Showing posts with label வலைப் பதிவர் நல வாரியம். Show all posts
Showing posts with label வலைப் பதிவர் நல வாரியம். Show all posts

Wednesday, March 24, 2010

அழைக்கிறார்கள்..............




சும்மா அங்கிட்டும், இங்கிட்டும் திரிஞ்சிகிட்டேயிருக்கோம். கொஞ்சம் கூடி பேசலாமா? என்ன பேசலாம் ?


1. தமிழ்மணத்தில் எப்படி ஓட்டு வாங்குவது?
2. எப்படி குழு அமைப்பது?
3. ப்ளஸ், மைனஸ் மற்றும் இடைத்தேர்தல் ஓட்டு, அதாங்க கள்ள ஓட்டு எப்படி போடறது?
4. எதிர்பதிவுகள்/எதிர்வினை பற்றிய தெளிவுகள்

அன்பு வலைத்தமிழ் ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்புகளே ! படைப்பாளி சொந்தங்களே !

நட்சத்திரப் பதிவர் உண்மைத்தமிழனார் அழைக்கிறார்...9840998725
கேபிளார் அழைக்கிறார் ... 9840332666
நரசிம்மார் அழைக்கிறார்.. 9841888663
அகநாழிகையார் அழைக்கிறார்.. 9994541010
லக்கியார் அழைக்கிறார்.... 9500061605
அதிஷார் அழைக்கிறார்...... 9500061607


யார்/ஆர்னு வருவதால் யார் இவர்கள் என்று கேட்கவில்லை. உங்களுக்கே தெரியும். இவர்கள் மோசமானவங்கள்ளேயே முக்கியமானவங்க ! மற்றும் உங்களை நீங்களே அழைத்துக் கொண்டும் வந்து விடுங்கள்.


சென்னைவாழ் பதிவர்களுக்காக ஒரு அமைப்பு ஏற்படுத்தும் அவசியம் வந்திருக்கிறது. அமைப்பின் பயன்கள் சில ;


1 . வலைப்பதிவர்களுக்கு பத்திரிக்கையாளர் அட்டை வழங்கப்படலாம். அதை வைத்துக் கொண்டு ஒன்வேயில் போகலாம். மாமூல் கொடுக்காமல் தப்பிக்கலாம்.

2. சினிமாக்களை ஓசியில் பார்க்கும் வாய்ப்பும், கவர் வாங்கி கொண்டு விமர்சனம் எழுதும் வாய்ப்பும் கிடைக்கலாம்.

3. வலைப்பதிவர் நலவாரியம் அமைக்கப்படலாம்.

4. சோழிங்கநல்லூரில் இலவச வீட்டு மனை கிடக்கப்பெறலாம்.

5. ஆளுங்கட்சிக்கு ஜால்ரா அடிப்பவர்களுக்கு கணையாழி விருதும் கிடைக்க வாய்ப்புண்டு.


நிகழ்ச்சி நிரல்
தேதி : 27.03.10/சனிக்கிழமை நேரம் : மாலை 5.30 இடம் : டிஸ்கவரி புக் பேலஸ் 6.முனுசாமி சாலை முதல் மாடி, மஹாவீர் காம்ப்ளெக்ஸ் பாண்டிச்சேரி ஹவுஸ் அருகில், மேற்கு கே.கே.நகர் சென்னை –78


அன்புடன் அனைவரையும் வரவேற்கும்


Friday, March 13, 2009

வலைப் பதிவர் நல வாரியம்

மதுரை மன்னரின் அன்பு மகள் கவிதாயினி கயல்விழி அண்மையில் ஒரு புதிய கண்டுபிடிப்பை திருவாய் அருளியிருக்கீறார்.அது "பராசக்தி முதல் உளியின் ஓசை" வரை மு.க அவர்கள் பெண்ணடிமைத்தனத்துக்கு எதிராக எழுதி வந்திருக்கிறார்.திமுக வின் இலக்கிய அணி செயலாளர் அல்லவா?முகவின் இரண்டாவது மனைவியின் முதல் மகனின் புத்திரி..தன் தாத்தாவின் குடும்ப வாழ்க்கையை செளகர்யமாக மறந்து போயிருக்கீறார்.அதாவது சி.எஸ். ஜெயராமனின் தங்கையை முதல் மணம் முடித்து ஒரு குழந்தையும் பிறக்கிறது.(நம்ம டாஸ்மாக் பார்ட்டி).முதல் மனைவி இறந்ததும் இரண்டாவதாக தயாளு அம்மாவை கட்டி நான்கு பிள்ளைகளை பெற்று கொள்கிறார்....அடுத்து தன்னுடன் "வேலைக்காரி.ஒர் இரவு "முதலிய நாடகங்களில் ஜோடியாக நடித்த ராஜாத்தியை இணைத்து கொண்டு கனி மொழி என்ற மற்றொரு கவிதாயினியை பெற்று தமிழ் தொண்டாற்றுகிறார்.ஒரு வேளை அந்த பெண்கள் பிறருக்கு அடிமையாகமல் தடுத்து விட்டாரோ?ராஜாத்தி அம்மா வீட்டில் இவர் தங்கும் போது தயாளு அம்மா என்ன நினைத்திருப்பார்...என்ன வேதனை அவர் பட்டிருக்க கூடும்? அதனால்தானோ என்னவோ என்றும் அவர் முகத்தில் ஒரு மெல்லிய சோகம் இழையோடிக் கொண்டேயிருக்கிறது.கொடுமை என்னவென்றால் பேரன்,கொள்ளுப் பேரன் எல்லோருக்கும் ஒரே வயது என்பதுதான்..


ஹாட் டூப்ஸ்(உண்மையானாலும் ஆகலாம்)

முது வலியை வென்றமுத்தமிழுக்கு நேரு விளையாட்டரங்கில் மாபெரும் பாராட்டு விழா நடை பெற்றது.முதுகு வலிக்கு காரணம்
"ஜெகத்ரட்சகனா இல்லை கீ.வீரமணியா என்ற தலைப்பில் பட்டி மன்றமும் நடை பெற்றது.இந்த விழாவிற்கு ஆம்புலன்சில் வந்த முதல்வர் தமிழை கௌரவிக்கவே தான் கடுமையான வலியிலும் நிகழ்சிக்கு வந்ததாக கண்ணிர் மல்க கூறினார்.அவர் மேலும் பேசுகையில்" புலவர்களுக்குள் சச்சரவு வரலாம்..சண்டை இருக்கக் கூடாது..எனவே இருவருக்கும் அந்த பெருமை சேரும் என்று கூறுகையில் ஜெகத்தும் வீரமணியும் ஓவென்று கதறி அழுதனர்...

முதன் முறையாக சென்னை எழும்பூர் மீயூசியத்தில் அமைச்சர் ஆற்காடு வீராசாமியின் மெழுகு சிலை அமைக்கப்படுகிறது.அகில இந்திய மெழுகுவர்த்தி தயாரிப்பாளர் சங்கம் இதை அமைக்கின்றனர்.வரும் அம்மாவாசையன்று இரவு இந்த சிலையை பிரபல பீரோ புல்லிங் கொள்ளையன் திரு. கறுப்பசாமி திறந்து வைக்கிறார்.

சென்னை காவல் துறை தலைவர் ராதாகிருஷ்ணன் அந்த பதவியிலிருந்து தூக்கப் பட்டு "புல் பிடுங்குவோர்" நல வாரியத்தின் தலவராக நியமிக்க பட்டுள்ளார்.வழக்கறிஞர் சங்கத் தலைவராக இருந்த திரு .பிராபகரன் புதிய காவல் துறை தலைவராக பணி அமர்த்தப் பட்டுள்ளார்.கறுப்பு கால் சட்டையும் காக்கி மேல் சட்டையும் அவருக்கு சீருடையாக இருக்கும் என்று அரசு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய சென்னை தொகுதி திமுக வேட்பாளராக ஸ்டாலின் பேரன் திரு இன்பநிதி அறிவிக்கப்பட்டுள்ளார்.கழகத்திற்காக அவர் சிறை சென்றுள்ளதாக திமுக தலைவர் பெருமையுடன் கூறினார்.(அது ஒண்ணுமில்லீங்க மு.க ஜெயிலில் இருக்கும்போது அவரை பார்க்க போயிட்டு வந்தாராம்)

வலைப் பதிவர் நல வாரியம் அமைக்கப் படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.