Saturday, September 26, 2009

ஜெயலலிதாவிடம் நான் கேட்ட ஏடாகூடமான கேள்விகள்




டிஸ்கி: அப்பளம் சுடறதை பற்றி பதிவு போடலாம்னு நினைச்சேன்..ஆனா இங்க நம்மாளுங்க அப்பளத்தை துப்பாக்கியால சுட்டுகிட்டு இருக்காங்க..அதனால நான் பார்ப்பனனுக்கு ஜால்ரா இல்லை என்பதை நண்பர்களுக்கு தெரியப்படுத்த சில மாற்றங்களுடன் ஒரு மீள் பதிவு

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,



1. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா

சொந்தப்பெயர்கோமளவல்லி...சினிமாவுக்குஜெயலலிதா.செல்லமாஅம்மு..அப்புறம் புரட்சித்தலைவி,இதயதெய்வம்,நிரந்தரமுதல்வர்,காளி,கன்னிகாபரமேஸ்வரி,கன்னிமேரி,டான்சிசீ ..சீ..ஜான்சிராணி,அம்மா...
ஆனா எனக்கு பெயர் வாங்கறதை விட அதை கெடுத்துக்கறதுதான் ரொம்பபிடிக்கும்.

2.கடைசியாக அழுதது எப்பொழுது?

மே 16 ம் தேதி.தேர்தல் முடிவு புட்டுகிட்ட அன்னிக்கு

3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

எனக்கு பிடிக்கும்.ஆனா சில சமயம் அது என் கையெழுத்தே இல்லைன்னு சொல்றது இன்னும் பிடிக்கும்..அதை கோர்ட்லயே சொன்னேன்.மைனாரிட்டி கருணாநிதி சொல்வாரா?

4).பிடித்த மதிய உணவு என்ன?

நான் ரொம்ப ஏழை..மதியம் சாப்பாடு இல்லை

5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?

யாராவது வீடியோ கேசட் கொடுக்க வந்தா அவங்களோடு நட்பு வச்சுக்குவேன்.ஆனா அந்தம்மா புருஷன் கூட சண்டைதான்

6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?

சொந்தமா ஒரு கடல் வாங்கிட்டு அப்புறம் சொல்றேன்

7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

தலையை.ஏன்னா அவங்க என் கால்ல விழுந்திருக்கும்போது அதுதான் தெரியும்..

8. உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?

பிடிச்ச விஷயம்: ஒண்ணுமில்லே
பிடிக்காத விஷயம் : சொல்ல முடியாது..

9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?

ஆடிட்டர் ராஜசேகரை அடிச்ச செருப்பு இன்னும் இருக்கு..கொண்டு வர சொல்லட்டுமா?

10.யார் பக்கத்தில் இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?

தலைமை செயலாளர்

11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?

பச்சை கரண்சியில் தைக்கப்பட்ட பட்டு புடவை..

12.என்ன பாட்டு கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?

ஒப்பாரி

13.வர்ண பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?

திமிரா?சந்திரலேகா மேல ஆசிட் அடிச்சது தெரியாதா?உனக்கு..ஓடிடு

14.பிடித்த மணம்?

இளநீர்ல ஜின்னை கலந்தா வருமே அது..

15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?

வைகோ..அவர் அழும்போது எனக்கு ரொம்ப பிடிக்கும்.ஆனா ஒண்ணு..அவர் என்ன பதில் சொல்லனும்.அதையும் நானே எழுதி அனுப்பிவிடுவேன்..

16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு ?

சுப்பிரமணியசாமி...நான் அவருக்கு விருந்து வச்சப்ப உப்பு வேணாம்னு சொன்னதையும்,உயர்நீதிமன்றத்துல எங்க மகளிரணி தூக்கி காட்டினதையும் நகைச்சுவையா எழுதியிருந்தாரு

17. பிடித்த விளையாட்டு?

ரம்மி..அதைதான் இப்ப கலைச்சு போட முடியும்..

18.கண்ணாடி அணிபவரா?

இல்லை..ஆமாம்..இல்லை

19.எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?

இன்னும் நீ போகலையா?

20.கடைசியாகப் பார்த்த படம்?

பறக்கும் பாவை

21.பிடித்த பருவ காலம் எது?

ஆட்சிக்காலம்

22. இப்பொழுது படித்துக்கொண்டு இருக்கும் புத்தகம்:

சொத்துகுவிப்பு வழக்கின் குற்றப்பத்திரிக்கை

23.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?

நமது எம்.ஜி.ஆர் ல சொல்றேன்.படிச்சுக்கோ

24.உங்களுக்கு பிடித்த சத்தம் ?

அம்மா தாயே....

பிடிக்காத சத்தம்?

சோறு போடும்மா?


25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?

நான் ரொம்ப தூரம் வந்துட்டேன்

26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

ஆட்டோ அனுப்பனுமா

27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

கருணாநிதி

28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

யாரப்பா அங்கே?ஆதிராஜாராமை கூப்பிடு

29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?

கொடநாட்டுல என் சொந்தகாரர் ஒருத்தர் வாட்சுமேனா இருக்காரு.அவரோட முதாலாளி ஊருக்கு போகும்பொது நான் அவர் குடிசையில அங்கே போய் தங்குவேன்

30.எப்படி இருக்கணும்னு ஆசை?

இந்த கேள்வியை நீங்க கால்ல விழுந்துதான் கேக்கணும்

31.கணவர்/மனைவி இல்லாம செய்ய விரும்பும் காரியம் ?

சசி..இங்கே வாம்மா..இந்த தண்டோராவை டின் கட்ட சொல்லு..

32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க..?

முடிச்சுடு சசி இவனை..

8 comments:

அத்திரி said...

அண்ணே அனைத்தும் கலக்கல்

அத்திரி said...

புல் பார்ம்ல இருக்கீங்க போல.......பாத்துண்ணே ஆட்டோ வரப்போவுது

ttpian said...

மொவனே-என்ன தயிரியம் உனக்கு:டேய்,இவனை பிடிச்சு பொடாவில் போடுடா!
ஆத்தா-(நாற்க்காலியில் இல்லாதபோது என்னா தெனாவட்டு:சசியோட கும்மி அடி

ttpian said...

மொவனே-என்ன தயிரியம் உனக்கு:டேய்,இவனை பிடிச்சு பொடாவில் போடுடா!
ஆத்தா-(நாற்க்காலியில் இல்லாதபோது என்னா தெனாவட்டு:சசியோட கும்மி அடி

Unknown said...

32 ம் அருமை..
32 ... எகிராம இருந்தா சரிதான்.. :-)

ஜெட்லி... said...

என்னது இது....
நான் எஸ்கேப்....

Jawahar said...

துக்ளக் சோவுக்கு வாரிசு இல்லைன்னு நிறையப் பேர் வருத்தப்படறாங்க. அவங்க இதை சோவுக்கு பார்வேர்ட் பண்ணலாம்.

http://kgjawarlal.wordpress.com

என் நடை பாதையில்(ராம்) said...

உங்களுக்கு சனிப்பெயர்ச்சியில நம்பிக்கை இருக்கா.....?