Showing posts with label மானிட்டர். Show all posts
Showing posts with label மானிட்டர். Show all posts

Monday, January 24, 2011

மானிட்டர் பக்கங்கள் ...... 24/01/11




1997 ஆம் வருடம் . கோவை ஷீலா நர்சிங்ஹோம் . நண்பரின் மனைவி பிரசவத்துக்காக அனுமதிக்கப் பட்டிருக்கிறார் . தலைப்பிரசவம் . டென்ஷன் . குழந்தை பிறந்தாயிற்று . அங்கிருந்த செவிலியர்கள் சொன்னது . “ சார் .. எடுத்துகிட்டு போறீங்களா....வேண்டாம் . உங்களால் வளர்க்க முடியாது . mere vegetable.. இங்க நாங்க பார்த்துக்கறோம்.. நண்பரும் , அவர் மனைவியும் உறவினர்கள்.. இரத்த சம்பந்தங்களுக்குள் திருமணம் என்றால் இந்த ரிஸ்க் உண்டு என்கிறார்கள் மருத்துவர்கள் . நண்பரும் , அவர் மனைவியும் உறுதியாக இருந்தார்கள் . நமக்கு கிடைக்க கொடுத்து வைத்தது இது . மனமுவந்து ஏற்றுக்கொள்வோம் என்றார்கள் .

விதம் , விதமான வியாதிகளின் பெயர்கள் . 8 சர்ஜரிகள் . முகசீரமைப்பு நிபுணர் டாக்டர் பாலாஜி .. “ஷீ ஈஸ் மை சைல்ட்” என்றார். இடுப்பிலிருந்து ஒரு எலும்பை எடுத்து , முகவாய் கட்டையில் பொருத்தி கொஞ்சம் சீர் செய்தார் . கண்களுக்கு இடையே இருக்கும் இடைவெளியை குறைக்க ஒரு சர்ஜரி . குழந்தையின் உடம்பில் போதுமான சக்தி இல்லை . இடைவெளி விட்டு ஆபரேஷன்கள் . சளைக்காமல் போராடினார்கள் இருவரும் . பணப் பற்றாக்குறை வேறு . இதற்கிடையில் குழந்தைக்கு எந்த காம்ப்ளெக்சும் ஏற்படகூடாது என்பதில் கவனமாக இருந்தார்கள் . ஏன் மற்றவர்கள் போல் நான் இல்லை என்று அவள் நினைப்பதற்கு பதில் . ஏன் மற்றவர்கள் என்னைப்போல் இல்லாமல் வித்தியாசமாக இருக்கிறார்கள் என்று யோசிக்க ஆரம்பித்தாள் அவள் . இதற்கிடையில் இரண்டாவது குழந்தையும் . அது இவளுக்கு நேர் எதிர் . கொள்ளை அழகு . பயங்கர சேட்டை . எங்கே , எப்படி , யாரால் வாழ்க்கையின் கணக்குகள் வகுக்கப்படுகின்றன என்பதில்தான் எவ்வளவு ரகசிய சுவாரசியங்கள்.. முதல் குழந்தையின் பெயர் பவித்ரா .. யூரின் பிளாடரில் பிரச்ச்னை..ஒரு நாளைக்கு நான்கு ஜட்டிகளை நணைத்து விடுவாள் ஸ்கூலில் .. அதற்கு ஒரு அக்குபஞ்சர் ட்ரீட்மெண்ட்..அந்த மருத்துவர் 60 நாள் அவகாசம் கேட்டார் .. நண்பர் அரவிந்த அன்னையின் பக்தர் .. அர்ப்பணம் பன்ணி விட்டேன் அவளை மணி என்றார் . டாக்டர்கள் நம்பவில்லை . அவள் ஸ்கூலுக்கு எடுத்து செல்லும் ஸ்பேர் ஜட்டிகள் அப்படியே திரும்ப கொண்டு வருகிறாள் . 45 நாள் ட்ரீட்மெண்ட்டில் .. ஹார்மோன் குறைபாடு நிறைய.. எதாவது மிராக்கிள் நடந்தால் மட்டுமே என்றார்கள் ஸ்பெஷலிஸ்ட்கள்..

நண்பர் ஒரு விளம்பர ஏஜன்சியின் உரிமையாளர் . நான் அவருக்கு கிரியேடிவ் டைரக்டர் . ஈரோடு கிளையண்ட் மீட்டிங் முடித்து விட்டு கோவை செல்ல ஆயத்தமானோம் .. நண்பருக்கு அழைப்பு வந்தது .. குழந்தை பெரியவளாகி விட்டாள் . கைனகாலஜிஸ்ட்டும் உறுதி செய்து விட்டார்கள் .. ஆனால் அவர்களால்நம்பவே முடியவில்லையாம் .. எங்கிருக்கிறது சூத்திர கயிறு ? சுண்டுவது யார் ? நண்பருக்குள் இருந்த வியாபாரி மறைந்தான் .. தகப்பன் விழித்துக் கொண்டான் “மணி..இப்பயே அவளை பார்க்கணும்யா என்றார்.. அதான் இப்ப முதல்ல..என்றேன்.. சென்னை...


ஹெப்சிகா ஏசுதாசனின் “அநாதை” நாவலைப்பற்றி ரமேஷ் வைத்யா மிகவும் சிலாகித்தார் .. ஆனால் கிடைக்கவில்லை.. புத்தம் வீடு கிடைத்தது..இரண்டாவது முறையாக வாசித்துக்கொண்டிருக்கிறேன்.. 1964 ல் எழுதப்பட்ட நாவல்.. ஆனால் இன்னும் ஃப்ரெஷாக இருக்கிறது .. திரைப்படமாக உகந்த கதை.. நமக்கு அதிர்ஷடமிருக்கிறதா ..பார்ப்போம்...


அவர் என்னையே உற்றுப் பார்த்தார்.. நெற்றியை சுருக்கியபடி “நீங்க....அவர்தானே..என்றார் .. ஆமாம் என்றேன்..அவர் கரங்கள் நடுங்கின.. உதடுகள் துடித்தன.. கண்களில் நதிப்பிரவாகம்.. ஆனந்தமா..அழுகையா தெரியவில்லை..நாக்கில் அதை ருசித்துப் பார்த்திருந்தால் சொல்லியிருப்பேன்.. ஆனந்த கண்ணீர் கொஞ்சம் இஞ்சி மரப்பா சுவையில் இருக்குமாம்.. ஒரு எதிர்பாரா தருணத்தில் காதலியை இழுத்து , உதடு கவ்விப் பாருங்கள்.. அப்போது அவள் கண்ளில் வரும் நீர் இஞ்சி முரப்பாவின் ருசியை ஒத்திருக்கும்.. புன்னகைப்பூ என்ற திரைப்படத்தில் இப்படி ஒரு காட்சி உண்டு. நந்தாவும் ,காவிரியும்..நல்ல படம்.. சரி மேட்டருக்கு வருவோம்.. என் கைகளை கண்ணில் ஒற்றிக்கொண்டார் .. எனக்கு ஒன்றுமே புரியவில்லை.. என்ன சார் என்றேன்..குழந்தையாய் தேம்பியபடி.” இன்னிக்கு நான் இஸ்ரோவில் பெரிய விஞ்ஞானியாக இருக்கிறேன் என்றால் , அதற்கு நீங்களும் , உங்கள் பிளாக்கும்தான் காரணம் என்றார்..

நான் இப்படி சொன்னால் நீங்கள் அடிக்க வருவீர்கள்.. ஆனால் ஒரு நண்பர் கேட்டார்..ஏன் தண்டோராங்கிற பேரை மாத்திகிட்டீங்க ?

பதிவுலக நண்பர் ஒருவர் ..அவர் வீட்டிலும் எல்லோரையும் எனக்கு தெரியும்..மனைவி, மாமியார் வகையாறக்கள்.. ஆனால் தண்டோராவாக.. அவர்களழைப்பதும் அப்படியே.. நண்பரின் வீடு எங்கள் பகுதியில்தான்.. ஒரு நாள் மகளுடன் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தேன்.. ஒரு குரல் ..சத்தமாக “தண்டோரா சார் “ ஒட்டு மொத்த கூட்டமும் வேடிக்கை பார்க்க, நான் வண்டியை நிறுத்தினேன்.. என் மகள் தலையில் அடித்துக்கொண்டாள்.. நண்பரின் மாமியார்தான் அழைத்தது.. நான் அருகில் சென்று என் பெயர் மணிகண்டன்.. மணின்னு கூப்பிடுங்க என்றேன்..

சரிங்க தண்டோரா சார் என்றார் அவர்..



எல்லாம் கொடுத்தாயிற்று.. அடுத்த ஆட்சியில் தூக்கு சட்டியில் சோறே வீட்டிற்கு வந்துவிடும்..அதான் கழக, கலைஞரின் ஆட்சி என்று திருவாய் மலர்ந்திருக்கிறார் ஒரு அமைச்சர் பெருமான்.... அரை இஞ்சுக்கு அரிதாரம் பூசி , கறுப்பு சாயம் தடவி உலா வரும் பொதுப்பணி பிடுங்கப்பட்ட அமைச்சர் அவர் .. சோற்றால் அடித்த பிண்டங்களே.. ஓசி வாங்கி தின்னுபுட்டு , சந்ததிகளை பெருக்கி கொண்டு வீட்டோடு இருங்கள்.. நாங்கள் ஊரை அடிக்கிறோம்... ஒரு ரூபாய்க்கு உங்கள் உலைக்கு அரிசி கொடுக்கிறோம்..அப்படியே எங்கள் சந்ததிகளுக்கு பெருக்கி கொள்கிறோம் என்கிறார்கள் .. பார்க்கலாம்..பந்து எந்தப் பக்கம் என்று ...



கடவுள் வருவார் காத்திரு
எனக்குள் ஏதோ சொல்லியது
கையில் கிடைத்த காகிதத்தில்
கடவுள் போல்தான் தெரிந்தது
புருவமும் , கோடான நாசியும்
சிலுவையைப்போல்.

இன்னொரு கோணத்தில்
பள்ளி கொண்ட பெருமாளாகவும்..

உனக்கான கோதுமையில்
உன் பெயர் எழுதப்பட்டிருக்கும்
என்ற குரான் வாசகமும் மங்கலாய்

குரலில் சலிப்பும்
கன்னக்கதுப்பில் கவலையுமாக
சார் நேரமாகிறது ..காசு கொடுங்கள்
என்றான் சுண்டல்கார சிறுவன்..
கடைசித்தாளை எடுத்து நீட்டும்போது
இருவரும் ஒருங்கே கண்டோம்
கடவுளை...






Wednesday, November 24, 2010

மானிட்டர் பக்கங்கள்.....24/11/10




கொஞ்சம் சினிமா . அண்ணன் உண்மைத்தமிழன் போனில் அழைத்தார் . நம் மேலான கருத்துக்களை இயக்குனர் திரு கரு . பழனியப்பன் எதிர்பார்க்கிறார் . நமக்காக சிறப்பு காட்சி என்றார் . படம் மந்திரப்புன்னகை . கிட்ட , தட்ட அனைத்து முன்னணி பிராண்டுகளும் சாரி ... பதிவர்களும் வந்திருந்தார்கள் . படம் ஆரம்பிக்க கொஞ்சம் லேட்டாகும் . ஒரு மலையாள படம் ஓடிக்கொண்டிருக்கிறது என்றார் உ.த . அட ! மிஸ் பண்ணிட்டமோ என்கிற ஏக்கம் ஜாக்கி சேகரின் முகத்தில் தோன்றியது . வாய் விட்டும் சொன்னார் . நான் ஜாக்கிக்கு அலெக்ஸாண்டர் என்று பெயர் சூட்டியிருக்கிறேன் . பக்கத்திலிருந்த ரமேஷ் வைத்யா “நெப்போலியன்” வைங்க.. நமக்கு எதுனா யூஸ் ஆகும் என்றார் .

மிக அடர்த்தியான கதையமைப்பு . இயக்குநரே துணிந்து நாயகனாகி விட்டார் . தன் பாத்திர படைப்பு இதுதான் . இதற்கான உடல்மொழி , உச்சரிப்பு இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற அசைக்க முடியாத முன் தீர்மானத்தில் அவர் இருந்திருக்க வேண்டும் . இறுகிய முகம் , கறுத்த உதடுகள் (இவ்வளவு சிகரெட் பிடித்தால் தமன்னா உதடா வரும்) , மிலிட்டரி நடை , படத்தில் அவர் ஒரு ட்ல்யூஷன் நோயால் பாதிக்கப்பட்டவராக வருகிறார் . இல்லாததை இருப்பதாக கற்பனை செய்து , மாறுபட்ட நடவடிக்கைகளை செய்யும் குணாதிசயம் .


பேசிக்கொண்டேயிருக்கிறார்கள் . படமும் கொஞ்சம் நீளம் . படத்துக்கு கத்திரி . கதாபாத்திரங்களுக்கு வாயில் பிளாஸ்திரி . படம் முழுக்க நகைச்சுவை என்கிற பெயரில் நோகடிக்கும் சந்தானமும் , தம்பிராமையாவும் திடீரென்று குணசித்திரமாக மாறி சாகடிக்கிறார்கள் . இரட்டை அர்த்த வசனத்தை சத்தமாக கூச்சமின்றி பேசும் சந்தானத்தால் , ஒரு கடையில் ஆணுறையை வாய் திறந்து கேட்க முடியவில்லையாம்.

“இயக்குநர் சொல்கிறார் : உடலுக்கு தீங்கு விளைவிக்கும் மதுவை வாய் விட்டு கேட்கிறோம் . ஆனால் நல்லது செய்யும் காண்டத்தை கேட்க முடியவில்லை . ஆங்காங்கே இது போல் வசனங்கள் ஷார்ப்பாக இருக்கிறது . ஆனால் பல இடங்களில் நீளமாக . அதை இயக்குநர் ஒரே முக் பாவனையுடன் , மாடுலேஷன் இன்றி பேசுவது எரிச்சலை உண்டாக்குகிறது (எனக்கு) . பாரதி , திருவள்ளூவர் , ஒளவையார் இவர்களது பாடல்களும் தப்ப வில்லை .


நடிக்க வருதோ இல்லையோ ? நன்றாக குடிக்க வருகிறது . காந்தி சிலை , கடற்கறை , கடைகள் , பப்ப்கள் எல்லா இடங்களிலும் குடிக்கிறார் . மீனாட்சியை நன்றாக அடிக்கவும் செய்தார்.


சைக்கியாட்ரிக்காக வருபவரும் , நகுலன் பொன்னுசாமியும் நன்றாக செய்திருக்கிரார்கள் . ஒரு காட்சியில் மருத்துவர் மீனாட்சியிடம் சொல்கிறார் .

உனக்கும் , கதிருக்கும் இருப்பது காதல்னு நீ சொல்ற.. நாங்க கெமிஸ்ட்ரின்னு சொல்வோம் . எனக்கு கலா மாஸ்டரும் , மானாட மயிலாடவும் நியாபகம் வந்தது

விஜயகாந்த் வெறும் எஸ். ஐயாகத்தான் இருப்பார் ஆனால் டிஐஜிக்கள் கூட்டத்தில் அவர்தான் எப்படி அதிகாரமாக பேசுவார் ? இதில் நாயகனும் அப்படித்தான் . மருத்துவமனையையே அடிமை போல் பேசுகிறார் . என்னதான் வியாதி என்றாலும் கொஞ்சம் த்ரீ மச்சுப்பா . அந்த நர்சுக்கு யார் கு(உ)ரல் கொடுத்தார்களோ தெரியவில்லை.


மீனாட்சி . ஹோண்டா ஷோரூமின் ஷோகேஸ் பொம்மை . முகம் கொஞ்ச்ஃஅம் முற்றலாக இருப்பது போல் தெரிகிறது . ஆனால் வளைவுகள் அபா(யக)ரம் . கொஞ்சம் நடிக்கவும் செய்திருக்கிறார் . ஸ்ரீகாந்தோடு பின்னி பிணைகிறார் ஒரு முறை . அதை நமக்கு பத்து முறை காட்டுகிறார்கள் . வருத்தம் ஒன்றும் இல்லை . வயித்தெறிச்சல்தான் .

அம்மாவை அழகாகவும் , பாடகியாகவும் காட்டும்போது துரோகம் செய்யப்போகிறார் என்று தெரிகிறது . கண்ணாடியில் மீனாட்சியும் , அம்மாவும் கதிருக்கு தலைசீவுவது கீளிஷே .

நிறைய பேசாமல் , உடல் மொழியில் சைக்கோ பாதிப்பை ஏற்படுத்தியிருந்தால் கொஞ்சம் ரசித்திருக்கலாம் . என்னோட சாய்ஸ் விக்ரம் . கரு .பழனியப்பன் இயக்கம் மட்டும் செய்திருந்தால் , நிச்சயம் இவ்வளவு தொய்வு கதையில் இருந்திருக்காது என்பது என் அபிப்ராயம் . ஆஃப்டர் ஆல் ஆடியன்ஸ்தானே எல்லாம் .

பார்த்திபன் மீண்டும் கனவு காணட்டும் . சதுரங்கம் என்னவாயிற்று ? பிரிவோம் ..சந்திப்போம் சார் ..


டிஸ்கி : (சம்பந்தமில்லாத)

7 ஜி. ரெயின்போ காலனியாம் ..அப்ப

2 ஜி. சி.ஐ.டி காலனியா?

டிஸ்கி : 2 கேப்டனுக்கு டாக்டர் பட்டமாம் . செல்போன் வெளிச்சத்துல ஆபரஷேன் பண்ண அன்னிக்கே கொடுத்திருக்கணும் . கொஞ்சம் லேட்டுப்பா...

Tuesday, November 9, 2010

மானிட்டர் பக்கங்கள் ...... 09/11/10


சிறு வயதில் ஒரு முறையும் , பின் நினைவு தெரிந்து ஒருமுறை . பின் தொழில் நிமித்தம் , புள்ளிராஜாவுக்கு எய்ட்ஸ் வருமா கேம்பெய்ன் . திருச்செந்தூருக்கு போயிருக்கிறேன். ஒரு முறை மட்டுமே கோயிலின் உள்ளே சென்றேன் . அதுவே அலர்ஜியாகி விட்டது . கடலில் கால் நனைத்தல் , மானசீகமாக முருக தரிசனம் அவ்வளவுதான் . காரணம் ? கோயில் வாசலில் இருக்கும் லைசன் ரெப்ரசண்டட்டிவ்கள்தான் . டாஸ்மாக் பார் வாசலில் , விரலில் சோடா ஓப்பனரை மாட்டிக்கொண்டுசார் என்ன சரக்கு ? சைட் டிஷ் என்ன சொல்ல? என்பவர்களுக்கும் , மேற்படி கோயில் வாசலில் இருப்பவர்களும் எனக்கு வித்தியாசம் தெரியவில்லை .சரி விஷயத்து வருவோம் . வரும் 18ஆம் தேதி சல்லிப்ப்பயலுக்கு கல்யாணம் . காதலர்களாக இருந்தவர்கள் மணமக்களாக மாறுவதென்பது எவ்வளவு மகிழ்ச்சி என்று என்னைப்போன்றவர்களுக்கு தெரியும் .(பொண்டாட்டி பிளாக் படிப்பாங்க இல்ல) .செல்வேந்திரன் கேண்டியின் கைத்தலம் பற்றுகிறார் முருகன் ஸ்தலத்தில் . மஹா திருமணத்திற்கு பிறகு நடக்கும் இன்னொரு பதிவுலக நிகழ்வு . கோவை , திருப்பூர், ஈரோடு , மதுரை ஆகிய ஊர்களிலிருந்து பதிவுலக நண்பர்களும் , இலக்கிய ஜாம்பவான்களும் சங்கமிக்க இருக்கிறார்கள் . பா.ராவும் வருவதாக சொல்லியிருக்கிறார் . அவர் வீட்டு விசேஷத்தை தவற விட்டவர்கள் , இந்த நிகழ்வை மிஸ் பண்ணாதீர்கள் .

நான் பதிவுலகம் வந்த புதிதில் கேபிள் மட்டுமே நன்கு அறிமுகம் . ஒரு மாலை செல்லடித்தார் . ஒரு சந்திப்பு இருக்கிறது . வருகிறீர்களா ? என்றார் . செல்வா விஜய் டிவியின் நீயா , நானா நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்தார் . பாஸ்கர் சக்தியின் வீட்டில் சந்திப்பு . நர்சிம் , இரவுப்பாடகன் ரமேஷ் வைத்யா . மிக இனிமையான சந்திப்பு . அப்போதுதான் செல்வா அறிமுகம் . அதன் பின் இரண்டொரு முறை சந்தித்திருப்போம் . குறிப்பிட்ட இடைவெளியில் அலைபேசி உரையாடல்கள் உண்டு . சொல்லுங்க தண்டோரா அண்ணே என்று வாய் நிறைய அழைப்பார் . மழை பெய்த பின் காளான் முளைக்கும் . செல்வாவின் மனக்காளான் படித்துப் பாருங்கள் . மனதிற்குள் மழையடிக்கும் . மண் சட்டியில் ஆக்கிய மீன் குழம்பை போன்ற எழுத்துக்கு சொந்தக்காரன் . வச்சிருந்து சுவைக்கலாம் . அப்புறம் திருச்செந்தூர் தீர்த்தவாரியில் சந்திக்கலாமா?

நம்ம சம்பந்தப்பட்ட விஷயம் . மிஸ் பண்ணலாமா என்று வா ..குவார்ட்டர் கட்டிங் பார்த்தேன் . புஷ்கர் , காயத்ரி ஜோடிக்கு நகைச்சுவை உணர்வு மிக அதிகம் . அவர்களிடம் பேசியிருக்கிறேன் . சந்தானம் நடிக்கும் அக்சார்செம் விளம்பரம் பார்த்திருப்பீர்கள் . அது அவர்கள் இயக்கியதுதான். ஆனால் "வ" வில் போதையே வரவில்லை . 90 நிமிடங்களில் அந்த கதையை சொல்லியிருந்தால் கொஞ்சம் சுவாரசியமாக இருந்திருக்க கூடும் .


ஒரு முக்கிய தகவல் . கிண்டி ரயில் நிலையம் அருகில் ஒரு ஒயின் ஷாப் . கண் துஞ்சாமல் பணியாற்றுகிறார்கள் . ரவுண்ட் த கிளாக் சர்வீஸ் . காந்தி ஜெயந்தி , மகாவீர் ஜெயந்தி மற்றும் அனைத்து அரசு விடுமுறை நாட்களிலும் கடை உண்டு . கூட்டம் ஜே..ஜேதான் . ஒழுங்குபடுத்த ஒரு தாணாக்காரர் மஃப்டியில் இருப்பார் . என்னை டிஸ்கஷனுக்கு அழைத்திருந்தால் , நான் கொஞ்சம் சுவாரசியபடுத்தியிருப்பேன் .சரி உடுங்க..நம்ம அப்பன் வீட்டு காசுதானே ?.

ஜொள்ளர்கள் என்றால் ஆண்கள் மட்டும்தானா என்ன ? விஜய் மல்லையாவின் நிறுவன காலண்டர்களுக்கு பெரிய ரசிகர் கூட்டம் உண்டு . எல்லாம் அழகை ரசிக்கத்தான் . இப்போது பெண்களுக்கும் அந்த வாய்ப்பு . சகோதரம் என்ற அமைப்பு . ஹெச்.ஐ.வி அவேர்னெஸ் அமைப்பு . அவர்கள் ஒரு காலண்டரை வெளியிடுகிறார்கள் . கட்டு மஸ்தான்களை அரை ஆடையில்.. ஜொள்ளிகளுக்கு இந்த நியூஸ் .(பஞ்சாயத்து உண்டா? )

சின்ன வயதில் யானை சாணத்தை மிதிக்க போட்டியே நடக்கும் . நல்லது என்று என் பாட்டி சொல்வார் . இப்போது யானை சாணத்திலிருந்து காகிதம் தயாரிக்கிறார்களாம் . பஞ்சாப்பில் .

“பிள்ளையார் சுழி “ போட்டு விட்டு எழுத ஆரம்பிப்போமா?

காலண்டர் மேட்டர் : டைம்ஸ் ஆஃப் இந்தியா

யாணை சாணம் : தினமலர்

காப்பி & பேஸ்ட் இல்லைப்பா . இன்ஃபர்மேஷன் .



பட்டுவேட்டித் தலைவரின் பகுத்தறிவு பாசறையில் பட்டை தீட்டப்பட்ட வெற்றிகொண்டான் திருக்கடையூரில் பீமரதசாந்தி செய்து கொண்டு மனைவிக்கு மங்களநாண் பூட்டினாராம் . தலைவர் தலைமையில் செய்து கொண்டிருக்கலாமே...


சன் பிக்சர்ஸின் அடுத்த படத்தில் பிச்சைக்காரனாக நடிக்க ஆள் எடுக்கிறார்களாம் . வரிசையில் முதலில் குபேரனும் , இரண்டாவதாக ஏழுமலையானும்

Wednesday, November 3, 2010

மானிட்டர் பக்கங்கள்.....03/11/10


ஒரு வாரமாக பார்லிமெண்ட் முடங்கியது என்ற தலைப்பு செய்தியை படித்தேன் . வழக்கமாக அங்கு என்ன உருப்படியாக நடக்கும் என்று தெரிந்ததே . முடங்கியது என்றால் ஏதோ நடந்தது என்று அர்த்தமா?


காமல்வெல்த் கல்மாடியை இனி , கம்மணாட்டி என்று அழைக்கலாமா ?# டவுட்டு (இப்ப இதான் லேட்டஸ்ட் !!)


ஞாயிறு அன்று தா.பாண்டியனின் ஜெயா டிவி பேட்டியில் அரசை பற்றிய சொன்ன குற்றசாட்டுகள்...நேற்று சன்நியூஸின் தமிழகம் செய்தி தொகுப்பில்..விரிவாக அலசினார்கள் . இன்னும் சொல்லப்போனால் ஜெயாவை விட கடுமையாக . எந்திரர்களுக்கு மக்கள் மேல் அக்கறை வர சான்ஸே இல்லை . என்ன நடக்கிறது ? வரும் முன் காப்போம் திட்டமா?


சமீபத்திய குழந்தை கடத்தல் , கொலை , பாலியல் குற்றங்களுக்கு அஞ்சாதே , நான் மகான் அல்ல போன்ற படங்கள்தான் முக்கிய காரணம் என்கிறார் நண்பர் . உண்மைதானோ என்றும் தோன்றுகிறது...

மைனா திரைப்படம் இந்த தீபாவளிக்கு ரிலீஸ் .... அடுத்த தீபாவளிக்கு “மைனா” ரிட்டி அரசு இருக்குமா ? # டவுட்டு
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

தீபாவளி சீசன் ... ஓணான் அடிக்கும் (எத்தனை நாளைக்குத்தான் ஆணி ?) வேலை அதிகம் . பதிவு எழுதவே முடிவதில்லை . (மேட்டரும் சிக்க வில்லை என்பது ஓணானுக்குத்தான் தெரியும் ) அவ்வப்போது பஸ்சில் வித்தவுட்டில் (அட..டிக்கெட் வாங்காமல் போறதை சொன்னேன் . பப்பி ஷேம் இல்லை ) பயணித்து விட்டு இறங்கி ஓடி விடுகிறேன் . ஒன்றும் “குடி” மூழ்கி விடாது என்பது வேறு விஷயம் . அதனால் கொஞ்சம் பஸ்சியதும் , ட்விட்டியதும் கலந்து கொஞ்சம் ரீமிக்ஸ் .


தாளிக்கும் ஓசை..பொறிக்கும் ஓசை..உன் குரல்தான் எத்தனை இனிமை ....முடிப்பதற்குள் அப்படியா என்றாள் ? சாப்பிடும்போது மங்கேஷ்கர் நினைவில் வந்ததை தவிர்க்க இயலவில்லை

மானிடராய் பிறத்தல் அரிது . கூன் , குருடு , செவிடின்றி பிறத்தல் அரிதிலும் அரிது என்கிறாள் ஒளவையார் . ஊமையாய் , குருடாய் , செவிடாய் இருப்பது எப்பேற்ப்பட்ட பாக்கியம் என்கிறான் பாரதி


கவிதை எழுதலாம்னு தேடினால் , கழுதை... கிடைக்கவேயில்லை ஒரு காகிதம் கூட

ஒரு காகத்துடன் வாக்கிங் போன அனுபவம் பற்றி எழுதி கொண்டிருக்கிறேன்..அநேகமாக அடுத்த அம்மாவாசைக்குள் வெளி வரலாம்..(கையடி என்ற ஊரில் முகாம்)

104 பேர்களிடம் வில் இருந்தது......ஒருவனிடம் மட்டுமே இருந்தது....காண்டீபம்


கேள்வி: நீஅடுத்த ஜென்மத்தில் யாராக பிறக்க விரும்புகிறாய்?(கேட்டது கடவுள்)

நான் ஒரு முதலமைச்சருக்கு மகனாக பிறக்க விரும்புகிறேன் (ஒரே மகனாக)

கடவுள்: இப்பதான் இன்னொருவன் முதலமைச்சரா பிறக்கணும்னு கேட்டான். கொடுத்தேன்.

நான் :அதனால் என்ன இப்போ? நான் அவனுக்கு மகனாக பிறந்து விட்டு போகிறேன்..

கடவுள்: ஆனால் அவன் மூணு மனைவிகளும் வேணும்னு கேட்டான். சரின்னுட்டேனே.


சூட்சுமம் சுண்டுவதில் இருக்கிறது...காற்றை வசப்படுத்தும் கயிறும்.


திடீரென்று கூட்டம் கூட்டமாய் வர ஆரம்பித்திருந்தது அந்த குட்டி , இத்துணுண்டு ஜீவன் . ஊர்வதாக தெரியவில்லை. கால் பாவாமல் , காற்றில் மிதப்பது போல் இருந்தது . கடிக்கவில்லை..லேசாக கிச்சு ,கிச்சு மூட்டியது. மனைவிதான் சொன்னாள் .பிள்ளையார் சதுர்த்தி வருதுல்ல ..அதான் என்றாள் .இருந்தாலும் சர்வ சுதந்திரத்துடன் எல்லா இடங்களிலும் அது வியாபிக்க தொடங்கியது . மனைவி யோசித்து விட்டு சொன்னாள் . ரெட்டை பிள்ளையாருக்கு ஒரு தேங்காய் உடைச்சிட்டு , உண்டியல்ல காசு போட்டுட்டு வாங்க..அதுவா போயிரும் . செய்தும் பலனில்லை. உடைத்த தேங்காய் துண்டு ஒன்றை பூஜையறையில் வைத்தோம் . பூசாரி சொன்னது . வீட்ல நாலு கேலண்டர் இருக்கு . பிள்ளையார் சதுர்த்தின்னு கொட்டை எழுத்துல இருக்கு . அப்புறம் ஏன் இது கூட்டமா வந்து நினைவூட்டுதுன்னு எனக்கு டவுட்டு . ஹிட் அடிக்கலாமான்னு கேட்டேன். கொன்னுடுவேன் என்றாள் தங்கமணி .கொஞ்சம் , கொஞ்சமாக அதுவே மறைந்து போனது . அந்த தேங்காய் துண்டை மறந்து விட்டோம் . அதிலும் இப்போது இன்னொரு ஜீவன் . ஆனால் சிகப்பாய்..சுள்ளென்று கடிக்கிறது


எதிர் வீட்டுக்காரர் மாடியில் இரண்டு அறைகள் கட்டிக் கொண்டிருக்கிறார். ஒரு பையன் ,ஒரு பொண்ணு அவருக்கு .பொண்ணை கட்டி கொடுத்துட்டா , பையனை மேல வச்சுட்டு , நானும் மனைவியும் கீழே காலத்தை கழிச்சுடுவோம் என்றார் . என்ன ஒரு நம்பிக்கை பாருங்கள்


கோவிந்தா கோஷம் எங்கும் ஒலிக்கிறது. பக்தி பரவசம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆனால் எனக்குத்தான் கோவிந்தா என்றால் அதற்கு முன்னால் இருக்கும் குவார்ட்டர் என்ற அடைமொழிதான் நினைவுக்கு வருகிறது


ஒரே இடத்தில் நடந்த மாபெரும் விருந்து..பிரமிப்பூட்டும் அசைவ சாப்பாடு..இன்று இரவு நிஜம் நிகழ்ச்சியில்...........


பி.கு : நிகழ்ச்சியை வழங்குபவர்கள் “ஆச்சி” மசாலா..இணைந்து வழங்குபவர்கள் “ மை” டாய்லெட் கீளினர்



செம்மொழி வேந்தே ! செகப்புத் தோல் சிங்கமே ! முத்தமிழே ! அம்மாவே ! ஐயாவே ! மருத்துவரே ! கேப்டனே ! புயலே ! சேரி தங்கமே ! தஞ்சை வேந்தரே !.ஈரோட்டு சிங்கமே ! இத்தாலிய தியாகியே ! அப்புறம் எனக்கு கடன் கொடுக்க வேண்டியவர்களே !

ப..சி...க்..கு....தய்யா


நாய் , பூனை குட்டிகளை தத்தெடுக்கும்படி த்ரிஷா வேண்டுகோள் விடுத்திருக்கிறார் . நான் இரண்டு முயல் குட்டிகளை தத்தெடுக்கலாம்னு இருக்கிறேன்..(சாக்குப் பைக்குள் முயல் குட்டிகள்-சுஜாதா)


கடந்து சென்றவள்
பறித்து சென்றாள் இதயத்தை
கடவுள் மீது கோபம் வந்தது
பின்னால் வருகிறாளே இன்னொருத்தி
அவளுக்கு எதை கொடுப்பது?

இமைகளை இப்படி இப்படி
திறந்தாள்
மின்னல் வெட்டியது
சிரிப்பினால் குழிகள்
பறித்தாள்
தவறாமல் விழுந்தேன்
குழியில்
ஓ...லைலா.


உயிர் போய்
உயிர் வருகிறது
ஒவ்வொரு முறையும்
எப்படி உயிர் போய்
உயிர் வருகிறது
என்பதை சொல்வதற்குள்



கொஞ்சம் காமெடி .. (வேற யாரு பட்டு வேட்டி வகையறாத்தான்)


காட்சி-1 எஸ்வி சேகரை பத்து அடி அடிக்கிறார்கள் .சந்திரசேகர் சொல்கிறார். இப்படி கேட்டா சொல்லமாட்டே ! இன்னொரு அடி அடிக்கிறார். சொல்லிவிடுகிறார்.

காட்சி-2 சுகுமாரி ஒரு பாழடைந்த வீட்டில் இருக்கிறார். அவர் முன்னால் ஒரு பாம்பு படம் எடுக்கிறது. உள்ளே வரும் சுகாசினி தன் கையை பாம்பின் முன் நீட்ட, பாம்பு சுகாவை கொத்தி விட்டு போய் விடுகிறது.

காட்சி-3 சுகாவை ஆஸ்பெடலுக்கு கொண்டு வருகிறார்கள். சிகிச்சைக்கு உள்ளே கொண்டு போகிறார்கள். அந்த ரூமின் மேல் ஒரு போர்டு குளோசப்பில் காட்டப்படுகிறது.”டயாலிசிஸ் ரூம்” கலைஞர் டிவி மேட்னி!


ஒரு சீனா நாட்டு தம்பதிக்கு முதல் குழந்தை, அவங்களை மாதிரியே நல்லா சிகப்பா பிறந்தது.
அதுக்கு ''சிங்- சாங்-பங்'' குன்னு பேர் வச்சாங்க.
இரண்டாவது குழந்தையும் கொளுகொளுன்னு சிகப்பா பிறந்தது.
அதுக்கு ''ரீங்- சாங்- சிங்''குன்னு பேர் வச்சாங்க.
ஆனா... மூணாவதா பிறந்த குழந்தை, நீக்ரோ மாதிரி கறுப்பா பிறந்தது.
அதுக்கு என்ன பேர் வச்சிருப்பாங்க?

''தெரியலையே''
''சம்- திங்-ராங்''குன்னு.


பிரபல பதிவர் : நான் எழுதிய “அதிகாலை விடியல் “ கவிதை படிச்சிருக்கீங்களா?

பேட்டியாளர் : ஏன் சார் ? அதிகாலைன்னாலே விடியல்தானே ..

பி .ப : படிச்சீங்களா ? இல்லையா ?

பே : இல்லீங்க ..தூங்கிட்டேன் .



புதுப்பித்துக் கொள்.. நித்தம் புதிய மலர்கள்..பழைய செடியில்


தீபாவளி மற்றும் “விடுமுறை தின” வாழ்த்துக்கள் .


டிஸ்கி : நாளை புதிய தலைமுறை மறக்காமல் வாங்கி உங்கள் பெயர் இருக்கிறதா என்று பார்த்துக் கொள்ளுங்கள்

Sunday, October 10, 2010

மானிட்டர் பக்கங்கள்.....10/10/10

(வால் , ஜாஃபர் , கதிர்...அப்புறம் )

சென்ற வாரம் ஈரோடு போயிருந்தேன் . சில விளம்பர விவாதங்களுக்காக .

1 . வாகனமும் , அறையும் ஏற்பாடு செய்து கொடுத்த அன்பன் ஆரூரானுக்கு நன்றி .

2 . சரக்கு.. உபயம் வால் . ஆச்சர்யம் குடிப்பதை விட்டு விட்டதாம் வால் . அதனால் தலை கொஞ்சம் ஓவராக போக நேர்ந்தது . வால் குடிக்காததற்கு காரணம் .காதலாம் .. தோல்வியென்றால் குடிக்கலாம் . வெற்றியென்றால் விட்டு விடலாமா ?

3 . எளிமையான எழுத்துக்களுக்கு சொந்தக்காரன் அன்பு தம்பி பாலாசி ..(பஜ்ஜி..சொஜ்ஜி..மேட்டர் என்னாச்சு மச்சி ?) . வயிற்றில் புளியை கரைக்காமல் . காதல் ரசம் சொட்டும் கவிதைகளுக்கு பேடண்ட் ரைட் வாங்காத அகல் விளக்கு .

4 . ஜாஃபர் தம்பி...அன்புக்கு மிக்க நன்றி..கொஞ்சம் ஓவராத்தான் போனோமோ ? சென்னை வரும்போது அவசியம் சந்திக்க தண்டோரா ஆபீசுக்கு வர வேண்டும் . அது பதிவுலக அறிவாலயமாம் . ( நன்றி வெயிலான் )

5 . கார்த்திக் . நந்தாவில் ராஜ்கிரண் சூர்யாவிடம் சொல்லும் வசனம் ஒன்று உண்டு . என்னைய பார்க்கிறாப்ல இருக்கு . கார்த்திக் .. நானும் அப்படி உணர்ந்தேன் . ஹோட்டல் வாசலில் நாம் உரையாடியது ...இன்னும்....

6. கதிர் . கிராமத்து வேர் . நான் இவரது ஜெயா தொலைக்காட்சி பேட்டியை ஈரோட்டில்தான் பார்த்தேன் . 9.30 மணிக்கு வரேன் அண்ணே ! என்றவர் 9.40 க்கு வந்தார் . அதுவா முக்கியம் .உண்மையில் பேட்டி . அந்த சமூக அக்கறை . வாழ்த்துக்கள் தம்பி மென்மேலும் சிறக்க ..சரக்குல பேசியதையெல்லாம் சாக்குல போட்டு மூட்டை கட்டணும் .. புரியுதா ?




ப்ரிபெய்டு உலகம் . மளிகை கடை வைத்திருந்த நண்பரின் கடையில் சரக்கே இல்லை . (மளிகை சாமான்களை சொல்றேன் ) பதிலாக எங்கும் செல்போன் மயம் . விரல் நுனி ரேகைகள் அநேகமாக அழிந்து போயிருந்தன . (ஈ சார்ஜாம் )

இட்லி மாவு மட்டும் விற்கறேன் . உங்களை மாதிரி சில நண்பர்களுக்காக என்றார் .

மக்களால் பேசாம இருக்கவே முடியாது . 200 ரூ சம்பாதிக்கற ஒருத்தர் டெய்லி 50 ரூபாய்க்கு டாப் - அப் பண்ணுகிறாராம் . பிஸினஸ் சூப்பரா போயிட்டிருக்கு என்றார் . பின்னூட்டமும் , ஓட்டும் போடறதுக்கு எதாவது ப்ரிபெய்டு ஸ்கீம் கொண்டு வரலாமா ? இந்த மாதிரி எல்லாம் அச்சு , பிச்சு கேள்வியெல்லாம் வினவ கூடாது . (ஈரோட்டு நண்பர்கள் ஃபேஸ் புக்கில் சில புகைப்படங்களும் , மற்றவைகளும் காட்டினார்கள் .. பார்த்தேன் ... வியர்த்தேன் ) காமெடி ஃபீஸ்களை பற்றி என்னத்த பேச ? ஈரோடு , கோவை எல்லா இடங்களிலும் இந்த நகைச்சுவை திரைப்படம் சூப்பர் ஹிட் .


கோவையில் அன்புடன் வந்து சூடாக இட்லியும் , தோசையும் (தானே ) வாங்கி கொடுத்த அண்ணாச்சிக்கும் , காங்கிரசின் நம்பிக்”கை” நட்சத்திரம் சஞ்சய் மாப்ளைக்கும் நன்றி .


அடுத்த வாரம் சிவகங்கையில் மட்டன் சுக்கா சாப்பிட போகிறேன் . அன்பு மக்கா பா . ரா வின் மஹாவிற்கு திருமணம் . ஏதோ என் மிக நெருங்கிய சொந்தம் வீட்டு திருமணத்திற்கு போக இருக்கும் உணர்வில் இருக்கிறேன் . காரணம் பா . ரா . எளிமையான மனுஷன் . ஆனால் மனுஷன் இப்பல்லாம் என் வேலையை எடுத்து கிட்டாரு . சரக்கு போட்டா , குரல் கேக்கணும்னு ....நீ எப்ப வேணா கூப்பிடு மக்கா ..நாங்க எல்லாம் இரவு பாடகனையே பார்த்தவன் ..(ர . வை) ..உப்புமா இல்லை .


என்னதான் இறுக்கமாக
இருப்பதாக காட்டிக்கொண்டாலும்
உன் உதடுகளின் வழியே
கசியும் அந்த ஒரு துளி
மெளனத்தில் எனக்கான
சம்மதம் ஒளிந்திருக்கிறது


(கதிரின் பாதிப்பு )



சென்னை விமான நிலையத்தில் சொக்க வைக்கும் அம்மையாரை சந்தித்தாராம் பட்டு வேட்டி தலைவர் . ( சும்மா எத்தனை நாளைக்குத்தான் மஞ்சள் துண்டையே அடையாளம் சொல்றது ) . இலங்கை தமிழர் பிரச்ச்னை..கோரிக்கை மனு .. கூட்டணிக்கு உத்தரவாதம்..

ஆமாம்...உங்க டூத் பேஸ்ட்ல உப்பிருக்கா ?

போய்யா...நாங்க சோத்துலயே உப்பு சேர்க்கறது இல்ல.. (இது தமிழ்குடிதாங்கியின் வசனம்பா ...விரைவில் விருதகிரிக்கு சாமரம் வீச நேரலாம் )

Thursday, August 19, 2010

மானிட்டர் பக்கங்கள்.....19/08/10


(உலக அமைதிக்காக பிரார்த்தித்து கொண்டிருக்கிறேன்)



எழுதி ரொம்ப நாளாச்சு ! எழுதனும்னு கட்டாயமா ? காலத்தின் கைஅரிப்பான்னு தெரியலை . மொக்கைக்கு இவ்வளவு பில்டப்பான்னு ஜ்யோவ்ராம் சுந்தரின் ஸ்டேட்டஸ் மெசேஜ் சிரிக்கிறது . (30/06/2010 ) . இன்று திருமணநாள் காணும் சுந்தருக்கு வாழ்த்துக்கள் . எனக்கு அடுத்த மாசம் (ட்வின் டவர் அட்டாக் )

பாங்காக்கில் வாசு புலியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார் . நான் ஒரு கிளியுடன் ...(படம் போட இயலவில்லை..பர்சனலாக காட்டுகிறேன் .வாசு எடுத்த கோணம் சரியில்லை )

பொதுவாகவே மேலை நாடுகளில் ஹாரன் அடிப்பதில்லை . இங்கும் அப்படித்தான் . ஆனால் அதற்கு பதிலாகத்தான் நாங்க வாய் ஓயவே இல்லை .

அங்கு சாப்பிட்ட பேப்பர் மசால் தோசை 165 பாட் . கிட்டதட்ட 270 ரூ . நான் அதில் 200 ஐ சர்வீஸ் செய்த அந்த கொத்தமல்லி செடிக்கு (கொத்தமல்லி செடியில் எலுமிச்சை பழம் அங்கு காய்க்கிறது ) கொடுத்தேன் . மீதியை ஓட்டல்காரனுக்கு அழுதேன்

போன் , ரூம் இவை நான் சந்தித்த (அதாவது பெயர் கேட்ட ) இரு பெண்களின் பெயர்கள் . பெயர்க் காரணம் தெரியவில்லை

ஒருவன் ஆபாசபடத்தை காட்டி எனக்கு தூண்டில் போட்டான் . நான் மறுக்க , என்னை தாக்கிவிட துணிந்துவிட்டான் . நானும் முஷ்டியை ஓங்கி , நம்மூரின் உட்சபட்ச கெட்ட வார்த்தையை சொன்னேன் . சிரித்து அனுப்பி விட்டான் . அந்த வார்த்தைக்கு தாய்லாந்தில் மரியாதையான அர்த்தம் இருக்குமோ ?


ஏழு நாள் பாங்காக்கில் தளும்பியது (சரக்குங்க ) ஒத்துக் கொள்ளவில்லை . இங்கு வந்து இறங்கியதும் , ஏழரையை (அந்தாள் இல்லிங்க) காட்டியது . டாக்டரிடம் போய் ஆறு மாதமாகி விட்டது போலும் . மனைவி என்னங்க இப்படி என்றாள் .
ஒரு முயற்சி என்றால் , இப்படிப்பட்ட இடைஞ்சல்களை சகிக்கத்தான் வேண்டும் என்று வியாக்கியானம் பேசி விட்டு போனேன் .

என்னாச்சு மணிகண்டன் ?

நீங்கதான் சொல்லனும் சார்

வழக்கம் போல்தானே என்றவர் பெரிய சீட்டை எழுத ஆரம்பித்தார் . நல்லவேளை ஐ.சி.யூ வெல்லாம் இல்லை . அந்தளவுக்கு ராஸ்லீலையெல்லாம் தாய்லாந்தில் நடக்கவில்லை . வெண்சீருடையில் செவிலிகள் போன முறையைவிட அழகாக தெரிந்தார்கள் . கொஞ்சம் அறிமுகமான அந்த பெண் லேசாக சிரித்தாள் . அங்காடித்தெரு அஞ்சலி சாயல் அவளுக்கு இருப்பதாக பட்டது . உன் பெயர் ”கனி”யாம்மா என்றேன் . இல்லை சார் “தமிழ் “ என்றாள் . ரெண்டும் ஒன்னுதாம்மா என்றேன் . அவளுக்கு புரியாமல் சிரிப்பு வந்தது .

சார் ! அடிக்கடி இங்க வர்றீங்க

உன்னைப் பார்ப்பதற்காக இருக்கலாமோ ? இதை சொன்னவுடன் அவளுக்கு லேசாக வெட்கம் வந்தது . சகோதரியை வெட்கப்படுத்தியிருக்கிறேன் . பாங்காக்கில் அந்த ஈரான் பெண்ணிடம் நாலு வரிகள் சொன்னேன் . அதற்கே அங்கிருந்த பஞ்சவர்ண கிளிக்கு டெபாசிட் போனது . எங்கள் ஊரில் இப்படி சொன்னால் அவ்வளவுதான் . நாக்கை வெட்டி சூலத்தில் சொருகி விடுவார்கள் . ஆமாம் .. உங்க நாடும் கடுமையானதுதானே . இதற்கு தண்டனை உண்டா ? என்றேன்

ஆம் . உண்டு . நான் புகார் கொடுத்தால் . ஆனால் நாக்கை மட்டுமல்ல என்றாள் அவள் ..


டாக்டர் வந்தார் . எப்படியிருக்கு மணி ?

சரியாகி போச்சு .

அதுக்குள்ளவா ? நிலா வரலையா ?

சரக்கு தீர்ந்து போச்சுன்னு சொன்னேன் .

பாரு . தலைவர் மதுவிலக்கு கொண்டுவரப்போறாராம் . என்னப் பண்ணுவீங்க ?

அதெப்படி தாய்லாந்துல இவர் கொண்டு வரமுடியும் என்றேன் . இவருக்கு மயக்க ஊசி போடுமா என்றபடி கையை ஆட்டி விட்டி அகன்றார் .


இன்னும் முடிக்காமலிருந்த தஞ்சை பிரகாஷை முடித்தேன் . ஏஜன்சியிடம் இருந்து போன் .

ஜீ..கிளையண்ட் வர சொல்லிட்டாங்க



எங்க ? எப்ப ?

காங்கேயம் . நாளைக்கு ..கான்செப்ட் ரெடி பண்ணுங்க . ஒரு நாலாவது ..

காங்கேயத்தில் ஒரு நெய் கம்பெனி ..பலமுறை சந்தித்தும் வேலையாகவில்லை . இந்த முறை பார்க்கலாம் . ஒவ்வொரு முறையும் ஈரோடு , பார் , குப்பண்ணா , டேம் ஃபிஷ் என்றே பொழுது கழிந்தது . இந்த முறை நேரமிருந்தால் நண்பர்களுக்கு போன் செய்கிறேன் . ஈரோடு தொடாமல் கார் மூலம் காங்கேயம் வருகிறேன்


கணவன் ஹாலில் அமர்ந்து பேப்பர் படிக்கிறான்

மகள் அவன் கழுத்தை கட்டிக் கொண்டிருக்கிறாள்

அப்பா ! கோடிக்கு எத்தனை சைஃபர்ப்பா ?

சமையலைறையிலிருந்து வாசனை அலை அலையாய் வருகிறது (கிராஃபிக்ஸ்)

கணவன் : டார்லிங் ! ஸ்ண்டே ஸ்பெஷலா?

மனைவி : சம்திங் ஸ்பெஷல் ..

மகள் : அப்பா ! பிராண்ட் நேமை சொல்லி..அதுல சமைச்சா எவ்ரிதிங்க் ஸ்பெஷல்தானே (குழந்தைங்கன்னா , கிழவி ரேஞ்சிற்கு பேசனுமே )

மனைவி பல உண்வுகளை சமைக்கும் காட்சிகள் .

நெய் டின்னின் குளோசப் காட்சிகள் .. கணவன் ஒரு ஸ்வீட்டை எடுக்க . மனைவி :நோ “ கெஸ்ட் ஃப்ர்ஸ்ட் என்கிறாள்

கணவன் யார் கெஸ்ட் என்று மகளிடம் ஜாடையில் கேட்கிறான் . மகளும் , அம்மாவும் நக்கலாக சிரித்துக் கொள்கிறார்கள்

மனைவி : எல்லாம் உங்க சொந்தகாரங்கதான் என்கிறாள்.


வாசலில் காலிங் பெல் அடிக்கிறது.

மனைவி கெஸ்ட் வந்தாச்சு என்கிறாள்.

அதாவது “உங்க மாமனாரும் , மாமியாரும் என்கிறாள்

----------- நெய் ..குஷி , ருசி , குதூகூலம்

“மணம் வீசும்...மனம் பேசும் “

எதாவது பெட்டரா கேப்ஷன் இருந்தால் கொடுங்க .. கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர்பா பரிசு உண்டு


ஒரு ஆசை : ஆட்சி மாறிடும் சூழல் தெரிகிறது என்று சஞ்சய் மாதிரி அரசியல் நோக்கர்கள் சொல்கிறார்கள் . எதுவானாலும் பேயும் , பிசாசும்தாம் நமக்கு சாஸ்வதம் . ஆனால் காட்சிகள் மாறும் போது , படம் எப்படி விருவிருப்பாக இருக்குன்னு பார்க்க ஆசை..உங்களுக்கு ?

கொஞ்சம் டிஸ்கிகள் :

ஒரே இடத்தில் நடந்த மாபெரும் விருந்து..பிரமிப்பூட்டும் அசைவ சாப்பாடு..இன்று இரவு நிஜம் நிகழ்ச்சியில்...........


பி.கு : நிகழ்ச்சியை வழங்குபவர்கள் “ஆச்சி” மசாலா..இணைந்து வழங்குபவர்கள் “ மை” டாய்லெட் கீளினர்


எதிர் வீட்டுக்காரர் மாடியில் இரண்டு அறைகள் கட்டிக் கொண்டிருக்கிறார். ஒரு பையன் ,ஒரு பொண்ணு அவருக்கு .பொண்ணை கட்டி கொடுத்துட்டா , பையனை மேல வச்சுட்டு , நானும் மனைவியும் கீழே காலத்தை கழிச்சுடுவோம் என்றார் . என்ன ஒரு நம்பிக்கை பாருங்கள் ! எங்கள் வீட்டுக்கு அருகில் ஒரு முதியோர் இல்லம் இருக்கிறது

கோவிந்தா கோஷம் எங்கும் ஒலிக்கிறது. பக்தி பரவசம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆனால் எனக்குத்தான் கோவிந்தா என்றால் அதற்கு முன்னால் இருக்கும் குவார்ட்டர் என்ற அடைமொழிதான் நினைவுக்கு வருகிறது


இது பெஸ்கியோட டிஸ்கி


சண்டே வித் தங்கமணி

தங்கமணி: ஏங்க, பெப்பர் சிக்கன் பண்ணட்டுமா?
நான்: வேணாம்மா
தங்கம்: இல்லன்னா, பட்டர் சிக்கன்?
நான்: நோ.
தங்கம்: செட்டினாடு சிக்கன்?
நான்: அதல்லாம் வேணாம்மா, வெறும் குழம்பு மட்டும் வை, போதும்.
தங்கம்: இப்படி ஒரு புருசன் கிடைக்க நான் குடுத்து வச்சிருக்கனும், நான் கஷ்டப்படக்கூடாதுன்னு ஒன்னும் வேணாம்னு சொல்றீங்களே.
நான்: அது நீ கஷ்டப்படக் கூடாதுங்கிறதுக்காக இல்லம்மா, நான் கஷ்டப்படக் கூடாதுங்கிறதுக்காக

ஒரு கவிஜை :
இடது, வலது
ஏறி, இறங்கி
மேலும்,கீழும்
சரியும்,தவறும்
நடத்தலும்,நிற்றலும்
முன்னும்,பின்னும்
அந்தப்புறம், இந்தப்புறம்
ஆணும்,பெண்ணும்
இதுவரை சரிதான்
ஆனால்
உனக்கும்,எனக்கும்
எனக்கும்,உனக்கும்
என்பதில் உடன்பாடில்லை
அது நான்,நீ என்று
திருத்தப்படுகிறது.

Saturday, July 17, 2010

மானிட்டர் பக்கங்கள் 17/07/10


சன் டிவியில் (கலைஞரிலும்) முதல்வரின் கடிதத்திற்கு பிரதமர் பதில் எழுதியிருப்பதாக சொன்னார்கள் . அதாவது ஜீலை 3 ஆம் தேதி எழுதப்பட்ட கடிதம் அது. கிட்ட தட்ட 15 நாட்களில் பதில் வந்து விட்டது. இலங்கையில் தமிழர்கள் கவுரமாக வாழ எல்லா முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது . சந்தோஷம் நடந்தால் . சரி இந்த கடிதம் அடிக்கடி எழுதுகிறாரே . அதன் நடை முறை என்ன என்று தெரிந்து கொள்ள ஆசை . நம்மைப்போல் தபாலாபீசுக்கு போய் கார்டு , கவர் வாங்கி வந்து எழுதுவாரோ ? ஆனால் ஆ.ராசா துறை மந்திரி எதற்கு இருக்கிறார் ? அண்ணனுக்கு அடுத்த வினை 2 ஜீ அலைவரிசையில் சமீபத்தில் ஆரம்பமாகியிருக்கிறதாம் . இந்த முறை நிச்சயம் கீரிடம் கிட்ட தட்ட கழலும் நிலையில்தான் இருக்கிறதாம் .(டைம்ஸ் ஆஃப் இந்தியா - 17/07/10)

அரசு உயர் அதிகாரியாக இருக்கும் நண்பர் சொன்ன நடைமுறை . முதல்வரின் கடிதம் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யப்பட்டு . அவரால் தமிழில் கையெழுத்திடப்பட்டு , ஒரு ஸ்பெஷல் மெசஞ்சர் மூலம் டெல்லிக்கு கொடுத்தனுப்பப்படுமாம் . அந்த கடிதத்தை தமிழிலேயே எழுதி செம்மொழியை இன்னும் கொஞ்சம் வளர்க்கலாம். எப்படியிருந்தாலும் சிங் ஒன்றும் செய்யப்போவதில்லை . ஒரு சம்பிரதாய பதிலை தவிர . பின் அந்த மெசஞ்சர் டெல்லியில் பிரதமரின் அலுவலகத்தில் கனையாழியை காட்டி , கடிதத்தை சேர்த்து விட்டு பதிலுக்கு காத்திருப்பார் . சவுத் பிளாக்கில் குரங்குகள் தொல்லை அதிகம் . அதற்கு ஒருவர் சொன்ன காரணம் . ராமர் பாலத்தை இடிக்க முயற்சித்ததுதானாம் . பின் அரசு செலவில் (வெட்டி) தலைநகரில் உண்டு , உறங்கி பதிலை பெற்றுக் கொண்டு கண்டேன் சீதையை ரேஞ்சுக்கு திரும்புவாராம். அவர் திரும்பி வருவதற்குள் இவர் இன்னொரு கடிதம் தயாராக வைத்திருப்பார் என்பது வேறு விஷயம் .


நானும் , காமராஜிம் ஒன்றுதான் என்று முதல்வர் சொல்லியிருக்கிறார் . இனிமே காமராஜ் ஆட்சின்னு யாரும் பேசாதீங்கப்பா கதர் கிழிசல்களே . இல்லா விட்டாலும் தலைக்கு மேல் சபை தொங்குகிறதே . மூச்...


இந்த வாரம் ஆனந்த விகடன் கொஞ்சம் சூடும் , சுவையுமாக இருந்தது என்று சொல்லலாம் . சாருவின் மனங்கொத்தி பறவை அட்டகாசம் . ஆனந்தவிகடனுக்கு சன் சார்பு அதிகமோ என்று தோன்றுகிறது . துணை முதல்வரின் தேநீர் விருந்து அமர்க்களம் . ஆதி திராவிட நலத்துறை அமைச்சர் பற்றிய ஸ்கேனிங் . ஆங்காங்கே முதல்வருக்கு சில பச்சை மிளகாய்கள் . செழியனின் மார்க் கதையும் மனதை தொட்டது . எனக்கும் அந்த மாதிரி நண்பர்கள் இருந்தார்கள் . தியாகராஜன் என்றொரு இயக்குனர் நண்பர் . இப்போது எங்கிருக்கிறார் என்றே தெரியவில்லை . சினிமா ..



மைக்ரோ சாஃப்ட் துணைத் தலைவரின் பர்சையே அடித்த கில்லாடிகள் திருச்சி ராம்ஜிநகர் திருடர்கள் . கும்பலாக கிளம்ப வேண்டியது . அண்டை மாநிலங்களில் ஆட்டையை போட வேண்டியது . திரும்ப இங்கு வந்து ஆட்டம் போட வேண்டியது . இவர்கள் குறவர் என்ற பிரிவு என்றும் ,சேர்வை என்ற பிரிவை சேர்ந்த மக்கள் என்றும் சொல்கிறார்கள். இவர்களுக்கு சிறையில் வைத்து கவுன்சிலிங் கொடுக்கப் பட்டிருக்கிறது . சுய உதவி குழுக்கள் மூலம் மாற்று தொழில் ஏற்பாடுகள் செய்யப்பட்டது . 50 க்கும் மேற்ப்பட்டோர் மனம் மாறியிருக்கிறார்களாம் . நம்மூர் மந்திரிகளுக்கும் ராம்ஜீ நகர் வாசிகளை வைத்து கவுன்சிலிங் கொடுத்தால் என்ன ? ஆனால் ஒன்று .இந்த மாதிரியெல்லாம் எழுதிடலாம். நாளை நமக்கு மந்திரியாகும் வாய்ப்பு கிடைத்தால் ? இதைத்தான் அல்லது இதை விட மேல் செய்வோமோ என்றும் தோன்றுகிறது




பாலகுமாரனின் முன் கதை சுருக்கம் பற்றி லக்கிலுக் எழுதியிருந்தது எனக்கு மிகவும் பிடித்திருந்தது . அனாயசமான நடையில் ஆங்காங்கே நகைச்சுவை தூறல்களும் . அப்படியே கொஞ்சம் பால்யமும் , பாலகுமார விமர்சனமும் .....


செம்மொழி மாநாட்டில் முதல்வர் அதிகம் புகழப்பட்டது அவருக்கு இருந்த ஒரே வீட்டையும் தானமாக ஈன்றதற்கு .உண்மைதான் .




இல்லம் தானம்
உடல் தானம்
சுய பெருமிதம்

நாட்டையே நாம்
தானமாய் தந்ததை
கண்டு கொள்வாரில்லை
யாரும்.....

Tuesday, June 15, 2010

மானிட்டர் பக்கங்கள்.........15/06/10


முத்துசாமி , சின்னசாமி என்று அதிமுகவில் ஆமாஞ்சாமியாக இருந்த அடிமைகள் , இன்று அய்யா குட்டையில் மட்டையாகிவிட்டார்கள் . அவர்கள் சொல்லும் காரணம்தான் வேடிக்கையாக இருகிறது . இத்தனை வருடங்களாக அங்கு அடிமைகளாக இருந்தார்களாம். இப்போதுதான் ஞானோதயம் வந்திருக்கிறது . முத்துசாமி சொல்கிறார் . அம்மா ஒரு முறை கழற்றி போட்ட செருப்பை பத்திரமாக வைத்திருக்கிறாராம் . அதிமுக ஆட்சியில் இருந்தால் , அதால் அடித்தால் கூட பெருமையாக வாங்கி கொண்டிருப்பார் . மக்கள் சேவைக்காக அணி மாறியதாக அவர் பேட்டியை படிக்கும்போது , அந்த செருப்பாலேயே ரெண்டு சாத்தினால் என்ன என்று தோன்றியது . சின்னசாமி சமயம் பார்த்து தாவியிருக்கிறார் . அமைச்சராக , கரூர் எம்பியாக இருந்தவர் . திமுகவின் மாவட்டசெயலாளர் திருமதி வாசுகி முருகேசனின் அகால மரணம் , அந்த இடத்தை தான் பிடித்து விடலாம் என்று மனப்பால் குடிக்கிறார் இந்த முன்னாள் அடிமை . பார்க்கலாம். இந்த அடிமைகள் புது குட்டையில் விழுந்த நாள் , சென்னை திக்குமுக்காடியது . டிராஃபிக் நெரிசல் .


நீலகிரியில் இருப்பவர்கள் எல்லாம் ஓய்வெடுக்கிறார்கள் என்று அர்த்தமா ? என்று ஒரு விநோத அறிக்கை வெளியிட்டிருக்கிறார் முன்னாள் நிரந்தர முதல்வர் புரட்சித்தலைவி . அதுமட்டுமல்ல . அறிவாலயத்தில் அனைவரும், முக உட்பட சீட்டாடுகிறார்கள் . கேளிக்கையில் ஈடுபடுகிறார்கள் என்றும் விளாசி தள்ளியிருக்கிறார் . தலைவரின் பதிலை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம் . ஆனாலும் டான்சி ராணிக்கு இப்படி புத்தி பேதலித்து போக வேண்டாம் . பதில் லாவணி விரைவில் வரும் . அதில் என்னென்ன கூத்து இருக்கிறதோ . எனக்கு 62 வயதாகி விட்டது . இன்னும் எல்லோரிடமும் நானே நின்று மனுக்களை வாங்க முடியுமா என்றும் செல்வி கேட்கிறார் . வாய்க்கு வாய் ஐயாவை காச்சறீங்களே ! அவரை பார்த்தாவது தெரிஞ்சுக்கலாமே . 87 வயசுல என்ன சுறுசுறுப்பு . சும்மா நின்னு விளையாடறாரு .


தைலாபுரத்தாருக்கு எதை தின்றால் பித்தம் தெளியும்னு ஆயிடுச்சு போல . அன்புமணிக்கு தச்சு வச்ச கோட்டு , சூட்டையெல்லாம் பழைய பாத்திரக்காரனுக்குத்தான் போடனும் . தலைவர் வச்சது சூப்பர் ஆப்பு . அப்படியே அம்மாவும் கண்டுக்காம விட்டால் , மறுபடியும் கோடாரிதான் .


ராவணன் படம் நிறைய எதிர்பார்ப்புகளை கிளறி விட்டிருக்கிறது . மலையாளத்தில் வெளியாகவிருக்கும் ராமராவணன் என்ற படமும் சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது. ஈழத்தமிழரின் போராட்டத்தை கொச்சைபடுத்தி காட்சிகள் உள்ளனவாம். சிங்களவர்கள் அன்பானவர்கள் , புத்தரின் வழி வந்த தியாகசீலர்கள் என்பதாக சித்தரிப்புகள் . மேலும் இலங்கை அவர்கள் சொந்த மண் இல்லை. இங்கிருந்து பஞ்சம் பிழைக்க போனவர்கள் என்று வரலாறும் திரிக்கப்பட்டிருக்கிறதாம் .சிங்கள் அரசு நிதியுதவியுடன் இந்த திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கலாம் என்றும் சொல்கிறார்கள் . மலையாள சினிமாவில் தமிழனை இழிவு படுத்துவது ஒன்றும் புதிதல்ல . அதைப் பற்றி நிறைய இடுகைகளும் வந்திருக்கிறது . செம்மொழி மாநாட்டு பாடலை படமாக்கியவர் ஒரு மலையாளி . அதில் வரும் நிறைய முகங்களும் வேற்று முகங்களே . தமிழனின் பெருந்தன்மைக்கு அளவே இல்லையப்பா . வந்தோரை வாழ வைத்து ..இருப்போரை ...

கோவில் பிரகாரத்தை சுற்றி வரும்போது , காதலியில் காலில் ஒரு முள் தைத்து விடுகிறது . காதலுக்கு வந்ததே கோபம் . முள்ளை பிடுங்கி சனியன் பிடித்த முள்ளே என்று வைது , தூக்கி வீசுகிறான் காதலன் . இருவருக்கும் திருமணமாகிறது . சில வருடங்களுக்கு பிறகு அதே கோவில் . அதே முள் . கணவன் சொல்கிறான் . சனியனே ..கண் அவிஞ்சா போச்சு . பார்த்து வர வேண்டியதுதானே . எப்படியிருக்கு சனிப்பெயர்ச்சி ? சுகி சிவம் சொன்னது .


ஒரு மீள் கவிதை :


உலக்கையை போட்டு
உள்ளறையில் ஏன்
உட்கார்ந்திருக்கிறாய் அம்மா?

விலக்குடா மகனே

விளங்கவில்லை
யார் வந்து சொன்னார்கள்?

காகம் வந்து
கல்லெடுத்து போடும்
தெரிந்து கொள்வேன்

காகத்துக்கு எப்படி தெரியும்?
யார் சொல்வார்கள்?

அதோ....அந்த
மரக்கிளை

மரக்கிளைக்கு?

அதோ ஓடுதே
அணில் அது சொல்லும்

யார் சொல்வார்
அந்த அணிலுக்கு?

சாமிதான் ராசா
சொல்லும்

அப்ப சாமிக்கு?

அம்மா சற்று யோசித்து
சொன்னாள்..
சாமிக்கு நான் தான்
சொல்வேன்..

தலையை ஆட்டிக்கொண்டேன்
விளங்கினதுக்கு அடையாளமாய்.

Friday, May 28, 2010

மானிட்டர் பக்கங்கள்.........28/05/10




இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய பொய் அல்லது மிகப்பெரிய ஜோக் நம்ம தலைவரின் பேச்சுதான் . அதாவது அண்ணா மறைந்த பின் , அடுத்த முதல்வராக இவரைத்தான் எம்ஜிஆர் முதல் அணைவரும் பரிந்துரை செய்தார்களாம். அட . இதையாவது நம்பித்தொலைக்கலாம். அடுத்து போட்டார் பாருங்கள் ஒரு கோயபல்ஸ் குண்டு . அதுதான் டாப் . இவர் குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் (எல்லாரையும் சேர்த்து ) அதற்கு சம்மதிக்கவில்லையாம். அதிலும் மக்கள் சேவைக்காகவே வாழ்ந்து மறைந்த திரு முரசொலி மாறன் முக்கியமாக சம்மதிக்க வில்லையாம் . தலைவருக்கு வயதாகி விட்டதால் அவர் உண்மையையே பேச வேண்டும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் இந்த மாதிரி அண்டப்புளுகையையாவது கொஞ்சம் தவிர்க்கலாமே தலைவரே .. பேராசை .

அடுத்து எம்ஜிஆரின் உப்பை தின்று வளர்ந்த சத்யா மூவிஸ் முதலாளி வீரப்பன் . இவருக்கும் அந்த வீரப்பனுக்கும் ஒன்றும் பெரிய வித்தியாசங்கள் இருந்து விடப்போவதில்லை. இவரும் மந்திரியாக இருந்தவர் . அதுவும் ஜெயலலிதாவிடம் . மு.க சொல்கிறார் . எம் ஜி ஆர் ஆட்சியில் வீரப்பன் மந்திரியாக இருந்தபோதே என்னுடன் கள்ள தொடர்பு வைத்திருந்தார் என்று. ஆஹா .. அருமை தலைவரே . குஷ்பு கட்சியில் சேர்ந்தவுடன் கள்வொழுக்கம் பற்றி தலைவருக்கு நினைவூட்டியிருப்பாரோ ?


மாஜி மகராணிக்கு கொஞ்சம் புத்தி வந்தாப்ல இருக்கு. யாருக்காவது மனவருத்தம் இருந்தால் தன்னிடம் மனம் விட்டு பேசலாம் என்று சொல்லியிருக்கிறார் . மனம் விட்டு பேசலாம்தான் . ஆனால் எத்தனை நாளைக்குத்தான் மானம் விட்டு பேசுவது என்கிறார்கள் அணி தாவ முடிவெடுத்தவர்கள் . கண் கெட்ட பின் (உதய) சூரிய நமஸ்காரம் .


30 ஆம் தேதியை எதிர் நோக்கியிருக்கிறார் தமிழ்குடிதாங்கி . அன்றுதான் திமுக செயற்குழு கூட்டம் . அன்புமணியின் கோட்டை கழற்றுவதா , வேண்டாமா என்று அன்றுதான் முடிவெடுக்கப் போகிறார்களாம். தலைவரே ..நீங்க என்ன செய்யலைனாலும் பரவாயில்லை . தயவு பண்ணி அந்த கோட்டையும் , சூட்டையும் உருவிடுங்க. உங்களுக்கு புண்ணியமா போகட்டும் .மரம் வெட்டினா பாவம்னு கருடபுராணத்தில சொல்லியிருக்கா?

இன்று திருச்சியில் ஒரு புதிய கட்சி உதயம் ஆகிறது . அதாவது போன மாதம் ஆரம்பிக்கப்பட்ட இந்திய ஜனநாயக கட்சியின் மாநாடாம். 20 லட்சம் பேர் கலந்து கொண்டு திருச்சியை நாறடிக்க இருக்கிறார்கள் என்று பாரிவேந்தர் சொல்லியிருக்கிறார். அவர்தான் நிறுவன தலைவர் . அதாவது எஸ் ஆர் எம் நிறுவனத்தின் தலைவர் . வழக்கம் போல் அரசியல் தூய்மை என்ற உளுத்துப் போன கோஷம்தான் . இந்த கட்சியில் சேர்வதற்கு முன் பாரி நற்பணி இயக்கத்தில் ஒரு வருடம் சமூகப்பணி ஆற்றியிருக்க வேண்டுமாம் . தொலைக்காட்சியிலும், வானொலியிலும் விளம்பரங்கள் தூள் பரத்துகிறார்கள் . சின்ன பிள்ளைகள் ரைம்ஸ் சொல்வது போல் கட்சியின் பெயரை கூவுகிறார்கள். நம்ம தலையெழுத்து. மீண்டும் ஒரு ஜாதிக்கட்சி . (உடையார்களாம் ) . ஏற்கனவே ஒரு கல்வி தந்தை ஏசிஎஸ் முதலியார்களுக்காக ஒரு கட்சி ஆரம்பித்தார் . அரை சீட்டுக்கு கையேந்தி , அரசியலை தூய்மை படுத்த போகிறார்களாம். கல்வி விற்ற காசு . அடிச்சு ஆடுங்கப்பு .

ஊருக்கு இளைச்சவ பிள்ளையார் கோயில் ஆண்டி . இதுக்கு என்ன அர்த்தமாம் ? 92.7 ல் கேட்டது . அதாவது எவ்வளவு குண்டான ஆண்டியும், பிள்ளையார் கோயிலை சுத்தினா இளைச்சிடுவாங்களாம்.

கவிதைப்போட்டி முடிவுகள் என்னவாயிற்று என்று தெரியவில்லை. ஏற்கனவே அக்னி சுட்டெரிக்கிறது. இந்த நேரத்தில் எதற்கு அதை வேறு படித்து என்று நடுவர்கள் விட்டு விட்டார்களோ ? முடிவுகள் வேண்டாம் . அட்லீஸ்ட் நடுவர்கள் யாருன்னாவது அறிவீங்கப்பா . முன்பு பஞ்சாயத்து தேர்தலை ஒட்டி துணுக்குகள் வரும். இப்போது அந்த இடத்தை கவிதை போட்டி முடிவுகள் பிடித்துக்கொண்டு விட்டதோ ? இதை ஒரு இடத்தில் பின்னூட்டியபோது பிரசுரரிக்க வில்லை. அதனால் என்ன ?



நெல் திருட வந்த
சுண்டெலி
உரலுக்கும்
உலக்கைக்கும் இடையில்

வாலில் சுற்றப்பட்ட
பட்டாசு வெடித்து
சரஸ்வதி அம்மணமாய்
கால் நகத்தை தரையில் பிராண்டி
ஆத்திசூடி எழுதியது நாய்

வானவில்லில் ஏழு வர்ணங்கள்
எட்டாவது வர்ணம்
தலைவர் உபயம்
வர்ணாசிரமம்




Monday, April 19, 2010

மானிட்டர் பக்கங்கள்.............19/04/10




கொலையில் நேரடியாக ஈடுபட்ட நளினியையே மன்னிக்கும் மனம் கொண்ட சோனியாவால் பிரபாகரனின் தாயார் மருத்துவ சிகிச்சைக்கு மறுக்கும் மனம் வந்திருக்கும்? இதென்னவோ அதிகாரிகள் மட்டத்தில் செய்திருப்பார்கள் என்று தோன்றுகிறது. கார்கில் யுத்தம் நடந்து கொண்டிருக்கும்போது கூட அப்பல்லோ மருத்துவமனையில் நிறைய பாகிஸ்தானியர்கள் சிகிச்சை பெற்றார்கள். சில பாகிஸ்தான் தலைவர்கள் உள்பட. வரதராஜ பெருமாளுக்கு பாதுகாப்பு. அவர் மகள் நடிக்கும் திரைப்படத்தின் படபிடிப்புக்கும் பாதுகாப்பு. சரி . தலைவரின் மூன்று மணிநேர உண்ணாவிரதம் முடிந்து ஒரு வருடம் ஆகப் போகிறது. எதாவது பாராட்டு விழா உண்டா?


தமிழக மக்களின் நாடிதுடிப்பு என்று விளம்பரப்படுத்துகிறார்கள். ஆக்‌ஷன் செல்லுக்கு சொல்லுங்கள் என்கிறார்கள். அது கூட நிறைய பேர் சொல்ல வேண்டும். எது எப்படியோ வாரம் இரண்டு முறை கல்லா கட்டுகிறார்கள். கொஞ்சம் கணக்கு போட்டுப் பார்த்தால் அவர்கள் சம்பாதிக்கும் பணம் நிச்சயம் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை சுரண்டும் அரசியல்வாதிகளுக்கு குறைந்ததில்லை. செய்திகள் எந்த அடிப்படையில் வருகிறது? சாமியார், சரசம், சல்லாபம் இதெல்லாம்தான் இப்ப செம்ம ஹாட் மச்சி. அப்புறம் பழைய கிளு கிளு சினிமா கிசுகிசுக்கள். மதில் ஏறி குதித்த பூனையின் நேரடி ஒளிபரப்பு. தலைவரின் குடும்பத்தில் நடக்கும் லேட்டஸ்ட் முறைப்பும், விறைப்பும்.

சமீபத்தில் ஒரு சம்பவம் நடந்தது. வேலூரில் அரசு அதிகாரியாக பணிபுரியும் ரங்கராஜன். இந்த ஏப்ரல் ஒன்றாம் தேதி அவருக்கு பதவி உயர்வு. ஆனால் மார்ச் 26ஆம் தேதி ஒரு விபத்தில் சிக்கினார். அது துரதிர்ஷ்டமென்றால், அதில் அவர் உடனே இறக்காதது இன்னும் துரதிர்ஷ்டவசமே. வேலூரில் பிரபலமான பேருந்து நிறுவனம் பாரதி மோட்டார் சர்விஸ். வழக்கம் போல் அதில் அலுவலகம் போகிறார். இடையில் இரண்டு நபர்கள் ஒரு கேனுடன் ஏறுகிறார்கள். இவர் அமர்ந்திருக்கும் இருக்கையின் கீழ் அதை வைக்கிறார்கள். அதற்கு 100ரூ லஞ்சம் கொடுக்கிறார்கள். (அது தினம் நடக்கும் நிகழ்ச்சியாம். எவ்வளவு ஆபத்து !)அது ஒரு கெமிக்கல் கேன். பேருந்தின் குலுங்கலில் அது வெடிக்கிறது. ரெங்கராஜன் மற்றும் சிலர் தீப்பிடித்து எரிகிறார்கள். விபத்து பதிவு செய்யபடுகிறது. ஆனால் சம்பந்தப்பட்ட பேருந்து காவல் நிலையத்துக்கே கொண்டுவரப்படவில்லை.. பணம்..

ரங்கராஜன் இறக்கவில்லை. பிழைக்க வாய்ப்பே இல்லை . ஆனால் எப்போது உயிர் போகும் என்று சொல்ல மருத்துவர்களால் முடியவில்லை. உடம்பெல்லாம் எரிகிறது . தன்னை கொன்றுவிடுமாறு மருத்துவர்களிடம் கெஞ்சுகிறார். அதற்கு சட்டம் அனுமதிக்காது என்கிறார்கள். தினப்பத்திரிக்கையில் ஒரு மூலையில் இந்த செய்திவந்தது. ஜீனியர் விகடனை தொடர்பு கொண்டு இந்த செய்தியை பதிவு செய்ய முடியுமா? என்று கேட்டதற்கு அவர்கள் சொன்னது.

“இது டெய்லி பேப்பருக்கான நியூஸ் ஆச்சே ! என்றார்கள். பிறகு இதில் மேட்டர் இருக்கிறாப்ல தோணுது. வேலூர் நிருபரை தொடர்பு கொள்ளுங்கள் என்றார்கள். அவர் துணை முதல்வர் விசிட்டில் பிஸியாக இருந்தார். ரங்கராஜனும், இன்னும் ஆறு பேர்களும் இறந்து போகும் வரை யாரும் வரவில்லை. பாரதி பேருந்து உரிமையாளரின் பவர் அப்படி என்று சொன்னார்கள். ” சபாஷ். எவனாவது சாமியார் சரசமாடற போட்டோவோ, செய்தியோ கிடைச்சா, அவங்களுக்கு ஸ்கூப்.. இது தினம் அங்கங்ககே நடக்கறதுதானே என்கிறார்கள். ஆனால் ஒரு கிராமத்தில் எதாவது கற்பழிப்பு நடந்தால் உடனே நியூஸ். பெயரை மாற்றி, முகத்தை மறைத்து. அப்புறம் அதற்கு ஃபாலோஅப் வேறு. அதில் ஒரு கிக் இருக்கும் போல்.


சென்னை காவல்துறை சமீபத்தில் ஒருவனை கைது செய்தார்கள். விசாரித்த போதுதான் தெரிந்ததாம். அவன் மீது 1000 வழக்குகள் இருக்கிறதாம். போலிஸ் தரப்பில் அவனை புகழ்ந்து தள்ளி விட்டார்கள். கன்னம் வைப்பதில், சத்தம் வராமல் ஷட்டரை திறப்பதில், சங்கிலி அறுப்பு, பிக்பாக்கெட் இதிலெல்லாம் பார்ட்டி கில்லாடியாம். விட்டால் கமிஷனர் ஆஃபிசில் சிலையே வைப்பார்கள் போல.

சுறா படத்தின் ஆடியோ ரிலீஸ். தொடர்ந்து ட்ரெயிலர் தாக்குதல். விழாவில் பேசிய அத்தனை பேர்களும் சொல்லி வைத்தாற்போல் விஜய் நடிச்சா வெற்றிதான் என்றார்கள். கூடவே ஒருவர் விஷாலையும் சேர்த்துக் கொண்டார். மீண்டும் சன் டிவிக்கு ஒரு வெற்றிப்படம். இந்த முறை வடிவேல் காப்பாற்றி விடுவாரோ என்று பயமாக இருக்கிறது. வழக்கம் போல் பார்த்திபன் தமண்ணாவை ஜொள்ளினார். பவர் கட்டின் போது தமனா வீட்டில் மெழுகுவர்த்தி கூட ஏற்ற வேண்டியிருக்காது என்றார். நடக்கட்டும்..

கலைஞர் டிவியில் தசாவாதாரம். ஜெயலலிதா ஹெலிகாப்டரில் சுனாமி பாதித்த பகுதிகளை பார்வையிடும் காட்சியை கவனமாக தூக்கியிருந்தார்கள். நான் முதல் முறை ஒளிபரப்பியபோது பார்க்கவில்லை. இந்த முறைதான் கவனித்தேன். சீப்பை ஒளித்து வைப்பதில் கில்லாடிகள்.




மொண்ணை கத்தியுடன்
சுயம்வரம் நோக்கி..
காலை பதம்
பார்த்த கூர் கற்களில்
தீட்டி,தீட்டி
கத்தி நீண்டு வாளானது.
"கதை" போல் இருந்த
திண்ணை தடியன்
வில் போலானான்.
அவையோருக்கு ஆச்சர்யம்
அவனா “இவன்” என்று.
அமைதியாய் புன்னகைத்தேன்..
நான் தானே“அவனாயிருந்தேன்”










Wednesday, March 31, 2010

மானிட்டர் பக்கங்கள்........31/03/10


புரட்சித்தலைவர் மறைவுக்கு பின் ஜானகி அம்மையார் கொஞ்ச நாள் கோட்டையில் கொலுவீற்றிருந்தார். எந்த புண்ணியவான் மதியூக மந்திரியோ கொடுத்த ஆலோசனையின் படி அம்மையார் கொண்டு வந்த புரட்சி திட்டம்தான் இலவச பல்பொடி திட்டம் . பல்பொடி கொடுத்தது பெரிய சங்கதியில்லை. கூடவே ஒரு பிட் நோட்டீஸ். அதை நான் படித்திருக்கிறேன். கைவசம் இப்போது இல்லை. அதில் குறிப்பிடப்பட்டிருந்தவை .

1. பல்பொடியை இடது உள்ளங்கையில் சிறிதளவு எடுத்துக் கொள்ளவும் .

2.வலது கை ஆள் காட்டி விரலால் தொட்டு பற்களில் வைத்து ,மேலும்,கீழும் தேய்க்கவும்.

3. பின், வாயினுள் விரலை விட்டு மேல் மற்றும் கீழ் பற்களை சுத்தம் செய்யவும்.

4.நீரைக் கொண்டு நன்றாக கொப்பளித்து வாயை சுத்தம் செய்து கொள்ளவும்.

நல்லவேளை ! புண்ணியவதி ஆட்சி பொசுக்குன்னு முடிஞ்சு போச்சு. இல்லைன்னா என்னவெல்லாம் கொடுத்திருப்பாங்களோ ?

பல்பொடின்னவுடனே தோணுது ! கோல்கேட்டின் விளம்பரம். வீட்டுக்கே வந்து பல் தேய்ச்சு விட்ருவாங்க போலிருக்கு. அதுவும் திரிஷா வந்தால் !! ஆட்டோமேட்டிக்கா “ஆ” காமிச்சிடலாம் . நம்ம உடற ஜொல்லுலேயே வாயும் கொப்பளிச்சுக்கலாம். ஆமாம் ! உங்க டூத்பேஸ்ட்ல உப்பு இருக்கா? மானங்கெட்டவனே, சொரணை கெட்டவனே ! உப்பு போட்டுத்தான் பல் தேய்க்கிறயா ?

ஜெயா ப்ளஸ் தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சி . ஒரு ஜாதகத்தின் குளோசப் . அதில் இருக்கும் கட்டங்களை காட்டி ஒரு டுபாக்கூர் ஜோசியர் “சனி இங்க இருக்கு. சுக்கிரன் இங்கதான் சுத்தறான்னு” பயம் காட்டிக் கொண்டிருந்தார். கீழே ஸ்கிரோலிங்கில் அதிமுக பெண்ணாகரத்தில் டெபாசிட் இழந்து கொண்டிருந்தது.

போன முறையை விட பாமக அதிக ஓட்டுக்கள் பெற்றது என்பதை சொல்லி இன்னும் மக்கள் மனதில் நாங்கள் இருக்கிறோம் என்று ஜம்பமடித்துக் கொண்டிருந்தார் தமிழ்குடிதாங்கி. கொஞ்சம் “வ” ட்டாரத்தை விட்டு வெளியில் வாங்கய்யா . உங்க பவிஷு தெரியும்.

மீண்டும் அங்காடி தெரு. எழுத்தாளர்களுக்கான திரையிடலில் பதிவர்களுக்கும் அழைப்பு விடுத்திருந்தார் வசந்தபாலன். அகநாழிகை வாசு, அப்துல்லா, பட்டர்ஃப்ளை சூர்யா,ஷங்கர், உண்மைத்தமிழன், கேபிள் சங்கர் அனைவரும் சென்றிருந்தோம். இரண்டாவது முறை பார்க்கையில் படத்தின் நீளம் பொருட்டாக தெரியவில்லை. அநேகமாக அதிகளவு உலகப்படங்களை நான் பார்க்காததால் இருக்கலாம். கும்பமேளாவில் கோட்டு,சூட்டு போட்டுக் கொண்டால் வித்தியாசமாக இருக்கும்தான். அதைப்போல் முன் தீர்மானத்துடன் படத்தை பார்த்து விமர்சனம் எழுதுவதும் என்று நினைக்கிறேன்.


ஒரு வானொலி விளம்பரம் . என் மகள் இன் ஜீனியரிங் படிக்க ஆசைப்படுகிறாள். பணத்துக்கு என்ன செய்வது என்று கவலை. அப்போதுதான் “பாரத் இன் ஜீனியரிங் காலேஜை பற்றி கேள்விப்பட்டேன். நுழைவுத் தேர்வு எழுதினால் 50 % ஸ்காலர்ஷிப் கொடுக்கிறார்கள். பாரத் இன் ஜீனியரிங் கல்லூரிக்கு நன்றி.

மேற்படி கல்லூரி ஆல் இந்தியா ஐஸ் வைப்போர் சங்கத்தலைவரும், பாராட்டு விழா செம்மலுமான திரு . ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமானது. நன்கொடை மேட்டரில் போன வருடம் டைம்ஸ் ஆஃப் இந்தியா அவர்களை தோலுரித்ததும் நினைவிருக்கலாம். ஆமாம்..அந்த கேஸ் என்னாவாச்சு? வள்ளுவர் கோட்டத்துக்கு அடியில் புதைத்து விட்டார்கள் !

வலது காலை முன்னால் வைக்கவும். இடது உள்ளங்கையை விரித்துக் கொள்ளவும். வலது உள்ளங்கையை குவித்துக் கொள்ளவும். மெல்ல இரண்டு கைகளையும் பின்னோக்கி கொண்டு போய், மீண்டும் முன் பக்கம் கொண்டு வரவும் . வலது கையால் இடது கையில் குத்தவும்.மெதுவாக தொடங்கி, படிப்படியாக வேகத்தை அதிகரிக்கவும். பின் இடது கால். வலது கை.. செய்து பாருங்கள். டென்ஷன் குறைந்து ரிலாக்ஸ்டாக இருக்கும். வாசு ஒரு முறை என்னை காத்திருக்க செயத போது இதைத்தான் செய்தேன். பக்கத்திலிருந்த ஒருவர் கேட்டார். “சூப்பர் . வேறு என்ன வித்தைகள்ளாம் தெரியும்”

“ம்ம்.. உக்கார்ந்து கிட்டேயும் போவேன். நின்றுக் கொண்டேயும் போவேன்” என்றேன். நாம் பேருந்தை சொன்னேன். ஆனால் அவர் வேறு அர்த்தம் எடுத்துக் கொண்டார் என்று நினைக்கிறேன். இப்பல்லாம் இப்படித்தான் நடக்குது.


டிஸ்கி கவுஜை :

புரிதலுக்கான அர்த்தம் ஒன்றுதான்
நேற்றும் ,இன்றும் ,நாளையும்
புரிவதும் பின் சேர்வதும்
பின் புரிவதும் பிரிவதும்
சரிதானே...