Showing posts with label எளக்கியம்/ கவுஜை/அரசியல் /வாசனை/கற்பூரம்/கற்பு/களவு. Show all posts
Showing posts with label எளக்கியம்/ கவுஜை/அரசியல் /வாசனை/கற்பூரம்/கற்பு/களவு. Show all posts

Wednesday, June 23, 2010

இவன் அதுக்கு சரிப்பட மாட்டான்




மாய மான்களுக்கு
இன்னும் ஏமாந்து கொண்டுதான்
இருக்கிறார்கள்
கலியுக பிராட்டிகள்


ராமர்களுக்கு விறகொடிக்க
போக விருப்பமில்லை
சீதை தனியாக இருந்தாலும்
பரவாயில்லை
லட்சுமணர்களும் உடன்


கைகேயிக்கு புண்ணியவதி
பட்டம் கொடுத்தான் தசரதன்
திருமதி.செல்வத்துக்கும்
தங்கத்துக்கும் அவளது
நன்றிகள் உரித்தாகிறது



பாதுகையை விட
காலை கொடுத்திருந்தால்
இன்னும் சிறப்புதானே
சாராயக்கடையில் புலம்பகள்
பரதர்கள் மட்டையாகிறார்கள்


தேன் தடவி வறுக்கப்பட்ட
மீனுக்குள் குகனின்
மேல்சபை கோரிக்கைகள்
தவமிருக்கின்றன


வடை போன வருத்தம்
அனுமனுக்கு
வெயிலுக்கு கொஞ்சம்
வெண்ணெய் வேண்டியவனுக்கு
வாலில் நெருப்பு

கும்பகர்ணன் உண்பது போன்ற
கனவில் , சூர்ப்பனகை
அழகு நிலையத்தில்
விபீஷ்ணர்கள் மதில்
மேல் பூனையாய்

இமாமியின் புதிய சலுகை
ஒன்று வாங்கினால்
ஒன்பது மென் தோ ப்ளஸ்
இலவசமாம்

விடிய , விடிய
கேட்டுக் கொண்டேதான்
இருக்கிறோம்
விளங்கிய பாடில்லை
இன்று போய்
நாளையும் வருவோம்