Wednesday, May 5, 2010

கருநாகம்............


உமா. கொஞ்சம் கருப்பாக இருப்பாள். அதனால் தாழ்வுமனப்பான்மையும் அதிகம். ஆனால் எனக்கு அவளை ரொம்ப பிடிக்கும். கொஞ்சம் அடல்செண்ட் காதல் என்றும் சொல்லலாம். நான் தான் சொன்னேன் .

உமா ..( அவள் என்னை விட இரண்டு வயது பெரியவள் அவளை அக்கான்னு கூப்பிடறா என்பாள் அம்மா .நீ அப்படி கூப்பிடறதாயிருந்தா என் கூட பேசாதே என்றாள் உமா)

நீ என்னைக்காவது உன் தலைமுடியை ரசிச்சுக்கிருக்கிறாயா?

உமாவுக்கு நல்ல அடர்த்தியான கூந்தல். சரியாக பராமரிக்காமல் செம்பட்டை பிடித்திருந்தது.

உமா எல்லோருக்கும் இப்படிமுடி அமையாது,.அபூர்வ ராகங்களில் ஸ்ரீவித்யாக்கு இருக்குமே அந்த மாதிரி..(ஸ்ரீவித்யா கமல் மிருந்தங்கம் வாசிப்பதை கேட்டு, பாதி குளியலில் வருவாரே..) எங்கம்மாவிற்கும் உன்னைப்போல்தான். அவளும் அலட்சியமாகவே இருப்பாள்..நான் சொன்னது உமாவை மாற்றி விட்டது. கூந்தலுக்கான டிப்ஸை தேடித்,தேடி படிக்க ஆரம்பித்தாள். முட்டை போட்டு ஊறவைத்தல், செம்பருத்தி இலை,மருதாணி இலை, கறிவேப்பிலை அரைத்து, புளிக்காத தயிர் சேர்த்து குளித்தல். அவள் கூந்தல் பொலிவு பெற ஆரம்பித்துவிட்டது. அக்கம் பக்கத்தில் உள்ள பெண்கள் பொறாமை படும்படி.

உனக்குத்தாண்டா தேங்க்ஸ் சொல்லணும் என்றாள். தலையை காய வைத்துக்கொண்டே.. எனக்குள் ஏதோ கிளர்ந்தது.

உமா எனக்கொரு ஆசை என்றேன்.

என்னடா என்றாள். ஒன்றும் சொல்லாமல் அவள் கூந்தலை கையில் எடுத்து முகர்ந்தேன். கண்களை மூடி அந்த வாசத்தை ரசித்துக் கொண்டிருந்தபோது, சட்டென்று இறுக அணைத்து முத்தமிட்டாள் உமா. வயசு வித்தியாசம் இருந்தால் என்ன? படிப்பு முடிந்ததும், வேலைக்கு போய் உமாவை கல்யாணம் செய்து கொள்ள வேண்டும். உன் கூந்தல் அழகுக்கே எத்தனை ராஜகுமாரன்கள் போட்டி போடப்போகிறார்கள் பார் என்றாளாம் உமாவின் பாட்டி. இடையிலிருந்து வாளை மானசீகமாய் உருவி , அத்தனை பேரையும் சாய்த்தேன். வெள்ளை புரவி தயாராக இருந்தது. சாண்டில்யனின் இளவரசனாக மாறினேன். காற்றில் கடுகி விரைகிறோம் இருவரும். அவள் கூந்தல் முகத்திலடிக்க. எங்கோ பட்டு மஞ்சம் பால் பழங்களுடன் காத்திருந்தது.

கதையாகவே போனது. உமாவும் திருமணம் ஆகி போய் விட்டாள். அந்த மாப்பிள்ளைக்கு முன்வழுக்கை. கொடுமை.எப்படி சம்மதித்தாள்? உமா விடை பெறும்போது அழவில்லை. சிரித்தாள். மெதுவாக காதில் சொன்னாள்.

“அந்த முத்தத்தை மறந்துடுவியாடா?

மறக்க முயற்சி பண்றேன்

ப்ளீஸ்.. என்றவள்.. மறக்காதடா பிரசன்னா என்றாள் ஹஸ்கி வாய்சில்.

பிரசன்னா ? அப்படியென்றால் அவள் பைரவியா ?எதை மறக்காதே என்று சொன்னாள். அந்த முத்தத்தையா? அவளையா?

உமாக்கா வந்திருக்காடா என்றாள் அம்மா. எத்தனை வருடம் ஆயிற்று பார்த்து. சுரீரென்று அவள் கூந்தல் வாசம் நாசியில் உணர்ந்தேன். அனிச்சையாய் உதடுகளை ஈரப்படுத்தி கொண்டேன். லேசாக உப்பு கரிக்கும் சாக்லெட் சுவை . நான் லீவில் அமெரிக்காவிலிருந்து வந்திருந்தேன். பாப் வெட்டிக் கொண்ட என் மனைவி, மகள். உமா ..அவளின் அந்த கூந்தல் . அந்தாளின் வழுக்கை.. நிச்சயம் உமாவின் கூந்தலை அவன் வெட்டியிருப்பான் என்று தோன்றியது.

அன்று மாலை உமா வந்தாள். மொட்டை மாடியில் சிகரெட் பிடித்துக் கொண்டிருந்தேன்.

என்னடா இந்த கெட்ட பழக்கம் என்றவள், காதருகே வந்து எனக்கு சிகரெட் ஸ்மெல் ரொம்ப பிடிக்கும்டா என்றாள் கிசுகிசுப்பாய்.

கொஞ்சம் வயசாகியிருந்தது. அந்த கூந்தல் இன்னும் அதே பளபளப்பு மாறாமல் அப்படியே..

மனதை படித்தவள் போல் சொன்னாள்.

திரளபதிக்கு அவள் கூந்தலால்தான் எல்லாக்கஷ்டமுமாம்

யார் சொன்னா என்றேன்

என் மாமியார்தான். அவளுக்கு எலிவாலைப் போல் இருக்கும். ஆன மட்டும் தண்ணி குடிச்சா. இதை சிரைச்சுடுடின்னு.

அன்னிக்கு பார்த்தாப்லயே இருக்கு உமா . அவர் எப்படியிருக்கார்? எப்படியிருக்கு வாழ்க்கை என்றேன்.

கருநாகமாக மின்னிய ஜடையை எடுத்து முன்னால் விட்டுக்கொண்டே சொன்னாள்.

‘இது ஒன்னுதாண்டா மிச்சம்

122 comments:

மணிஜி said...

testing 123

T.V.ராதாகிருஷ்ணன் said...

//இது ஒன்னுதாண்டா மிச்சம்”//

மணிஜி யின் டச் :))

vasu balaji said...

இது இது! இப்படி படிச்சி எவ்வளவு நாளாச்சி:)

Unknown said...

சூப்பர் கதை..

எனக்கு ஏனோ கொஞ்ச நாள் முன்னாடி படிச்ச கதையோட கேரக்டர்ஸ் நினைவுக்கு வருது.. :))

மோனி said...

டெஸ்டிங் 456

மோனி said...

டபுள் ஓக்கே...
ரை ரைட்ட்ட்ட்ட்ட்.

மோனி said...

..//இடையிலிருந்து வாளை மானசீகமாய் உருவி , அத்தனை பேரையும் சாய்த்தேன். வெள்ளை புரவி தயாராக இருந்தது. சாண்டில்யனின் இளவரசனாக மாறினேன். காற்றில் கடுகி விரைகிறோம் இருவரும். அவள் கூந்தல் முகத்திலடிக்க. எங்கோ பட்டு மஞ்சம் பால் பழங்களுடன் காத்திருந்தது. கதையாகவே போனது//..

எனக்கும்...

Vidhoosh said...

கும்மிகள் நூறாக நேசன், பா.ரா, அப்துல்லா, ஆதி எல்லோரையும் மேடைக்கு அழைக்கிறேன்.

ஹுஹ்..... என்னவோ போடா மாதவா..

Cable சங்கர் said...

உங்களுக்கும் ஒரு உமாவா..? :(

பனித்துளி சங்கர் said...

//////////கொஞ்சம் கருப்பாக இருப்பாள். அதனால் தாழ்வுமனப்பான்மையும் அதிகம். ஆனால் எனக்கு அவளை ரொம்ப பிடிக்கும். கொஞ்சம் அடல்செண்ட் காதல் என்றும் சொல்லலாம். நான் தான் சொன்னேன் .//////

கருப்புதான் உங்களுக்கும் பிடித்த கலர் என்று சொல்லுங்க !
சூப்பர் கதை . பகிர்வுக்கு நன்றி !

மணிஜி said...

நன்றி மணிஜீ???

நன்றி டிவிஆர் சார்..லேராண்டி எப்படிருக்கு?

வாங்க பாலா சார்.. நன்றி

நன்றி முகிலன்..உமா காரணமாக இருக்கலாம்..

நன்றி மோனி..எல்லோருக்கும் நடக்கறதுதானே

சரிங்க மாதவி...

கேபிள்..ஒவ்வொரு மூணாவ்து மனிதனுக்கும் உமாவை தெரிந்திருக்கலாம்...

வெயிலுக்கு இதம் பனித்துளி சங்கர்..நன்றி

Vidhoosh said...

//Cable Sankar said...

உங்களுக்கும் ஒரு உமாவா..? :(
///

வாட்.... இதென்ன புது முகம்.. :))

ஹேமா said...

மணிஜீ கதை அருமை.ஒருவரின் ரசனை அடுத்தவர்களுக்கு மாறுபட்டிருக்கிறது.சொன்ன விதம் பிடிச்சிருக்கு.

மணிஜி said...

விதூஷ்..உமாவை பற்றி எழுதியிருக்கேன். இன்னும் ராஜாராமை காணுமே..நேசா..தங்கமே வாடா..

நன்றி ஹேமா வருகைக்கு..

Raju said...

சேவல் படம் பார்த்தீங்களா ஜி..?

பா.ராஜாராம் said...

முன் வழுக்கை காரனின் பெயர் பா.ராஜாராம்.

விதி,

வ..லி..ய..து..மணிஜி!

பா.ராஜாராம் said...

நல்லா எழுதி இருக்கீங்க ஜி.

லாஸ்ட் டச்,அபாரம்.

பா.ராஜாராம் said...

//உங்களுக்கும் ஒரு உமாவா..? :(//

கேபில்ஜி,

:-((((((

செ.சரவணக்குமார் said...

சூப்பர்.......

பா.ரா அண்ணே, இதான் நீங்க சொன்ன உமா கதையா? ரைட்டு!!!

செ.சரவணக்குமார் said...

// பா.ராஜாராம் said...

//உங்களுக்கும் ஒரு உமாவா..? :(//

கேபில்ஜி,

:-((((((//

மொத்தம் எத்தனை உமா? பா.ரா, மணிஜீ இப்ப கேபிள்ஜி ரைட்டு நடத்துங்க. நேசமித்ரண்ணே எங்க இருக்கீங்க., வந்து என்னான்னு கேளுங்க.

பா.ராஜாராம் said...

//மொத்தம் எத்தனை உமா? பா.ரா, மணிஜீ இப்ப கேபிள்ஜி ரைட்டு நடத்துங்க. நேசமித்ரண்ணே எங்க இருக்கீங்க., வந்து என்னான்னு கேளுங்க.//

உமா எனும்போது நேசன் இல்லாமயா சரவனா?

தலைப்பே நேசன் தான்,ன்னு உமா சொல்லுச்சு. :-)

செ.சரவணக்குமார் said...

//முன் வழுக்கை காரனின் பெயர் பா.ராஜாராம்.//

ஹா ஹா....
ஒரு வாரம் லீவு விட்டாச்சுன்னா இப்படியெல்லாம் யோசிக்கத் தோணுமா?

செ.சரவணக்குமார் said...

//முன் வழுக்கை காரனின் பெயர் பா.ராஜாராம்.//

ஹா ஹா....
ஒரு வாரம் லீவு விட்டாச்சுன்னா இப்படியெல்லாம் யோசிக்கத் தோணுமோ?

செ.சரவணக்குமார் said...

வாங்க வாங்க, அப்பிடியே நம்ம கதை நாயகன் நேசன் அண்ணனையும் கூப்புட்டு வந்தீங்கன்னா இன்னும் நல்லாயிருக்கும்.

எல் கே said...

nalla iruku thala

நேசமித்ரன் said...

ஆஹா

ந்தா வந்துட்டே......ன்

உமாவை உம்மான்னு சொன்ன மக்கள எல்லாம் விட்டுபுட்டு கதை நாயகன் நானா ?

Anonymous said...

உமாவுக்கு உம்மா கொடுத்த கதை நல்லாருக்கு ஓய்

நேசமித்ரன் said...

//செந்தழல் ரவி said...
உமாவுக்கு உம்மா கொடுத்த கதை நல்லாருக்கு ஓய்
//

சொன்னோம்ல சொன்னோம்ல

( வடிவேலு ஸ்டைல் மைண்ட்ல இருக்கட்டும்)

பா.ராஜாராம் said...

// ந்தா வந்துட்டே......ன்//

உமா,கதவை சாத்திக்கோ..

புஸ்ஷுன்னு... புஸ்ஷுன்னு... ஏதோ சத்தம். :-)

நேசமித்ரன் said...

//வாங்க வாங்க, அப்பிடியே நம்ம கதை நாயகன் நேசன் அண்ணனையும் கூப்புட்டு வந்தீங்கன்னா இன்னும் நல்லாயிருக்கும்//

எங்க போயிட்டாக ?

தாக்கல் சொல்லி வர சொல்லிட்டு இப்பிடி நட்ட நடுவாத்ல காணாமுன்ன என்ன அர்த்தம்


ஏ புள்ள உமா ராசாத்தி

எங்கலா மக்கமாரெல்லாம் ?

நேசமித்ரன் said...

//உமா,கதவை சாத்திக்கோ..

புஸ்ஷுன்னு... புஸ்ஷுன்னு... ஏதோ சத்தம். :-)//

அது முட்டித்தேஞ்சவிங்களுக்குதே

கொமரன்னு சொல்லுடி

பழனி மலயவே நாங்க நெஞ்சதிராம ஏறி எறங்குரவிங்கன்னு சொல்லு தாயீ

பா.ராஜாராம் said...

//ஏ புள்ள உமா ராசாத்தி//

உமா,

ராசாத்தியவாம்.உன்னை இல்லையாம்.

கதவு திறக்க வேணாம்.

உண்மைத்தமிழன் said...

[[[பின்னிய கூந்தல் கருநிற நாகம்
பெண்மையின் இலக்கணம் அவளது தேகம்
தேவர்கள் வளர்த்திடும் காவிய யாகம் - அந்த
தேவதை கிடைத்தால் அது என் யோகம் - அது என் யோகம்]]]

இந்த சீன்ல ஸ்ரீவித்யாவின் ரியாக்ஷனை பார்த்தீங்களாண்ணே..! அசத்தலா இருக்கும்..!

உண்மைத்தமிழன் said...

கடைசி வரி அக்மார்க் தண்டோரா நக்கல்..!

க.பாலாசி said...

டச்சிங்.. .ஸ்டோரி...

//Cable Sankar said...
உங்களுக்கும் ஒரு உமாவா..? :(//

சேம் பிளட்.... அந்த நாள்....... ஞாபகம்....... நெஞ்சிலே வந்ததே.......

நேசமித்ரன் said...

///கும்மிகள் நூறாக நேசன், பா.ரா, அப்துல்லா, ஆதி எல்லோரையும் மேடைக்கு அழைக்கிறேன்.

ஹுஹ்..... என்னவோ போடா மாதவா///

உமா- மா- மாதவா

ஆத்தீ வில்லங் கோஷ்டிக்குன்னே பெறப்பெடுத்திருப்பய்ங்களோ

மாதவனாம்ல மா... த வெவ்வெவ்வெவ்வென்

பா.ராஜாராம் said...

//பழனி மலயவே நாங்க நெஞ்சதிராம ஏறி எறங்குரவிங்கன்னு சொல்லு தாயீ//

மாலை போட்டுருக்கு சாமி.கும்பிட்டுக்கோ உமா,கதவு திறக்காமல்.

நேசமித்ரன் said...

//ராசாத்தியவாம்.உன்னை இல்லையாம்.

கதவு திறக்க வேணாம்//

அடஙொக்கமக்கா எப்பீடியெல்லாம் கெணத்த தோட்டா வெக்குராய்ஙக பாரு

தொரக்க வேணாமாம்ல பெங்குளூர் சாமியார கீட்டொயாந்துர் தொரந்துக்குரோம் காத்தும் வரும்ல அப்பு

பா.ராஜாராம் said...

//தொரக்க வேணாமாம்ல பெங்குளூர் சாமியார கீட்டொயாந்துர் தொரந்துக்குரோம் காத்தும் வரும்ல அப்பு//

விடு உமா.சாமி பெங்களூர் போயிருச்சு.சாயந்தரம் சன் டி.வி.யில் வரும்.அப்ப கும்பிட்டுக்கலாம்.

நேசமித்ரன் said...

செந்துருக்கப் பொட்டுக்காரி செவ்வெளனி நெஞ்சுக்காரி
நெஞ்செல்லாம் நானிருக்க
நெனப்பெல்லாம் சேர்ந்திருக்க
சிவகங்க மாமென் காரன்
சிணுங்கிகிட்டே சீரு வைக்க
சீமைக்கார மச்சான் வாராரு
சேனை வைக்க
காத்திருந்து காத்திருந்து
கருவேலம் தழைக்குதடி
கதவ தொரந்துருடி
கதவு செய்யும் காசு மிச்சம்

இராகவன் நைஜிரியா said...

யப்பே என்னாது இது...

பெரியவங்க இருக்கின்ற இடத்தில் இந்த சின்னவனுக்கு வேலையில்ல..

கும்மிகள் தொடரட்டும்.

பா.ராஜாராம் said...

காமராஜ் சிறுகதை இப்பதான் வாசித்தேன் நேசா.கலக்கி இருக்கிறார் மனுஷன்.தகவலுக்கு நன்றி நேசா.

மணிஜி,சரவனா மிஸ் பண்ண வேணாம்.

நேசா,

ஆச்சு.கொஞ்சம் வேலை.இரவு மணி தளத்தில் சந்திக்கிறேன்,சிங்கத்தை. :-)

செ.சரவணக்குமார் said...

நேசன் அண்ணாச்சி வந்துட்டீகளா?

நேசமித்ரன் said...

வேலிக்காத்தானெல்லாம் வெக்கப் பட்டு குனிஞ்சிருக்கு
உன் குளிச்சத்துணி ஈரத்துல வளந்த கழுதைக்கு வேட்டி கரை பட்டதுமே
வெக்கமென்ன வெக்கம்

கடலபொட்டுக்குள்ள கிண்டிக்கிண்டித்தேடுறா
அடைக்கு
கூட்டனுண்டி புளிச்ச தயிராட்ட்ம்
நெறங்கொண்ட கோழிய

கதவத் தொறந்துரு
ஆறு மணி ஆட்டத்துக்கு
பொறவு நான் தனியா போயிருவேன்

இராகவன் நைஜிரியா said...

// பா.ராஜாராம் said...
காமராஜ் சிறுகதை இப்பதான் வாசித்தேன் நேசா.கலக்கி இருக்கிறார் மனுஷன்.தகவலுக்கு நன்றி நேசா.

மணிஜி,சரவனா மிஸ் பண்ண வேணாம்.

நேசா,

ஆச்சு.கொஞ்சம் வேலை.இரவு மணி தளத்தில் சந்திக்கிறேன்,சிங்கத்தை. :-)//

சிங்கத்தை சிங்கிளா சந்திக்கப் போறியளா?

செ.சரவணக்குமார் said...

பா.ரா
நேசன்

என்னா ஆட்டம் போடுறீக ரெண்டு பேரும்? என்னாதான்யா உமாவோட கதை?
எல்லோரும் தெரிஞ்சிக்கிறோம் சொல்லுங்களேன்.

இராகவன் நைஜிரியா said...

// நேசமித்ரன் said...
//வேலிக்காத்தானெல்லாம் வெக்கப் பட்டு குனிஞ்சிருக்கு //

அப்படீங்களா??? சரி சரி அதுவாவது வெட்கப்படட்டும்.

// உன் குளிச்சத்துணி ஈரத்துல வளந்த கழுதைக்கு வேட்டி கரை பட்டதுமே
வெக்கமென்ன வெக்கம் //

அது கிடக்கது கழுதை விட்டு தள்ளுங்க.

//கடலபொட்டுக்குள்ள கிண்டிக்கிண்டித்தேடுறா //

கடலை போடுவதற்காக இருக்குமோ?

//அடைக்கு
கூட்டனுண்டி புளிச்ச தயிராட்ட்ம் //

அடைக்கு கூட்டணி.. வெல்லம், அவியல், வெண்ணை. நோ புளிச்சத் தயிரு.

//நெறங்கொண்ட கோழிய

கதவத் தொறந்துரு
ஆறு மணி ஆட்டத்துக்கு
பொறவு நான் தனியா போயிருவேன் //

போங்க யாரு வேண்டான்னு சொன்னாங்க.

இராகவன் நைஜிரியா said...

// செ.சரவணக்குமார் said...
பா.ரா
நேசன்

என்னா ஆட்டம் போடுறீக ரெண்டு பேரும்? என்னாதான்யா உமாவோட கதை?
எல்லோரும் தெரிஞ்சிக்கிறோம் சொல்லுங்களேன். //

உமாவுடைய கதை தெரியாது... நிசமாவே உங்களுக்குத் தெரியாது... என்னா இப்படி சொல்லிட்டீங்க... அய்யோ... அய்யோ...

எனக்கும் தெரியாது... யாரவது சொல்லுங்களேன்.

இராகவன் நைஜிரியா said...

//மணிஜீ...... said...
testing 123

மோனி said...
டெஸ்டிங் 456 //

டெஸ்டிங் ... 789

இராகவன் நைஜிரியா said...

மீ த 50

எப்படி அடிச்சோம் பார்த்தீங்களா?

இராகவன் நைஜிரியா said...

// வானம்பாடிகள் said...
இது இது! இப்படி படிச்சி எவ்வளவு நாளாச்சி:) //

சுமாரா ஒரு 60 நாள் இருக்குமா அண்ணே?

நேசமித்ரன் said...

நெனச்சா வந்துருவேன்
சாமியில்ல சித்தனில்ல
சரவணா

மூக்கு வேர்த்திருமே
கெடாவெட்டுன்னா
நாக்கும் ஊறி வருமே
தின்னு கெட்ட பய சங்காத்தம்
வேறென்ன

பதவிசா போயிருச்சு பா.ரா
அண்ணாச்சி
பாக்கிய விடுவனா
பாண்டி முனியாண்டிக்கிட்ட
காசு வெட்டி போட்டுடலாம்

இராகவன் நைஜிரியா said...

// T.V.ராதாகிருஷ்ணன் said...
//இது ஒன்னுதாண்டா மிச்சம்”//

மணிஜி யின் டச் :))//

ஆமாம் சரியாச் சொன்னீங்க அண்ணே. சூப்பர் டச். அண்ணே இது குட் டச்சா இல்ல பேட் டச்சா?

அளவில்லா சந்தேகத்துடன்..!!

செ.சரவணக்குமார் said...

////நேசா,
ஆச்சு கொஞ்சம் வேலை,இரவு மணி தளத்தில் சந்திக்கிறேன்.//

நேசன் அண்ணாச்சி, இங்க வந்தும் செந்துருக்கப் பொட்டுக்காரின்னு ஆரம்பிச்சீங்கன்னா மனுஷன் கெளம்பாம என்ன பண்ணுவாரு..

இராகவன் நைஜிரியா said...

// முகிலன் said...
சூப்பர் கதை..

எனக்கு ஏனோ கொஞ்ச நாள் முன்னாடி படிச்ச கதையோட கேரக்டர்ஸ் நினைவுக்கு வருது.. :)) //

கதைகளில் ரிப்படிஷன் ஆஃப் கேரக்டர்கள் தவிர்க்க முடியாதுங்க

இராகவன் நைஜிரியா said...

// மோனி said...
டபுள் ஓக்கே...
ரை ரைட்ட்ட்ட்ட்ட். //

டிரிபிள் ஓக்கே

ரை ரை ரைட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்.

இராகவன் நைஜிரியா said...

// மோனி said...
..//இடையிலிருந்து வாளை மானசீகமாய் உருவி , அத்தனை பேரையும் சாய்த்தேன். வெள்ளை புரவி தயாராக இருந்தது. சாண்டில்யனின் இளவரசனாக மாறினேன். காற்றில் கடுகி விரைகிறோம் இருவரும். அவள் கூந்தல் முகத்திலடிக்க. எங்கோ பட்டு மஞ்சம் பால் பழங்களுடன் காத்திருந்தது. கதையாகவே போனது//..

எனக்கும்..//

எனக்கும் ....

இராகவன் நைஜிரியா said...

// Vidhoosh(விதூஷ்) said...
கும்மிகள் நூறாக நேசன், பா.ரா, அப்துல்லா, ஆதி எல்லோரையும் மேடைக்கு அழைக்கிறேன்.

ஹுஹ்..... என்னவோ போடா மாதவா.. //

எதோ என்னால முடிஞ்சது கொஞ்சம் போட்டு இருக்கேங்க

இராகவன் நைஜிரியா said...

// Cable Sankar said...
உங்களுக்கும் ஒரு உமாவா..? :( //

உங்களுக்கும் ??? வொய் திஸ் டவுட் கேபிள் அண்ணே?

நேசமித்ரன் said...

ஆஹா அபுஜா சிங்கம் அலப்பறையா
வந்து நிக்க
ஒண்ணுத்தெரியாத சரவணா தாப்பா
போட சொன்னவர கேட்டுக்க
அம்புட்டு அவசரமா சிவகங்க
சிங்காரதுக்கு
ராத்திரிக்கு ரா ரா பா.ரா
கச்சேரிக்கு

இராகவன் நைஜிரியா said...

// மணிஜீ...... said...
விதூஷ்..உமாவை பற்றி எழுதியிருக்கேன். இன்னும் ராஜாராமை காணுமே..நேசா..தங்கமே வாடா..

நன்றி ஹேமா வருகைக்கு.. //

ஓ எங்களை எல்லாம் மறந்தாச்சு போலிருக்கே அண்ணே...

ஊருக்கு வந்து உங்களுக்கு இருக்கு ஒரு மண்டகபடி...

செ.சரவணக்குமார் said...

//நெனச்சா வந்துருவேன்
சாமியில்ல சித்தனில்ல
சரவணா
மூக்கு வேர்த்திருமே
கெடாவெட்டுன்னா
நாக்கும் ஊறி வருமே
தின்னு கெட்ட பய சங்காத்தம்
வேறென்ன
பதவிசா போயிருச்சு பா.ரா
அண்ணாச்சி
பாக்கிய விடுவனா
பாண்டி முனியாண்டிக்கிட்ட
காசு வெட்டி போட்டுடலாம்//

முடியல.......
அப்ப நானும் கெளம்புறேன்.. அப்புறம் பார்க்கலாம்.

நேசமித்ரன் said...

ஆஹா
தனியாவே தாங்காது

அண்ணா நடத்துங்க நடத்துங்க
:)

செ.சரவணக்குமார் said...

//இராகவன் நைஜிரியா said...

// மோனி said...
..//இடையிலிருந்து வாளை மானசீகமாய் உருவி , அத்தனை பேரையும் சாய்த்தேன். வெள்ளை புரவி தயாராக இருந்தது. சாண்டில்யனின் இளவரசனாக மாறினேன். காற்றில் கடுகி விரைகிறோம் இருவரும். அவள் கூந்தல் முகத்திலடிக்க. எங்கோ பட்டு மஞ்சம் பால் பழங்களுடன் காத்திருந்தது. கதையாகவே போனது//..

எனக்கும்..//

எனக்கும் ....//

எல்லோருக்கும்..

இராகவன் நைஜிரியா said...

// நேசமித்ரன் said...
நெனச்சா வந்துருவேன்
சாமியில்ல சித்தனில்ல
சரவணா //

அப்ப சாமியாரா?

// மூக்கு வேர்த்திருமே
கெடாவெட்டுன்னா
நாக்கும் ஊறி வருமே
தின்னு கெட்ட பய சங்காத்தம்
வேறென்ன //

ஆமாம் வெயில் ஜாஸ்தி... மூக்கு மட்டுமா வேர்க்குது.. உடம்பு முழுக்க வேர்த்து ஊத்துது.

// பதவிசா போயிருச்சு பா.ரா
அண்ணாச்சி
பாக்கிய விடுவனா
பாண்டி முனியாண்டிக்கிட்ட
காசு வெட்டி போட்டுடலாம் //

பா.ரா. அண்ணனுக்கு பதவி கிடைச்சு இருக்கா... அண்ணே வாழ்த்துகள்.

பாக்கிய ஏன் விடணும்... கறாரா வசூல் பண்ணிடுங்க

இராகவன் நைஜிரியா said...

// நேசமித்ரன் said...
ஆஹா
தனியாவே தாங்காது

அண்ணா நடத்துங்க நடத்துங்க
:)//

ஆஹா... இப்படியெல்லாம் உசுப்பேத்தி... உசுப்பேத்தி... ரணகளமாக்கிறியே?

இராகவன் நைஜிரியா said...

// பா.ராஜாராம் said...
முன் வழுக்கை காரனின் பெயர் பா.ராஜாராம்.

விதி,

வ..லி..ய..து..மணிஜி! //

அப்ப பின் வழுக்கை காரனின் பெயர்.... ராஜாராம். பா என்று வைத்துக் கொள்ளலாமா?

விதி வலியது, கொடியது அதை மாற்ற யாராலும் முடியாது

நேசமித்ரன் said...

க//றாரா வசூல் பண்ணிடுங்க//

ம்ம்
மல்லியா குடுத்தா உமாவுக்கு
மில்லியா குடுத்தா உங்களுக்கு

இராகவன் நைஜிரியா said...

மீதி ஆஃப்டர் லஞ்ச் ப்ரேக்...

நேசமித்ரன் said...

பின் வழுக்கை காரனின் பெயர்.... ராஜாராம். பா என்று வைத்துக் கொள்ளலாமா?

அவ்வ்வ்வ்
எப்பூடி இதெல்லாம் ?

செ.சரவணக்குமார் said...

// இராகவன் நைஜிரியா said...

யப்பே என்னாது இது...

பெரியவங்க இருக்கின்ற இடத்தில் இந்த சின்னவனுக்கு வேலையில்ல..

கும்மிகள் தொடரட்டும்.//

ராகவன் அண்ணே.. நீங்க ஒரு ஆளு நூறு யானைக்கு சமம், உங்க ஒரு பின்னூட்டம் லட்சம் பதிவுகளுக்கு சமம், நீங்க கும்மி அடிக்க வந்துட்டீங்கன்னா ஒரு பய தாக்குப்பிடிக்க முடியாது. நீங்கதான் கிங் (அப்புறம் என்னப்பா அது டயலாக்கு, அந்த எழவுப் படத்த அந்த சீனுக்கு மேல பாக்க முடியல)

நேசமித்ரன் said...

//மீதி ஆஃப்டர் லஞ்ச் ப்ரேக்//

அவ்வளவு கல்லாவா இருக்கு உடச்சு சாப்புடுற அளவுக்கு

நேசமித்ரன் said...

//ராகவன் அண்ணே.. நீங்க ஒரு ஆளு நூறு யானைக்கு சமம், உங்க ஒரு பின்னூட்டம் லட்சம் பதிவுகளுக்கு சமம், நீங்க கும்மி அடிக்க வந்துட்டீங்கன்னா ஒரு பய தாக்குப்பிடிக்க முடியாது. நீங்கதான் கிங் (அப்புறம் என்னப்பா அது டயலாக்கு, அந்த எழவுப் படத்த அந்த சீனுக்கு மேல பாக்க முடியல)//


அது அது !!!1!

செ.சரவணக்குமார் said...

வழக்கம்போல மூலவரக் காணோமே.. ரைட்டு ஈவ்னிங் வர்றேன்.

நேசமித்ரன் said...

//விதி வலியது, கொடியது அதை மாற்ற யாராலும் முடியாது//

மதின்னு யாரோ இருக்காறாம்ல சொன்னாங்க

செ.சரவணக்குமார் said...

// நேசமித்ரன் said...

//மீதி ஆஃப்டர் லஞ்ச் ப்ரேக்//

அவ்வளவு கல்லாவா இருக்கு உடச்சு சாப்புடுற அளவுக்கு//

சிங்கத்த உசுப்பேத்தி விட்டுட்டாங்க, இனி எத்தன தல உருளப்போகுதோ....

செ.சரவணக்குமார் said...

சீக்கிரமா செஞ்சுரி அடிங்க நேசன்..

நேசமித்ரன் said...

சீக்கிரமா செஞ்சுரி அடிங்க நேசன்

100 ந்னு சொல்லுங்க சரவணா

செஞ்சுரின்னா ஒரு ’கிக்’ இல்லயே

நேசமித்ரன் said...

"கருநாகம்............"

தலிப்புலயே இன்னா வில்லத்தனம்

செரியான பெல் பார்ட்டி பா இது

நேசமித்ரன் said...

//இடையிலிருந்து வாளை மானசீகமாய் உருவி , அத்தனை பேரையும் சாய்த்தேன். வெள்ளை புரவி தயாராக இருந்தது. சாண்டில்யனின் இளவரசனாக மாறினேன். காற்றில் கடுகி விரைகிறோம் இருவரும். அவள் கூந்தல் முகத்திலடிக்க. எங்கோ பட்டு மஞ்சம் பால் பழங்களுடன் காத்திருந்தது//


பால் பழம் ..
ம்ம்

ஆவட்ட்டும் ஆவட்டும் ஜல்தியா

நேசமித்ரன் said...

// மணிஜீ...... said...
testing 123
//

ஏன் 143 சொல்ல மாட்டேஙுறீங்க யாரும் ?

நேசமித்ரன் said...

//வானம்பாடிகள் said...
இது இது! இப்படி படிச்சி எவ்வளவு நாளாச்சி:)
//

2 தடவ இதுன்னா
ரெண்டு கதையா ?

இன்னொன்னு எங்கப்பா
எங்க ?

செ.சரவணக்குமார் said...

//நேசமித்ரன் said...

100 ந்னு சொல்லுங்க சரவணா

செஞ்சுரின்னா ஒரு ’கிக்’ இல்லயே//

இந்த கிக், போதை, மது வகையறாக்கள் போன்றவைகளைப் பற்றி சவுதியிலிருக்கும் அப்பாவிகளான பா.ரா, செ.சரவணக்குமார் ஆகியோர்களிடம் பேச வேண்டாம் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

நேசமித்ரன் said...

//வழக்கம்போல மூலவரக் காணோமே.. ரைட்டு ஈவ்னிங் வர்றேன்.//

ஏன் லெப்டு சைட்ல வழி இல்லையா ?

செ.சரவணக்குமார் said...

//ஏன் லெப்டு சைட்ல வழி இல்லையா ?//

அடிச்சு ஆடுறீங்களே மக்கா..

நேசமித்ரன் said...

//இந்த கிக், போதை, மது வகையறாக்கள் போன்றவைகளைப் பற்றி சவுதியிலிருக்கும் அப்பாவிகளான பா.ரா, செ.சரவணக்குமார் ஆகியோர்களிடம் பேச வேண்டாம் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.//

எண்ட குருவாயூரப்பா

எண்ட அம்மே ...!

எந்தா ஈயாள் பறையுன்னது

?


சேட்டா....

Paleo God said...

வாவ்..!

Unknown said...

ஒரே feelings ஆ இருக்கு ........

நேசமித்ரன் said...

//அடிச்சு ஆடுறீங்களே மக்கா//

அடிச்சா லேசா ஆடனும் இல்லாட்ட்டி எதுக்கு குடிச்சிகிட்டு

ஹி ஹி

நேசமித்ரன் said...

//
அப்பாவிகளான பா.ரா, செ.சரவணக்குமார்//

அடப்பாவிகள் தம்மை அப்பாவிகள் என்று சொல்லிகொள்வதை வன்மையாக இல்ல லைட்டா கண்டிக்குறேன்

நேசமித்ரன் said...

//பா.ராஜாராம் said...
நல்லா எழுதி இருக்கீங்க ஜி.

லாஸ்ட் டச்,அபாரம்
//

அப்போ பஸ்ட் டச் பத்தி பேசுன ”லாஸ்ட்” டச் கதைன்னு சொல்லுங்க

நேசமித்ரன் said...

//முடியல.......
அப்ப நானும் கெளம்புறேன்.. அப்புறம் பார்க்கலாம்.//

அப்புறம் = அந்தப் புறம் தானே

அந்தபுரம் இல்லையே

:)

நேசமித்ரன் said...

//உன் கூந்தல் அழகுக்கே எத்தனை ராஜகுமாரன்கள் போட்டி போடப்போகிறார்கள் பார் என்றாளாம்//

ராஜாராமர்கள் ந்னு சொல்லுங்க மணி ஜி

நேசமித்ரன் said...

//“அந்த முத்தத்தை மறந்துடுவியாடா? //

முத்த உமா மூத்த உமா

ஒற்றை முத்தத்தில் உன் ஒற்றை முத்தத்தில் .....

முத்தம் முத்தம் முத்தமா

நேசமித்ரன் said...

//காதருகே வந்து எனக்கு சிகரெட் ஸ்மெல் ரொம்ப பிடிக்கும்டா என்றாள் கிசுகிசுப்பாய்//

காதல் புகை
காதில்
எத்தனை பேருக்கு பகை
தீதில்

ன்னு கவிதை எல்லாம் எழுத தோணுதே உமா

நேசமித்ரன் said...

//திரளபதிக்கு அவள் கூந்தலால்தான் எல்லாக்கஷ்டமுமாம் //

பஞ்ச பாண்டவர் போல இங்கையும்
போட்டின்னு சிம்பாலிக்கா சொல்றீங்களா அண்ணே அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

நேசமித்ரன் said...

//அன்னிக்கு பார்த்தாப்லயே இருக்கு உமா //

நிலா நிஜத்தில் தேய்வதும் இல்லை வளர்வதும் இல்லை சூரியன் பார்வையில்

நேசமித்ரன் said...

//கருநாகமாக மின்னிய ஜடையை எடுத்து //

அதன் படத்தில் இருக்கும் U வடிவில் க்ளிப் அணிந்திருந்தாளான்னு சொல்லி இருக்கலாம்

நேசமித்ரன் said...

//‘இது ஒன்னுதாண்டா மிச்சம்”//

காதலின் நினைவு சின்னம் நதியாகவும் மஹாலாக மட்டுமா இருக்கனும்

குழலும்தான்

நேசமித்ரன் said...

//Vidhoosh(விதூஷ்) said...
கும்மிகள் நூறாக நேசன்
//

விதூஷ்

ஆச்சு 100 ஆச்சு

:)

iniyavan said...

தலைவரே,

கதை அருமையா இருக்கு. ஆனா இந்த கும்மிகள் ஒன்னும் புரியல.

Unknown said...

கதை அருமை... கும்மி அதை விட அருமை.... (எம்புட்டு கதை வெளில வருது கும்மில )

க ரா said...

நல்லா இருக்கு மணிஜீ.

Chitra said...

கதையும் கும்மியும், நல்லா இருக்குங்க.

பத்மா said...

மணி சார் உங்கள சுத்தி எத்தனை கருநாகங்கள் ?
வெள்ளிகிழமை தானே அங்கெல்லாம் விடுமுறை ?
கும்மியடிச்சு சிவந்த கைகள் விருது யாருக்கு?
செமயா இருக்கு

Ganesan said...

நெகிழ்ந்தேன்.

Romeoboy said...

என்னத்த சொல்ல !!! ஹ்ம்ம் யாரும் இதுவரை சொல்லாத வார்த்தைகளை தேடுறேன்..

ரோஸ்விக் said...

நான் பார்த்த உமாவுக்கு கூந்தல் மட்டுமில்ல மேனியும் பளபளன்னு கருப்பா... :-)

vinthaimanithan said...

நீங்களும் கூந்தல்ல மயங்குற ஆள்தானா?

அது ஒரு தனி டேஸ்ட்ணே!!!

//அந்த முத்தத்தை மறந்துடுவியாடா?//

மறக்குற மாதிரியா குடுக்குறாங்க???

//இது ஒன்னுதாண்டா மிச்சம்//

சிறகுகள் உதிர்ந்துபோன பின் தேவதைகள் எப்படி இருப்பார்கள்?!

கலகலப்ரியா said...

நல்லாருக்கு மணிஜி..

சிநேகிதன் அக்பர் said...

கதை ரொம்ப டச்சிங்கா இருந்தது மணிஜீ.


மக்கள் அடிச்ச கும்மியில வலைப்பூவே அதிருதே!

Starjan (ஸ்டார்ஜன்) said...

உள்ளேன் ஐயா..

Starjan (ஸ்டார்ஜன்) said...

நல்லாத்தான் யோசிக்கிறாங்கப்பூ...

Starjan (ஸ்டார்ஜன்) said...

ஆஹா லேட்டா வந்திட்டோமே.. சே., வட போச்சே..

புலவன் புலிகேசி said...

சூப்பரப்பு....

ஆரூரன் விசுவநாதன் said...

அழகு.............

Unknown said...

Very nice

Jerry Eshananda said...

அதுக்கு அப்புறம் என்ன நடந்துச்சு "அந்த மொட்டை மாடியில" சொல்லுங்கப்பு...

Vidhoosh said...

///மாதவனாம்ல மா... த வெவ்வெவ்வெவ்வென்///

நேசன் அண்ணே;) அம்புட்டு வில்லனும் இங்குட்டே இருக்காய்ங்க.. அத்துண போரையும் விட்டுபோட்டு மாதவன ஏம்லே வெவ்வெ-ன்றீரு

Vidhoosh said...

///Blogger நேசமித்ரன் said...

செந்துருக்கப் பொட்டுக்காரி செவ்வெளனி நெஞ்சுக்காரி
நெஞ்செல்லாம் நானிருக்க
நெனப்பெல்லாம் சேர்ந்திருக்க
சிவகங்க மாமென் காரன்
சிணுங்கிகிட்டே சீரு வைக்க
சீமைக்கார மச்சான் வாராரு
சேனை வைக்க
காத்திருந்து காத்திருந்து
கருவேலம் தழைக்குதடி
கதவ தொரந்துருடி
கதவு செய்யும் காசு மிச்சம்////

இதுக்கே ஆயிரம் பொண்ணு -- அட... ஆயிரம் பொன்னு-ன்னு சொல்ல வந்தேன்

மணிஜி said...

ராகவன், சரவணகுமார், என் பிரிய நேசன் &ராஜாராம்,அதற்கு சற்றும் குறைவில்லாத அக்பர், ஸ்டார்ஜன்,ஷங்கர்,ராஜீ அனைவருக்கும் நன்றியும் ,அன்பும்..நேற்று ஒரு விளம்பர ஷீட்டிங்கில் இருந்ததால் கும்மியில் கலந்து கொள்ள முடியவில்லை..மன்னிக்க வேண்டுகிறேன்

பத்மா..உங்கள் வருகைக்கும் நன்றி..பசங்க அப்படித்தான் அடிச்சு ஆடுவாங்க.

மணிஜி said...

அன்புக்குரிய ப்ரியா, சித்ராவுக்கும் நன்றி


நன்றி செந்தழல் தம்பி

உண்மைத்தமிழன் அண்ணே

ரோமியோ, ரோஸ்விக்,புலவன் புலிகேசி, டிஎஸ்பி,ஆரூரான்,ஹனிப்ரே,ஹசீம்,ராமசாமிகண்ணன்,,உலக்ஸ்,விந்தை மனிதன் அன்பும் , நன்றிகளும்