Tuesday, January 12, 2010

நான்


எழுத்துக்களை கலைத்துப் போட்டு
வார்த்தைகளை வார்க்கும்
சிறுபிள்ளை விளையாட்டை
திரும்ப ஆடும் ஆசை

இக்கணம் தோன்றிய
அத்தனையும் இங்கு
தனித்தனி எழுத்துக்களாய்தான்

இதுவரையிலான நிகழ்வுகளிலிருந்து
சில எழுத்துக்கள்
சிதறி கிடந்தது

பொருத்தமான வார்த்தைக்கு
கொஞ்சம் மெனக்கெடத்தான்
வேண்டியிருந்தது

இறுதியில் எஞ்சிய ஐந்து வார்த்தைகள்

4.திமிர்
1.ஆணவம்
3.அகம்பாவம்
2.தற்பெருமை
5.நான்

இரண்டெழுத்தில் ஒரு
வார்த்தையை

“நான்” தேர்ந்தெடுத்தேன்.

40 comments:

க.பாலாசி said...

நல்ல கவிதை... அருமை...

கே.என்.சிவராமன் said...

அன்பின் தண்டோரா,

வெகு நுட்பமான கவிதை.

கொஞ்சம் எடிட் செய்திருந்தால் இன்னும் அழுத்தமாக இருந்திருக்கும்.

தோழமையுடன்
பைத்தியக்காரன்

சங்கர் said...

மானிட்டர் பக்கங்களின் தொடர்ச்சியோ ?

sathishsangkavi.blogspot.com said...

தலை கொஞ்சம் வித்தியாசமான, அழகான கவிதை

உங்களுக்கும் உமது குடும்பத்தாருக்கும் எனது இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...

நர்சிம் said...

நல்லா இருக்கு ஜி

கண்மணி/kanmani said...

Really nice

Impressive

ஆரூரன் விசுவநாதன் said...

nice one...keep it up

இராஜ ப்ரியன் said...

good one ........ sir

பெசொவி said...

கவிதை அருமை.
(என்ன ஒரு ஒற்றுமை......தற்பெருமை பற்றி இன்று காலைதான் ஒரு பதிவு எழுதி இருக்கிறேன்)

மாதவராஜ் said...

ரசித்தேன்....

கலையரசன் said...

"நான்" "நீ" தேர்ந்தெடுப்பேன்..

vasu balaji said...

பிரமாதம் ஜி.

தேவன் மாயம் said...

கவிதை அருமை!!

தேவன் மாயம் said...

சிக்கலில்லாத நூல் போல் எளிய வரிகள்!!

தேவன் மாயம் said...

எப்போது புத்தக வெளியீடு?

தராசு said...

மூன்றெழுத்தில் ஒரு வார்த்தையை தேர்ந்தெடுத்தேன்.

"அருமை".

T.V.ராதாகிருஷ்ணன் said...

அருமை

அண்ணாமலையான் said...

நல்லாருக்கு . வாழ்த்துக்கள்...

shortfilmindia.com said...

கவிதை நல்லாருக்கு.. :))

Paleo God said...

திரும்ப ’ஆடும்’ ’ஆசை’ ’நான்’ என்பதையே எப்போதும் தேர்ந்தெடுக்கும்.::)

Ashok D said...

ஒ.. இதுக்கு பேர் தான் தன்னிலைவிளக்கமோ, நன்று

உண்மைத்தமிழன் said...

மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும். அது முடிந்த பின்னால் என் பேச்சிருக்கும். கடமை.. அது கடமை..!!!

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

//கொஞ்சம் எடிட் செய்திருந்தால் இன்னும் அழுத்தமாக இருந்திருக்கும்.//

சரிதான்.

RADAAN said...

பிளாக் எழுதுபவர்களுக்கு ரடான் மீடியா ஒர்க்ஸ் நிறுவனத்தின் பல்வேறு வாய்ப்புக்கள்...
எங்கள் வலைத்தளத்தில் உங்கள் பதிவுகளை பகிர்ந்து கொள்ளுங்கள்...
www.radaan.tv

http://radaan.tv/Creative/DisplayCreativeCorner.aspx

butterfly Surya said...

கவிதை நன்று.

நான் நீ என்று சொனால் உதடுகள் கூட ஒட்டாது. நாம் என்று சொன்னால் தான் ஒட்டும்.

ஜெட்லி... said...

//நான் நீ என்று சொனால் உதடுகள் கூட ஒட்டாது. நாம் என்று சொன்னால் தான் ஒட்டும்.
//

அது பழசு தலைவரே....

அசின் த்ரிஷா என்றால் உதடுகள் ஒட்டாது
நமீதா மாளவிகா என்றால் உதடுகள் ஓட்டும்......

பித்தன் said...

anne allitteenga

Mahesh said...

அருமை மணிஜி.....

பாலா said...

///நாம் என்று சொன்னால் தான் ஒட்டும்.///

இதனால்.. கிடைக்கும்.. பலன் என்னவோ குருவே? :)

அன்புடன் அருணா said...

அட!நல்லாருக்கு!

பா.ராஜாராம் said...

மிக அருமை மணிஜி!

மரா said...

அடடா இது கவித...எப்படி இப்படி..?
தோள்ல கெடக்கா இன்னமும்?

சுசி said...

நல்லாருக்குங்க..

butterfly Surya said...

கடமையை செய்.. பலனை எதிர்பார்க்காதே..

butterfly Surya said...

அதையே அண்ணன் உ.த முன்னரே சொல்லிட்டார்.

butterfly Surya said...

ஜெட்லி... நீங்க தான் ரியல் யூத்து..

ARV Loshan said...

அருமை..

கலகலப்ரியா said...

:).. nice 1

R.Gopi said...

நான் என்று சொன்னால் உதடுகள் ஒட்டாது... நாம் என்று சொன்னால் உதடுகள் ஒட்டும்....

யாரோ ஒரு மூதறிஞர், போதையில் இல்லாதபோது சொன்னது....

மணிஜி said...

பாராட்டிய நல்ல உள்ளங்களுக்கு மிக்க நன்றி..