Wednesday, February 10, 2010

மொழியின் விளையாட்டு




(”ம்ராயோஜ் க்மாஸ்டா” வின் மொழி பெயர்ப்பு கவிதை)


வால் முளைத்திருந்தது என்
நித்திரையை கெடுத்தவளுக்கு
எங்கோ முன்னரே பார்த்த
பிம்பம் போலவும் பிரமை
அலுத்து போய் எழுந்தேன்.
வெளியில் சென்று வாங்கி
வந்த எல்கான்ஸா ரம்மை
குடித்த களைப்பு மீண்டும்
மட்டையாகிவிட்டேன்
காலையில் பார்த்தால்
எமிலி டிக்கின்ஸின்
நான்கு பக்கங்களில்
பச்சை நிறத்தில் பற்குறிகள்
மீண்டும் அரை போத்தல்
எல்கான்ஸாவுடன்
வீடு திரும்பினேன்
என் புத்தக அலமாரியை
பீராஞ்சு கொண்டிருந்தது
அதே திருட்டுப் பூனை
பச்சை நிற பற்களுடன்!

28 comments:

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

ஏற்கனவே இம்மாதிரி ஒரு கவிதை எழுதியிருக்கிறீர்கள் என நினைக்கிறேன் (எல்கான்ஸா ரம் குடித்த களைப்பு, மீண்டும் அரை போத்தல் எல்லாம் படிச்ச ஞாபகமா இருக்கு).

Ashok D said...

பூனையின் நிறம்?

மணிஜி said...

/ஜ்யோவ்ராம் சுந்தர் said...
ஏற்கனவே இம்மாதிரி ஒரு கவிதை எழுதியிருக்கிறீர்கள் என நினைக்கிறேன் (எல்கான்ஸா ரம் குடித்த களைப்பு, மீண்டும் அரை போத்தல் எல்லாம் படிச்ச ஞாபகமா இருக்கு)//

ஆமாம் குரு. ஆனா கொஞ்சம் வரிகள் சேர்த்து டிரை பண்ணி பார்த்தேன். நன்றி!

Athisha said...

இங்கு அனானி ஆப்சன் இல்லையா

மணிஜி said...

/அதிஷா said...
இங்கு அனானி ஆப்சன் இல்லையா//

இல்லைன்னா என்ன? வேற வழியா இல்லை!

சங்கர் said...

//D.R.Ashok said...
பூனையின் நிறம்?//

பிங்க் ??

சங்கர் said...

//மீண்டும் அரை போத்தல்
எல்கான்ஸாவுடன்
வீடு திரும்பினேன்//

பாதி தானா? சரக்கு வாங்கும்போது கவனிக்கலையா :)

சங்கர் said...

//”ம்ராயோஜ் க்மாஸ்டா” //

கண்ணாடி முன்னாடி வச்சி படிக்கணுமா:)

மணிஜி said...

///”ம்ராயோஜ் க்மாஸ்டா” //

கண்ணாடி முன்னாடி வச்சி படிக்கணுமா:)//

சரக்கடிச்சுட்டு படிச்சா தெளிவா தெரியும்!

அகநாழிகை said...

:)

sathishsangkavi.blogspot.com said...

//வெளியில் சென்று வாங்கி
வந்த எல்கான்ஸா ரம்மை
குடித்த களைப்பு மீண்டும்
மட்டையாகிவிட்டேன்//

எப்பவும்போல...

தேவன் மாயம் said...

நல்ல மொழிபெய்ர்ப்பு!!!!!!!!!!

Paleo God said...

ஏதோ நினைத்துக்கொண்டு
எல்கான்ஸாவின் கழுத்தை
திருகும்போது கவனித்தேன்
இப்போது அதன்
வாலை காணவில்லை
கண்களில் பச்சை சுமந்து
முன் காலை ருசித்து கொண்டிருந்தது..
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட்
டக்கீலாவும் பற்குறிகளின்றி
பள பளத்துகொண்டிருந்தது..

:))

butterfly Surya said...

லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட்
டக்கீலாவும் பற்குறிகளின்றி
பள பளத்துகொண்டிருந்தது///////////

ஷங்கர்.. எப்பூடி..??

Unknown said...

//D.R.Ashok said...

பூனையின் நிறம்?
//

இள்ஞ்சிவப்புக்கும் ஆரஞ்சுக்கும் நடுவுல

Unknown said...

அண்ணே..., "”ம்ராயோஜ் க்மாஸ்டா”" இது யாருண்ணே.., யாராவது ரசிகர் மன்றம் வச்சு இருக்காங்களா

Romeoboy said...

நீங்க சாதரணமா எழுதினாவே புரியாது . இப்ப சுத்தம்.. :(

selventhiran said...

நெரூதா சொன்னார் “என் கவிதைகளை வெறுமனே மொழி பெயர்க்காதே. உன் மொழியில் மேம்படுத்து” என்று... :))

vasu balaji said...

மப்பா இருக்கு:))

நேசமித்ரன் said...

உச்சி மண்டையில ஒத்த முடிய மட்டும் விசுக்குன்னு உருவுன மாதிரி சுர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

Rajan said...

//இங்கு அனானி ஆப்சன் இல்லையா//

சூப்பர் !

Rajan said...

//எமிலி டிக்கின்ஸின்//

எலிங்கரத தான் இப்பிடி கவித்துவமா சொல்றீங்களா

Rajan said...

அஜக் மஜக் டிமிகடிக்கிற டோலுமையா அப்சா ;;;; உட்டான் பாரு கப்சா !
அப்ஸ கல்லு மாருயய்யா ! ஆத்துப் பக்கம் வாரியா ?

அத்திரி said...

ம்ஹும் என்ன இழவு ஒன்னும் புரியல.....நல்லா இருங்க

Unknown said...

ஒண்ணுமே புரியல ஒலகத்துல...

மரா said...

உக்காந்தா எழுந்திருக்கும் எழுச்சி நாயகர் அண்ணே நீங்க........

மதுரை சரவணன் said...

ram atiththa mathiri oru kikku. potha eripotchu sarakku ippa theenthupochchu.vaalka

க ரா said...

தல சுத்துது.