர்ந்து நான் நடிக்கிறவங்களை பார்க்கிறேன். அவரோட நடிச்சு, இன்னும் எல்லோரோடவும் நடிச்சாலும், யாராலும் வெளியே சொல்லமுடியலை. எதைன்னா அவர் நடிக்கிறாருங்கிறதை. அப்படிப்பட்ட இடத்துல அவரு இருக்கிறாரு. எங்கப்பா ஸ்தானம். என்னோட திருமணத்துக்கெல்லாம் வருவாரு..பலத்த சிரிப்புடன்.அநேகமா அடுத்த வாட்டியும்...கரகோஷம்..அவர் வேற யாரா இருக்கமுடியும் ? நம்ம தலைவர்தான். தமிழனத்தலைவர்தான்

அடுத்து சிறந்த எழுத்தாளர் விருது. வழங்க வருபவர். சொம்பு கவிஞர் வாலி

கொஞ்சம் இருங்க . வெற்றிலை சீவல் போட்டுக்கறேன். தலைவர் தப்பா நினைக்கமாட்டார். வாய் கொப்பளிச்சுக்கிறேன். இப்ப ஆரம்பிக்கிறேன்.

எழுத்தாளர்னு சொல்லிட்டு வேற யாரையும் பற்றி இவர் வாழுற காலத்தில் அல்லது இவர் ஆட்சியில் இருக்கும்போது நினத்துக்கூட பார்க்கமுடியுமா என்ன? பாலைவனத்தில் ரோஜாக்களை பதியம் போட்டவர். பாசப்பறவைகளை ஒன்று சேர்த்தவர் . அப்போது அவர் இதயம் இனித்து, கண்கள் பனித்ததை தமிழகம் மறக்க முடியுமா என்ன? சிறந்த படிப்பிருந்தால் மட்டுமே உயர்ந்த நிலையை அடைய முடியுமா என்ன? என்ற விதியை தகர்த்து பலரை மந்திரிக்கியாக்கியவர்.(அவர்களில் பலரை எந்திரிக்க சொல்லியும் அவர்கள் இப்போது முடியாதென்கிறார்கள். கரண்ட் கட்டாகிறது)

இன்று கூட இளைஞனாய் இருந்து கொண்டு, பெண் சிங்கத்துக்கு பிரசவம் பார்க்கிறார். பதிபக்தியை பற்றி பக்கம் பக்கமாய் விளக்கம் கொடுக்கிறார்.அதற்கு இவரைத் தவிர வேறு யாருக்கு தகுதி இருக்க முடியும்?ஆகவே சிறந்த எழுத்தாளருக்கான விருதை சொம்மொழி காக்கப்போகும் சிங்கத்துக்கு வழங்குகிறேன். (தலைவரே அப்பல்லோ நன்றிக்கடன் கொஞ்சம் கழிந்ததா?)

அடுத்து சிறந்த வசனகர்த்தா விருது. வழங்க வருபவர் கவிப்பேரரசு( தலையெழுத்துடா தமிழனுக்கு) வைரமுத்து.

சூரியனுக்கு சூடு வைத்த சுடரொளி
சுமாரையெல்லாம் சூப்பராக்கிய
சுடலைமாட சாமி
பேனாவை திறந்தால் ஒன்று
வசனம் இல்லை கடிதம்
இரண்டிலும் மக்கள் நலனே
பிரதானம்
இன்று கூட இளைஞனுக்கு எழுதியதை
தமிழனுக்கு தாரை வார்த்த
தங்கமகன்
அவருக்கு நிகராக
இன்னொருவரை தேட
அடுத்த ஆட்சி மாற்றம் வரை காத்திருக்க
எனக்கு பொறுமையில்லை
அதற்கு சாத்தியமுமில்லை
காசா, பணமா ?எத்தனையோ எனக்கும் செய்த
வித்தகனுக்கு முத்தமிட்டு
முகமன் செய்கிறேன்
முத்தமிழே..உங்களுக்கு பாராட்டு பிடிக்காது(யாருமற்ற இடத்தில்)
என்று தெரியும்.
தமிழுக்காக ஏற்றுக் கொள்ளவேண்டும்

அடுத்து சிறந்த தமிழனுக்கான விருது. வழங்க வருபவர்கள். திரு அமிதாப்பச்சன், திரு சிரஞ்சீவி, திரு. மோகன்லால், திரு பால்தாக்கரே.

மேற்கண்டவர்களுக்கு தமிழை பற்றியும், தமிழனைப்பற்றியும் மிக நன்றாக தெரிந்த காரணத்தால் ,இவர்கள் ஒரு மனதாக தேர்ந்தெடுத்தது யாரைத்தெரியுமா? ஆடியன்ஸ் கைத்தட்டல்.(வீரமணியும், பால்தாக்கரேயும் ஏதோ பேசிக்கொள்கிறார்கள

சட்டசபை காவலர்,
திட்டமிடும் திங்கள்
செம்மொழி செவ்வாய்
புரையேறும் புதன்
விடிவெள்ளி வியாழன்
வெள்ளி சனி ,ஞாயிறும்
அரசு ஊழியர்களுக்கு விடுமுறை
வழங்க இருக்கும்
கடைதேங்காய்
டாக்டர், இஞ்சீனியர்,
கம்பவுண்டர் கலைஞர் அவர்களை
மேடைக்கு அழைக்கிறோம்.


சொல்ல மறந்து விட்டோம்.

பரிசு பெற்ற அனைவருக்கும் எங்கள் வாழ்த்துக்கள்.