Tuesday, August 25, 2009

கிளியுடன் ஒரு இரவு பயணம்......




சின்ன முருகனுக்கு அவன் சொந்த பெயரே மறந்து போய்விட்டது.காரணம் ’கிளி” என்றே அவன் பெரும்பாலும் அழைக்கப்படுவதுதான்.அவனுக்கு சொந்த ஊர் திண்டுக்கல் பக்கமாம்.சித்தி கொடுமை தாங்காமல் 14 வயதில் வீட்டை விட்டு வந்து விட்டான்.பசி தாங்காமல் நின்றிருந்த ஒரு லாரியில் பின்னால் ஏறி படுத்து தூங்கிவிட்டானாம்.லாரி டிரைவர் கன்னியப்பன் பார்த்து சாப்பாடு வாங்கி கொடுத்து தனது லாரியில் கிளினர் வேலைக்கு வைத்து கொண்டார்.அன்று முதல் முருகன் ”கிளி” யானான்.

தாம்பரம் விரைவு பேருந்து நிலையத்தில் நெல்லை போவதற்காக நண்பனுடன் காத்திருந்தேன்.எல்லா வண்டியும் நிரம்பி வழிந்தது.ஆம்னி பஸ் நிற்கவேயில்லை.நண்பன் சொன்னான்.மச்சான் லாரில போலாம்.தாம்பரம் செக்போஸ்ட் அருகில் தான் லாரிக்கு டிக்கெட் ? போடுகிறார்கள்.சின்ன முருகன் என்ற கிளியை அங்குதான் சந்தித்தேன்.நாகர்கோயில் போகும் லாரி அது.(ஆண்டவன் அருள்).அண்ணே ..உள்ள கேபின் 100 ரூபா..5 பேர் ஏத்துவோம்.பின்னால தார்பாய் மேல படுக்கலாம் 25 ரூபா ஆகும்.ஆனா காத்து பிச்சுகிட்டு அடிக்கும் என்றான்.சரி 500 ரூபா நானே தர்றேன்..வேற டிக்கெட் ஏத்தாதே என்றேன்.அவன் சட்டென்று பயந்து போய் டிரைவரை கேளுங்க என்றான்.கன்னியப்பன் என்கிற டிரைவர் செக் போஸ்டில் வரி மற்றும் "தண்டம் "அழுது” விட்டு வந்தவர் எங்களை சற்று சந்தேகித்து பின் சம்மதிக்க என் முதல் லாரி பயணம்(நீண்ட) தொடங்கியது.

ஏற்கனவே கால்புட்டி உள்ளே போயிருந்தாலும்
பயணத்தின் போது இருப்பு வைத்திருப்பது என்
ப(வ)ழக்கம்..கன்னியப்பனிடம் அடிக்கலாமா என்று அனுமதி கேட்க சார் இதை போய் கேட்பாங்களா... என்ன நா அடிக்க மாட்டேன். அடிச்சா வண்டி ஓட்ட மாட்டேன்...சரக்கு உள்ளே போக போக மன நிலை மாற தொடங்கியது.கொடைக்கானல் மலை ஏறும் போது இரண்டு கொண்டை வளைவுகளுக்கு ஒரு முறை சீதோஷ்ண மாற்றத்தை உணர முடியும்.சரக்கும் அதே போல்தான்.பேச்சு கன்னியப்பனின் சொந்த கதைக்கு திரும்பிற்று.சொந்த ஊர் சோழவந்தான்.மனைவி ,2 குழந்தைகள்..மனைவியின் தங்கை வள்ளியூரில் நர்சாக இருக்கிறாள்.போக வர தொடுப்பு ஏற்பட சேர்த்து கொண்டு விட்டார்.குழந்தை இல்லை.அதற்கு அவள் அக்காவின் சாபம்தான் காரணம் என்றார்.வண்டி செங்கல்பட்டு தாண்டி ஒரு ரோட்டு கடையில் சாப்பாட்டுக்கு போட பட்டது.மிச்சமிருந்த சரக்கை நானும் நண்பனும்(ரவி)
ஒரே மூச்சில் காலி செய்து விட்டு அவர்களுடன் சாப்பிட போனோம்.

புரோட்டா,வருத்த கரி பிறை(அப்படித்தான் எழுதி இருந்தார்கள்),கல் தோசை,புல் பாயில் அவர்கள் இருவரும் பின்னி எடுக்க போதையில் பில்லை நாந்தான் கொடுப்பேன் என்று குழற..கிளி யின் முகத்தில் தெரிந்திருந்தால் இன்னும் நாலு புரொட்டாவை தின்னிருக்கலாமே என்ற வருத்தம் ..

திடிரென்று கண் முழிச்சு பார்த்தால் வண்டி ஒரு அத்துவான காட்டின் நின்றிருந்தது.கன்னியப்பனை காணோம்.கிளி மட்டும் கீழ் நின்று பீடியை ரசித்து பிடித்து கொண்டிருந்தான்.என்னை பார்த்ததும் பீடியை அணைக்க ..கிளி..வண்டி ஏன் நிக்குது?டிரைவர் எங்கே?அண்ணே.தோ .உள்ளார போயிருக்காரு ..வந்துடுவாரு..சொல்லும் போது கன்னியப்பன் வந்து விட்டான்.கிளி ..நீ போறியாடா?கிளிக்கு வெட்கம்.இன்னும் கொஞ்ச நாளாவட்டும்னே..நான் புரியாமல் பார்க்க.சார் உள்ள குஜிலிங்க இருக்குது..நீங்க போறிங்களா? இந்த வாட்டி சரக்கு சும்மா கும்முன்னு இருக்கு சார்.அப்பா என்னை விட்டுடு நா இந்த ஆட்டத்துக்கு வரலே..ஆனால் நண்பனுக்கு சபலம்தான்.அவனை அடக்கி வண்டியை கிளப்பினோம்.

சார் 2 மணிக்கு வண்டியை ஓரம் போற்றுவேன்..திரும்ப கிளம்ப 6 மணியாயிடும்.நீங்க நல்லா தூங்குங்க என்றான் கன்னியப்பன்.என் சந்தேகத்தை கேட்டேன்."ஒன்னுக்கு ரெண்டு பொண்ட்டாட்டி இருக்குல்ல.பின்ன ஏன் இப்படி?அட போங்க சார் இது நெதம் வோணும்..நான் உறை கூட போட மாட்டேன்.அருகிலிருந்த கிளி"அண்ணனுக்கு அடுப்புல வைக்கும் போது சூடு உறைக்கணும்.அப்பாதான் திருப்தியாம்.கன்னியப்பன் கையில் கிடைத்த எதையோ எடுத்து கிளியை வெட்கத்துடன் அடித்தான்.

திரும்ப காலை லாரி கிளம்பி நாங்கள் நெல்லை போய் சேர இரவு 8 மணியாகி விட்டது.சுவாரசியமான பயணம்.கேமரா கையில் இல்லாமல் போய் விட்டது.லாரி ஓட்டுனருக்கும்,கிளினருக்கும் உள்ள உறவு ஒரு அன்னியோன்னியமான தாம்பத்யம் போலவே இருக்கிறது.கிளி நிறைய அடி வாங்குகிறான்.ஆனால் கன்னியப்பனுக்கு எதுனா ஒண்ணுன்னா முதல் ஆளாய் இறங்கி விடுவானாம்.கன்னியப்பன் தன் வாழ்க்கையில் நடந்த அத்தனையையும் கிளியிடம் சொல்கிறான்.கிளி ஆறுதல் சொல்லும் விதமே ரொம்ப வித்தியாசமாக இருந்தது.அண்ணன் அடிச்சா அடுத்த நாள் பிரியாணி,புது துணி, விஜய் படம்னு அன்பை கொட்டி விடுவாரு.அந்த அன்புக்குகாகவே எத்தனை அடியும் வாங்கலாம்.கிளி சொல்லும் போதே மீண்டும் எதையோ எடுத்து வீசுகிறான் கன்னியப்பன்..கன்னியப்பன் அவுட்சைட் போகும் போது கூட அருகில் கிளி இருக்க வேண்டுமாம்..பீடி,கால் கழுவ தண்ணி கொடுத்து சிஷ்ய பணிவிடை..கிளியின் லட்சியம்...ஒரு லாரிக்கு டிரைவர் மற்றும் முதலாளியாவதுதான்.பின் தன்னை போல் ஒரு கிளியை தேடி கண்டு பிடித்து கிளினராக வைத்து கொள்வதுதான்.

நான் விடைபெறும் போது கன்னியப்பன் காசு வாங்க மறுத்து விட்டான்.நான் கட்டாயப் படுத்தி கொடுத்து விட்டு சின்ன முருகா என்று அழைத்து அவன் கையில் ஒரு 100 திணிக்க அவன் கன்னியப்பனை பார்க்க..அவன் தலை அசைக்க சந்தோஷத்துடன் வாங்கி கொண்டான் சின்ன முருகன் என்கிற"கிளி"

பின் குறிப்பு: எங்கு போவதென்று முடிவு செய்யாமல் கிளம்பி, கண்ணில் படும் முதல் வண்டியில் ஏறி, அது நிற்கும் கடைசி இடத்தில் எறங்கி ..பின் அங்கிருந்து தொடங்கி.......யாராவது துணைக்கு வருகிறிர்களா

32 comments:

DHANS said...

naan varugiren.... eppothu sellalaam

யாசவி said...

cheeeei

:-)

யாசவி said...

cheeeei

:-)

ஷங்கி said...

இந்த லாரி அனுபவம், வேணுமென்று ரொம்ப நாளா யோசிச்சதுண்டு. அந்தக் கிளீனர்கள் ஏன் சைட் கதவை அந்தத் தட்டு தட்டுகிறார்கள்? அவர்களின் குருவை விழிப்பில் வைத்திருப்பதற்கா? அது இப்போது கிழக்குக் கடற்கரையிலிருந்து மேற்குக் கடற்கரைக்குப் போகணுமென்ற ஆவலில் வந்து நிற்கிறது.
அப்புறம் அந்தக் கடைசி பத்தியில் சொன்னதை நான் சென்னையில் வேலையில்லாமல் இருந்த காலத்தில் செய்திருக்கிறேன். அங்கே இருந்திருந்தால் ஒரு வேளை கூட்டு சேர்ந்திருக்கலாம்.

Raju said...

எனக்குக் கூட பயணம் ரொம்ப பிடிக்கும்.
ஆனா, இது கொஞ்சம் வித்தியாசமான் இலக்கில்லாத பயணம்தான்.

R.Gopi said...

நல்லா எழுதி இருக்கீங்க தல...

பாவம் அந்த கிளியின் வாழ்க்கை... தானும் ஒரு லாரி ஓனர் ஆயிடுவோம் என்ற கனவிலேயே சிலரின் வாழ்க்கை முடிந்து விடும்...

நீங்க போடாதது... ஒரு நல்ல திருப்பம்....

butterfly Surya said...

கலக்கல் கிளி..

எங்கு போவதென்று முடிவு செய்யாமல் கிளம்பி, கண்ணில் படும் முதல் வண்டியில் ஏறி, அது நிற்கும் கடைசி இடத்தில் எறங்கி ..பின் அங்கிருந்து தொடங்கி....../////

இப்படிதான் எனது பயணம்.நான் பயணங்களின் காதலன். வழி நெடுகிலும் புத்தக வாசிப்பு. அப்படின்னு பாடலாசிரியர் நா.முத்துகுமார் ஒரு பேட்டியில் கூறினார்.

அப்ப நீங்களும் பிரபல கவிஞராகி விடுவீர்கள்..

வாழ்த்துகள் தல....

நையாண்டி நைனா said...

பின்குறிப்பு கவுஜை ஏன்? பத்தி வடிவில்?

வால்பையன் said...

கன்னியப்பன் போன்ற டிரைவர்களால் பாலியல் நோய்கள் பரவ நிறைய வாய்ப்பிருக்கு!

சரி எப்போ போலாம்!

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்

துபாய் ராஜா said...

நல்லதொரு பகிர்வு.

வடசென்னை சென்றால் நமது தென்மாவட்டக்கிளிகள் நிறைய பார்க்கலாம்.

ஈரோடு கதிர் said...

//வால்பையன்
கன்னியப்பன் போன்ற டிரைவர்களால் பாலியல் நோய்கள் பரவ நிறைய வாய்ப்பிருக்கு!

சரி எப்போ போலாம்!//

வால் எதுக்கு!!!!

நாஞ்சில் நாதம் said...

நல்லதொரு பகிர்வு. மீள்பதிவு மாதிரி இருக்கு?

மணிஜி said...

//naan varugiren.... eppothu sellalaam//

கிளம்பிடுவோம்..சொல்றேன்

மணிஜி said...

நன்றி யாசவி(ச்சீய்ய்ய்)

மணிஜி said...

//இந்த லாரி அனுபவம், வேணுமென்று ரொம்ப நாளா யோசிச்சதுண்டு. அந்தக் கிளீனர்கள் ஏன் சைட் கதவை அந்தத் தட்டு தட்டுகிறார்கள்? அவர்களின் குருவை விழிப்பில் வைத்திருப்பதற்கா? அது இப்போது கிழக்குக் கடற்கரையிலிருந்து மேற்குக் கடற்கரைக்குப் போகணுமென்ற ஆவலில் வந்து நிற்கிறது.
அப்புறம் அந்தக் கடைசி பத்தியில் சொன்னதை நான் சென்னையில் வேலையில்லாமல் இருந்த காலத்தில் செய்திருக்கிறேன். அங்கே இருந்திருந்தால் ஒரு வேளை கூட்டு சேர்ந்திருக்கலாம்.//

வருகைக்கு நன்றி சங்கா..

மணிஜி said...

//எனக்குக் கூட பயணம் ரொம்ப பிடிக்கும்.
ஆனா, இது கொஞ்சம் வித்தியாசமான் இலக்கில்லாத பயணம்தான்//

நான் ஏற்கனவே ஒருமுறை போயிருக்கிறென் டக்ளஸ்

மணிஜி said...

//நல்லா எழுதி இருக்கீங்க தல...

பாவம் அந்த கிளியின் வாழ்க்கை... தானும் ஒரு லாரி ஓனர் ஆயிடுவோம் என்ற கனவிலேயே சிலரின் வாழ்க்கை முடிந்து விடும்...

நீங்க போடாதது... ஒரு நல்ல திருப்பம்..//

என்ன போடாதது?உறையா?கோபி?

மணிஜி said...

//கலக்கல் கிளி..

எங்கு போவதென்று முடிவு செய்யாமல் கிளம்பி, கண்ணில் படும் முதல் வண்டியில் ஏறி, அது நிற்கும் கடைசி இடத்தில் எறங்கி ..பின் அங்கிருந்து தொடங்கி....../////

இப்படிதான் எனது பயணம்.நான் பயணங்களின் காதலன். வழி நெடுகிலும் புத்தக வாசிப்பு. அப்படின்னு பாடலாசிரியர் நா.முத்துகுமார் ஒரு பேட்டியில் கூறினார்.

அப்ப நீங்களும் பிரபல கவிஞராகி விடுவீர்கள்..

வாழ்த்துகள் தல....//

சூர்யா..உனக்கே இது ஓவராத்தெரியல

மணிஜி said...

//பின்குறிப்பு கவுஜை ஏன்? பத்தி வடிவில்?//

அது கவுஜையா நைனா?

மணிஜி said...

//கன்னியப்பன் போன்ற டிரைவர்களால் பாலியல் நோய்கள் பரவ நிறைய வாய்ப்பிருக்கு!

சரி எப்போ போலாம்!//

வால்..கதிரின் பின்னூட்டம்தான் பதில்

மணிஜி said...

//ல்லதொரு பகிர்வு.

வடசென்னை சென்றால் நமது தென்மாவட்டக்கிளிகள் நிறைய பார்க்கலாம்//

நன்றி துபாய் ராஜா..துபாய்ராணி படம் பார்த்தாச்சா?

மணிஜி said...

////வால்பையன்
கன்னியப்பன் போன்ற டிரைவர்களால் பாலியல் நோய்கள் பரவ நிறைய வாய்ப்பிருக்கு!

சரி எப்போ போலாம்!//

வால் எதுக்கு!!!!//

ஆட்டறதுக்குத்தான் கதிர்..

மணிஜி said...

//நல்லதொரு பகிர்வு. மீள்பதிவு மாதிரி இருக்கு?//

வருகைக்கு நன்றி நாஞ்சில்நாதம்(ஸ்மைலியை வுட்டிங்களோ?)

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

நான் எப்பவுமே நீண்ட பயணங்களுக்குத் தயார்.நல்ல இடுகை.

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

நான் எப்பவுமே நீண்ட பயணங்களுக்குத் தயார்.நல்ல இடுகை.

இரும்புத்திரை said...

//பின்குறிப்பு கவுஜை ஏன்? பத்தி வடிவில்?//


நீங்க இப்ப எது எழுதினாலும் அது கவிதை மாதிரியே இருக்கு

Prapa said...

//நாங்களும் எங்களால் முடிந்தளவு ஏதாவது கிறுக்குகிறோம் வலைப்பதிவுகளில்....நீங்க அடிக்கடி வந்து கருத்துக்களை சொன்னால் தானே மேற்கொண்டு என்ன பண்ணலாம் என்று ஜோசிக்கலாம்,வருகைக்கு அனுமதி இலவசம், எப்பொழுதுமே கதவுகள் மூடப்படுவதில்லை.//

கலையரசன் said...

//அண்ணனுக்கு அடுப்புல வைக்கும் போது சூடு உறைக்கணும்.//

புது பழமொழியா இருக்கே.. மைண்ட்ல வச்சிகிறேன்! யூஸ் ஆகும்.

கிளியுடன் ஒரு பயணமுன்னு சொன்னவுடனே, வேற ஏதோன்னு நினைச்சி வந்தா.. ஃபீலிங்ஸ் பதிவாயில்ல இருக்கு?

மணிஜி said...

//நான் எப்பவுமே நீண்ட பயணங்களுக்குத் தயார்.நல்ல இடுகை//

வருகைக்கு நன்றி ஸ்ரீ..கிளம்பிடுவோமா?

மணிஜி said...

///நாங்களும் எங்களால் முடிந்தளவு ஏதாவது கிறுக்குகிறோம் வலைப்பதிவுகளில்....நீங்க அடிக்கடி வந்து கருத்துக்களை சொன்னால் தானே மேற்கொண்டு என்ன பண்ணலாம் என்று ஜோசிக்கலாம்,வருகைக்கு அனுமதி இலவசம், எப்பொழுதுமே கதவுகள் மூடப்படுவதில்லை.////

நன்றி பிரபா...

மணிஜி said...

////அண்ணனுக்கு அடுப்புல வைக்கும் போது சூடு உறைக்கணும்.//

புது பழமொழியா இருக்கே.. மைண்ட்ல வச்சிகிறேன்! யூஸ் ஆகும்.

கிளியுடன் ஒரு பயணமுன்னு சொன்னவுடனே, வேற ஏதோன்னு நினைச்சி வந்தா.. ஃபீலிங்ஸ் பதிவாயில்ல இருக்கு?//

நன்றி கலை..