Showing posts with label வசந்தம். Show all posts
Showing posts with label வசந்தம். Show all posts

Thursday, March 12, 2009

வசந்தம்,சுகந்தம்,முகில்,துகில்,தனிமை,இனிமை,நீ,நான்,நிலா,சோகம்,ராகம்

வசந்தம்,சுகந்தம்,முகில்,துகில்,தனிமை,இனிமை,நீ,நான்,நிலா,சோகம்,ராகம் என்று அடுக்கு மொழியில் கவிதை என்று நானே சொல்லிக் கொண்டு கிறுக்கி தள்ளிய பருவம் அது.கூடவே காதலும் சேர்ந்து கொண்டால் கேட்கவா வேண்டும்.பேப்பருக்கு வந்த கேடு காலம்.வெள்ளையாய் எதை பார்த்தாலும் கவி மழைதான்.அதிலும் அந்த முதல் காதல் தோல்வி அடைந்தவுடன் கவிதை என்னிடம் பட்ட பாடு(அப்பன் காசில் சார்ம்ஸ் சிகரெட்,அரைத் தாடி,நண்பர்களின் அனுதாபம் வலுகட்டாயமாக வரவழைத்து கொண்ட மெல்லிய சோகம்..சும்மா சொல்லக் கூடாது..அது ஒரு சுகம்தான்..நண்பா முதல் காதல் எப்பவும் தோல்வி தான் அடையனும்..அப்பதான் அடுத்தடுத்து நிறைய ட்ரை பண்ணலாம்..ஒரு உயிர் நண்பன்)...வைரமுத்துவின் "இது ஒரு பொன்மாலைப் பொழுது" ஹிட்டான் சமயம்..சினிமா ஆசை வந்து தொலைத்தது...கல்லுரி படிப்பு? பாதியில் புட்டுகிச்சு..
ஒரு நாளைக்கு சராசரியாக சுமார் 100 பேர் சினிமா ஆசையில் சென்னைக்கு வருவதாக சொல்லப் படுகிறது.நானும் வந்தேன்(அப்போ மதராஸ்)...என் கவி திறமைக்கு இளையராஜாவே எக்மோருக்கு வந்து என்னை வரவேற்பார் என்று நான் அசைக்க முடியாத நம்பிக்கையில் இருந்தேன்...(ஒன்றும் பெரிய ஆசையெல்லாம் இல்லை..ஒரு பாட்டெழுதி விட்டால் ராஜியை மடக்கி விடலாம் என்ற அல்ப ஆசைதான்)
ஏவிஎம் ஸ்டுடியோ முதல் கேட்டில் யார் வேண்டுமானாலும் போகலாம்.இரண்டவது கேட்டில் தான் பிரச்சனை.நான் அங்கேதான் மாட்டிக் கொண்டேன்..யாரை பார்க்கணும்.....ராஜா சாரை...அவர் பிரசாத்ல இல்ல இருப்பாரு போ போஎன்று செக்யூரிட்டி விரட்ட அன்று தொடங்கியது என் சினிமா யாத்திரை.இன்னும்.....வரும்