Monday, September 28, 2009

அன்புமணி ராமதாசிடம் ஏடாகூடமான கேள்விகள்



சமீபத்தில் அன்புமணி ராமதாஸ் மிகவும் வேதனையுடன் ஒரு பேட்டியளித்திருந்தார்.எதைப்பற்றி? இலங்கை பிரச்சனையோ இல்லை விலைவாசி உயர்வை பற்றியோ இல்லை..அதாவது பதவியில் இல்லை என்றால் பத்திரிக்கையாளர்கள் கண்டு கொள்வது இல்லை..தன்னை பற்றிய செய்திகளை வெளியிடுவதில்லை என்று புலம்பி தள்ளி இருந்தார்.பிளாகர் என்ற முறையில் நானும் ஒரு பத்திரிக்கையாளன் என்று என்னை நானாகவே கருதிக்கொண்டு அவர் பேட்டியை வெளியிடுகிறேன்..முன்னரே எடுத்த பேட்டிதான்..மீள் பதிவாக இருந்தாலும் புதிய வாசகர்களுக்காக..




1. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா

அன்புமணி..அய்யா வச்ச பேர்..அப்புறம் அந்த காட்டையெல்லாம் அழிச்சப்புறம்”பசுமை நாயகன்”..சின்னய்யான்னு கூப்பிடுவாங்க....என் தலையெழுத்து..இப்போ முன்னாள் அமைச்சர்..


2.கடைசியாக அழுதது எப்பொழுது?

சிரிச்சது எப்போன்னு கேள்வியை மாத்தி கேளுங்க...முச்சுடூம் அழுதுகிட்டுத்தான் இருக்கேன்..


3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

எய்ம்ஸ்ல வேணுகோபால தூக்கறதுக்கு போட்ட கையெழுத்து பிடிக்கும்...ஆனா இப்ப பாருங்க..அதே எய்ம்ஸ்ல செக்யூரிட்டி என்னைய உள்ளே விடறதுக்கு பேர் எழுதி கையெழுத்து போட சொல்றான்..


4).பிடித்த மதிய உணவு என்ன?

கூழ்தான்...சின்ன வயசுல எங்க வீட்டுல விறகடுப்புதான்..நாந்தான் போய் சுள்ளி பொறுக்கிட்டு வருவேன்..எங்கம்மா அதை எரிச்சுத்தான் கூழ் காய்ச்சுவாங்க..அப்புறம் கொஞ்சம் பெரியவனா ஆன உடனே எங்க ஆளுங்கல்லாம் மரத்தையே வெட்டி எங்க வீட்டுல போட்டுட்டு ஜெயிலுக்கு போயிட்டாங்க....நாங்க அதை கொளுத்தி குளிர் காய்வோம்


5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?

சின்ன வயசுல எங்க வீட்டுக்கு கோடாரி செய்றவங்க நிறைய பேர் வருவாங்க...ஆனா எங்க அய்யா “நீ அவங்க கூட எல்லாம் பேசக் கூடாதுன்னு சொல்லிடுவாரு...சீட்டு மட்டும் தரேன்னு சொன்னா நா கண்டக்டர் கிட்ட கூட நட்பு உடனே வச்சுக்குவேன்...

6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?

அதை பற்றி அடுத்த வாரம் பாமக பொதுக்குழுவில் இரண்டு பொட்டி வச்சு வாக்கெடுப்பு நடத்தி முடிவெடுப்போம்....


7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

காலை...ஏன்னா...வாரி விடறதுக்கு வசதியா இருக்கா..இல்லையான்னு தெரியணும் இல்ல.....


8. உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?

பிடிச்ச விஷயம்: நான் யார் வீட்டுக்கு போறதா இருந்தாலும் கொல்லை பக்கமா சுவரேறி குதிச்சு போய் ஒரு 5 நிமிஷத்திலே அங்க இருக்கறதை வழிச்சு சாப்பிட்டுட்டு ஓடியாந்துடறது ரொம்ப..ரொம்ப பிடிக்கும்...

பிடிக்காத விஷயம் : எங்கய்யா...எப்ப பாரு..தம்மடிக்காதே..தண்ணியடிக்காதே..அப்படி சொல்றது பிடிக்காது..


9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?

ஒரு அரசியல்வாதியின் மகளாக அவர் இருந்தும்..எனக்கு அரசியல் பற்றி ஒண்ணுமே தெரியாதுங்கறதை கண்டுக்காம இருக்கிறது..பிடிக்கும்..தொணத் தொணன்னு தமிழ்லேயே பேசிகிட்டு இருப்பாங்க..அது பிடிக்காது....


10.யார் பக்கத்தில் இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?

எனக்கு கோட்டு,சூட்டு தச்சு கொடுக்குற டைலர்...அவர் டில்லில இருக்கார்...


11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?

வேட்டிய தார்பாச்சு கட்டி..தலைல துண்டு கட்டியிருக்கேன்....எங்கய்யா கட்சி வேலையை கவனின்னு சொல்லிட்டாரு..அதான் மரம் வெட்ட கிளம்பிட்டிருந்தேன் ..நீங்க வந்துட்டீங்க..போய் ஊர் பூரா “தண்டோரா” போடுங்க...

12.என்ன பாட்டு கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?

ஊரோரம் புளியமரம்....

13.வர்ண பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?

அநேகமா ஒரு வருஷத்துக்கு பச்சைதான்....மஞ்சள் பிடிக்கவும் ஆசை..அதிர்ஷ்டம் இருக்கான்னு தெரியல...(இதுல உங்க கேள்விக்கு பதில் இருந்தா எடுத்துகங்க...இல்லன்னா புலம்பறார்னு வுட்டுடுங்க)


14.பிடித்த மணம்?

வாக்ஸின் வாசனை ரொம்ப பிடிக்கும்..இன்னும் அனைத்து மருந்து வாசனையும்


15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?

காடுவெட்டி குரு..சின்ன வயசுல அவர்தான் எனக்கு மரத்துக்கு மேல உக்கார்ந்து எப்படி அடியை வெட்டறதுன்னு கத்து கொடுத்தவர்...


16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு ?

இரா.வேலு அண்ணன்...டில்லிலேர்ந்து ரயில்ல திரும்பி வரும்போது லாப்-டாப்பில் எழுதி போஸ்ட் பண்ணது..”சனிப் பொணம்..தனிப் போகாது”ங்கிற தலைப்புல எழுதுனது..ஒரே தத்து(பித்து)வமா இருந்தது...

17. பிடித்த விளையாட்டு?

நானு,மணி அண்ணன்,குரு அண்ணன் எல்லாரும் மரத்துக்கு மரம் தாவி விளையாடுவோம்...அது பிடிக்கும்..ஆனா எங்கய்யா சரியா தாவத் தெரியலைன்னா “சாட்டை” யால அடிப்பாரு....

18.கண்ணாடி அணிபவரா?

ஸ்விஸ் அகெளண்ட் நம்பர் ரொம்ப பொடிசா இருக்கும்..அதை கரெக்டா எழுதலைன்னா பணம் கிரெடிட் ஆகாது..அப்ப மட்டும் கண்ணாடி போடுவேன்....

19.எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?

காக்கி டிரெஸ் போட்டு கிட்டு (புள்ளி)விவரமா வசனம் பேசற படம் பிடிக்கும்.ஒரு தடவை விருதாசலத்துல நேராவே ஷூட்டிங் பார்க்க போய் முதுகுல லத்தி அடி வாங்கிட்டு வந்தோம்....

20.கடைசியாகப் பார்த்த படம்?

தங்கப்பதக்கம்..அதுல ஒரு பாட்டு ..நல்லதோர்குடும்பம்...பல்கலைகழகம்...இருந்தா அந்த குடும்பம் மாதிரி இருக்கணும்...


21.பிடித்த பருவ காலம் எது?

”எய்ம்ஸ்” ல அதாவது ஒரு குறிக்கோளோடு இருந்த காலங்கள்


22. இப்பொழுது படித்துக்கொண்டு இருக்கும் புத்தகம்:

2016 ஆம் ஆண்டுக்கு எங்கய்யா ஒரு மாதிரி பட்ஜெட் போட்டிருக்காரு...அதை படிக்க சொல்லி கொடுத்தார்...ஆனா நா சும்மா படிக்கிற மாதிரி நடிக்கிறேன்....


23.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?

அஞ்சு வருஷத்துக்கு ஒருக்கா டெஸ்க்-டாப்பையே மாத்திக்கிட்டிருந்தோம்...


24.உங்களுக்கு பிடித்த சத்தம் ?

ஊசி போடும்போது குழந்தைங்க அழற சத்தம் புடிக்கும்...அழுவுதென்னு ஊசி போடாட்டி காசு யார் கொடுப்பாங்க.....

பிடிக்காத சத்தம்?

”வேணுகோபாலாட” கார் சத்தம் பிடிக்காது


25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?

அமேசான் காட்டுக்கு ஒரு முறை அய்யா கூட டிரெயினிங் போனேன்.....

26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

அப்படின்னா??...


27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

ஒரு வருஷத்துக்கு இன்னும் 365 நாள்தான் முட்டாள்தனமா சொல்றதை ஏத்துக்கிட முடியல...


28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

ஆபரேஷன் பண்ற கத்தியை ஒரு வாட்டி முழுங்கிட்டேன்...அதுவா இருக்குமோ..?


29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?

சகாரா...அங்கதான் மரமே இருக்காது....


30.எப்படி இருக்கணும்னு ஆசை?

மேல இருக்கிற “29” பதில்லேர்ந்து உன்னால அதை கண்டு பிடிக்க முடியலன்னா..நீ என்னைய விட முட்டாள்.......

31.கணவர்/மனைவி இல்லாம செய்ய விரும்பும் காரியம் ?

சர்க்கஸூக்கு போறது....


32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க..?

இனிமே கஷ்டம்தான்

10 comments:

உண்மைத்தமிழன் said...

அண்ணே..

வலையுலக அரசியல்ல டாக்டரேட் பட்டம் உங்களுக்குத்தான்..!

இந்தாங்க பிடிங்க..

டாக்டர் தண்டோராஜி வாழ்க..!

Unknown said...

:))

பேட்டி சூப்பர!

பார்த்து, வீட்டுக்கு ஆட்டோ வரப்போகுது. நம்ம காடு வெட்டி அண்ணன் வெளியேதான் இருக்காருனு பேச்சு :)

மணிஜி said...

/அண்ணே..

வலையுலக அரசியல்ல டாக்டரேட் பட்டம் உங்களுக்குத்தான்..!

இந்தாங்க பிடிங்க..

டாக்டர் தண்டோராஜி வாழ்க//

உண்மைத்தமிழன் அண்ணெ உடம்பு எப்படி இருக்கு?(டாக்டராச்சே)

ஈரோடு கதிர் said...

என்னமோ போங்க..

இன்னும் 32 முடியலையா.... 31 அல்லது 33 னு மாத்துங்க

R.Gopi said...

//
15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?

காடுவெட்டி குரு..சின்ன வயசுல அவர்தான் எனக்கு மரத்துக்கு மேல உக்கார்ந்து எப்படி அடியை வெட்டறதுன்னு கத்து கொடுத்தவர்...//

//18.கண்ணாடி அணிபவரா?

ஸ்விஸ் அகெளண்ட் நம்பர் ரொம்ப பொடிசா இருக்கும்..அதை கரெக்டா எழுதலைன்னா பணம் கிரெடிட் ஆகாது..அப்ப மட்டும் கண்ணாடி போடுவேன்....//

ஹா....ஹா....க‌ல‌க்க‌ல் "த‌ல‌"...டிபிக்க‌ல் த்ண்டோரா ட‌ச்...

சூப்ப‌ர்....

Ashok D said...

:)

நிஜாம் கான் said...

//சீட்டு மட்டும் தரேன்னு சொன்னா நா கண்டக்டர் கிட்ட கூட நட்பு உடனே வச்சுக்குவேன்...//

ஹோ..ஹோ.ஹோ....ஹோ... அய்யோ என்னால தாங்கமுடியலயே! ஹூம் எதுக்கும் உசாரா இருங்க. குரு அண்ணன் அந்தப் பக்கம் சுத்திக்கிட்டு இருக்குறதா கேள்வி.

பா.ராஜாராம் said...

கலக்கல் மணி!சிரிச்சு மாளலை!
:)))

Shabeer said...

இது போல் பை கோ, பேசண்ட் ராமதாஸ், விஜய காண்டு இவர்களிடமும் பேட்டி காணுங்கள்.

ஆரூரன் விசுவநாதன் said...

துக்கத்துல இருக்கற மனுசன இப்படியா கேக்கறது..........

நறுக்குன்னு, நாலு நல்ல வார்த்தை....அடச்சே....நல்லதா நாலு வார்த்த கேக்கப் படாது.....

என்னமோ போங்க........

சரி...மீதப்பேர் பேட்டியையும் போட்டுருங்க.....