Friday, October 9, 2009

மேற்கொண்டு...... கவிதை



அடி மாடுகளை
பார்க்கும் போதெல்லாம்
மனதை ஏனோ
பிசைகிறது

சுரக்கும் வரை
கறந்துவிட்டு
மடி வற்றிய பின்

அடிமாடாக்கி
அண்டை மாநிலத்துக்கு
அனுப்புவதை
நினைத்தால்

ஒரு குறிப்பு:

ஆறு மாசமாச்சு
அன்பு இல்லத்தில்
இருக்கும்
அப்பாவை பார்த்து

ஒரு நடை
போய் வந்தபின்
மேற்கொண்டு
தொடர உத்தேசம்

17 comments:

vasu balaji said...

/ஆறு மாசமாச்சுஅன்பு இல்லத்தில் இருக்கும்அப்பாவை பார்த்து
ஒரு நடைபோய் வந்தபின்மேற்கொண்டுதொடர உத்தேசம்/

அடின்னா இது அடி. அசத்துறீங்க.

பிரபாகர் said...

எப்படின்னே? முதல் பாதிய படிச்சுட்டு ரொம்ப சாதாரணமா இருக்கேன்னு நினைச்சிட்டு... மறு பாதிய படிச்சிட்டு கலங்கிட்டேன். கலக்குறீங்கண்ணே...

ஓட்டுக்கள போட்டாச்சு.

பிரபாகர்.

Ashok D said...

அஹா... பின்றாரப்பா.. பின்றாரப்பா..

அகநாழிகை said...

கவிதையின் கரு மிகப்பழையது.
இன்னும் நல்லா எழுதியிருக்கலாம் மணிஜி.

Cable சங்கர் said...

/கவிதையின் கரு மிகப்பழையது.
இன்னும் நல்லா எழுதியிருக்கலாம் மணிஜி.//

ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்

ஈரோடு கதிர் said...

உறுத்தல்

வால்பையன் said...

அருமை!

கார்த்திகைப் பாண்டியன் said...

நிதர்சனம்

க.பாலாசி said...

//அடிமாடாக்கி
அண்டை மாநிலத்துக்கு
அனுப்புவதை
நினைத்தால்//

கவிதை நன்றாயிருக்கிறது...

பித்தன் said...

செவிட்டில் அறைந்த கவிதை.....

நேசமித்ரன் said...

கரு மிகப்பழையது

but the way u express is intresting

:)

அன்புடன் அருணா said...

பூங்கொத்து!

Beski said...

//மேற்கொண்டு
தொடர உத்தேசம்//

இதற்காகவே ஓட்டுக்கள்.

ᾋƈђἷłłἔṩ/அக்கில்லீஸ் said...

சூப்பர் தல... ஒரு எதிர் கவுஜ போடுறேம். கண்டுக்காதீங்க... :))

இன்றைய கவிதை said...

அதிர்ந்து போயிருக்கிறேன்!
'அடடா'காச கவிதை!

தேவன் மாயம் said...

சாமி! என்ன இதெல்லாம்! அசத்துங்க!

முரளிகண்ணன் said...

ம்ம் எதிர்காலம் பயமாத்தான் இருக்கு