Friday, March 13, 2009

வலைப் பதிவர் நல வாரியம்

மதுரை மன்னரின் அன்பு மகள் கவிதாயினி கயல்விழி அண்மையில் ஒரு புதிய கண்டுபிடிப்பை திருவாய் அருளியிருக்கீறார்.அது "பராசக்தி முதல் உளியின் ஓசை" வரை மு.க அவர்கள் பெண்ணடிமைத்தனத்துக்கு எதிராக எழுதி வந்திருக்கிறார்.திமுக வின் இலக்கிய அணி செயலாளர் அல்லவா?முகவின் இரண்டாவது மனைவியின் முதல் மகனின் புத்திரி..தன் தாத்தாவின் குடும்ப வாழ்க்கையை செளகர்யமாக மறந்து போயிருக்கீறார்.அதாவது சி.எஸ். ஜெயராமனின் தங்கையை முதல் மணம் முடித்து ஒரு குழந்தையும் பிறக்கிறது.(நம்ம டாஸ்மாக் பார்ட்டி).முதல் மனைவி இறந்ததும் இரண்டாவதாக தயாளு அம்மாவை கட்டி நான்கு பிள்ளைகளை பெற்று கொள்கிறார்....அடுத்து தன்னுடன் "வேலைக்காரி.ஒர் இரவு "முதலிய நாடகங்களில் ஜோடியாக நடித்த ராஜாத்தியை இணைத்து கொண்டு கனி மொழி என்ற மற்றொரு கவிதாயினியை பெற்று தமிழ் தொண்டாற்றுகிறார்.ஒரு வேளை அந்த பெண்கள் பிறருக்கு அடிமையாகமல் தடுத்து விட்டாரோ?ராஜாத்தி அம்மா வீட்டில் இவர் தங்கும் போது தயாளு அம்மா என்ன நினைத்திருப்பார்...என்ன வேதனை அவர் பட்டிருக்க கூடும்? அதனால்தானோ என்னவோ என்றும் அவர் முகத்தில் ஒரு மெல்லிய சோகம் இழையோடிக் கொண்டேயிருக்கிறது.கொடுமை என்னவென்றால் பேரன்,கொள்ளுப் பேரன் எல்லோருக்கும் ஒரே வயது என்பதுதான்..


ஹாட் டூப்ஸ்(உண்மையானாலும் ஆகலாம்)

முது வலியை வென்றமுத்தமிழுக்கு நேரு விளையாட்டரங்கில் மாபெரும் பாராட்டு விழா நடை பெற்றது.முதுகு வலிக்கு காரணம்
"ஜெகத்ரட்சகனா இல்லை கீ.வீரமணியா என்ற தலைப்பில் பட்டி மன்றமும் நடை பெற்றது.இந்த விழாவிற்கு ஆம்புலன்சில் வந்த முதல்வர் தமிழை கௌரவிக்கவே தான் கடுமையான வலியிலும் நிகழ்சிக்கு வந்ததாக கண்ணிர் மல்க கூறினார்.அவர் மேலும் பேசுகையில்" புலவர்களுக்குள் சச்சரவு வரலாம்..சண்டை இருக்கக் கூடாது..எனவே இருவருக்கும் அந்த பெருமை சேரும் என்று கூறுகையில் ஜெகத்தும் வீரமணியும் ஓவென்று கதறி அழுதனர்...

முதன் முறையாக சென்னை எழும்பூர் மீயூசியத்தில் அமைச்சர் ஆற்காடு வீராசாமியின் மெழுகு சிலை அமைக்கப்படுகிறது.அகில இந்திய மெழுகுவர்த்தி தயாரிப்பாளர் சங்கம் இதை அமைக்கின்றனர்.வரும் அம்மாவாசையன்று இரவு இந்த சிலையை பிரபல பீரோ புல்லிங் கொள்ளையன் திரு. கறுப்பசாமி திறந்து வைக்கிறார்.

சென்னை காவல் துறை தலைவர் ராதாகிருஷ்ணன் அந்த பதவியிலிருந்து தூக்கப் பட்டு "புல் பிடுங்குவோர்" நல வாரியத்தின் தலவராக நியமிக்க பட்டுள்ளார்.வழக்கறிஞர் சங்கத் தலைவராக இருந்த திரு .பிராபகரன் புதிய காவல் துறை தலைவராக பணி அமர்த்தப் பட்டுள்ளார்.கறுப்பு கால் சட்டையும் காக்கி மேல் சட்டையும் அவருக்கு சீருடையாக இருக்கும் என்று அரசு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய சென்னை தொகுதி திமுக வேட்பாளராக ஸ்டாலின் பேரன் திரு இன்பநிதி அறிவிக்கப்பட்டுள்ளார்.கழகத்திற்காக அவர் சிறை சென்றுள்ளதாக திமுக தலைவர் பெருமையுடன் கூறினார்.(அது ஒண்ணுமில்லீங்க மு.க ஜெயிலில் இருக்கும்போது அவரை பார்க்க போயிட்டு வந்தாராம்)

வலைப் பதிவர் நல வாரியம் அமைக்கப் படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

2 comments:

மாயவரத்தான் said...

:)

Unknown said...

போங்கையா நீங்களும்.. உங்கள் ..... _____________________ ம்ம்