Friday, November 26, 2010

பனிக்குடத்தினுள் நீந்திய களிப்பு... நந்தலாலா


மாஸ் ஆடியன்சின் ரசனைக்கு இறங்கி வந்து கதை சொல்லுதல் ஒரு விதம் . தன் ரசனைக்கு பார்வையாளனை எடுத்து செல்லுதல் என்பது எல்லோருக்கும் கைவரப்படுவதில்லை . வணிக ரீதியான சமரசங்கள் மற்றும் விமர்சனங்கள் இடையூறாகவே இருக்கும் . மேல் நாட்டு இயக்குநர்களின் நிலை வேறு . தமிழில் ஒரு சில இயக்குநர்களே இருக்கிறார்கள். மிஷ்கின் அதை அநாயாசமாகவே செய்திருக்கிறார் . அதற்கு முதலில் ஒரு “ரெமி மார்ட்டீன்” சல்யூட் மிஷ்கின்.

நாம் கடந்து செல்ல வேண்டிய இடம் அங்கேயே தான் இருக்கிறது . நாம் கடப்பதற்காக அது உருவாக்கப்படுவதில்லை . கடந்து போன பின்னும் அது அங்கேயே தான் இருக்க போகிறது . நந்தலாலாவில் பெரும்பாலான காட்சியமைப்புகள் அப்படிதான் இருப்பதாக எனக்கு தோன்றியது வெற்று ஃப்ரேம் முதலில் எஸ்டாபிளிஷ் செய்யப்படுகிறது . அதற்குள் பாத்திரங்கள் வருகிறார்கள் . நிகழ்வு முடிந்தவுடன் அடுத்த காட்சியின் தளத்துக்கு சென்று விடுகிறார்கள் . நிகழ்வு நடந்த களம் மீண்டும் நமக்கு வெறுமையாய் காட்டப்படுகிறது . காட்சியின் ஆரம்பத்திலும் , முடிவிலும் ஒரு Freeze இருந்து கொண்டேயிருக்கிறது . பார்வையாளனை காட்சியுடன் ஒன்ற வைக்கும் இந்த உத்தி தமிழுக்கு புதிதும் , மிக அவசியமும் கூட….. அஞ்சாதேயில் கூட இந்த யுக்தியை பயன்படுத்தியிருந்தார் மிஷ்கின் . பிரமாண்டம் என்பது கோடிகளை கொட்டுவதால் மட்டுமே வராது . மகேஷ் முத்துசாமியின் கோணங்களும் , அசைவுகளும் முக்கியமாக ஷோல்டர் ஷாட்கள் பிரமிப்பை அல்ல.. பாதிப்பை ஏற்படுத்துகிறது . அகன்ற மற்றும் உயர்நிலை கோணங்கள் மிஷ்கினின் காட்சியமைப்புக்கு பெரிய பலம். குறிப்பாக ஒரு பத்துக்கு பத்தடி அறையில் ஒரு டாப் ஆங்கிள் ஷாட் . வசனம் கிடையாது . பத்து பக்கங்களில் சொல்ல வேண்டியதை நமக்கு சொல்கிறது . சிறுவனின் அம்மாவை மிஷ்கின் சந்திக்கும் காட்சி அது . வேறு விவரணைகள் வேண்டாம் . பார்த்து உணருங்கள். பார்வையாளனை தன் தோளில் தூக்கி கொண்டு காட்சிகளுக்குள் கொண்டு போகிறார் மகேஷ் . ஹேட்ஸ் ஆஃப் டு யூ சார் .

எல்லோரும் நல்லவர்கள்தான் என்கிறார் மிஷ்கின் . உண்மைதான் . ஒரு லாரி டிரைவரின் பாத்திரம் அது உண்மைதான் என்கிறது . சைக்கிளிலிருந்து கீழே விழுந்து அடிபட்டுக்கொள்ளும் அந்த இளம்பெண்…(நொடியில் எத்தனை பாவம் காட்டுகிறாள் அவள்) அடுத்த காட்சியில் டிராக்டர் ஓட்டி வருவது பா. ராவின் கவிதை . ஒரு கால் இல்லாதவனின் ஊன்றுகோல் ஜாதிக் கலவரத்தில் வெட்டப்படுதல் , அவன் பேசும் வார்த்தைகளும் , முக பாவனைகளும் ,அறிவாளை தூக்கி கொண்டு வரும் இளநீர்க்காரர் .வெள்ளந்தியான மனிதர்களின் அடையாளத்தை நமக்கு உணர்த்துகிறார் . எங்கே? எதற்கு செல்கிறார்கள் என்பதே தெரியாமல் வரும் மோட்டார் பைக் இரட்டையர்கள் , ஹனிமூன் செல்லும் ஜோடிகள் என்று மனிதர்களின் தரிசனம் . காணப்புண்ணியம்.

அம்மாவை தேடி செல்லும் இரண்டு சிறுவர்களின் பயணம்தான் கதைக்களம் . அந்த மொழிப்படம் , இந்த மொழிப்படம் . நகலெடுத்தார் . பிரதியெடுத்தார் என்பதெல்லாம் வீண் வாதங்கள் . கையாடுவதற்கும், கையாள்வதற்கும் உள்ள வித்தியாசம்தான்.

சினிமா ஒரு காட்சி ஊடகம்தான் என்பதை மீண்டும் அழுத்தம் திருத்தமாக சொல்லியிருக்கிறார் மிஷ்கின் . வார்த்தைகளுக்கிடையே மெளனங்கள். அதுவும் இல்லாதபோது இசை . சில இடங்களில் இரண்டுமே இல்லை . இரண்டே பாடல்கள் . அதுவும் பார்வையாளனின் மனநிலைக்கேற்ப ஒலிக்கிறது . பிண்ணனி இசையில் மீண்டும் தான் ராஜாதான் என்கிறார் இளையராஜா. அம்மா பாடல் கிளிஷேதான். இருந்தாலும் உறுத்த வில்லை.

சிறுவன் அகி . கண்களுக்கிடையே அந்த வளையம் . அழுத்தம் திருத்தமாக பேசுதல் . பாட்டியை கை பிடித்து பராமரிக்கும் விதம் . மாமா என்றும் அம்மா என்றும் அழைக்கும் போது காட்டும் முகபாவம் . இந்த வருடத்திய சிறந்த குழந்தை நட்சத்திர விருது கிடைக்கலாம் . கிடைக்க வேண்டும் .

கதையில் நாயகிக்கு பெயர் இல்லை . பெயர் சொல்லும் அளவுக்கு ஸ்கோர் பண்ணும் வாய்ப்பும் இல்லை.

பெயரில் என்ன இருக்கிறது . நாயகனின் (மிஷ்கினின் ) பெயரே படம் முடியும் போதுதான் நமக்கு தெரிகிறது . தெறித்து பிதுங்கும் விழிகள் , அரை மொட்டை தலை ,நான்கு அல்லது ஐந்து வார்த்தைகளில் கத்துவது..அதுவும் மெண்டல் என்று அவர் உச்சரிக்கும் போது ..கிளாஸ்.. ஒரு எளியவன் , வலியவனிடம் அடிபட்டு அழும்போது , அவனை சார்ந்தவர்கள் வந்து விட்டால் எப்படி ரியாக்ட் செய்வான் . சாமர்த்தியமாக இந்த காட்சியில் மிஷ்கின் முகத்தை காட்டாமல் ஃப்ரேம் வைத்திருக்கிறார் . கை ,காலை உதறி வெளிப்படுத்தும் இயலாமை, ஆக்ரோஷம், இப்ப வாங்கடா..அடித்து பாருங்கடா என்கிற அறைகூவல் மாதிரியான பாவனைகள்.சிம்ப்ளி சூப்பர்ப் மிஷ்கின் .


ரசிகர்கள் விரும்புவதை தருகிறோம் என்று புளித்த மாவில் செட் தோசை சுட்டு திரியும் இயக்குநர்கள் மத்தியில் எனக்கு பிடித்ததை மக்களுக்கு தருகிறேன் என்று கூறும் மிஷ்கின் போன்ற இயக்குநர்கள் தமிழ் சினிமாவின் வரப்பிரசாதம் . விரைவில் யுத்தம் செய்யுங்கள் மிஷ்கின். உங்களிடம் தோற்க காத்திருக்கிறோம் .


ஒற்றை தென்னை மரம் சாட்சியாக நிலா காயும் முற்றம் எங்காவது இருந்தால் சொல்லுங்கள் . அங்கு என் மடியில் பாஸ்கர் மணியின் கால் ரணத்தில் எச்சில் களிம்பு பூசி, தலை கோதி அவன் விழிக்கும் வரை தாலாட்டிட ஆசை....



Wednesday, November 24, 2010

மானிட்டர் பக்கங்கள்.....24/11/10




கொஞ்சம் சினிமா . அண்ணன் உண்மைத்தமிழன் போனில் அழைத்தார் . நம் மேலான கருத்துக்களை இயக்குனர் திரு கரு . பழனியப்பன் எதிர்பார்க்கிறார் . நமக்காக சிறப்பு காட்சி என்றார் . படம் மந்திரப்புன்னகை . கிட்ட , தட்ட அனைத்து முன்னணி பிராண்டுகளும் சாரி ... பதிவர்களும் வந்திருந்தார்கள் . படம் ஆரம்பிக்க கொஞ்சம் லேட்டாகும் . ஒரு மலையாள படம் ஓடிக்கொண்டிருக்கிறது என்றார் உ.த . அட ! மிஸ் பண்ணிட்டமோ என்கிற ஏக்கம் ஜாக்கி சேகரின் முகத்தில் தோன்றியது . வாய் விட்டும் சொன்னார் . நான் ஜாக்கிக்கு அலெக்ஸாண்டர் என்று பெயர் சூட்டியிருக்கிறேன் . பக்கத்திலிருந்த ரமேஷ் வைத்யா “நெப்போலியன்” வைங்க.. நமக்கு எதுனா யூஸ் ஆகும் என்றார் .

மிக அடர்த்தியான கதையமைப்பு . இயக்குநரே துணிந்து நாயகனாகி விட்டார் . தன் பாத்திர படைப்பு இதுதான் . இதற்கான உடல்மொழி , உச்சரிப்பு இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற அசைக்க முடியாத முன் தீர்மானத்தில் அவர் இருந்திருக்க வேண்டும் . இறுகிய முகம் , கறுத்த உதடுகள் (இவ்வளவு சிகரெட் பிடித்தால் தமன்னா உதடா வரும்) , மிலிட்டரி நடை , படத்தில் அவர் ஒரு ட்ல்யூஷன் நோயால் பாதிக்கப்பட்டவராக வருகிறார் . இல்லாததை இருப்பதாக கற்பனை செய்து , மாறுபட்ட நடவடிக்கைகளை செய்யும் குணாதிசயம் .


பேசிக்கொண்டேயிருக்கிறார்கள் . படமும் கொஞ்சம் நீளம் . படத்துக்கு கத்திரி . கதாபாத்திரங்களுக்கு வாயில் பிளாஸ்திரி . படம் முழுக்க நகைச்சுவை என்கிற பெயரில் நோகடிக்கும் சந்தானமும் , தம்பிராமையாவும் திடீரென்று குணசித்திரமாக மாறி சாகடிக்கிறார்கள் . இரட்டை அர்த்த வசனத்தை சத்தமாக கூச்சமின்றி பேசும் சந்தானத்தால் , ஒரு கடையில் ஆணுறையை வாய் திறந்து கேட்க முடியவில்லையாம்.

“இயக்குநர் சொல்கிறார் : உடலுக்கு தீங்கு விளைவிக்கும் மதுவை வாய் விட்டு கேட்கிறோம் . ஆனால் நல்லது செய்யும் காண்டத்தை கேட்க முடியவில்லை . ஆங்காங்கே இது போல் வசனங்கள் ஷார்ப்பாக இருக்கிறது . ஆனால் பல இடங்களில் நீளமாக . அதை இயக்குநர் ஒரே முக் பாவனையுடன் , மாடுலேஷன் இன்றி பேசுவது எரிச்சலை உண்டாக்குகிறது (எனக்கு) . பாரதி , திருவள்ளூவர் , ஒளவையார் இவர்களது பாடல்களும் தப்ப வில்லை .


நடிக்க வருதோ இல்லையோ ? நன்றாக குடிக்க வருகிறது . காந்தி சிலை , கடற்கறை , கடைகள் , பப்ப்கள் எல்லா இடங்களிலும் குடிக்கிறார் . மீனாட்சியை நன்றாக அடிக்கவும் செய்தார்.


சைக்கியாட்ரிக்காக வருபவரும் , நகுலன் பொன்னுசாமியும் நன்றாக செய்திருக்கிரார்கள் . ஒரு காட்சியில் மருத்துவர் மீனாட்சியிடம் சொல்கிறார் .

உனக்கும் , கதிருக்கும் இருப்பது காதல்னு நீ சொல்ற.. நாங்க கெமிஸ்ட்ரின்னு சொல்வோம் . எனக்கு கலா மாஸ்டரும் , மானாட மயிலாடவும் நியாபகம் வந்தது

விஜயகாந்த் வெறும் எஸ். ஐயாகத்தான் இருப்பார் ஆனால் டிஐஜிக்கள் கூட்டத்தில் அவர்தான் எப்படி அதிகாரமாக பேசுவார் ? இதில் நாயகனும் அப்படித்தான் . மருத்துவமனையையே அடிமை போல் பேசுகிறார் . என்னதான் வியாதி என்றாலும் கொஞ்சம் த்ரீ மச்சுப்பா . அந்த நர்சுக்கு யார் கு(உ)ரல் கொடுத்தார்களோ தெரியவில்லை.


மீனாட்சி . ஹோண்டா ஷோரூமின் ஷோகேஸ் பொம்மை . முகம் கொஞ்ச்ஃஅம் முற்றலாக இருப்பது போல் தெரிகிறது . ஆனால் வளைவுகள் அபா(யக)ரம் . கொஞ்சம் நடிக்கவும் செய்திருக்கிறார் . ஸ்ரீகாந்தோடு பின்னி பிணைகிறார் ஒரு முறை . அதை நமக்கு பத்து முறை காட்டுகிறார்கள் . வருத்தம் ஒன்றும் இல்லை . வயித்தெறிச்சல்தான் .

அம்மாவை அழகாகவும் , பாடகியாகவும் காட்டும்போது துரோகம் செய்யப்போகிறார் என்று தெரிகிறது . கண்ணாடியில் மீனாட்சியும் , அம்மாவும் கதிருக்கு தலைசீவுவது கீளிஷே .

நிறைய பேசாமல் , உடல் மொழியில் சைக்கோ பாதிப்பை ஏற்படுத்தியிருந்தால் கொஞ்சம் ரசித்திருக்கலாம் . என்னோட சாய்ஸ் விக்ரம் . கரு .பழனியப்பன் இயக்கம் மட்டும் செய்திருந்தால் , நிச்சயம் இவ்வளவு தொய்வு கதையில் இருந்திருக்காது என்பது என் அபிப்ராயம் . ஆஃப்டர் ஆல் ஆடியன்ஸ்தானே எல்லாம் .

பார்த்திபன் மீண்டும் கனவு காணட்டும் . சதுரங்கம் என்னவாயிற்று ? பிரிவோம் ..சந்திப்போம் சார் ..


டிஸ்கி : (சம்பந்தமில்லாத)

7 ஜி. ரெயின்போ காலனியாம் ..அப்ப

2 ஜி. சி.ஐ.டி காலனியா?

டிஸ்கி : 2 கேப்டனுக்கு டாக்டர் பட்டமாம் . செல்போன் வெளிச்சத்துல ஆபரஷேன் பண்ண அன்னிக்கே கொடுத்திருக்கணும் . கொஞ்சம் லேட்டுப்பா...

Tuesday, November 9, 2010

மானிட்டர் பக்கங்கள் ...... 09/11/10


சிறு வயதில் ஒரு முறையும் , பின் நினைவு தெரிந்து ஒருமுறை . பின் தொழில் நிமித்தம் , புள்ளிராஜாவுக்கு எய்ட்ஸ் வருமா கேம்பெய்ன் . திருச்செந்தூருக்கு போயிருக்கிறேன். ஒரு முறை மட்டுமே கோயிலின் உள்ளே சென்றேன் . அதுவே அலர்ஜியாகி விட்டது . கடலில் கால் நனைத்தல் , மானசீகமாக முருக தரிசனம் அவ்வளவுதான் . காரணம் ? கோயில் வாசலில் இருக்கும் லைசன் ரெப்ரசண்டட்டிவ்கள்தான் . டாஸ்மாக் பார் வாசலில் , விரலில் சோடா ஓப்பனரை மாட்டிக்கொண்டுசார் என்ன சரக்கு ? சைட் டிஷ் என்ன சொல்ல? என்பவர்களுக்கும் , மேற்படி கோயில் வாசலில் இருப்பவர்களும் எனக்கு வித்தியாசம் தெரியவில்லை .சரி விஷயத்து வருவோம் . வரும் 18ஆம் தேதி சல்லிப்ப்பயலுக்கு கல்யாணம் . காதலர்களாக இருந்தவர்கள் மணமக்களாக மாறுவதென்பது எவ்வளவு மகிழ்ச்சி என்று என்னைப்போன்றவர்களுக்கு தெரியும் .(பொண்டாட்டி பிளாக் படிப்பாங்க இல்ல) .செல்வேந்திரன் கேண்டியின் கைத்தலம் பற்றுகிறார் முருகன் ஸ்தலத்தில் . மஹா திருமணத்திற்கு பிறகு நடக்கும் இன்னொரு பதிவுலக நிகழ்வு . கோவை , திருப்பூர், ஈரோடு , மதுரை ஆகிய ஊர்களிலிருந்து பதிவுலக நண்பர்களும் , இலக்கிய ஜாம்பவான்களும் சங்கமிக்க இருக்கிறார்கள் . பா.ராவும் வருவதாக சொல்லியிருக்கிறார் . அவர் வீட்டு விசேஷத்தை தவற விட்டவர்கள் , இந்த நிகழ்வை மிஸ் பண்ணாதீர்கள் .

நான் பதிவுலகம் வந்த புதிதில் கேபிள் மட்டுமே நன்கு அறிமுகம் . ஒரு மாலை செல்லடித்தார் . ஒரு சந்திப்பு இருக்கிறது . வருகிறீர்களா ? என்றார் . செல்வா விஜய் டிவியின் நீயா , நானா நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்தார் . பாஸ்கர் சக்தியின் வீட்டில் சந்திப்பு . நர்சிம் , இரவுப்பாடகன் ரமேஷ் வைத்யா . மிக இனிமையான சந்திப்பு . அப்போதுதான் செல்வா அறிமுகம் . அதன் பின் இரண்டொரு முறை சந்தித்திருப்போம் . குறிப்பிட்ட இடைவெளியில் அலைபேசி உரையாடல்கள் உண்டு . சொல்லுங்க தண்டோரா அண்ணே என்று வாய் நிறைய அழைப்பார் . மழை பெய்த பின் காளான் முளைக்கும் . செல்வாவின் மனக்காளான் படித்துப் பாருங்கள் . மனதிற்குள் மழையடிக்கும் . மண் சட்டியில் ஆக்கிய மீன் குழம்பை போன்ற எழுத்துக்கு சொந்தக்காரன் . வச்சிருந்து சுவைக்கலாம் . அப்புறம் திருச்செந்தூர் தீர்த்தவாரியில் சந்திக்கலாமா?

நம்ம சம்பந்தப்பட்ட விஷயம் . மிஸ் பண்ணலாமா என்று வா ..குவார்ட்டர் கட்டிங் பார்த்தேன் . புஷ்கர் , காயத்ரி ஜோடிக்கு நகைச்சுவை உணர்வு மிக அதிகம் . அவர்களிடம் பேசியிருக்கிறேன் . சந்தானம் நடிக்கும் அக்சார்செம் விளம்பரம் பார்த்திருப்பீர்கள் . அது அவர்கள் இயக்கியதுதான். ஆனால் "வ" வில் போதையே வரவில்லை . 90 நிமிடங்களில் அந்த கதையை சொல்லியிருந்தால் கொஞ்சம் சுவாரசியமாக இருந்திருக்க கூடும் .


ஒரு முக்கிய தகவல் . கிண்டி ரயில் நிலையம் அருகில் ஒரு ஒயின் ஷாப் . கண் துஞ்சாமல் பணியாற்றுகிறார்கள் . ரவுண்ட் த கிளாக் சர்வீஸ் . காந்தி ஜெயந்தி , மகாவீர் ஜெயந்தி மற்றும் அனைத்து அரசு விடுமுறை நாட்களிலும் கடை உண்டு . கூட்டம் ஜே..ஜேதான் . ஒழுங்குபடுத்த ஒரு தாணாக்காரர் மஃப்டியில் இருப்பார் . என்னை டிஸ்கஷனுக்கு அழைத்திருந்தால் , நான் கொஞ்சம் சுவாரசியபடுத்தியிருப்பேன் .சரி உடுங்க..நம்ம அப்பன் வீட்டு காசுதானே ?.

ஜொள்ளர்கள் என்றால் ஆண்கள் மட்டும்தானா என்ன ? விஜய் மல்லையாவின் நிறுவன காலண்டர்களுக்கு பெரிய ரசிகர் கூட்டம் உண்டு . எல்லாம் அழகை ரசிக்கத்தான் . இப்போது பெண்களுக்கும் அந்த வாய்ப்பு . சகோதரம் என்ற அமைப்பு . ஹெச்.ஐ.வி அவேர்னெஸ் அமைப்பு . அவர்கள் ஒரு காலண்டரை வெளியிடுகிறார்கள் . கட்டு மஸ்தான்களை அரை ஆடையில்.. ஜொள்ளிகளுக்கு இந்த நியூஸ் .(பஞ்சாயத்து உண்டா? )

சின்ன வயதில் யானை சாணத்தை மிதிக்க போட்டியே நடக்கும் . நல்லது என்று என் பாட்டி சொல்வார் . இப்போது யானை சாணத்திலிருந்து காகிதம் தயாரிக்கிறார்களாம் . பஞ்சாப்பில் .

“பிள்ளையார் சுழி “ போட்டு விட்டு எழுத ஆரம்பிப்போமா?

காலண்டர் மேட்டர் : டைம்ஸ் ஆஃப் இந்தியா

யாணை சாணம் : தினமலர்

காப்பி & பேஸ்ட் இல்லைப்பா . இன்ஃபர்மேஷன் .



பட்டுவேட்டித் தலைவரின் பகுத்தறிவு பாசறையில் பட்டை தீட்டப்பட்ட வெற்றிகொண்டான் திருக்கடையூரில் பீமரதசாந்தி செய்து கொண்டு மனைவிக்கு மங்களநாண் பூட்டினாராம் . தலைவர் தலைமையில் செய்து கொண்டிருக்கலாமே...


சன் பிக்சர்ஸின் அடுத்த படத்தில் பிச்சைக்காரனாக நடிக்க ஆள் எடுக்கிறார்களாம் . வரிசையில் முதலில் குபேரனும் , இரண்டாவதாக ஏழுமலையானும்

Wednesday, November 3, 2010

மானிட்டர் பக்கங்கள்.....03/11/10


ஒரு வாரமாக பார்லிமெண்ட் முடங்கியது என்ற தலைப்பு செய்தியை படித்தேன் . வழக்கமாக அங்கு என்ன உருப்படியாக நடக்கும் என்று தெரிந்ததே . முடங்கியது என்றால் ஏதோ நடந்தது என்று அர்த்தமா?


காமல்வெல்த் கல்மாடியை இனி , கம்மணாட்டி என்று அழைக்கலாமா ?# டவுட்டு (இப்ப இதான் லேட்டஸ்ட் !!)


ஞாயிறு அன்று தா.பாண்டியனின் ஜெயா டிவி பேட்டியில் அரசை பற்றிய சொன்ன குற்றசாட்டுகள்...நேற்று சன்நியூஸின் தமிழகம் செய்தி தொகுப்பில்..விரிவாக அலசினார்கள் . இன்னும் சொல்லப்போனால் ஜெயாவை விட கடுமையாக . எந்திரர்களுக்கு மக்கள் மேல் அக்கறை வர சான்ஸே இல்லை . என்ன நடக்கிறது ? வரும் முன் காப்போம் திட்டமா?


சமீபத்திய குழந்தை கடத்தல் , கொலை , பாலியல் குற்றங்களுக்கு அஞ்சாதே , நான் மகான் அல்ல போன்ற படங்கள்தான் முக்கிய காரணம் என்கிறார் நண்பர் . உண்மைதானோ என்றும் தோன்றுகிறது...

மைனா திரைப்படம் இந்த தீபாவளிக்கு ரிலீஸ் .... அடுத்த தீபாவளிக்கு “மைனா” ரிட்டி அரசு இருக்குமா ? # டவுட்டு
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

தீபாவளி சீசன் ... ஓணான் அடிக்கும் (எத்தனை நாளைக்குத்தான் ஆணி ?) வேலை அதிகம் . பதிவு எழுதவே முடிவதில்லை . (மேட்டரும் சிக்க வில்லை என்பது ஓணானுக்குத்தான் தெரியும் ) அவ்வப்போது பஸ்சில் வித்தவுட்டில் (அட..டிக்கெட் வாங்காமல் போறதை சொன்னேன் . பப்பி ஷேம் இல்லை ) பயணித்து விட்டு இறங்கி ஓடி விடுகிறேன் . ஒன்றும் “குடி” மூழ்கி விடாது என்பது வேறு விஷயம் . அதனால் கொஞ்சம் பஸ்சியதும் , ட்விட்டியதும் கலந்து கொஞ்சம் ரீமிக்ஸ் .


தாளிக்கும் ஓசை..பொறிக்கும் ஓசை..உன் குரல்தான் எத்தனை இனிமை ....முடிப்பதற்குள் அப்படியா என்றாள் ? சாப்பிடும்போது மங்கேஷ்கர் நினைவில் வந்ததை தவிர்க்க இயலவில்லை

மானிடராய் பிறத்தல் அரிது . கூன் , குருடு , செவிடின்றி பிறத்தல் அரிதிலும் அரிது என்கிறாள் ஒளவையார் . ஊமையாய் , குருடாய் , செவிடாய் இருப்பது எப்பேற்ப்பட்ட பாக்கியம் என்கிறான் பாரதி


கவிதை எழுதலாம்னு தேடினால் , கழுதை... கிடைக்கவேயில்லை ஒரு காகிதம் கூட

ஒரு காகத்துடன் வாக்கிங் போன அனுபவம் பற்றி எழுதி கொண்டிருக்கிறேன்..அநேகமாக அடுத்த அம்மாவாசைக்குள் வெளி வரலாம்..(கையடி என்ற ஊரில் முகாம்)

104 பேர்களிடம் வில் இருந்தது......ஒருவனிடம் மட்டுமே இருந்தது....காண்டீபம்


கேள்வி: நீஅடுத்த ஜென்மத்தில் யாராக பிறக்க விரும்புகிறாய்?(கேட்டது கடவுள்)

நான் ஒரு முதலமைச்சருக்கு மகனாக பிறக்க விரும்புகிறேன் (ஒரே மகனாக)

கடவுள்: இப்பதான் இன்னொருவன் முதலமைச்சரா பிறக்கணும்னு கேட்டான். கொடுத்தேன்.

நான் :அதனால் என்ன இப்போ? நான் அவனுக்கு மகனாக பிறந்து விட்டு போகிறேன்..

கடவுள்: ஆனால் அவன் மூணு மனைவிகளும் வேணும்னு கேட்டான். சரின்னுட்டேனே.


சூட்சுமம் சுண்டுவதில் இருக்கிறது...காற்றை வசப்படுத்தும் கயிறும்.


திடீரென்று கூட்டம் கூட்டமாய் வர ஆரம்பித்திருந்தது அந்த குட்டி , இத்துணுண்டு ஜீவன் . ஊர்வதாக தெரியவில்லை. கால் பாவாமல் , காற்றில் மிதப்பது போல் இருந்தது . கடிக்கவில்லை..லேசாக கிச்சு ,கிச்சு மூட்டியது. மனைவிதான் சொன்னாள் .பிள்ளையார் சதுர்த்தி வருதுல்ல ..அதான் என்றாள் .இருந்தாலும் சர்வ சுதந்திரத்துடன் எல்லா இடங்களிலும் அது வியாபிக்க தொடங்கியது . மனைவி யோசித்து விட்டு சொன்னாள் . ரெட்டை பிள்ளையாருக்கு ஒரு தேங்காய் உடைச்சிட்டு , உண்டியல்ல காசு போட்டுட்டு வாங்க..அதுவா போயிரும் . செய்தும் பலனில்லை. உடைத்த தேங்காய் துண்டு ஒன்றை பூஜையறையில் வைத்தோம் . பூசாரி சொன்னது . வீட்ல நாலு கேலண்டர் இருக்கு . பிள்ளையார் சதுர்த்தின்னு கொட்டை எழுத்துல இருக்கு . அப்புறம் ஏன் இது கூட்டமா வந்து நினைவூட்டுதுன்னு எனக்கு டவுட்டு . ஹிட் அடிக்கலாமான்னு கேட்டேன். கொன்னுடுவேன் என்றாள் தங்கமணி .கொஞ்சம் , கொஞ்சமாக அதுவே மறைந்து போனது . அந்த தேங்காய் துண்டை மறந்து விட்டோம் . அதிலும் இப்போது இன்னொரு ஜீவன் . ஆனால் சிகப்பாய்..சுள்ளென்று கடிக்கிறது


எதிர் வீட்டுக்காரர் மாடியில் இரண்டு அறைகள் கட்டிக் கொண்டிருக்கிறார். ஒரு பையன் ,ஒரு பொண்ணு அவருக்கு .பொண்ணை கட்டி கொடுத்துட்டா , பையனை மேல வச்சுட்டு , நானும் மனைவியும் கீழே காலத்தை கழிச்சுடுவோம் என்றார் . என்ன ஒரு நம்பிக்கை பாருங்கள்


கோவிந்தா கோஷம் எங்கும் ஒலிக்கிறது. பக்தி பரவசம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆனால் எனக்குத்தான் கோவிந்தா என்றால் அதற்கு முன்னால் இருக்கும் குவார்ட்டர் என்ற அடைமொழிதான் நினைவுக்கு வருகிறது


ஒரே இடத்தில் நடந்த மாபெரும் விருந்து..பிரமிப்பூட்டும் அசைவ சாப்பாடு..இன்று இரவு நிஜம் நிகழ்ச்சியில்...........


பி.கு : நிகழ்ச்சியை வழங்குபவர்கள் “ஆச்சி” மசாலா..இணைந்து வழங்குபவர்கள் “ மை” டாய்லெட் கீளினர்



செம்மொழி வேந்தே ! செகப்புத் தோல் சிங்கமே ! முத்தமிழே ! அம்மாவே ! ஐயாவே ! மருத்துவரே ! கேப்டனே ! புயலே ! சேரி தங்கமே ! தஞ்சை வேந்தரே !.ஈரோட்டு சிங்கமே ! இத்தாலிய தியாகியே ! அப்புறம் எனக்கு கடன் கொடுக்க வேண்டியவர்களே !

ப..சி...க்..கு....தய்யா


நாய் , பூனை குட்டிகளை தத்தெடுக்கும்படி த்ரிஷா வேண்டுகோள் விடுத்திருக்கிறார் . நான் இரண்டு முயல் குட்டிகளை தத்தெடுக்கலாம்னு இருக்கிறேன்..(சாக்குப் பைக்குள் முயல் குட்டிகள்-சுஜாதா)


கடந்து சென்றவள்
பறித்து சென்றாள் இதயத்தை
கடவுள் மீது கோபம் வந்தது
பின்னால் வருகிறாளே இன்னொருத்தி
அவளுக்கு எதை கொடுப்பது?

இமைகளை இப்படி இப்படி
திறந்தாள்
மின்னல் வெட்டியது
சிரிப்பினால் குழிகள்
பறித்தாள்
தவறாமல் விழுந்தேன்
குழியில்
ஓ...லைலா.


உயிர் போய்
உயிர் வருகிறது
ஒவ்வொரு முறையும்
எப்படி உயிர் போய்
உயிர் வருகிறது
என்பதை சொல்வதற்குள்



கொஞ்சம் காமெடி .. (வேற யாரு பட்டு வேட்டி வகையறாத்தான்)


காட்சி-1 எஸ்வி சேகரை பத்து அடி அடிக்கிறார்கள் .சந்திரசேகர் சொல்கிறார். இப்படி கேட்டா சொல்லமாட்டே ! இன்னொரு அடி அடிக்கிறார். சொல்லிவிடுகிறார்.

காட்சி-2 சுகுமாரி ஒரு பாழடைந்த வீட்டில் இருக்கிறார். அவர் முன்னால் ஒரு பாம்பு படம் எடுக்கிறது. உள்ளே வரும் சுகாசினி தன் கையை பாம்பின் முன் நீட்ட, பாம்பு சுகாவை கொத்தி விட்டு போய் விடுகிறது.

காட்சி-3 சுகாவை ஆஸ்பெடலுக்கு கொண்டு வருகிறார்கள். சிகிச்சைக்கு உள்ளே கொண்டு போகிறார்கள். அந்த ரூமின் மேல் ஒரு போர்டு குளோசப்பில் காட்டப்படுகிறது.”டயாலிசிஸ் ரூம்” கலைஞர் டிவி மேட்னி!


ஒரு சீனா நாட்டு தம்பதிக்கு முதல் குழந்தை, அவங்களை மாதிரியே நல்லா சிகப்பா பிறந்தது.
அதுக்கு ''சிங்- சாங்-பங்'' குன்னு பேர் வச்சாங்க.
இரண்டாவது குழந்தையும் கொளுகொளுன்னு சிகப்பா பிறந்தது.
அதுக்கு ''ரீங்- சாங்- சிங்''குன்னு பேர் வச்சாங்க.
ஆனா... மூணாவதா பிறந்த குழந்தை, நீக்ரோ மாதிரி கறுப்பா பிறந்தது.
அதுக்கு என்ன பேர் வச்சிருப்பாங்க?

''தெரியலையே''
''சம்- திங்-ராங்''குன்னு.


பிரபல பதிவர் : நான் எழுதிய “அதிகாலை விடியல் “ கவிதை படிச்சிருக்கீங்களா?

பேட்டியாளர் : ஏன் சார் ? அதிகாலைன்னாலே விடியல்தானே ..

பி .ப : படிச்சீங்களா ? இல்லையா ?

பே : இல்லீங்க ..தூங்கிட்டேன் .



புதுப்பித்துக் கொள்.. நித்தம் புதிய மலர்கள்..பழைய செடியில்


தீபாவளி மற்றும் “விடுமுறை தின” வாழ்த்துக்கள் .


டிஸ்கி : நாளை புதிய தலைமுறை மறக்காமல் வாங்கி உங்கள் பெயர் இருக்கிறதா என்று பார்த்துக் கொள்ளுங்கள்