
அகநாழிகையும் , கருவேல நிழலும்

(சிவாஜி சங்கர் , மயில் ராவணன் , சரவணகுமார் , கருவேல நிழல் )
ஊரைப் பார்க்க கிளம்பியவரை ஊரப்பாக்கத்தில் ஓரங்கட்டி இலக்கிய விசாரணைகளை ஆரம்பித்தோம். இடது சாரி முத்திரை குத்தப்பட்டிருந்த அந்த கண்ணாடி ஜீவன் தனக்குள் சலனமற்று கிடந்த பொன்னிற வியர்வையை பிளாஸ்டிக் குப்பிகளில் நிரப்ப ஆரம்பித்தது . (யாருக்காவது புரிஞ்சதுன்னு சொன்னீங்க..தொலைச்சுபுடுவேன்...ஆமாம்..
வரிசையாக நண்பர்கள் அழைப்பு பா.ராவுக்கு. அவரை வைத்து ஒரு சந்திப்பு ஏற்பாடு செய்ய வேண்டுமென்றால் , புரட்சித்தலைவி பாணியில் கொளப்பாக்கத்தில் பெரிய பந்தல் போட வேண்டியிருக்கும் போல . கருவேலநிழலின் சூட்சுமம் அதுதான் என்று நினைகிறேன் .
அடுத்த மாதம் எங்க... மன்னிக்க...நம்ம வீட்டு பொண்ணுக்கு கலியாணமுங்கோ...பா.ரா மின்னஞ்சல் அனுப்புவார்...வந்திருங்கோ...