Thursday, October 15, 2009

சம்திங் ராங்க்.......(மீள்)


ஆத்திரத்தை அடக்க
முடிந்தாலும்
மூத்திரத்தை அடக்க
முடியவில்லை...
டயாபட்டிக்..

மூத்திரத்தை அடக்க
முயன்றாலும்
ஆத்திரத்தை அடக்க
இயலவில்லை...
ஹைபர்டென்ஷன்..

கிழிந்த நைட்டியில்
வழியும் இளமை
கிளர்ச்சியில்லை..
இம்பொடன்ஸ்...

இருட்டினதும் விளக்கை
அணைக்கிறேன்...
டிமென் திஷியா..

வாங்கின கடன்
நினைவில் இல்லை..
செலக்டிவ் அம்னீஷீயா...

பல்லவன் படிக்கட்..
ஏற கஷ்டம்
ஆர்த்தரைடிக்ஸ்..

விரல் மரத்து
அவஸ்தை..
ஸ்பாண்டிலைட்டிஸ்

சட்டென்று பெயர்
மறந்து போகிறது..
அல்சைமர்..

இதெல்லாம் சரிதான்...

இப்போதெல்லாம்
இடுகையிடாமல்
இருக்க முடியவில்லை..
ஒரு நாள் கூட

சம்திங் ராங்க்...

23 comments:

சென்ஷி said...

:)

அதனாலதான் மீள் பதிவா!

ஜெட்லி... said...

இவ்ளோ வியாதியா???
சம்திங் ராங்

vasu balaji said...

ப்ளாகோமேனியான்னு ஏதோ புது நோயா இருக்குமோ:))

ஈரோடு கதிர் said...

//வானம்பாடிகள் said...
ப்ளாகோமேனியான்னு ஏதோ புது நோயா இருக்குமோ:))//

பின்னூட்டமேனியாவும் கூட இருக்கும்
இஃகிஃகி

நையாண்டி நைனா said...

இதுக்கு பேரு "பதிவராஷ்றோதீசியா"... இதை நான் தீர்த்து வைக்கிறேன்... அப்புறமா என்னை தனியா கூட்டிட்டு போயி.. ஒரு குவாட்டரும், பிரியாணியும் வாங்கி கொடுங்க... நான் தீர்த்து வைக்குறேன்...

கார்த்திகைப் பாண்டியன் said...

கொஞ்சம் ஓவராத்தான் போறோமோ?

Beski said...

எப்படிண்ணே 3 நாள் இருக்கப்போறீங்க?

நோய்க்கு மருந்து ஏதும் கொண்டு வச்சிருக்கீங்களா?

Jackiesekar said...

நினைச்சேன் என் காலேஜ் டிப்பார்ட்மென்ட் உள்ள வச்சி பிளாக்குன்னா என்ன, என்று கேட்ட போதே நினைச்சேன் இந்த வியாதி உன்னை வந்து சீக்கிரம் பிடிக்கும்னு...

Ashok D said...

பின்னூட்டம் வருமா என்ற மேனியாதான் என்கிட்ட இருக்கு
இஃகிஃகி

Jerry Eshananda said...

அப்புறம்,தீபாவளிக்கு என்ன ஸ்பெஷல்.?

ᾋƈђἷłłἔṩ/அக்கில்லீஸ் said...

சூப்பர்.. :))

வால்பையன் said...

தல நேத்து தான் படிச்சா மாதிரி இருக்கு!

மீள் பதிவுக்கு கொஞ்சம் டைம் எடுத்துக்கோங்க, இல்லை சரியான ரீஸன் வையுங்க

velji said...

நாலு பேருக்கு நல்லது செஞ்சா எதுவும் தப்பில்லைன்றாங்களே...இந்த நோய் இருந்துட்டுப் போகட்டும்.தப்பில்லை.

Kumky said...

இதெல்லாம் ஆராய்ந்தறிய குறைந்த பட்சமாகவேனும் ஒரு 40பதை கடந்திருக்க வேண்டுமல்லவா...?

மற்றையவர்கள் எப்படி எடுத்துக்கொள்ளக்கூடும்...?

ஆயாசமாகத்தானிருக்கிறது.
காலமும் ஓடிக்கொண்டேதானிருக்கிறது.

வியாதி முத்திப்போகுமுன் விடுதலையாவதே சிறந்த வழி.

பதிவுலகை சொல்லவில்லை.

மீள் பதிவா ஜி....மீளாப்பதிவு போல...

Cable சங்கர் said...

/இதுக்கு பேரு "பதிவராஷ்றோதீசியா"... இதை நான் தீர்த்து வைக்கிறேன்... அப்புறமா என்னை தனியா கூட்டிட்டு போயி.. ஒரு குவாட்டரும், பிரியாணியும் வாங்கி கொடுங்க... நான் தீர்த்து வைக்குறேன்...
//

அட ஒரு குவாட்டருக்கும் பிரியாணிக்குமா .. சே..:(

ச.முத்துவேல் said...

உண்மைதான். இது ஒரு நோய்க்கூறுதான் போலும்.
/கிழிந்த நைட்டியில்
வழியும் இளமை/
இந்த வரிகளில் இருக்கும் உணமை சுடுகிறது, ஈர்க்கிறது.

யாசவி said...

//ஆத்திரத்தை அடக்க
முடிந்தாலும்
மூத்திரத்தை அடக்க
முடியவில்லை...
டயாபட்டிக்..


மூத்திரத்தை அடக்க
முயன்றாலும்
ஆத்திரத்தை அடக்க
இயலவில்லை...
ஹைபர்டென்ஷன்//

:)

"உழவன்" "Uzhavan" said...

மேற்சொன்ன அனைத்து வியாதிகளாலும் வியாதி உள்ளவர்தான் கஷ்டப்படுவார். ஆனால் இடுகை போட்டால்...... :-))
 
அகநாழிகை படிக்கும்போது மணிஜி னா வேற யாரோனு நினைச்சேன். உங்க அய்யனார் கவிதையை படிச்ச பின்புதான், ஓ மணிஜினா தண்டோராவானு தெரிஞ்சிக்கிட்டேன். ஏன்ன அந்தக் கவிதையை ஏற்கனவே உங்கள் வலையில் படிச்சிருக்கேன். வாழ்த்துக்கள்!

நேசமித்ரன் said...

//:)

அதனாலதான் மீள் பதிவா!//

Repeating repeating repeating

Happy Diwali thala

பித்தன் said...

சம்திங் ராங்.........

R.Gopi said...

மீள்பதிவா...

நல்லா கீதுபா... நமக்கு புடிச்சா நேத்து எழுதுனத கூட நாளிக்கு மீள்பதிவா போடலாம் தப்பில்லேன்னு நம்ம "சரக்கு மாஸ்டர்" நேத்து சொன்னாருபா...

//இதெல்லாம் சரிதான்...
இப்போதெல்லாம்இடுகையிடாமல்இருக்க முடியவில்லை..ஒரு நாள் கூட
சம்திங் ராங்க்...//

இது "ப்ளோகோஃபோபியா"பா... சூடா ஒரு பதிவு போட்டா ச‌ரியாயிடும்...

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

சரிதான்......

புலவன் புலிகேசி said...

இவ்ளோ வியாதியா?