Monday, April 4, 2011

நாசமாய்ப் போக



இன்னும் துண்டிக்காத
தமிழ்த் தொப்புள் கொடியில்தான்
சுவாசிக்கின்றார் எங்கள்
தொல்காப்பிய தாத்தா

ஆறாவது முறையாக
அமுதசுரபி வேண்டி
நிதி கேட்டு நடைவண்டி பயணம்
ஏழு தலைமுறைக்கு
இந்திரபுரியை நிர்மாணித்து கொடுத்த
பகுத்தறிவு பெருங்காயம்
நாங்கள் என்னவோ
எப்போதும் ஏழாம் உலகத்தின்
பிரஜைகள்தான்

புரட்சியின் கவர்ச்சி
எச்சம்
மகன் நீதி சோழனின்
காளை மாட்டை காயடிக்க
பச்சை கல்யாணியில்
பட்டினிப்பிரவேசம்
ஆளுக்கொடு ஆடாம்
ஓட்டு ரட்சிக்கணும்
எண்ட கொடநாட்டுக்கு
அம்*மே* விற்கு
அதற்க்கபுறம் கண்ணில் காட்டுவாராம்
புழுக்கைகளை

கிளையில் அமர்ந்து
அடி மரத்தை வெட்டும்
தமிழ்க்குடியின் கோடாரியின்
கைப்பிடியில் சுற்றப்பட்டிருப்பதென்னவோ
பாட்டாளியின் கோவணம்தான்
பட்டு வேட்டி கட்டி
பசுமைப்பொங்கல்
ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை

ப்ரீதிக்கு நான் கேரண்டி
சர்தான் போடி
செளபாக்கியாவையும் சேர்த்துதான்
யார் ஊர்ல வந்து என்ன பேச்சு

எல்லாம் உங்களுக்கு
என்கிறார்கள் எங்கள்
ரட்சகர்கள்..பாவம்
அப்ப உங்களுக்கு

வேறென்ன
திரும்புங்கள்
குப்புறப்படுங்கள்
சுண்ணாம்பு செலவு கூட
கழகங்களின் வளர்ச்சி
நிதியிலிருந்துதானாம்
பொழைக்கத் தெரியாதவங்க

யாரும் யாருடனும்
எதுவும் எதையும்
ஆக ஒன்று நிச்சயம்
நாசமாகப்போகட்டும்
என்கிறான்
கலியுக கவுஜன்