Monday, January 18, 2010

”நீ”


நீ என்ற சொல்லை
எப்போது முதலில்
கேட்டோமென்று
நினைவிருக்கிறதா?

நீயுமா என்றே
அடிக்கடி கேட்கப்படுகிறோம்

உரிமைகள் நீ என்று
அழைக்கும் போது
ஏற்றுக் கொள்கிறோம்

முரண்களில்
தே நீ சினமூட்டுகிறது

நெருக்கத்தின் வெளிப்பாடாகவும்
வெறுப்பின் உமிழ்தலாகவும்
”நீ” அடையாளப்படுத்தப்படுகிறது


நான் மற்றும் நாமுக்கு
நீ என்பது
ஆரம்ப எழுத்தாகவே...


எல்லோரும் நிச்சயம் கேட்பீர்கள்.
நீ என்ன சொல்ல வருகிறாய் ?
நான் கேட்கிறேன்.
நீ என்ன புரிந்து கொண்டாய் என்று!!




26 comments:

எறும்பு said...

Present sir

எறும்பு said...

//நான் கேட்கிறேன்.
நீ என்ன புரிந்து கொண்டாய் என்று!!//

ஒன்னும் புரியலை... அதென்னமோ மல்லாக்க படுத்து யோசிச்சும் ஒரு கவுஜ கூட புரிய மாட்டேங்குது..
:(

தராசு said...

உள்ளேன் ஐயா

நர்சிம் said...

நீ’ங்கலாக நீ’ங்களுமாவாக..

க.பாலாசி said...

சரிங்க தலைவரே...

Ashok D said...

அப்பவே சொன்னேன் நகுலன் புக்கெல்லாம் படிக்காதிங்கன்னு.. கேட்டீங்களா

உண்மைத்தமிழன் said...

ஏண்ணே..

நைட் "அடிச்சது" இன்னும் இறங்கலையா..?

Paleo God said...

நன்றி...

"”நீ”"

கடைசி வரை வந்ததுக்கு.

புரியிது..::))

Kumky said...

உள்ளேன் அய்யா..

sathishsangkavi.blogspot.com said...

தலை நீங்களூமா.....?

நேசமித்ரன் said...

:)

நல்லா இருக்குண்ணே

//நீயுமா என்றே
அடிக்கடி கேட்கப்படுகிறோம்//

class

அண்ணாமலையான் said...

ரை ரைட்....

Pradeep said...

good one

Jackiesekar said...

நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீயா கமலஹாசன் படம் அதுக்கு இன்னா இப்ப???

வினோத் கெளதம் said...

வர வர ஒரு மார்கமா தான் எழுதுறிங்க..:)

butterfly Surya said...

ஒ.. அந்த நீ.. யா..??

பாலா said...

எழவு எது எழுதினாலும் ஓட்டுப் போடுறாங்கய்யா உங்களுக்கு.

butterfly Surya said...

பாலா. நன்றி.

மறந்திட்டேன்..

போட்டாச்சு..

butterfly Surya said...

தண்டோராவுக்கு.. நீதான் நித்தம் போன் போடுறியாமே..??

R.Gopi said...

”நீ” எப்போதும் இதே போல் எழுதி கொண்டிரு.... படிக்க “நாம்” இருக்க என்ன கவலை உனக்கு?

R.Gopi said...

//நான் கேட்கிறேன்.
நீ என்ன புரிந்து கொண்டாய் என்று!!//

--------

ஏன் இப்படி கேட்கிறீர்கள்.... நீங்கள் எழுதும் எதுவும் எனக்கு எதுவும் புரியாது என்ற நினைப்பா உங்களுக்கு... இருந்தாலும் உங்களுக்கு ஒரு உண்மை சொல்கிறேன்... எனக்கு சத்தியமாக ஒன்றுமே புரியவில்லை..

Cable சங்கர் said...

என்னய்யா நீ?
பெரிய கவிஞனா நீ?
நீ சொல்வது பலருக்கு புரிவதில்லை
புரிந்தால் நீ சொல்வது உணர்வதில்லை
எல்லோரும் நீ சரியில்லை எனும் போதும்
நீ ஆமாம் என்று ஒத்துக் கொள்வதால்
நீ மனுஷன்யா..

Jerry Eshananda said...

"நீ" ளந்தான்.[கவிதைய சொன்னேன்]

Romeoboy said...

\\எல்லோரும் நிச்சயம் கேட்பீர்கள்.
நீ என்ன சொல்ல வருகிறாய் ?
நான் கேட்கிறேன்.
நீ என்ன புரிந்து கொண்டாய் என்று!!//

நான் கேட்கிறேன்.. என்னதான் தலைவரே சொல்லவரிங்க ???

Ashok D said...

//Cable Sankar said...

என்னய்யா நீ?
பெரிய கவிஞனா நீ?
நீ சொல்வது பலருக்கு புரிவதில்லை
புரிந்தால் நீ சொல்வது உணர்வதில்லை
எல்லோரும் நீ சரியில்லை எனும் போதும்
நீ ஆமாம் என்று ஒத்துக் கொள்வதால்
நீ மனுஷன்யா..//

கடைசில.. கேபிள் அங்கிள் கவிதை எழுதிட்டாரே? :)

Beski said...

நீங்க நீங்க...