Saturday, September 28, 2013

மானிட்டர் பக்கங்கள்.. 28/09/2013





இரண்டு சர்தார்ஜிகள் சதுரங்கம் ஆட ஆரம்பித்தார்கள் . உலகின் மிகச்சிறிய , மிகப்புகழ்ப்பெற்ற சர்தார்ஜி ஜோக் இது . அதாவது பலகையில் காய்கள் அப்படியே இருந்தன . ஆடிக்கொண்டேயிருந்தார்கள் .
நம் எல்லோருக்கும் நிறைய சர்தார்ஜி ஜோக்குகள் தெரியும் . சர்தார்ஜி பெக் என்றால் தெரியுமா ? ஒரு பெக் என்பது ஆள்காட்டி விரலையும், நடு விரலையும் சேர்த்து வைத்தால் இருக்கும் அளவு. இது யூனிவர்சல் அளவு.. சர்தார்ஜி அதாவது பாட்டியா(லா)லா பெக் என்பது பாபா முத்திரையாம் . சிங் ஈஸ் கிங் .(மன்மோகன் இல்லையே சார்) என்ற கட்டுரையில் மணிஜி சொல்கிறார் . மணிஜி ? எஸ்.கே.எஸ் என்கிற பாரதிமணி . வாழ்க்கையில் சுமார் 50 வருடங்களுக்கும் மேல் வட இந்தியாவில் வாழ்வாங்கு வாழ்ந்தவரை மணிஜி என்றுதானே அழைக்க வேண்டும்.. ஆனால் அவர் நமக்கு பாரதி மணி . ஒரு மாடல் மந்திரி . முதல்வர் என்றால் அவரை மாதிரி இருக்க வேண்டும் என்று தமிழ் சினிமா அவதானித்த புருஷன் . 

தலைப்பாக்கட்டி பிரியாணி , ஒரிஜினல் பாஸ்மதி அரிசி என்றெல்லாம் விளம்பரம் தூள் பறக்கிறது . இந்த பாஸ்மதியின் பின்னிருக்கும் ஒரு கதையை சுவையாக சொல்கிறார் பாரதிமணி . எல்லை தாண்டிய பயங்கரவாதம் என்று கேட்டு கேட்டு புளித்துப்போயிருக்கும் காதுகளுக்கு ,எல்லைத்தாண்டிய பாஸ்மதிவாதம் நாவை நர்த்தனமாட வைக்கிறது . எப்படி பஞ்சாப் பாஸ்மதி சுவையாக இருக்கிறது என்கிற வரலாறு .

நான் சிறுதாவூர் போனதில்லை என்று ஆரம்பிக்கிறார் . மணிஜி சார் .. நீங்க ஒரு கஞ்சாக்குடிக்கியாகும் வாய்ப்பும் காத்திருக்கிறது  . கபர்தார் !! ஒரு லஸ்ஸி குடித்த அனுபவத்தை எழுதுகிறார் . ஒன்றரை லிட்டர் பிடிக்கும் லோட்டாவில் குடிக்க முடியாமல் குடித்த , வெட்டியெடுத்த பாலாடை மிதக்கும் (மலாய் பாக்கே) லஸ்ஸியின் ருசி இன்னும் நாவில் இருக்கிறது. (சுவைக்கும் , ருசிக்கும் எத்தனை வித்தியாசங்கள்  )
தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகில் அன்பு பால் நிலையத்தில் லஸ்ஸி கொடுப்பார்கள் . அப்போது 80 களில் 2 ரூபாய்தான் . கள்ளிச்சொட்டு தயிரில், சர்க்கரையை தாலாட்டி , ஆடைப்போட்டு மானம் காத்து கொடுப்பார்கள் . எப்போது போனாலும் காத்திருந்துதான் குடிக்க வேண்டும். சென்னையில் ஆனந்த் தியேட்டர்(பழைய ) அருகில் வைஷ்ணவி தாபாவில் அப்படி ஒரு லஸ்ஸியை குடித்திருக்கிறேன் .. பீர் மாதிரி ஒரு வித மோரும் கூட . 

ஒரு பஞ்சாப் பஞ்ச் லைன் .

நேரான விரலில் வராத நெய்யை , விரலை வளைத்தெடுப்பதில் தவறில்லை. (சிம்பு, ஹன்சிகா மேட்டர் நியாபகம் வருகிறதா ? ஹன்சிகா ஒரு பஞ்சாபி என்று படித்த நியாபகம் )

ரோஜா என்றால் நேரு மாமா நியாபகம்தான் வரும் . வரணும் . ரோஜாவுக்கு செல்வமணிதானே (இங்கயும் மணியாJ ) என்ற ஏடாகூடம் கூடாது. பாரதிமணிஜி நேருவுக்கு வரையும் எழுத்துச்சித்திரம் ..

”பிரபல புகைப்படக்கலைஞர் ரகுராய் எடுத்த ஒரு படத்தில் வாயில் சிகரெட்டுடன் உதட்டைப் பிதுக்கியபடி சோகமாக தோற்றமளிப்பார் நேருஜி  தமிழ்நாட்டின் வரைப்படத்தை உற்று கவனித்திருக்கிறீர்களா ? அதில் எனக்கு நீண்ட முக்குடன் சிகரெட் பிடிக்கும் நேரு எனக்கு தெரிவார்   சிகரெட்டாக தெரிவதுதான் சில அரசியல்வாதிகளுக்க்கு இனிப்பாகவும் , சிலருக்கு புளிப்பாகவும் இருக்கிற ராமர் பாலம் . 

(எனக்கு மானாட ,மயிலாட கலா மாஸ்டர் தெரிகிறார் 

தில்லியில் வேலைபார்க்க அதாவது கோலோச்ச என்னென்ன தெரிந்திருக்க வேண்டும் என்று விளக்கமாகவே ,கொஞ்சம் சுய வாக்குமூலமாகவே சொல்கிறார் . இரண்டு வாரங்களுக்கு முன் சன் டிவி மகாபாரதத்தில் திருதராஷ்டிரனிடம் ஒரு சாணக்கியன் அரசன் என்பவன் எப்படியிருக்க வேண்டும் என்று சொல்வான் அது நினைவுக்கு வருகிறது. எப்படியிருக்க வேண்டும் ?. சிம்ப்பிள் . இதுவரை நம்மை ஆண்டவர்கள் போல்தான் இருக்க வேண்டும் . அரசர்கள் ஆண்டவனை நம்புகிறார்களோ இல்லையோ , இதற்கும் முன் ஆண்டவர்கள் வழி நடக்கிறார்கள் .

தில்லியின் சுடுகாட்டைப் (நிகம்போத் காட்) பற்றிய கட்டுரையை படிக்காதவர்கள் கட்டை வேகாது என்றே தோன்றுகிறது . ஆறடி நிலம் , எண்சாண் உடல் ,நவத்துவாரங்கள் ,பத்து என்று என்னவல்லாமோ எனக்குள் ஓடியது . பாடைக்கு கயிறு கட்டுவதென்பது ஒரு கலையே . செத்தால் கூட எல்லாருக்கும் வராதுJ பாரதிமணி சாருக்கு வாய்த்திருக்கிறது . வாழ்வாங்கு வாழுங்கள் சார் !

சங்கீதம் பற்றிய பதிவுகளை படிக்கும்போது எனக்கு ஆண்டவர் அசோகா ஸ்டால் நினைவுக்கு வந்தது . அது திருவையாறில் இருக்கிறது . சகல வித்வான்களுடனும் ஜுகல் பந்தியே நடத்தியிருக்கிறார் பாரதிமணி . . கேள்விஞானத்திலேயே . 

கொஞ்சம் முன்னாலேயே எழுத்துக்கு வந்திருந்தால் , “ நான் இதை எழுதுவதற்கு முன் சில பல வருடங்கள் ஒருவித தவத்தில் கிடந்தேன் என்று இன்று பேசும் சோ கால்டு எழுத்தாளர்களை மூலக்கொத்தளம் டாஸ்மார்க்கில் புலம்ப வைத்திருப்பாரோ என்று நினைக்கத்தோன்றுகிறது

பின்னாள் பங்களாதேஷ் அதிபர் ஷேக் அஸினாவை பற்றிய கட்டுரை. அவருக்குப்பிடித்த “ஹீல்ஸா” மீன் . மாளையப்பட்சம் தாண்டி நாக்கு நீள்கிறது J
50 முதல் 60 வயதுகாரர்களுக்கு நீங்கள் எதாவது புத்தகம் பரிசளிக்க விரும்பினால் இந்தப்புத்தகத்தை தரலாம் என்று ஹீவாஸ் (பிழையில்லை ) ரீகல் மீது உறுதியளிக்கிறேன்..

 பிறந்த மண் பற்றிய பதிவுகள் மகாபலி(ஓணம்) விருந்து . ஒரு வேளை விஸ்க்கிக்கு டைம் ஸ்பேர் பண்ணுங்க சார்.. கொஞ்சம் பாக்கியவானாகிக்கொள்கிறேன் !! எட்டு வருஷாக குடிப்பதில்லை என்பதையும் பதிவு செய்து விட்டார் பாவி மனுஷன் . சியர்ஸ் சார் ..

ஒரு விளம்பரம்....

புத்தகம் கிடைக்கும் இடம் ...