Showing posts with label சுயதம்பட்டம்/மொக்கை. Show all posts
Showing posts with label சுயதம்பட்டம்/மொக்கை. Show all posts

Friday, November 6, 2009

தண்டம்....தண்டோரா ஆன கதை


அன்புத்தம்பி பெஸ்கி அழைப்பு விடுத்திருக்கிறார்.தண்டமாக இருந்த நீங்கள் தண்டோரா ஆன கதையை எழுதுங்கள் என்று.என்னத்தை எழுதறது?சரி..மேட்டர் கிடைக்காம மண்டையை பிச்சுக்க வேண்டியிருக்கிறது.வர்ற வாய்ப்பை பயன்படத்திக்க வேண்டியதுதானே..

சின்ன வயசுலேர்ந்தே எழுதறதுனாலே எனக்கு வேப்பங்காய்தான்..அப்ப வயசு கோளாறு..கவிதைங்கிற பேர்ல காகிதத்துக்கு பிடிச்ச கேடுகாலம்..ஒரு பொண்ணு நல்லா எழுதறடான்னு சொன்னா..உடனெ அவ மட்டும் சொன்னாப் போதுமா?மத்த பொண்ணுங்கள்ளாம் என்ன நினைக்கிறாங்க நம்ம கவிதையை பத்தின்னு தெரிஞ்சுக்கறதுக்காக,கண்ணுல பட்ட எல்லாத்துக்கும் கவிதை எழுதி,செருப்படி பட்டு சீர்குலைஞ்ச கதை இப்ப தேவையில்லை.அதெல்லாம் ஏற்கனவே வரலாறுல இருக்கு.(தல நடிச்சது இல்லை..நம்ம தறுதலை வரலாறு)

கையெழுத்தை கூட வேற யாராவது போடலாம்னு பேங்க்ல சொன்னா,அப்பாடான்னு மூச்சு விடற ஆளு நானு..தொழில் நிமித்தம் கணீனியை நோண்டும்போதுதான் வலைப்பூக்களை பற்றி தெரிஞ்சுக்கிட்டேன்..அப்படியே மேஞ்சுக்கிட்டே இருப்பேன்..அப்பதான் நம்ம ஜாக்கிசேகர்,அப்ப அவரு என் பொண்ணு காலேஜ்ல போட்டோகிராபி ஆசிரியரா இருந்தாரு...அதுக்கும் முன்னாடியே நாங்க அறிமுகமானவங்கதான்.ஒரு குறும்பட போட்டியின் மூலமாக.பாண்டியில போய் தண்ணியை போட்டுட்டு மட்டையானதும் உண்டு.அவரு சொன்னார்.மணி,நான் பிளாக்ல என் கருத்தையெல்லாம் எழுதறேன்.படிச்சுட்டு சொல்லுன்னு சொன்னார்.படிச்சா எனக்கு அனுதாபம் வந்துடுச்சு.அவர் மேல இல்லை.தமிழ் மேலதான்.உடனே போன் பண்ணி தலைவா ஒரு இரங்கல் கூட்டத்திற்கு ஏற்பாடு பண்ணவான்னு கேட்டேன்.சிரிச்சார்.(வேற என்ன செய்வாரு.ஆனா இப்ப ஜாக்கியின் எழுத்தில் பிழைகள் குறைந்திருப்பது மகிழ்ச்சிக்குறிய விஷயம்)

அப்புறம் தொடர்ந்து பிளாக் படிக்க ஆரம்பிச்சேன்.அதுல என்னை மிகவும் கவர்ந்தவர் அன்பு நண்பர் கேபிள்..சுஜாதாக்கம் இருந்தாலும்,அவருடைய ஸ்டைல் எனக்கு பிடித்தது..அப்புறம் லக்கியின் எழுத்துக்களும் எனக்கு மிகவும் பிடித்தது.வெரைட்டியாக கலந்து கட்டுவார்(இப்ப மல்லு கட்டறது வேற கதை).நம்மளும் ஒன்னு ஆரம்பிச்சுடலாம்னு இறங்கிட்டேன்.

13/02/2009..என் முதல் பதிவு.எடுத்தவுடனே கலைஞரை தாக்கித்தான்.அதை 50 பேர் சாரி..50 வாட்டி நானே படிச்சேன்.அண்ணன் உண்மைத்தமிழனை படிக்க சொன்னேன்.அவர் படிச்சுட்டு ஊக்கம் தந்தார்.அழகியில் டைப் பண்ணிகிடிருந்தேன்.அப்புறம் என்.ஹெச்.எம்.

தண்டோரங்கிற பேர்ல ஒரு அரசியல் சடையர் ஸ்கிரிப்ட் என்கிட்ட இருக்கு.அதையே பேரா வச்சுகிட்டேன்.அரசியல் எனக்கு மிகவும் பிடித்த களம்.அப்புறம் கவிதைகள்.கவிதை எளிமையாக இருக்கணும்.2+2=4..2x2=4...அம்புடுதேன் நம்ம கவிதை..அதனால தோணும்போது கிறுக்க வேண்டியது..அப்புறம் கதை..பகடின்னு பொழுது ஓடிட்டிருக்கு.

வலையுல நட்பு. அதுவும் ஒத்த அலைவரிசை.. நல்ல புரிதல். இப்படி நிறைய நண்பர்கள். கேபிள், அகநாழிகைவாசு, சூர்யா, ஜாக்கி, நித்யா ,முரளிக்கண்ணன், ரமேஷ்வைத்யா, நர்சிம்,ஜ்யோவ்(யோவ் இல்லிங்க), சிவராமன், முத்துவேல், யாத்ரா, பெஸ்கி, அத்திரி, அஷோக், ஜெட்லி, தம்பிகள் டக்ளஸ், நையாண்டிநைனா, செல்வேந்திரன், அரவிந்த், ஸ்ரீ, கார்த்திகைபாண்டியன், ஜெர்ரீ, மருத்துவர் தேவன்மயம், தருமிஐயா, வடகரைவேலன், பரிசல், வால்பையன், ஈரோடு கதிர், வானம்பாடிகள்...(இதை எழுதிகிட்டிரும்போது லவ்டேல்மோடி அழைத்து அண்ணே 26ஆம் தேதி கல்யாணம்.அவசியம்...)

கடல் கடந்து கோபி, கலை, ஹேமா, குசும்பன், பா.ராஜாராம், பிராபகர்(வாரம் இருமுறையாவது இருவரும் தொலைபேசுவார்கள்), ராகவன்நைஜீரியா, மகேஷ், வினோத்கெளதம் இன்னும் நிறைய அன்பு உள்ளங்கள்...தீபாவளியன்று வாழ்த்து சொல்லி ஆச்சரியபடுத்திய ரம்யா..இன்னும் எத்தனை நண்பர்கள்..அவர்களுக்கு என் அன்பு வாழ்த்துக்களும்,நன்றிகளும்


பெஸ்கி.. சாரி.. டிஸ்கி :நண்பர்கள் பெயர் விடுபட்டிருக்கலாம். பொறுத்தருள்க.. அப்புறம் நான் யாரையும் அழைக்கவில்லை