Tuesday, March 10, 2009

பந்தலிலே பாகற்க்காய்...

பந்தலிலே பாகற்க்காய்...
தொங்குதடி பாத்தியா??
போகும் போது பறிச்சுக்கலாம்..அடியே....

இது தென் தமிழ் நாட்டின் ஒரு ஒப்பாரி பாடல்...எழவு வீட்டிற்க்கு ஒப்பாரி வைக்க வந்த இருவர் ஊடே அந்த வீட்டில் இருக்கும் பாகற்காய் கொடியை கண் வைத்து பாடுகிறார்கள்.ஓப்பாரி...உண்மையில் அழிந்து கொண்டு வரும் ஒரு அற்புதமான கலை...துக்க வீட்டில் ராகம் போட்டு பெருங்குரலெடுத்து பாடும் போது ....துக்கம் கரைந்து..அழுகை வெளிப்பட்டு மனம் லேசாகிறது.தமிழ் நாட்டின் எல்லா பகுதிகளிலும் ஒப்பாரி பாடப்பட்டு வருகிறது..மதுரை,ராமனாதபுரம்,தேனி,திண்டுக்கல்,தூத்துக்குடி,சேலம் என அந்தந்த வட்டார வழக்கில் ஏராளனமான பாடல்கள் .இதை பற்றி ஒரு ஆவனப் படம் செய்ய வேண்டும் என்பது என் நீண்ட நாள் ஆசை.விரைவில் தொடங்குவேன் என்று நினைக்கிறேன்..

இன்று செய்தித் தாளில் முதல்வரின் முழு பக்க அறிக்கை வெளியாகி உள்ளது..என்ன அது?ஸ்பெக்ட்ரம் பற்றி விளக்கமா?
பூங்கோதைக்கு அமைச்சர் பதவி மீண்டும் தந்தது பற்றி தன்னிலை விவரமா?இல்லை..இன்று பற்றி எரிந்து கொண்டிருக்கும் நீதி துறை,காவல் துறை பிரச்சனையை எப்படி தீர்க்கலாம் என்பதை பற்றியா....அதெல்லாம் ஒரு அதி முக்கியமான விழயமா என்ன?

பின் என்ன? அதுவும் ஒரு வகை ஒப்பாரிதான்..தனக்கு முதுகு வலி..தண்டில் (முதுகு) வீக்கம்..ஊசி போட்டார்கள்..தாங்க முடியாத வேதனை...அழகிரி ஆசி வாங்கினார்...பிரனாப் இலங்கைக்கு விடை பெற்றார்...இதை விட கொடுமை..ஜெயலலிதாவும் வைகோவும் தன்னை வார்த்தையால் குத்தி துன்புறுத்தினார்கள்....முடியலே,,விட்டுரு..அழுதுடுவேன்..வலிக்குது...ஒப்பாரி ஒன்றும் மு.க வ்ற்கு புதிதல்ல..
எம்.ஜி.ஆர்..இருக்கும் போதும் புலமபல்தான்..13 வருடம் வனவாசம் போதாதா?அவர் வந்தால் ஆட்சியை ஒப்படைத்து விடுகிறேன்....சுய இரக்கம்.சுய பச்சாதாபம்,அழுகை,புலம்பல்,கெஞ்சல்,..இதெல்லாம் எழவு வீடாக இருந்தாலும் தான் தான பிணமாக இருக்க வேண்டும் என்ற முதல்வரின் மன நிலையை த் தான் காட்டுகிறது..

பல்லாவரத்தில் நடை பெற்ற பா.மா.க மாநாட்டில் ராமதாசும் அவர் பங்குக்கு ஒரு பாட்டம் அழுது தீர்த்தார்...அன்புமணி யை பாராட்ட யாருக்குமே மனமில்லை..என்று புலம்பி தீர்த்தார்...மத்திய சுகாதார த் துறை அமைச்சர் கலந்துக் கொண்ட இம் மாநாட்டினால் ஏற்பட்ட போக்குவத்து நெரிசலில் நான்கு ஆம்புலன்ஸ் வண்டிகள் பல மணி நேரம் சிக்கி தவித்தது.அந்த வண்டிகளின் சைரன் ஒலி உள்ளே இருந்த உயிரின் ஓலமாகவே இருந்தது.பல்லாவரம் மற்றும் அதை சுற்றியுள்ள அத்தனை டாஸ்மாக் கடைகளிலும் சரக்குகள் காலியானது.(மாநாட்டில் மது ஒழிப்பு உறுதி எடுக்கபட்டது)

மரம் வெட்டினா பாவம்னு யார்யா சொன்னது?

நம்ம பொழைப்பு இப்படியானு ஒப்பாரி வைக்க வேண்டியதுதான்..



ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ

No comments: