Tuesday, September 21, 2010

பா.ராஜாராம்




அகநாழிகையும் , கருவேல நிழலும்



(சிவாஜி சங்கர் , மயில் ராவணன் , சரவணகுமார் , கருவேல நிழல் )

என்ன தம்பி.யாருப்பா நீ ? பெரியவங்க யாரும் துணைக்கு வரலையா ? விலாசம் , போன் நம்பர் எதாவது இருக்கா? நான் கொண்டு விடட்டுமா ? இப்படியெல்லாம் கேட்க நினைத்தேன்.. அந்த பையனை பார்த்தது. நல்லவேளை..சரவணகுமாரும் , ஜ்யோவும் அருகில் இருந்தார்கள் . அண்ணே..இவர்தான் பா.ரா. என்றார்கள் . பாராமுகம் பார்த்த சுகம் . அவரது கவிதைகளை போலவே எளிமையாயும் , கருத்தாயும் இருந்தார் ராஜாராம் . பேசும் ஒவ்வொரு வார்த்தைகளுக்கு இடையேயும் பேரன்பை ஒளித்து வைத்திருக்கிறார் மனுஷன் . அப்படியென்றால் காட்ட வில்லையா என்று எவராவது எதிர் கேள்வி கேட்டால் , கேட்பவரை பற்றி ஒரு புனைவும் கூடவே இலவச இணைப்பாக ஒரு சொற்சித்திரமும் எழுதப்படும் என்று தெரிவித்து கொள்கிறேன் .

ஊரைப் பார்க்க கிளம்பியவரை ஊரப்பாக்கத்தில் ஓரங்கட்டி இலக்கிய விசாரணைகளை ஆரம்பித்தோம். இடது சாரி முத்திரை குத்தப்பட்டிருந்த அந்த கண்ணாடி ஜீவன் தனக்குள் சலனமற்று கிடந்த பொன்னிற வியர்வையை பிளாஸ்டிக் குப்பிகளில் நிரப்ப ஆரம்பித்தது . (யாருக்காவது புரிஞ்சதுன்னு சொன்னீங்க..தொலைச்சுபுடுவேன்...ஆமாம்..


வரிசையாக நண்பர்கள் அழைப்பு பா.ராவுக்கு. அவரை வைத்து ஒரு சந்திப்பு ஏற்பாடு செய்ய வேண்டுமென்றால் , புரட்சித்தலைவி பாணியில் கொளப்பாக்கத்தில் பெரிய பந்தல் போட வேண்டியிருக்கும் போல . கருவேலநிழலின் சூட்சுமம் அதுதான் என்று நினைகிறேன் .


அடுத்த மாதம் எங்க... மன்னிக்க...நம்ம வீட்டு பொண்ணுக்கு கலியாணமுங்கோ...பா.ரா மின்னஞ்சல் அனுப்புவார்...வந்திருங்கோ...

Sunday, September 12, 2010

நீ கேளேன்....




இதில் எந்த உள்குத்தும் இல்லை என்று அமெரிக்க , இந்திய, தாய்லாந்து மற்றும் மலேசிய சட்டங்களின் சத்தியமாக தெரிவித்துக் கொள்கிறேன்...மீறி வழக்கு தொடர்வதாக இருந்தால் மொராக்கோ ஜீரிடிக்‌ஷனில் தொடரவும் .ஏய்...ஆதிவாசி...அடக்கிவாசி...

Thursday, September 9, 2010

சாரு , வாசு மற்றும் மதுரை



உயிர்மை மதுரை கூட்டத்திற்கு வருகிறாயா என்று பிரபல சிற்றிதழ் உரிமையாளர் திரு . அகநாழிகை பொன்.வாசுதேவன் கேட்டபோது , எனக்கு அம்மாவும் , அருளானாந்தாவும் நினைவுக்கு வந்தார்கள் . அவர்களுக்கும் இலக்கியத்திற்கும் ஸ்நானப்ராப்தி கிடையாது . அவை இரண்டும் மதுரையில் உள்ள பிரபல சாப்பாட்டு கடைகள் .(கேபிள் நோட் இட்) . அப்புறம் சோம மற்றும் சுராபானம் .விடு ஜீட் என்று ரயில் ஏறினோம் . ஏங்க நானும் வேலையை விட்டுட்டேன் . நீங்களும் இப்படி உருப்படாம போறீங்களே என்று தங்கமணி விசனப்பட்டது வேண்டாம் .

குளித்து..அட குளித்து முடித்து சுப்ரீம் ஹோட்டலுக்கு போனோம் . அங்குதான் எழுத்தாளர்”கள்” தங்கியிருந்தார் “கள்” . முதலில் தவறுதலாக பிரபஞ்சனின் அறைக்கதவை தட்டி விட்டு பின் சாருவின் அறைக்குள் நுழைந்தோம் . மனிதர் அடித்துக் கொண்டிருந்தார் . அட.தண்ணீயோ இல்லை அதுவோ இல்லை. டைப் அடித்துக் கொண்டிருந்தார் . சாருவுக்கும் தினம் எதுவாவது எழுதா விட்டால் “சாமி கண்ணை குத்தி விடுமோ என்று தோன்றியது . கேட்டேன் . யார் சொன்னது என்று பதிலுக்கு கேட்டார் . எல்லாம் உங்கள் தொண்டரடிப் பொடியாழ்வார்களில் ஒருவர்தான் என்று அவர் பெயரை சொன்னேன் .சரி இப்ப என்ன பண்ணலாம் என்று கேட்டார் . எது நடக்க வேண்டும் என்று விதி இருக்கிறதோ , அது நடக்கட்டுமே சாரு என்றேன் . நடந்தது .

பத்து மணிக்கு கோயில் வாசல் திறந்தது . நாங்கள் மூன்றாவது ஆள்தான் . அங்கு மீ த பர்ஸ்ட் போட முடியவில்லையே என்று சின்னதாக எனக்கு ஒரு வருத்தம் . வாசு ஒரு சோக ஸ்மைலி போட்டார் . சாரு வழக்கம் போல் ஃபைண்ட் த கேஃப் பிட்வீன் த பிளவுஸ் அண்ட்... பிஸியாக இருந்தார் . அறைக்கு திரும்பினோம் . கிட்ட தட்ட ஒரு மாதம் சந்திர மண்டலத்தில் தங்கி வசிக்க தேவையான பொருட்களுடன் . ஜெர்ரியிடமிருந்து கால் . அண்ணே ..ஆன் தி வே.. சரவணகுமாரும் அக்தே (ஆயுதஎழுத்து வரவில்லை)


முதல் சுற்று பேச்சின்றியும் , இரண்டாம் , மூன்றாம் சுற்றுகள் வாயை மூடாமலும் கழிந்தது . மேட்டூர் அணையின் நீர் மட்டம் குறைந்து கொண்டே வந்தது . இதோ நான் இருக்கிறேன் எடியூரப்பா என்று ஜெர்ரீ வந்தார் . சென்றார் . வென்றோம் . அஞ்சு வருடமாக காய்ந்து கிடைக்கும் அதிமுக காரன் போல் இருந்தோம் . எவ்வளவு வந்தாலும் தீர்ந்து கொண்டே இருந்தது . பிரபஞ்சன் கையில் ஒரு கிளாஸ் பீருடன் வந்தார். அன்பிற்குறிய மனுஷ்யபுத்திரன் வந்தார் . விமர்சகர் ஷாஜி வந்தார் . பேச ஆரம்பித்தார்கள் . நான் ரசிக்க ஆரம்பித்தேன்


சரவணக்குமார். செ வந்தார் . ஜோதியில் அவரும் ஐக்கியமாக சாப்பாடுக்கான முஸ்தீபுகள் ஆரம்பம் . ஜெர்ரீ நான் தான் சாப்பாடு ஏற்பாடு பண்ணுவேன் என்று அடம் பிடிக்க , நானும் அவரும் ஆட்டோ பிடித்தோம் அருளானந்தா மெஸ்சுக்கு. ஒரு டிஸ்கவரி சேனலை அள்ளிக் கொண்டு , அப்படியே மீண்டும் அரசுக்கு வருமானம். ஒரு முழு... அறைக்கு வந்தோம்.. அதகளம் மீண்டும் ஆரம்பமானது..

டிஸ்கி : அருளானாந்தா மெஸ்காரர் ஜெர்ரிக்கு உறவு என்று சொன்னதாக நியாபகம். ஆனால் அவர் அங்கு இன்னொன்றும் சொன்னார்

சென்னையிலிருந்து எழுத்தாள நண்பர்கள் வந்திருக்கிறார்கள் .

“கூட்டு ,பொறியல் எல்லாம் நிறைய கட்டிக் கொடுங்க “


டிஸ்கி : 2

நர்சிம் சொன்னது போல் இல்லை . அந்த ஓட்டல் அங்குதான் இருக்கிறது .
வெயிலான் , முரளிகுமார் , கா.பா . ஸ்ரீ தருமி ஐயா ஆகியோரை சந்தித்ததில் மகிழ்ச்சி ..

Thursday, September 2, 2010

ஓங்கொய்யால...



கல்லக்குடியில் தண்டவாள
அழுக்கை துடைத்த துண்டு
இன்னும் இருக்கிறது
அறிவாலய கருவூலத்தில்
கருப்பு சிவப்பு கறையோடு
ஆளுக்கு ஆயிரம் பாசுரம் பாடி
ஏலம் எடுக்க தயாராய்
வாலியும் , வைரமுத்துவும்

இல்லையெனப்படுபவரின்
பிறந்தநாள் கோலாகலம்
சிரிப்பொலியில் சிறப்பு திரைப்படம்
கிருஷ்ணலீலா

விநாயகருக்கு மட்டும்
ஏனப்பா விடுமுறை
கொண்டாட்டம்
கடவுள் மறுப்புக்கு
போடுங்கய்யா பிள்ளையார்சுழி

சேதுக்கால்வாய் தோண்ட
ஆள் சேர்க்கிறார்கள்
சிவபெருமானுக்கும் ஆசை
கழக விதியின்படி
பிட்டுக்கு மண் சுமக்க
சம்மதமாம்
கங்கை காவிரி இணைப்பிற்கு
கமிஷன் உண்டாம்
வேற வழி..கஞ்சா கேஸுக்கு
இதுவே மேல்

வாலையும் , தலையையும்
வசதிப்படி காட்டுவோம்
மாநில சுயாட்சி மசாலாவை
கூட்டணி அம்மியில்
அரைத்திடுவோம்

கவுண்ட் டவுன் ஆரம்பமாம்
விமான படிக்கட்டு ஏறி இறங்கியதற்கே
அம்மணிக்கு மேல் மூச்சு வாங்கிறதாம்
கொடநாடு மலையேறி விட்டது
தங்கத்தின் தங்கம்


கண்ணைப் பொத்தி
பொட்டல் வெளியில்
விட்டு விட்டார்கள்
தமிழ் குடிதாங்கியை
காட்டில் என்று சொல்ல
ஆசைதான்.. அதுதான்
எல்லாத்தையும் வெட்டி
பொட்டல் ஆக்கீட்டீங்களேப்பா

சமச்சீர் கல்வியாம்
39 பிராண்டு புதிதாக அறிமுகம்
ரஜினி பொண்ணுக்கு கல்யாணம்
வைரமுத்து பையனுக்கும்தான்
பம்பு செட் இலவசம்
வீரபாண்டிக்கு பெரியார் விருதாம்
தங்கம் வெலை கூடுதாம்
ஓங்கொய்யால.
ரேட்டை ஏத்துங்கப்பு
அடுத்த வாட்டி ஓட்டுக்கு