Showing posts with label / பகிர்வு. Show all posts
Showing posts with label / பகிர்வு. Show all posts

Tuesday, September 21, 2010

பா.ராஜாராம்




அகநாழிகையும் , கருவேல நிழலும்



(சிவாஜி சங்கர் , மயில் ராவணன் , சரவணகுமார் , கருவேல நிழல் )

என்ன தம்பி.யாருப்பா நீ ? பெரியவங்க யாரும் துணைக்கு வரலையா ? விலாசம் , போன் நம்பர் எதாவது இருக்கா? நான் கொண்டு விடட்டுமா ? இப்படியெல்லாம் கேட்க நினைத்தேன்.. அந்த பையனை பார்த்தது. நல்லவேளை..சரவணகுமாரும் , ஜ்யோவும் அருகில் இருந்தார்கள் . அண்ணே..இவர்தான் பா.ரா. என்றார்கள் . பாராமுகம் பார்த்த சுகம் . அவரது கவிதைகளை போலவே எளிமையாயும் , கருத்தாயும் இருந்தார் ராஜாராம் . பேசும் ஒவ்வொரு வார்த்தைகளுக்கு இடையேயும் பேரன்பை ஒளித்து வைத்திருக்கிறார் மனுஷன் . அப்படியென்றால் காட்ட வில்லையா என்று எவராவது எதிர் கேள்வி கேட்டால் , கேட்பவரை பற்றி ஒரு புனைவும் கூடவே இலவச இணைப்பாக ஒரு சொற்சித்திரமும் எழுதப்படும் என்று தெரிவித்து கொள்கிறேன் .

ஊரைப் பார்க்க கிளம்பியவரை ஊரப்பாக்கத்தில் ஓரங்கட்டி இலக்கிய விசாரணைகளை ஆரம்பித்தோம். இடது சாரி முத்திரை குத்தப்பட்டிருந்த அந்த கண்ணாடி ஜீவன் தனக்குள் சலனமற்று கிடந்த பொன்னிற வியர்வையை பிளாஸ்டிக் குப்பிகளில் நிரப்ப ஆரம்பித்தது . (யாருக்காவது புரிஞ்சதுன்னு சொன்னீங்க..தொலைச்சுபுடுவேன்...ஆமாம்..


வரிசையாக நண்பர்கள் அழைப்பு பா.ராவுக்கு. அவரை வைத்து ஒரு சந்திப்பு ஏற்பாடு செய்ய வேண்டுமென்றால் , புரட்சித்தலைவி பாணியில் கொளப்பாக்கத்தில் பெரிய பந்தல் போட வேண்டியிருக்கும் போல . கருவேலநிழலின் சூட்சுமம் அதுதான் என்று நினைகிறேன் .


அடுத்த மாதம் எங்க... மன்னிக்க...நம்ம வீட்டு பொண்ணுக்கு கலியாணமுங்கோ...பா.ரா மின்னஞ்சல் அனுப்புவார்...வந்திருங்கோ...