Friday, January 15, 2010

ஆயிரத்தில் ஒருவன்...விமர்சனமல்ல


இன்ஷியல் கொடுக்காத அப்பனும், சுய இன்பத்துக்கு கூட லாயக்கில்லாத...ன்னியும், பாதி பால் கொடுத்த நிலையில் தன் முலையை கள்ளக் காதலுக்கு சப்ப கொடுத்த அன்னையும் என்று எழுதுவதுதான் பின் நவீனத்துவம் என்றால் இந்த விமர்சனமும் அப்படித்தான்.

முதலில் செல்வா! நீங்கள் ஆண்ட்ரியாவிடம் என்ன கண்டீர்கள்? அவள் கண்ணாடி பிரேம் மேல் உங்களுக்கு பிரேமையா? ரியலி இட் இஸ் எக்ஸ்சலண்ட். அப்புறம் ரீமா ! நேற்று என் மனைவியிடம் ரீமாவிடம் பிரபோஸ் செய்ய போகிறேன் என்று சொன்னேன். “உன்” மூஞ்சியை எனக்கு பிடிக்கலன்னு எத்தனையோ வாட்டி சொல்லிட்டேன். ஆனா ரீமா சொல்ல மாட்டா. அவளுக்கு தமிழில் சொல்லத் தெரியாது. ரீமா ஆயிரத்தில் ஒருத்தி. அவள் உடல் மொழியும், உடலின் மொழியும், மொழியினாலான அவள் உடலும், அவள் இல்லை என்றால் என் சங்கை நானே அறுத்து கொள்ளும் நிலைக்கு ஆளாக்குகிறது.

கொஞ்சம் சினிமா! ஐஸ்வர்யாராய் மேல் நான் காதல் கொள்வது அல்லது காமூறுவது என் தனிப்பட்ட ஆசை. அதை அவள் எப்படி உள்வாங்குகிறாள் என்பதுதான் சிதம்பர ரகசியம். ஆயிரத்தில் ஒருவன் படமும் அப்படித்தான். அந்த கதையை உள்ளெடுத்துக் கொள்ளும் பக்குவம் நமக்கிருக்கிறதா என்பது ஒரு கேள்விக்குறிதான். சில காட்சிகளில் செல்வாவாவை புணரலாமா என்று எனக்கு தோன்றியது.

ராம்ஜி! என் நெருக்கமான தோழன். நான்கு பெக்குகளுக்கு பிறகுதான் பெயரையே சொல்லுவார். கொஞ்சம் ரிசர்வர்டு டைப். அவரின் வார்த்தைகள் நெருங்கியவர்களுக்கு மட்டுமே ரிசர்வ் செய்யபட்டது. ஆயிரத்தில் ஒருவனில் அவரின் கலர் டோன் பி.சி. ஸ்ரீராமுக்கு கொஞ்சம் பெருமையும், நிறைய பொறாமையும் ஏற்படுத்தலாம். ராயல் சல்யூட் ராம்ஜி. ரீமாவை எத்தனை முறை உங்கள் கண்கள் கற்பழித்திருக்கும் ?(உடல் சேர்க்கைளை நான் நம்புவதில்லை)


கோலாபாஸ்கர் ! உங்கள் கத்திரியை கொஞ்சம் இரவல் கொடுங்கள். என் மீசையை திருத்திக்கொள்ள. திரும்ப தரும்போது சாணை பிடித்து தருகிறேன்.

ஜி.வி. பிரகாஷ். பிண்ணனி இசையில் இன்னும் கவனம் தேவை. நிச்சயம் அடுத்த விமர்சனத்தில் இந்த வரிகளுக்கு தேவையிருக்காது.


செல்வா ! திரைக்கதையில் கொஞ்சம் குழம்பியிருக்கிறீர்கள். வெளியிலிருந்து எச்சில் துப்புவது எளிது. ஆனாலும் சொல்கிறேன். சரித்திர பிழை நிறைய இருக்கிறது. சோழன் பாண்டியன் விவகாரத்தில். வியாபாரத்திற்காக முள்வலி முகாமை இணைத்தீர்களா? எக்ஸ்டசியாய் காமத்தின் வெளிப்பாடு காட்சி. ரீமாவிற்கும், எங்கள் ரா.பார்த்திபனுக்கும் இடையே நடக்கும் “என் வாளும் ,உன் விழியும்” மன்னிக்க “என் குழியும்” சந்தித்தால் வாய் வழியே வெறும் பாராட்டு பொருத்தமாயிருக்காது. அடுத்த முறை உங்களை சந்திக்கும் போது கால் சட்டையை கழட்ட நேரலாம்.

முதல் முறை சந்திக்கும்போது சிலரின் மேல் வெறுப்பு வரும். ஆனால் அதைப் பற்றியே யோசிக்கவும் வைக்கும். அதுவே காதலாகி கசிந்துருகும். ஆயிரத்தில் ஒருவனும் அப்படித்தான். என் குடியின் அளவை இந்த படம் அதிகபடுத்தி விட்டது. மீண்டும் ராம்ஜியின் ஷோ இருக்கிறது. அங்கும், மீண்டும் தியேட்டரிலும் பார்க்க ஆசை.

ரீமா! சத்யம் தியேட்டரில் தவறவிட்ட ஒரு பொருளில்லாத பொருள். நேற்றிலிருந்து லப் டப் கேட்கவேயில்லை. சைலண்ட் மோடில் இருக்கலாம். அந்த கறுப்பு ஜாக்கெட்டில் பத்திரப் படுத்தி வைத்துக் கொள்ளுங்கள். நானே கை விட்டு எடுத்துக் கொள்கிறேன்.

38 comments:

butterfly Surya said...

உங்கள் பின் நவீனத்துவ விமர்சனம் பார்க்க தூண்டிவிட்டது. (படத்தை தான் சொன்னேன்)

அதகளம். அமர்களம்.

செல்வாவின் வித்தியாசமான முயற்ச்சிக்கு பாராட்டுகள். ராம்ஜிக்கு வாழ்த்துகள்.

Paleo God said...

ஒரு படம் பார்த்து வந்த பாதிப்பை அப்படியே அள்ளி தந்துட்டீங்க...சில விஷயங்களில் மெனெக்கெடும்போது எல்லாவற்றையும் ஃப்ரேமில் கொண்டுவரும் அளவுக்கு இங்கு இன்னும் எவ்வளவு நாள் ஆகுமோ..??

குப்பன்.யாஹூ said...

nice review, I think this cinema is affected all the audience

CS. Mohan Kumar said...

//கோலாபாஸ்கர் ! உங்கள் கத்திரியை கொஞ்சம் இரவல் கொடுங்கள். என் மீசையை திருத்திக்கொள்ள. திரும்ப தரும்போது சாணை பிடித்து தருகிறேன்.// ஹா ஹா கலக்கல் நானும் கூட பார்த்துட்டு விமர்சனம் எழுதிருக்கேன் நண்பா

ரவி said...

தூள் டக்கர் மாமா.

வினோத் கெளதம் said...

தல என்னா இது பயங்கரமா இருக்கு...
But Interesting review..:)

Raju said...

அருமைல...!

பா.ராஜாராம் said...

ஆக்ரோசமான விமர்சனம்.

//மீண்டும் ராம்ஜியின் ஷோ இருக்கிறது. அங்கும், மீண்டும் தியேட்டரிலும் பார்க்க ஆசை.//

intha otrai variyil irukku pola muzhu vimarsanamum ena edutthuk konden.poga,antha karuppu jaakkattuk kaarikkaagavumthaan padam paarkkanum..

(sory..translation not workking)

சங்கர் said...

என்னோட உங்களையும், மாலை போட்டு, மலைக்கு கூட்டிட்டு போயிரலாமான்னு யோசிச்சிக்கிட்டுருக்கேன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

????!!!! :-)))

vasu balaji said...

சவுண்டான விமரிசனம்.:))

Unknown said...

இதுக்கு பேரு தான் பின் நவீனத்துவமா??

உணர்ச்சிபூர்வமான(என்ன உணர்ச்சின்னு கேட்ககூடாது) விமர்சனம்..

தர்ஷன் said...

சூப்பர் விமர்சனம்
சாருவின் அடியாள் என்பதை நிருபித்து விட்டீர்கள். உங்கள் விமர்சனத்தோடு முற்றாக உடன்படுகிறேன்

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

வித்தியாசமான விமர்சனமா இருக்கே. படத்தைக் கண்டிப்பாகப் பார்க்கப் போகிறேன்.

Prathap Kumar S. said...

தாறுமாறான கலக்கல் விமர்சனம்.

கார்த்திகைப் பாண்டியன் said...

பின்நவீனத்துவம் தலைவிரித்து தாண்டவம் ஆடித் திரிகிறது.. கோலா பாஸ்கரிடம் வாங்கும் கத்திரியைக் கொஞ்சம் என்னிடம் தாங்க தல.. இந்த இடுகைக்கும் தேவைப்படுது... யூஸ் பண்ணிக்கிறேன்...

Beski said...

இது விமர்சனமே அல்ல...
இன்றுதான் கிளம்புகிறேன்... ரீமாவைப் பார்க்க...

அண்ணாமலையான் said...

ஆன்களுக்கு பிடித்த மாதிரி எழுதி கலக்கீட்டீங்க...(உங்களுக்கு பிடிச்சதத்தான்)

Kumky said...

தலைவரே.,
கொஞ்சமாச்சும் மனசாட்சியோட விமர்சனம் போடனும்..

பைத்தியக்காரப்பயலுவ....

மூன்று ஆண்டுகள் மயிரை பிடுங்கியது இதற்காகத்தானா...?

நல்லபடி வளர்ந்திருக்கவேண்டிய கார்த்தி என்கிற நடிகனின் கேரியரை நாசம் பன்னியது எதற்காக..?

சரித்திரத்தின் உண்மைகள் எங்கே..?
இவர்கள் பூ சுற்றுவது எங்கே...?

எந்தக்காலத்தில் சோழ மன்னர்கள் வியட்நாமுக்கு போனார்கள்..?
கிடக்கட்டும்.....

எங்கேயாவது ஒரு மயிரளவிற்காவது லாஜிக் உண்டா...?

செல்வராகவன் உடனடியாக ஒரு நல்ல மன நல மருத்துவரை பார்க்க வேண்டியது இந்த நாட்டிற்க்கு நல்லது....

அது போலவே கண்மூடித்தனமாக விமர்சனம் எழுதும் ப்ளாகர் புன்னியவான்களும்....

இதை விட வன்முறையாக நிச்சயம் யாராலும் படம் எடுத்து கிழிக்க முடியாது என்பது மட்டுமே அந்த பைத்தியத்தின் சாதனை....

கொடுமை....

ரீமாசென்னின் உடல் மொழி மட்டுமே படத்தை தூக்கி நிறுத்திவிடாது என்பது எல்லோருக்குமே தெரியும் படம் பார்த்த பின்பு...

சென்சார் பொர்டுனுடைய சாவை பாராட்டியே ஆக வேண்டும்....

கடுமையான பின்னூட்டத்திற்க்கு மன்னிக்க....

எவ்வளவு முட்டாள்கள் மீதான நம்பிக்கையில் இவன் 7ழிலிருந்து35கோ வரை மூட்டை ஏற்றியிருப்பான் என நினைக்கையில்.....

மைனர் குஞ்சைசுட்டிருக்க வேண்டும்.

கலையரசன் said...

ஜி... அடுத்த முறை உங்களை சந்திக்கும் போது கால் சட்டையை கழட்ட நேரலாம்!!
:-)

வால்பையன் said...

இதுக்காகவே பார்க்கலாம்!

பாலா said...

ஹைய்யோ......

தண்டோரா.... செல்வாவை விடுங்க.

நான் உங்களைப் பார்த்தா.. இந்த பதிவுக்கே... கட்டிப் பிடிச்சி முத்தம் கொடுக்கப் போறேன்.

அடிச்சா.. இப்படி தண்டோரா அடிக்கணும். நமக்கு வாய்க்க மாட்டேங்குதே..!!!

---

Romeoboy said...

ஹ்ம்ம் .. அடிச்சி விளாசுங்க.

Beski said...

கவுத்திப்புட்டாங்கண்ணே,
ரீமா சீனெல்லாம் கட்டு.
படம் நல்லாத்தான் இருக்கு.

சோழ பாண்டிய சரித்திரத்திற்கு சம்பந்தம் இல்லையென்று முதலிலேயே சொல்லிவிடுகிறார்களே, அப்புறம் எதற்கு உண்மை வரலாற்றோடு லாஜிக்கெல்லாம் பார்க்கிறீர்கள்? லேட்டா போனீங்களோ என்னமோ?

ஜெட்லி... said...

//நான் உங்களைப் பார்த்தா.. இந்த பதிவுக்கே... கட்டிப் பிடிச்சி முத்தம் கொடுக்கப் போறேன்.
//

ஐயோயோ...என்னாது
இது பாலா அண்ணா??

மீன்துள்ளியான் said...

அண்ணே விமர்சனம் சூப்பர் ..

//என்னோட உங்களையும், மாலை போட்டு, மலைக்கு கூட்டிட்டு போயிரலாமான்னு யோசிச்சிக்கிட்டுருக்கேன்//

இது வேறயா சங்கர் ::)

எறும்பு said...

கலக்கலா எழுதி இருக்கீங்க....

எறும்பு said...

//நான் உங்களைப் பார்த்தா.. இந்த பதிவுக்கே... கட்டிப் பிடிச்சி முத்தம் கொடுக்கப் போறேன்.//

கலையரசன் said...

//ஜி... அடுத்த முறை உங்களை சந்திக்கும் போது கால் சட்டையை கழட்ட நேரலாம்!!//

இப்படியான விமர்சனம் மூலம் வெறி ஏத்தி விட்டுடீங்க...

நல்ல பின் நவீனத்துவம்

:)

யுவகிருஷ்ணா said...

தமிழில் படித்த விமர்சனங்களில் இதுமட்டுமே தேறுகிறது. அண்ணன் உன்னா தான்னாவின் விமர்சனத்தை ஆவலோடு எதிர்பார்த்தேன். படம் மூணேகால் மணிநேரம் என்பதால் திரைக்கதை வசனத்தை டைப் செய்ய முப்பது மணி நேரம் தேவைப்படும் என்பதால் லேட் ஆகிறது போலிருக்கிறது!

மரா said...

நல்லா எழுதியிருக்கிறீங்க.கிளம்பிட்டேன்.
படம் பார்க்க.
// அந்த கதையை உள்ளெடுத்துக் கொள்ளும் பக்குவம் நமக்கிருக்கிறதா என்பது ஒரு கேள்விக்குறிதான்.//
இதையேதான் என் நண்பனும் சொன்னான்.வித்தியாச முயற்சியாயின் கண்டிப்பாக பாராட்டவேண்டும்.

மரா said...

@ சங்கர்
தண்டோராண்ணே போட்டுக் கழட்டிட்டாருண்ணே இடையில்....மாலை தான். :)

உண்மைத்தமிழன் said...

அண்ணே..

உணர்ச்சிவசப்படாதண்ணே..!

கொஞ்சம் அடக்கமா இருண்ணே..!

மூவாயிரம் பேரை கட்டி மேய்ச்சிருக்காங்கன்றதுக்காக சினிமா அடுத்தக் கட்டத்துக்கு நகர்த்திருக்காருன்னு சொல்லாதீங்க..!

வேலை வாங்கியது.. வேலை கொடுத்தது.. ஏழரை லட்சம் அடியில் படமெடுத்தது எல்லாம் சாதனை அல்ல.. சோதனை..!

படைப்பில் தரம் இருக்கணும்..!

எது தரம்.. எவ்வளவு தரம் என்பதில்தான் அத்தனை மனிதர்களுக்கும் விதவிதமான நம்பிக்கைகள் இருப்பதால் குழப்பம் கூடத்தான் செய்கிறது..!

பை தி பை..

வராத தம்பியொருத்தர் வந்திருந்து என்னை வம்புக்கு இழுத்திருப்பதால் நான் அந்தப் படத்தை பார்த்தே ஆக வேண்டும்..!

டிக்கெட் ப்ளீஸ்..!!!

நர்சிம் said...

//முதல் முறை சந்திக்கும்போது சிலரின் மேல் வெறுப்பு வரும். ஆனால் அதைப் பற்றியே யோசிக்கவும் வைக்கும். அதுவே காதலாகி கசிந்துருகும்.//

அருமை

பெசொவி said...

படம் பார்த்துப் "பிடிச்சிருக்கு"ன்னு நினைக்கிறேன். அண்ணனுக்கு ஒரு கட்டு வேப்பிலை பார்சல்ல்ல்லல்ல்ல்ல்!

Bruno said...

கும்க்கி பாஸ்
:)

(நான் இதுவரை படம் பார்க்க வில்லை)

Unknown said...

//சரித்திர பிழை நிறைய இருக்கிறது. சோழன் பாண்டியன் விவகாரத்தில். //

இது புனைவு தானே அண்ணே..., TROY படத்துல வரலாற எடுக்குறோம் அப்டின்னு சொல்லிட்டு அப்புடியே மாத்தி எடுத்து இருப்பாங்க அதை யாரும் ஒன்னும் சொல்லலையே...,
அப்புறம் படம் கிளாச்சிக் எல்லாம் இல்லை.., மசாலா படமாகவே என் கண்ணுக்கு தெரிகிறது...,

மாலோலன் said...

Mr Thandora
I read rugularly blog rgularly and enjoyed a lot till Today! its semms to be the movie is rubbish as per your view.But your review ..the word you chossed ,it looks like you want come down to charu and suguna level?
If am wrong i am sorry

Maruthiah V said...

//செல்வராகவன் உடனடியாக ஒரு நல்ல மன நல மருத்துவரை பார்க்க வேண்டியது இந்த நாட்டிற்க்கு நல்லது....

ரிப்பிட்டே !!!!!!