Wednesday, March 4, 2009

நாடாளுமன்ற தேர்தல்...திருமாவளவன் என்ன செய்யபோகிறார்??





நாடாளுமன்ற தேர்தல்...திருமாவளவன் என்ன செய்யபோகிறார்??
தேர்தல் தேதி அறிவிக்கப்படுவிட்டது.கூட்டணியும் கிட்ட தட்ட முடிவு செய்யப்பட்டுவிட்டது.காங்கிரசும், திமுகவும் மீண்டும் ஒரு அணியாக நிற்கப் போகிறார்கள்.தான் திமுக கூட்டணியில் இருப்பதாக திருமா சொல்லிக் கொண்டிருக்கிறார்..ஒரு தொகுதி அவருக்கு ஒதுக்கப்படும்(சிதம்பரம்)என்று தெரிகிறது.ஆனால் இதை திருமா எப்படி எடுத்துகொள்ளப் போகிறார்.காங்கிரசை நாட்டிலிருந்து ஒழிக்கும்வரை தான் ஓயப் போவதிலை என்று மேடைகளில் முழங்கி விட்டு இப்போது அந்த கூட்டணியில் போட்டியிடுவது....பதவிக்காக போடும் பச்சோந்தி வேடமாகவே இருக்கும்.மீண்டும் ஆட்சியமைத்தால் இலங்கை பிரச்சனையை காங்கிரஸ் தீர்த்து விடும்..அதற்க்கு திமுக குரல் கொடுக்கும் என்று பிரச்சாரம் செய்ய முடியுமா?...சொந்த பலத்தில் சிதம்பரத்தில் ஜெயித்து விட்டு பின் நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்கலாம் என்று நினைக்கிறாரா?அப்படி என்றால் காங்கிரஸ் போட்டியிடும் மற்ற தொகுதிகளில் சிறுத்தைகளின் நிலைப்பாடு என்னாவாக இருக்கும்?அங்கு யாருக்கு ஓட்டு கேட்பார்?
இன்று ஈழத் தமிழருக்காக உண்மை உணர்வுடன் குரல் கொடுக்கும் ஒரு சில சிலரில் திருமாவும்(எந்த அளவு உண்மை??) ஒருவர் என்று அவர் பின்னால் இருக்கும் இளைஞர் கூட்டம் நம்புகிறது.முத்துகுமாரின் மரணம் தந்த எழுச்சியை திருமா அறுவடை செய்யலாம் என்று நினைத்தால்....அது நியாயமாகுமா?
பின் என்ன செய்யாலாம்? தேர்தலை புறக்கணிக்கலாமா??அதனால் என்ன பயன்?
எந்த காலத்திலும் திமுக ஈழப் பிரச்சனையில் காங்கிரசின் கருத்துக்கு மாறு பட போவதில்லை..அவர்கள் இப்போது முழுக்க நம்புவது இலங்கை ராணுவத்தையும், அதற்கு இந்தியா செய்யும் ஆயுத உதவியையுமே...தீர்மானம்,மனிதச்சங்கிலி,ராஜினாமா,உண்ணாவிரதம் போன்ற போலி நாடகங்ககளின் மூலம் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும்..அதற்குள் விடுதலைப் புலிகளை ஒடுக்கி விட்டால் ..பின் புனரமைப்பு.சீரமைப்பு என்று காலத்தை ஓட்டி விடலாம் என்றுதான் திமுக நினைக்கும்.
ஆனால் மத்தியில் காங்கிரஸ் நிச்சயம் மீண்டும் ஆட்சியமைக்கும் என்ற நிலை கேள்விக்குறியாகாதானே இருக்கிறது
இந்த தேர்தல் திருமாவுக்கு ஒன்றும் வாழ்வா? சாவா?? இல்லையே..ஈழப் பிரச்சனையில் மாறுபட்ட கட்சிகளை விட்டு விட்டு..அரசியல் சார்பற்ற அமைப்புகளின் ஆதரவோடு திருமா களம் கண்டால் என்ன? இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தில் இருக்கும் ம.தி.மு.க,பா.மா.க மற்றும் கம்யூனிஸ்ட்டுக்கள் கூட்டணி பலத்தில் கொஞ்சம் ஜெயிக்கட்டும்...நிச்சயம் பின்னால் அமைய இருக்கும் எந்த அரசுக்கும் உங்கள் ஆதரவு நிச்சயம் தேவைப் படும்...அப்போது நம் கோரிக்கைக்கு கட்டாயம் மதிப்பிருக்கும்..
மதவாதம்.மின்சாரம்,விலைவாசி என்று எல்லாவற்றையும் ஒதுக்கி விட்டு ஈழப் போரட்டத்தை மட்டுமே முன்னிறுத்துங்கள். உங்களின் வெற்றி அடுத்து அமையும் மத்திய அரசால் உற்று கவனிக்கப் பட வேண்டும்.ஆனால் கூட்டணியில் நின்று நீங்கள் வென்றால் ..அந்த வெற்றி நிச்சயம் ஈழப் போராட்டத்திற்கான அங்கீகாரமாக இருக்காது.
எங்கள் ஆட்சியின் சாதனைக்கு கிடைத்த வெற்றி என்று திமுகவும் ,காங்கிரசும் அறிக்கை விட்டு விடுவார்கள்.பின் கருத்து வேறுபாடு,கூட்டணியிலிருந்து வெளியேற்றம்,ராஜினாமா என்பதில் அர்த்தமில்லை...
ஒரு புள்ளியில் தொடங்குங்கள் திருமா...உங்களின் வெற்றி ......தமிழக மக்கள் ஈழத் தமிழர் துயருக்கு இட்ட சிறு மருந்தாகட்டும்.....
திருமாவளவனா ..... இல்லை திருமா"வளமானவனா" காலம் சொல்லட்டும்....

1 comment:

We The People said...

//ஒரு புள்ளியில் தொடங்குங்கள் திருமா...உங்களின் வெற்றி ......தமிழக மக்கள் ஈழத் தமிழர் துயருக்கு இட்ட சிறு மருந்தாகட்டும்.....//

ரெம்ப எதிர்ப்பார்க்கறீங்க! வருத்தப்படப்போறீங்க! சாரி நண்பரே ஏமாற்றம் தான் உங்களுக்கு மிஞ்சப்போகிறது உங்களுக்கு (நமக்கும்)...