Thursday, July 2, 2009

எக்ஸ்ட்ரா லார்ஜ் ஜட்டியும்....எலாஸ்டிக் எழுத்துக்களும்...



”புநகோ” என்றால் என்னவென்று தெரியுமா உங்களுக்கு?எழுத்துக்களை தனித்தனியா பிரித்தும், விரித்தும் அர்த்தம் எடுத்துக்கொள்ளலாம்..ஆனால் உண்மையில் ”புநகோ” மொசாம்பிக் மொழியில் வெளிவந்த ஒரு வித இலக்கியம் ..கிட்டதட்ட 3000 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து இப்போது சிதைந்து போகும் அபாயத்தில் இருக்கும் ஒரு பரிதாப வஸ்து..

இரண்டு வாசல் இருக்கும் ஒரு வீடு..முன் வழி மற்றும் பின் வழி..முன் புறம் நுழைந்தால் பின் புறமும் வெளியேறலாம்..ஆனால் பின் புறம்??அது இலக்கணம் மீறும் விதி என்று வகுக்கப்பட்டுள்ளது....எக்ஸ்ட்ரா லார்ஜ் எலாக்ஸ்டிக் ஜட்டியில் இதைத்தான் விரிவாக உவ்வே எடுக்க உள்ளோம்..எச்சரிக்கை..அவாமின் கைவசம் இருக்கிறதா?

தம்பிக்கு எந்த ஊரு என்று கேட்டால் “அது இதுக்கு” பொருந்தாது...அட தம்பியுடையான் படைக்கு அஞ்சான்” அப்படி சொல்லாமா? ம்ஹீம்...இது பற்றி மொசாம்பிக் இலக்கியத்தில் “முன்,பின்,மேல் நவினத்துவங்களில் விரிவாக பார்க்கலாம்..

முன்... ஜட்டி என்றும் ,பின்.. பேண்டிஸ் என்றும் குறியீடுகள் சொல்கிறது..அப்ப மேல்...இல்லை முன் மேல் எதுவென்று யாராவது “கச்சை”கட்டி கேட்கும் பட்சத்தில் இச்சை வருகிறது....ஆனால் கட்டை உடைத்து பார்க்கும் பட்சம் மேல் முன் நவினத்துவம் ஒரு கேள்விக்குறி போல் தொங்கி விடும் அபாயமும் இருக்கிறது.. இதை பட்டவர்த்தனமாய் சொல்வதுதான் ”புநாகோ”...

ஆலயத்தின் உள்ளே 50 பக்தர்கள்..வெளியே 500 பிச்சைகாரர்கள்..இப்படி ஒரு விதி...இந்த நாட்டில்தான்...மொசாம்பிக்கில் ஒவ்வொரு பிச்சைக்காரனும் விபச்சாரம் செய்கிறான்..ஆமாம்...அங்கே பிச்சை எடுத்தல் விபச்சாரம் செய்வதுபோல்...

எதையும் குடி..யாரையும் அடி...முன்,பின் எங்கும்....அந்த கலாசார உணர்ச்சி இங்கு எப்போ வரும்...ஒரு மழை நாளில் நான் சந்தித்த ஒரு விலைமகளின் உண்மை பெயர் மகாலட்சுமி இல்லை..பின் என்ன? அதை நான் எழுதினால் நான் அந்த பெயரை களவாடினேன் என்று கீழ்பாக்கத்திலிருந்து ஒரு பிதற்றல் வரும்.....

கத்தரிக்காய் கறி செய்ய மட்டும்தான் என்று ஏன் நினைக்க வேண்டும்..அது ஒரு சிறந்த கருத்தடை சாதனம்...என் எழுத்தும் அப்படித்தான்..வெண்டைக்காயில் ”வெ” யை வெட்டி விட்டு வெறோரு எழுத்தை “பு’குத்தினால் என்ன? ஒலியில் சிரிய மாற்றம் அவ்வளவே..ஆனால் அதற்காய் அலையாதார் உண்டா என்ன?

மலச்சிக்கலை போல்தான் மனச்சிக்கலும்...என்னை ஒரு மன நிலை பிறழ்ந்தவன் என்று அழைத்துக் கொள்ள அனுமதிக்காத தேசம்..என்ன தேசம்....இப்படித்தான் ஒரு முறை என் டிராயரில் இருந்த கருத்தடை மாத்திரையை ஒரு பித்தன் களவாடி போய் விட்டான்..என்ன ஆகும் என்று மாத்ரூபூதத்திடம் கேட்டேன்..சிரித்துக் கொண்டே குதிரைக்கு கொள்ளுக்கு பதில் சுண்ட கஞ்சி கொடுத்தால் குதிரை குட்டியா போடும்..முட்டிதான் போடும்...

எழுத்தின் வெற்றி...விருதிலா? இல்லை ராயல்டியிலா? என்னை கேட்டால் சுகித்து எழுதலில்தான் என்பேன்...இரவில் கொட்டமடிக்கும் கூத்தாடிகளிடம் மடிப்பிச்சை கேட்டு துரிதஸ்கலிதம் செய்யும் பெட்டை எழுதிகளுக்கு தெரிய வாய்ப்பில்லை..தெரியவும் வேண்டாம்...கொடுப்பதை கொடு...முடிந்தவரை உன் வீட்டு குப்பையை அள்ளிவிடுகிறேன்...இவர்கள் என்ன முனிசிபாலிட்டியா? தீபாவளி படத்தில் வாய்ப்பு கொடு..பணம் வேண்டாம் ..மீந்து போகும் பலகாரம் மட்டுமே போதுமானது...இதற்கு ”கண்ணகி” சிலைக்கு அடியில் 5 ரூபாய்க்கு ”கையில்” சுண்டலும் ,10 ரூபாய்க்கு ”வாயில்” செட் தோசையும் வாங்கி சாப்பிடலாம்....

உனக்கும்,எனக்கும் சண்டை....அவிழ்ந்து போச்சு...மூதேவி கொண்டை....

இதில் என்ன கொறச்சீற்றம் ....ஒரு நண்டையும் காணும்....ஆனாலும் சிண்டை பிடிச்சு ஆட்டிகிட்டு த்தான் இருக்கிறார்கள்..அம்மாவசைக்கு அடுத்த நாள் நண்டு சினையா கிடைக்கும்....தினம் அம்மாவாசையா இருந்தால் அடுத்த நாள் எப்ப வரும்??


மெசபடோமியாவில் “க்மாஸ்டா” என்ற உலகப் புகழ் பெற்ற(எங்க அளவுக்கு இல்லை என்றாலும்) ஒரு கவி இருந்தார்..அவரின் ஒரு கவிதை நம்மூர் பார்ட்டி
”யாரோச்சீ” யின் மொழிபெயர்ப்பில்....

“நொண்டி மாட்டை.வச்சுகிட்டு
வண்டி ஓட்ட முடியுமா?
இல்ல..சண்டி மாட்டைதான்
சவாரிக்கு பூட்டலாமா??
அட..ரெண்டையும் அடிமாடாக்கி
அண்டை மாநிலத்துக்கு
அனுப்பிடுங்க..
தமிழனுக்கு தவிடாவது
மிஞ்சட்டும்...

இப்பல்லாம்..
தவிடுலேர்ந்து
எண்ணெய் எடுக்கிறாங்கவோய்....

30 comments:

ரமேஷ் வைத்யா said...

அண்ணாச்சி,
இது இருத்தலிஸமா, பின் நவீனத்துவமா எனக்கு மட்டும் சொல்லுங்கண்ணே... என்னவாவும் இருந்துட்டுப் போகுது... படிக்க சுவாரசியம்!

Raju said...

அண்ணே, அடியேனுக்கு கொஞ்சம் கூட‌ புரியல..
ஆனா, என்னமோ புரிஞ்ச மாதிரி இருக்கு..!
அது என்னானுதான் புரியல..
ஒரு வேளை புரியுறத, புரியாத மாதிரி காட்டினா புரியுமாண்ணே..
அதுதானலதான் புரியலையோ..!
இது புரிஞ்சா மட்டும் எல்லாமே புரிஞ்சுடுமோ..!
அதுக்கு எதுக்கு புரியணும்..?

குடந்தை அன்புமணி said...

எனக்கு வந்த கணக்கு வாத்தியார் பாடம் நடத்தும்போது சந்தேகம் கேட்டா, முதல்ல நான் சொல்றதை கவனி. பாடம் நடத்திய பிறகு சந்தேகத்தை கேளு என்பார். அவர் பாடம் நடத்தி முடிப்பதற்குள் மணி அடித்துவிடும். மறுநாள் வரும்போது கேட்டால், நேற்றைய பாடத்தை இன்று கேட்கலாமா? செலபஸ் முடிச்சாகணும். உட்கார் என்பார். என்னத்த சொல்றது... (அதுசரி இதை எதுக்கு இங்க சொல்றேன்னு கேட்கறீங்களா? வந்ததுக்கு ஏதாவது சொல்லிட்டு போவோம்னுதான். ஹி...ஹி...

மணிஜி said...

//அண்ணாச்சி,
இது இருத்தலிஸமா, பின் நவீனத்துவமா எனக்கு மட்டும் சொல்லுங்கண்ணே... என்னவாவும் இருந்துட்டுப் போகுது... படிக்க சுவாரசியம்!//

ம்ம்..வகுத்தெரிசலிசம்...

மணிஜி said...

//அண்ணே, அடியேனுக்கு கொஞ்சம் கூட‌ புரியல..
ஆனா, என்னமோ புரிஞ்ச மாதிரி இருக்கு..!
அது என்னானுதான் புரியல..
ஒரு வேளை புரியுறத, புரியாத மாதிரி காட்டினா புரியுமாண்ணே..
அதுதானலதான் புரியலையோ..!
இது புரிஞ்சா மட்டும் எல்லாமே புரிஞ்சுடுமோ..!
அதுக்கு எதுக்கு புரியணும்..?//

நல்லது..எனக்கே புரியலதான்..(மப்பு)

மணிஜி said...

//எனக்கு வந்த கணக்கு வாத்தியார் பாடம் நடத்தும்போது சந்தேகம் கேட்டா, முதல்ல நான் சொல்றதை கவனி. பாடம் நடத்திய பிறகு சந்தேகத்தை கேளு என்பார். அவர் பாடம் நடத்தி முடிப்பதற்குள் மணி அடித்துவிடும். மறுநாள் வரும்போது கேட்டால், நேற்றைய பாடத்தை இன்று கேட்கலாமா? செலபஸ் முடிச்சாகணும். உட்கார் என்பார். என்னத்த சொல்றது... (அதுசரி இதை எதுக்கு இங்க சொல்றேன்னு கேட்கறீங்களா? வந்ததுக்கு ஏதாவது சொல்லிட்டு போவோம்னுதான். ஹி...ஹி..//


நல்ல வேளை..புரிஞ்சிருந்தா என்னாத்துகாகறது....

நையாண்டி நைனா said...

அண்ணே.... சூப்பர் அண்ணே...
உங்கள் இந்த பதிவுக்கு இந்த பாண்டிய நாடே அடிமை....

நையாண்டி நைனா said...

உங்களோட இந்த எழுத்து தமிழ் வலை உலகத்தை வேறு தளத்திற்கு இழுத்து வந்து விட்டது...

நையாண்டி நைனா said...

மீதிய அப்புறம் வந்து சொல்றேன்.... உங்களோட இந்த சிந்தனை என்னை முழுதுமாக ஆக்கிரமித்து விட்டது... இதுதான் ஒரு எழுத்தாளனின் வெற்றி...

வால்பையன் said...

//என் டிராயரில் இருந்த கருத்தடை மாத்திரையை ஒரு பித்தன் களவாடி போய் விட்டான்..என்ன ஆகும் என்று மாத்ரூபூதத்திடம் கேட்டேன்..சிரித்துக் கொண்டே குதிரைக்கு கொள்ளுக்கு பதில் சுண்ட கஞ்சி கொடுத்தால் குதிரை குட்டியா போடும்..முட்டிதான் போடும்...//

சிரிச்சிகிட்டே இருக்கேன்!
எதோ பகடி மாதிரி தெரியுது ஆனா மூலம் தெரிந்தால் தானே, முழுதும் அறிய முடியும்!
கட்டுடைத்தலின் அடுத்த பாணி!
உண்மையில் ஒவ்வொரு வரியையும் ரசித்தேன்!

அக்னி பார்வை said...

ஆஅ ஆஆ ஹ அ அஹ அஹ அ

ஐ ஜஸ்ட் கேம் பார் ஜட்டி...

இப்ப எனக்கொரு அவாமின் கொடுங்க

butterfly Surya said...

பால் தயிராகும், தயிர் மோராகும், மீண்டும் மோர் பாலாகுமா..?? ஆனாலும் அந்த பாலை மாடு குடிக்குமா..?? குடிச்சாலும் அதே பால தான் கறக்குமா..??


என்னா சண்டித்தனம்..??


கும்தலகடி கும்மாவா..
தண்டோரோன்னா சும்மாவா...

மணிஜி said...

////என் டிராயரில் இருந்த கருத்தடை மாத்திரையை ஒரு பித்தன் களவாடி போய் விட்டான்..என்ன ஆகும் என்று மாத்ரூபூதத்திடம் கேட்டேன்..சிரித்துக் கொண்டே குதிரைக்கு கொள்ளுக்கு பதில் சுண்ட கஞ்சி கொடுத்தால் குதிரை குட்டியா போடும்..முட்டிதான் போடும்...//

சிரிச்சிகிட்டே இருக்கேன்!
எதோ பகடி மாதிரி தெரியுது ஆனா மூலம் தெரிந்தால் தானே, முழுதும் அறிய முடியும்!
கட்டுடைத்தலின் அடுத்த பாணி!
உண்மையில் ஒவ்வொரு வரியையும் ரசித்தேன்!//

தலைவா ..மூலம் மலச்சிக்கல் உள்ளவனுக்கு..இது மனச்சிக்கல் கேசு...100 வரை எண்ணாட்டி தூக்கம் இல்லயாம்....

மணிஜி said...

//ஆஅ ஆஆ ஹ அ அஹ அஹ அ

ஐ ஜஸ்ட் கேம் பார் ஜட்டி...

இப்ப எனக்கொரு அவாமின் கொடுங்க//

அவாளாத்து மீன் குழம்பு இருக்கு..வேணுமா?/

மணிஜி said...

//பால் தயிராகும், தயிர் மோராகும், மீண்டும் மோர் பாலாகுமா..?? ஆனாலும் அந்த பாலை மாடு குடிக்குமா..?? குடிச்சாலும் அதே பால தான் கறக்குமா..??


என்னா சண்டித்தனம்..??


கும்தலகடி கும்மாவா..
தண்டோரோன்னா சும்மாவா...//


எலேய்..உசுப்பேத்தாதே...இரண்டாம் பாகம் வந்துடும்...

butterfly Surya said...

இரண்டாம் பாகம் வேண்டாம். அந்த இரண்டும் போய் விட்டது.. ( !!!! )

விரைவில்.. மூன்றாம் பாகம் வெளியிடவும்..

32ஐ விட சுவாரசியம்...

வெயிட்டிங்...

கலையரசன் said...

//5 ரூபாய்க்கு ”கையில்” சுண்டலும் ,10 ரூபாய்க்கு ”வாயில்” செட் தோசையும் வாங்கி சாப்பிடலாம்//

செமித்தியா இருக்கு பாஸ்சே!! உங்களால மட்டுட்தான் இப்படி "ஓப்பனா" எழுதி, கமெண்ட்சும் வாங்க முடியும்!!
waiting 4 nxt 'பார்'ட்

நித்யன் said...

நம்ம உணா தணா (உண்மைத்தமிழன்) வாங்கி வந்த சரக்கில் ஏதோ குற்றம் உள்ளது.

இப்படி எழுதுவீர்கள் என்றால் உணா தணாவை தினமும் அழைத்து சரக்கு வாங்கிவரச் சொல்லலாம்.

கட்டுடைப்பு உங்களுக்கு திருகிய பாட்டில் மூடி உடைப்பு போல இயல்பாக வருகிறது.

வாழ்த்துக்களுடன் நித்யன்

Cable சங்கர் said...

அதானே பார்த்தேன். என்னடா புரியறாப்புல எழுதியிருக்கிங்கன்னு.. வாழ்க உண்மை தமிழன்..

அகநாழிகை said...

அப்படி போடு அருவாளா...

தொடர்ந்து எல்லாருக்கும்,
ABCDEFGHIJKLMNOPQRSTUVWXYX
1234567890
அப்படின்னு ‘பின்‘னூட்டம் போடும்போதே நெனெச்சேன்.

தல ஒரு மார்க்கமாத்தான் இருக்காருன்னு..

வரவேற்கிறோம், வாங்க.

‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்

R.Gopi said...

தலைவா

தாங்கள் எழுதியது இந்த சிறுவனுக்கு புரிந்தது என்று சொல்ல வேண்டுமானால், புரிந்திருக்க வேண்டும்... புரியவில்லை என்று சொல்ல வேண்டுமானால், புரிந்திருக்க கூடாது...

இப்போது, எனக்கு புரிந்ததா, புரியவில்லையா என்று எனக்கே தெரியலியே.......

நீங்க எழுதினது புரியலேன்னு சொல்லல.... ஆனா, புரிஞ்சு இருந்தா நல்லா இருக்கும்னு சொல்ல வந்தேன்......

மணிஜி said...

///5 ரூபாய்க்கு ”கையில்” சுண்டலும் ,10 ரூபாய்க்கு ”வாயில்” செட் தோசையும் வாங்கி சாப்பிடலாம்//

செமித்தியா இருக்கு பாஸ்சே!! உங்களால மட்டுட்தான் இப்படி "ஓப்பனா" எழுதி, கமெண்ட்சும் வாங்க முடியும்!!
waiting 4 nxt 'பார்'ட்//

கலை...இலக்கியவாதிகள் எல்லாம் குடிகார ரேஞ்சுக்கு அடிச்சுக்கிறாங்க...அதுல நம்ம பதிவர்கள் குளிர் காயுராங்க(என்னையும் சேர்த்து)

மணிஜி said...

//நம்ம உணா தணா (உண்மைத்தமிழன்) வாங்கி வந்த சரக்கில் ஏதோ குற்றம் உள்ளது.

இப்படி எழுதுவீர்கள் என்றால் உணா தணாவை தினமும் அழைத்து சரக்கு வாங்கிவரச் சொல்லலாம்.

கட்டுடைப்பு உங்களுக்கு திருகிய பாட்டில் மூடி உடைப்பு போல இயல்பாக வருகிறது.

வாழ்த்துக்களுடன் நித்யன்//

நித்யா..நன்றி முதல் வருகைக்கும், கருத்துக்கும்..அடிக்கடி வாங்க(அடிக்கவும்)

மணிஜி said...

//அதானே பார்த்தேன். என்னடா புரியறாப்புல எழுதியிருக்கிங்கன்னு.. வாழ்க உண்மை தமிழன்..//

புது எபிசோட் ஆரம்பிக்கலாமா??

மணிஜி said...

/அப்படி போடு அருவாளா...

தொடர்ந்து எல்லாருக்கும்,
ABCDEFGHIJKLMNOPQRSTUVWXYX
1234567890
அப்படின்னு ‘பின்‘னூட்டம் போடும்போதே நெனெச்சேன்.

தல ஒரு மார்க்கமாத்தான் இருக்காருன்னு..

வரவேற்கிறோம், வாங்க.

‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்//

வாசு இதை பற்றி விரிவாக தொலைபேசியில் பேசி விட்டோம்..நாளை சந்திக்கலாம்(சப்பாத்தி உண்டு)

மணிஜி said...

கோபி..வருகைக்கும் ,கருத்துக்கும் நன்றி..

குடுகுடுப்பை said...

படிக்க சுவராசியமா இருந்தது.

ஆதவன் said...

nalla irukkuunga boss

உண்மைத்தமிழன் said...

முருகா..

என்ன கொடுமை இது..?

மப்பில் உளறுவதாக இருந்தாலும் வருவது இப்படியென்றால் மப்பில் குற்றமா..? அல்லது வாங்கித் தந்தவன் குற்றமா..? அல்லது பாட்டில் தண்ணியின் குற்றமா..?

கவிஞரே.. மனம் சாந்தியாகட்டும்..!

Raju said...

\\நைனா...பாண்டிய நாட்டுக்கு பதிவுலகமே அடிமைன்னு நினைச்சுகிட்டு திரியராய்ங்க...நீங்க வேற ரவுச கொடுக்கறீக....\\

யோவ்...எங்கள எதுக்குயா இப்ப இழுக்குறீங்க..!