Monday, March 1, 2010

நானும் கொஞ்சம் பேசுகிறேன்.....5


திருச்சி அரிமா சங்கம் நடத்திய குறும்பட போட்டியில் என் “சியர்ஸ்” படத்துக்கு விருது கிடைத்தது. கிழக்குவாசல் ஆசிரியர் திரு. உத்தமசோழனுக்கு என் நன்றிகள். காரில் நோகாமல் அழைத்து சென்ற அகநாழிகை வாசுவிற்கும் என் அன்பும், நன்றிகளும்..

டிஜிட்டல் தொழில்நுட்பம் எளிதாகி விட்டது. நிறைய குறும்படங்கள் தயாரிக்கப்படுகிறது. சின்ன சின்ன விஷயங்களை அழகாக சொல்கிறார்கள். இச்சை என்றொரு படம் பார்த்தேன். அதன் காணொளி கிடைக்கவில்லை. எனவே சுருக்கமாக கதை.

ஒரு கணவன் மனைவி. குழந்தையில்லை. தாம்பத்யமும் திருப்தியில்லை. மருத்துவரை அணுகுகிறார்கள். மருத்துவர் கணவனின் விந்து அணுக்களை பரிசோதிக்க வேண்டும் என்கிறார். கணவன் கழிவறைக்கு செல்கிறான். முயற்சிக்கிறான். பலன் இல்லை.

கழிவறையின் வெண்டிலேட்டர் வழியாக சாலை தெரிகிறது. அங்கு பேருந்து நிறுத்தத்தில் ஒரு பெண்ணின் பின் பக்கம் தெரிகிறது. அழகான அனாடமி அவளுக்கு. இடுப்பில் சேலை விலகி பளீரென்று சதை தெரிகிறது. காமிரா மார்பகங்களின் பக்கவாட்டிலிருந்து இடுப்பு வரை அலசுகிறது. கணவன் என்ன செய்கிறான் என்று பார்வையாளனுக்கு தெளிவாக புரியும் காட்சியமைப்பு!

இப்போது அந்த பெண் திரும்புகிறாள்.கறுப்பு கண்ணாடி அணிந்திருக்கிறாள். கையில் ஒரு ஸ்டிக். தட்டியவண்ணம் நடந்து போகிறாள்.

எளிமையான காட்சியமைப்பில் மனித மனத்தின் உணர்வை அடர்த்தியாக சொல்கிறார் இயக்குனர்.



நான் முதலில் எடுத்த குறும்படத்தின் பெயர் “missing letters" .அதன் மேக்கிங்கில் எனக்கு திருப்தி இல்லை. எனவே அதை எங்கும் திரையிட அனுப்பவில்லை. ஆனால் அதன் கான்செப்ட் எல்லோருக்கும் பிடித்தது. குடும்ப கட்டுப்பாட்டை அடிப்படையாக கொண்டது. முதலில் “நாம் இருவர் : நமக்கு இருவர் “ பின்பு அது நாம் இருவர் “ நமக்கு ஒருவர் “ என்றானது. நாளை “நாமே இருவர் : நமக்கு ஏன் இன்னொருவர் “ என்றாகி விடுமோ ? என்பதை அடிப்படையாக ஸ்கிரிப்ட் அமைத்திருந்தேன்.

”மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக” என்ற பாடலுக்கு வருங்காலத்தில் பொழிப்புரை எழுதி புரிய வைக்க வேண்டியிருக்கும். அது மட்டுமல்ல. சித்தி, சித்தப்பா, ஒன்று விட்ட சகோதரர்கள் என்று உறவு சங்கிலியே அறுபட்டு விடும் சூழல்தான் இருக்கப்போகிறது. தனித்தனி தீவாய் பிள்ளைகள் வளர்வதால் ஏற்படும் விளைவுகள் ! ஆண், பெண் பற்றிய புரிதலின்மைக்கும் இதுவும் ஒரு காரணம் என்று நான் நினைக்கிறேன்.சமூக, பொருளாதார காரணங்கள் இருந்தாலும் இது ஆரோக்கியமானதா என்பது பெரிய கேள்விக்குறிதானே !

முழங்கையிலும், கால் முட்டியிலும் சின்ன சிராய்ப்பு கூட இல்லாமல் சைக்கிள் ஓட்ட கற்றுக்கொள்ள முடிகிற காலம் இது. அதானாலோ என்னவோ வாழ்க்கையின் சின்ன வேதனை, ஏமாற்றத்தை கூட இன்றைய இளம் தலைமுறையினரால் சகித்து கொள்ள முடிவதில்லை. இளம் வயது தற்கொலைகள் அதிகரித்து வருவதே அதற்கு சான்று.

கணினி விளையாட்டு. தொலைக்காட்சியில் ரெஸ்லிங் என்கிற பயங்கர வன்முறை. போதாத குறைக்கு தொலைக்காட்சி சீரியல்களில் ரத்தம் இல்லாத வார்த்தை விஷம். எந்த அப்பாவோ, அம்மாவோ இன்றைய குழந்தைகளுக்கு கதை சொல்கிறார்கள் ? அவர்கள் வெளியில் சென்று விட்டு தாமதமாக வர நேர்ந்தால் பிள்ளைகளிடம் கேட்கிறார்கள் “இன்னிக்கு திருமதி செல்வம் என்னாச்சு ? பாக்கியத்தை அடிச்சு விரட்டியாச்சா? (என் பக்கத்து வீட்டில் பார்த்தது) உறங்க போகும் முன் வன்மத்தைதான் கடைசியாக விழுங்கி விட்டு செல்கிறார்கள்.



ஆனை...ஆனை..
அழகர் ஆனை.
கட்டுக் கரும்பை
முறிக்கும் ஆனை
காவேரிக்கரையை
கலக்கும் ஆனை.
அப்பாக்களுக்கு நேரம் இருப்பதில்லை.
தாத்தாக்கள் உடன் இருப்பதில்லை.
எப்போதாவது ஆசிர்வாதங்கள்
மட்டும் தான் பேரன்களுக்கு
கொடுப்பினை “chat”களில்

61 comments:

உண்மைத்தமிழன் said...

கவிதை சொல்லும் உண்மை நிஜம்தான்..

இந்தக் காலத்து பேரன்களும், தாத்தாக்களும் இழப்பது நிறைய..!

உண்மைத்தமிழன் said...

பை தி பை.. வாழ்த்துச் சொல்ல மறந்துவிட்டேன்..

சியர்ஸ்..!

Ashok D said...

:)

Karthikeyan G said...

Congrats!!!

கண்ணா.. said...

சியர்ஸ்...........

மணிஜி.....

வாழ்த்துக்கள்

தேவன் மாயம் said...

அப்பாக்களுக்கு நேரம் இருப்பதில்லை//

பிளாக் பதிவிடவும்...பின்னூட்டமிடவும்...ஹி...ஹி..

தேவன் மாயம் said...

வாழ்த்துக்கள் மணிஜி!!

அகல்விளக்கு said...

வாழ்த்துக்கள் அண்ணா...

இப்பதிவின் ஒவ்வொரு வாசகமும், யோசிக்க வைக்கிறது...

ஈரோடு கதிர் said...

வாழ்த்துகள் அண்ணா

vasu balaji said...

வாழ்த்துகள் மணிஜி. கவிதை யதார்த்தம்.:)

சென்ஷி said...

வாழ்த்துக்கள் தலைவரே.... சியர்ஸ் குறும்படம் இதுவரை நான் பார்த்தில்லை. யு டியுப்பில் இருக்கிறதா. சுட்டி கிடைக்குமா?

VISA said...

வாழ்த்துக்கள் மணிஜி.

எறும்பு said...

My wishes for cheers!!!...

எறும்பு said...

My wishes for cheers!!!...

அகநாழிகை said...

கவிதை அருமை மணிஜி.

அகநாழிகை said...

//காரில் நோகாமல் அழைத்து சென்ற அகநாழிகை வாசுவிற்கும் என் அன்பும், நன்றிகளும்//

சரி... அடுத்த முறை வெச்சிக்கலாம்.

iniyavan said...

தலைவருக்கு வாழ்த்துக்கள்.

Jackiesekar said...

எப்போதாவது ஆசிர்வாதங்கள்
மட்டும் தான் பேரன்களுக்கு
கொடுப்பினை “chat”களில்


நெத்தி அடி ...

வாழ்த்துக்கள் தண்டோரா

வெள்ளிநிலா said...

அண்ணே! உங்களின் பொருட்செறிந்த புதிய தமிழ் படங்களை கூடிய விரைவில் எதிர்பார்கிறேன் மணிஜி!

மரா said...

வாழ்த்துக்கள். எங்க ஊர்க்காரு குறும்படம் போட்டியில முதலிடம்னு ‘Accenture' பூராச் சொல்லிப்புட்டேன்.
சியர்ஸ்.

சிநேகிதன் அக்பர் said...

வாழ்த்துகள்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வாழ்த்துகள் மணிஜி.....

Starjan (ஸ்டார்ஜன்) said...

வாழ்த்துக்கள் தலைவரே....

ரிஷி said...

சியர்ஸ்..!

வாழ்த்துக்கள்!!!

DREAMER said...

உங்கள் குறும்படம் வெற்றிக்கு வாழ்த்துக்கள்.

-
DREAMER

அன்புடன் நான் said...

விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள்.

மற்ற பகிர்வும் மிக சிந்திக்க வைக்கிறது.

Unknown said...

உங்கள் குறும்படமும் நன்றாக இருந்தது.வாழ்த்துக்கள்.


//இப்போது அந்த பெண் திரும்புகிறாள்.கறுப்பு கண்ணாடி அணிந்திருக்கிறாள். கையில் ஒரு ஸ்டிக். தட்டியவண்ணம் நடந்து போகிறாள்.//

இந்த காட்சியமைப்பு குறும்படத்தை பாலசந்தர் படமாக்குகிறது என்று நினைக்கிறேன்.தேவையில்லை.

அதே மாதிரி ஹாண்டிகேப் வைத்து நிறைய வந்து அலுத்துவிட்டது.

சைவகொத்துப்பரோட்டா said...

வாழ்த்துக்கள் அண்ணா.

விநாயக முருகன் said...

வாழ்த்துகள் மணிஜி...

உயிரோடை said...

//மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக என்பதற்கு பொலிப்புரை எழுத வேண்டும்.//

கலாசிக்.

நல்லா எழுதி இருக்கீங்க மணிஜி.

திவ்யாஹரி said...

//முழங்கையிலும், கால் முட்டியிலும் சின்ன சிராய்ப்பு கூட இல்லாமல் சைக்கிள் ஓட்ட கற்றுக்கொள்ள முடிகிற காலம் இது. அதானாலோ என்னவோ வாழ்க்கையின் சின்ன வேதனை, ஏமாற்றத்தை கூட இன்றைய இளம் தலைமுறையினரால் சகித்து கொள்ள முடிவதில்லை. இளம் வயது தற்கொலைகள் அதிகரித்து வருவதே அதற்கு சான்று.//

சரியாகச் சொன்னீர்கள் நண்பா..
கவிதை அருமை.. கதையும்.. வாழ்த்துக்கள் நண்பா..

PPattian said...

இந்த கால குழந்தைகள் குறித்து.. மிகச் சரியான கருத்துகள்.. பள்ளிக்கூடங்கள் மட்டுமே ஒரே ஆறுதல்.

விருதுக்கு வாழ்த்துகள்.

கலகலப்ரியா said...

வாழ்த்துகள் மணிஜி.. ரொம்ம்ம்ப சந்தோஷமா இருக்கு...

//முழங்கையிலும், கால் முட்டியிலும் சின்ன சிராய்ப்பு கூட இல்லாமல் சைக்கிள் ஓட்ட கற்றுக்கொள்ள முடிகிற காலம் இது. அதானாலோ என்னவோ வாழ்க்கையின் சின்ன வேதனை, ஏமாற்றத்தை கூட இன்றைய இளம் தலைமுறையினரால் சகித்து கொள்ள முடிவதில்லை.//

நச்ன்னு சொல்லி இருக்கீங்க...

butterfly Surya said...

வர முடியாமல் போனது வருத்த்மே.

வாழ்த்துகள் ஜி

CS. Mohan Kumar said...

விருது பெற்றது அறிந்து மிக மகிழ்ச்சி வாழ்த்துக்கள்

பா.ராஜாராம் said...

மிகுந்த சந்தோசமும்,நிறைவும் மணிஜி.

வாழ்த்துக்கள்!

க ரா said...

வாழ்த்துக்கள் ஜீ.

Unknown said...

cheers sir

//ஆண், பெண் பற்றிய புரிதலின்மைக்கும் இதுவும் ஒரு காரணம் என்று நான் நினைக்கிறேன்.//

அது மட்டுமல்ல, குழந்தைகளுக்கு இடையேயான விட்டுக்கொடுத்தலும் குறைவாவதைப் பார்க்க முடிகிறது.

எங்கள் வீட்டில் நாலு பேர். இப்பொழுது ஆளுக்கொரு திக்கில் இருந்தாலும் ஒன்றுகூடும்போது அதே பழைய அரட்டை களைகட்டுகிறது. ஆனால், எங்களுக்கு அடுத்தத் தலைமுறை? தெரியவில்லை :-(

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

வாழ்த்துகள் தண்டோரா ஐயா!

பிச்சைப்பாத்திரம் said...

வாழ்த்துகள்! இன்னும் உயரவும்.

Jerry Eshananda said...

வாழ்த்துகள் மணிஜி.

வினோத் கெளதம் said...

வாழ்த்துக்கள் தல..

மணிப்பக்கம் said...

வாழ்த்துக்கள் ஐயா! ;)

தராசு said...

சியர்ஸ் அண்ணே.......

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

வாழ்த்துக்கள்

Paleo God said...

க்ளிங்...:)

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

நல்ல கவிதை.

geethappriyan said...

அண்ணே
வழக்கம் போல அருமையாய் பேசினீர்கள்.
குறும்படம் வென்றமைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்,ஏப்ரலில் சந்திப்போம்

Cable சங்கர் said...

வாழ்த்துக்கள்.

தாராபுரத்தான் said...

வணக்கமுங்க.

புலவன் புலிகேசி said...

வாழ்த்துக்கள் அண்ணே..அகநாழிகை சொல்லியிருந்தாரு..

Romeoboy said...

\\எப்போதாவது ஆசிர்வாதங்கள்
மட்டும் தான் பேரன்களுக்கு
கொடுப்பினை “chat”//


அருமையான வரி அண்ணே. வாழ்த்துக்கள் கூட

Punnakku Moottai said...

விருதுக்கு வாழ்த்துக்கள்.

திருமணமாகி 10 ஆண்டுகளுக்கு பின் கடந்தவாரம் கூட்டுக்குடும்பத்தை விட்டு தனிக் குடித்தனம் வந்தேன். மிகுந்த வலியுடன்.

என்தந்தையும் என் கூடவே வந்து விட்டார். இருந்த வீட்டிலிருந்து இப்பொழுது இருக்கும் வீடு அதிக தூரம் இல்லை. இருந்தும் 10 வருடங்கள் ஒன்றாக இருந்து, வாடகை வீட்டில் அடி வைத்த போது, நெஞ்சம் கனத்தது என்னவோ உண்மை.

அவமானங்களையும் அவமதிப்புக்களையும் பொறுத்துக்கொண்டு இன்னும் கொஞ்சகாலம் கூட்டுகுடும்பத்திலேயே இருந்திருக்கலாமோ என்று தோன்றியதென்னவோ மிகவும் உண்மை.

ஆனால் சகிப்புத்தன்மை மனிதர்களிடையே மிகவும் குறைந்து போய் பொறாமை தலை தூக்கும் போது, உடைந்த கண்ணாடி குடுவையாய் போகிறது கூட்டுக்குடும்பம். மீண்டும் ஒட்டவைத்தாலும் விரிசல் வெளிபாடு மறைக்கமுடிவதில்லை.

இப்படிக்கு,
பாலா.
+234 708 999 6984
+65 901 50346
+91 9486 457 303

"உழவன்" "Uzhavan" said...

மிக்க மகிழ்ச்சி.. வாழ்த்துகள்

நேசமித்ரன் said...

வாழ்த்துக்கள் தலைவரே

மணிஜி said...

மீண்டும் தாமதத்துக்கு மன்னிக்கவும் நண்பர்களே..இணைய இணைப்பு காரணம். நண்பர்களின் வாழ்த்துக்களுக்கும், அன்பிற்கும் நன்றிகள்.தன்யனானேன்!!

NO said...

அன்பான நண்பர் திரு தண்டோரா,

உங்கள் பின்னூட்டம் சிலவையை நண்பர் திரு வினவு அவர்களின் தளத்தில் பார்த்தேன்! As usual நீங்கள் எழுதிய பின்னூட்டங்களை தாக்கி வாய்க்கு வந்ததை
புரட்ச்சி கோஷ்டிகள் எழுதியிருந்தார்கள்!

நானும் அடிக்கடி வினவு தளத்தில் பின்னூட்டம் இடுவேன்! அனால் உடனே அழித்து விடுவார்கள்! என் பதில்களை அவர்களால் தாங்கமுடியாது, ஏனென்றால் அவர்கள் ஏதாவது தாக்கி எழுதினார்கள் என்றால், அதையே அவர்கள் கும்பிடும் சோவியத் ரஷ்ய அல்லது மாவோவின் சீனா எப்படி செய்தார்கள், எப்படி சீரழித்தார்கள் என்று ஆதாரத்துடன் எழுதுவேன்! கப்பென்று அழித்துவிடுவார்கள்! அவ்வளவு நேர்மை!

நித்த்யானண்டர் விவகாரத்தில் சாருவை உள்ளே கொண்டு வந்து கண்டபடி எழுதியிருந்தார்கள்! அதற்க்கு நான் இரு பின்னூட்டங்கள் இட்டேன்! இரண்டையும் அழித்தார்கள்! அவ்வளவு நேர்மை!

உங்கள் பதிவைப்பர்த்தேன், உங்களுக்கு நிறையா வாசகர்கள் போல இருக்கிறது! ஆதலால் இதில் நான் எழுதிய இரண்டு பின்னூட்டங்களையும் போடுகிறேன்!
எல்லோரும் படிக்கட்டும், இந்த வினவு கோஷ்டியின் தமாஷ்கள் எல்லோருக்கும் தெரியட்டும்! முடிந்தால் வெளியிடுங்கள்!


----

சாரு நிவேதிதாவை சாட சரியான சான்சு!
அல்லது
தோ மாட்டினாரு சாரு, விட்டோமா பாரு!
--------------------------------------------------------------------------

என் பின்னூடத்தை அழித்து விட்டீர்கள், as usual!! ஆதலால் அடுத்த ஒன்றை எழுதுகிறேன்....... தன முயற்ச்சியால் சற்றும் மனம் தளராத விக்ரமா...........
நித்த்யானன்தரை வைத்து சாருவை அடித்தது நல்ல டெக்னிக்!! so , நான் அதை வைத்து உங்களுக்கு சில வரிகள்......

இதிலிருந்து எனக்கு சில விடயங்கள் புரிகிறது!

ஒன்று - சாரு நல்ல மனிதர் போல இருக்கிறது மற்றும் நல்லவை சிலவற்றை செய்திருக்கிறார்!
இரண்டு - இந்து மாதும் மற்றும் ஆன்மீகத்தை பற்றி எழுதியிருக்கிறார்!
மூன்று - உங்களைப்போன்ற புரட்சி இறைச்சி மற்றும் கவிச்சி காம்ரேடுகளை தாக்கி எழுதியிருக்கிறார்!
நான்கு - நீங்கள் முத்திரை குத்தும் முற்போக்கு மற்றும் பிற்போக்கு நிலைகளை மதிக்காமல் உங்களை போன்றோரின் ஆனாவசியத்தை நன்றாக புரிந்திருக்கிறார்!

ஆதலால், இந்த வினவு தொழிற்ச்சாலை அவர் மேல் வசவுகளை வன்மத்துடன் அள்ளி தெளிக்கிறது!!!

ஏன், சார், திரு சாரு என்ன மாயக்கண்ணாடி வைத்திருக்கிறாரா?? எப்படி தெரியும் அவருக்கு தான் மதித்த மனிதன் சருக்குவானென்று? அவரு ஒரு சாமியாரை மதித்து அவரு நல்லவருன்ன நினைத்தால் அதில் தவறென்ன??

கூத்தடித்த மாவோவை, அதுவும் பல இளம் பெண்களிடம் வரை முறை இன்றி ஆடிய அவரை, அதெல்லாம் வெட்ட வெளிச்சமாக உலகுக்கே தெரிந்த பின்னரும் தலை மேல் தூக்கி வைத்து நீங்கள் ஆடலாம், அனால் ஒரு எழுத்தாளர், நேற்று கீழே விழுந்த ஒரு சாமியாரை முந்தா நேற்று வரை நல்லவர் என்று சொன்னது, தப்பாம்!!!

இதே சாரு, தான் மதிக்கும் மதம், கலாச்சாரம் எல்லாம் சாக்கடை, மாவோ மற்றும் சிவப்பு அழிப்பாளிகள் மட்டும்தான் முற்போக்கு என்று எழுதிருக்கட்டுமே, நித்யானந்தர் என்ன, சாருவே இந்த லீலைகளை செய்தாலும் இவர்கள் சும்மா இருந்திருப்பார்கள், புரட்சி சர்டிபிகட் வாங்கியவனுக்கு இதெல்லாம் தவறில்லையென்று!

நன்றி

NO said...

அன்பான நண்பர்களே,

சாமியாரை விமர்சிக்கம் சொக்க தங்கங்களே, நான் எழுதியதை அழிக்காமல் போடுங்கள்.

உங்கள் கூற்று என்ன?? சாமியார் என்று கூறிக்கொண்டு பெண்ணுடன் சேர்வது என்ன அசிங்கம் என்பது தானே? அதுவும், ஊருக்கு ஞாயம் பேசும் ஒருவர் நடிகை ஒருவருடன் சல்லாபமாக இருப்பது கேவலம் என்பதுதானே? So, ஊருக்கு உபதேசம் செய்பவனெல்லாம் கண்ட பெண்களிடம் போகக்கூடாது! Agreed!

உங்கள் கட்ச்சியிலிருந்து, ஊருக்கு உபதேசம் செய்தவர் யார் யார், அவர்கள் எந்த மாதிரி லீலைகளில் ஈடுப்பட்டார்கள் என்று நான் பட்டியலிடவா?
ஆனால், உங்களை பொறுத்த வரையில் அது அந்தரங்க வாழ்க்கை அல்லது ஒரு படி மேலே போய், அதெல்லாம் நடக்கவே இல்லை என்று ஒரே அடி!!

திரு சாறு நிவேதிதா atleast வருந்தினாலும் வருந்துவார், அய்யோ நான் ஒழுக்கமானவர் என்று நினைத்த ஒருவர் இப்படி அசிங்கப்ட்டுவிட்டாரே என்று!

ஆனால் நீங்களோ, நீங்கள் வணங்கும் தலைவர்கள் அடித்த கூத்துகள், செய்த சல்லாபங்கள், அநாகரீகங்கள் போன்றவைப்பற்றி வருந்தவுமில்லை
, அதெல்லாம் நடந்தன என்பதையே மறுக்கின்றீர்!!

என்ன, மாவோவும் ஸ்டாலினும் தங்களின் படுக்கை அறையில் காமெராவை இப்படி முட்டாள்தனமாக விடமாட்டார்கள்! அதை செய்ய நினைத்தாலே, என்ன நடக்கும் என்று எல்லோருக்கும் தெரியும்!

கொஞ்சம் கீழ படியுங்க:

மாவோவின் personal doctor Dr. Li Zhisui எழுதியது:
It is not surprising that Dr. Li thought Mao's conduct imperial: he lived in isolation, shared his bed with many young women, and traveled around the nation to luxury villas in a great cocoon of guards and private trains. Dr. Li is in general not judgmental about the endless parade of young women in Mao's bed, citing the Daoist practice of using sex for longevity. But he was shocked by Mao's lack of concern about transmitting a vaginal infection from one woman to another.

NO said...

Many of the women that Mao slept with were daughters of poor peasants who Li said believed that sleeping with the chairman was the greatest experience of their life. Mao was happiest and most satisfied when he had several young women simultaneously sharing his bed, and he encouraged his sexual partners to introduce him to others. He often told the young women to read the Taoist sex manual The Plain Girl's Secret Way, in preparation for their trysts." [Source: "The Private Life of Chairman Mao" by Dr. Li Zhisui, excerpts reprinted U.S. News and World Report, October 10, 1994]
Mao was very possessive of the women he had sex with. He quarreled with ones that said they planned to marry and once sent a guard to a labor camp after he touched one of the women on the buttocks. Li wrote, “He came to trust women more than men.
"Mao's sexual activity was not confined to women," Li claimed. "The young men who served as attendants were invariably handsome and strong, and one of their responsibilities was to administer a nightly massage as an aid to sleep. Mao insisted that his groin be massaged. In 1964, I saw Mao, naked, grab a young guard and begin fondling him. At first I took such behavior as evidence of a homosexual strain, but later I concluded that it was more an insatiable appetite for any form of sex." [Source: "The Private Life of Chairman Mao" by Dr. Li Zhisui, excerpts reprinted U.S. News and World Report, October 10, 1994]
Mao's sex drive seem to increase as he got older. In the 1960s, Li said, he often went to bed with three, four or five women simultaneously. When Mao was told he was infertile, he responded, "'So I've become a eunuch, have I?,'" Li wrote, “not understanding that it meant his sperm was abnormal not that his sexual desires were reduced." [Source: "The Private Life of Chairman Mao" by Dr. Li Zhisui, excerpts reprinted U.S. News and World Report, October 10, 1994]
இது ஒரு சின்ன சாம்பிள்தான்.

அத்துணை சோவியத் புரட்ச்சியாளர்கள் பெயர்கள் மற்றும் அவர்கள் பல பெண்களிடம் அடித்த கூத்து போன்றவை பற்றி ஆதாரத்துடன் எல்லாமே வெளி
வந்திருக்கிறது! நீங்களும் அதற்க்கு விமர்சனம் எழுதி வினவு அக்கிநிப்பார்வை ராவண மாவோயிச பள்ளியறை பலாபலன்கள் என்று பெயரிடலாம்!

என்ன முற்போக்கு என்றால் சும்மாவா???

சாமியார் ஆட்டம் போட்டால் அது அசிங்கம் ஆனால் நம்ம புரட்சியாளர்கள் ஆட்டம் போட்டால் அது ஆனந்தம்........

நன்றி

R.Gopi said...

"சியர்ஸ்” தலைவா..... இது டிரெய்லர்தான்... இனிமேல் தான் இருக்கு மெயின் பிக்சர்...

யோசிக்க வைத்த எழுத்துக்கள் தலைவா...

வாழ்த்துக்கள்....

மணிஜி said...

ருத்ரன் ஐயா..உங்கள் வருகைக்கு நன்றி.. எதிர்வினையில் இதை எப்படி தவிர்க்க முடியும்?