Monday, August 2, 2010

எந்திரன்


எந்திரன் ஃபீவர் ஆரம்பமாகி விட்டது . தமிழ் திரையுலகின் மைல் கல்லாக இந்த படம் இருக்கும் என்று சொல்கிறார்கள் . இசையை பற்றி சொல்வதற்கு பெரிதாக ஒன்றும் இல்லை . (இப்போதைக்கு ) . எல்லோருக்கும் எந்திரன் படத்தின் கதை என்ன என்று ஆவல் இருக்கும் . உங்களுக்காக எந்திரன் விமர்சனம் .. முன்பே எழுதியது . மீண்டும்..


எப்போது.. எப்போது ? என்று எதிர்பார்த்த எந்திரன்வெளியாகிவிட்டது..ஆனால் ரோபோ? என்ற பெயரில்..(தமிழ்தலைப்புக்கு வரிச்சலுகை கிடையாது..என்ற புதிய அறிவிப்புதான்காரணம்...(என்ன ஒரு தமிழ் பற்று..) சன் டிவி பிரமாண்டதயாரிப்பு (200 கோடி என்று பேச்சு). இன்னும்
கண்டு பிடிக்காத இடங்கள் தவிர எல்லா இடங்களிலும் படம்பிடித்தது. ரஜினி.. முன்னாள் உலக அழகி...ஷங்கர்..ஆஸ்கார்ரகுமான். அதை விட சன் குழுமத்தின் 24 சானல்கலிளும் 24 மணிநேரமும் விளம்பரம் . பணம் போடுவதற்க்கு ஆள் கிடைத்தால் எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்வேன் என்று மீண்டும்நிருபித்திருக்கிறார் காதல், கல்லுரி, வெய்யில் போன்ற பட்ஜெட் படங்களின் தயாரிப்பாளர் ஷங்கர்


எட்டு ஹெலிகாப்டர்கள் ( ஷங்கரின் ராசி எண் ) வானில் வட்டமடிக்க, பூனாமும்பை சாலையில் 24 பி.எம்.டபிள்யூ கார்கள் பறக்க(எவன் அப்பன்வீட்டு காசு), ஒரு காரில் ரஜினி உலக அழகியுடன் பறக்க பின்னால்இன்னொரு ரஜினி துரத்த.படம் சூடு பிடிக்கிறது.
தனது வழக்கமான பார்முலாவை தள்ளி வைத்து விட்டு புதியபாதையில் பயணித்திருக்கிறார் இயக்குனர். சைன்டிஸ்ட் ரஜினி? அவரை துரத்தி துரத்தி காதலிக்கும் ஐஸ்.....ரஜினி தந்தையாக நாட்டின் தலைவராக சாருஹாஸன்.. அவரை கொன்று விட்டு நாட்டை ஆள நினைக்கும் வில்லன்.. வில்லனின் திட்டத்தைதெரிந்து கொள்ளும் சாருஹாசன் தான் ஒரு பனிப்புயலில் சிக்கிமறைந்து விட்ட்து போல் ஒரு நாடகம்போடுகிறார். சந்தானமும்,கருனாசும் இதற்கு உதவுகிறார்கள்...நாட்டின் தலைமை பொறுப்பு ரஜினியிடம்வருகிறது. ஆனால் ரஜினியோ ஐஸை விட்டு பிரியமனமில்லாமல் (இருவரும் வேறு நாட்டில் படித்துகொண்டிருக்கும்போது காதலிக்கின்றனர்) தன்னை போலவே ஒருபிம்பத்தை உருவாக்குகிறார். அதுதான் ரோபோ..??? ரோபோவை நாட்டின் தலைவராக இருக்கும்படி ப்ரொக்ராம் செய்துவிடுகிறார். பின் என்ன?ஐஸ்வர்யாவுடன் கும்மாளம்தான்?




முதல் டூயட் பாடலான

"ஐஸ்..ஐஸ்.. வர்ரியா..கிஸ்..கிஸ்..தர்ரியா..
மெர்க்குரி உதடுதான்... ஸ்டிராபெரி கனவுதான்
பாஸ்பரஸ் படுக்கையில் பகலும் இரவும் பாம்பிங்க்தான்..
வாலி எழுதிய இந்த தமிழ் பாடல் 185 நாடுகளில் 186 நாட்கள் படம்பிடிக்கபட்டது...1500 டான்சர்கள்,1501குதிரைகள்,1502 மான்கள்,1503மயில்கள்...1000 டன் சாம்பிராணி..2000 டன் தக்காளி மொத்த செலவு 40 கோடி..

சரி
.. கதைக்கு வரலாம்...நாட்டை கைப்பற்ற நினைக்கும் வில்லன்ரோபோ வை ரஜினி என்று நினைத்து கொல்லமுயற்சிக்கிறான்.. இந்த காட்சிகளில் ஹாலிவுட்டை அசால்ட்டாகமுந்தியிருக்கிறார் இயக்குனர்.. திடீர் திருப்பமாக ரோபோவின்சாப்ட்வேர் கரப்ட் ஆகி மனிதனை போல் காதல் உணர்வு வந்துவிடுகிறது.. வில்லன் ஒரு பெண் ரோபோவை (ஐஸ்வர்யாவைபோலவே) உருவாக்கி ரஜினி ரோபோவுடன் நெருங்கவிடுகிறார்கள்.. நாட்டுக்கு ஐஸூடன் ரகசியமாக வரும் ரஜினிஇரண்டு ரோபோக்களும் நெருக்கமாக இருப்பதை பார்த்துவிடுகிறார்....தான் செய்த ப்ரொக்ராம் மாறி விட்டது என்றுஉணருகிறார்...(முதல் பாதி முடிவு)

இடைவேளை வரை ரோபோ விமர்சனம்பார்த்திருப்பீர்கள்.. மன்னிக்கவும் நண்பர்களே.நான் அதுவரைதான்படம் பார்த்தேன்..அதன் பின்......கறுப்பு சட்டை அணிந்தகுண்டர்களின் தடியடி,ஆசிட் முட்டை வீச்சு.....பெட்ரோல் குண்டுகள்வீச்சு..எங்கும் கலவரம்.....ரத்த ஆறு...????காரணம்..அஞ்சாநெஞ்சன் அழகிரி.... மதுரை மா நகராட்சி பொறுப்பு குழு உறுப்பினர் மாண்புமிகு "அட்டாக்" பாண்டி தலைமையில் வந்தகும்பல்...ரோபோ திரையிடப்பட்டிருந்த அத்தனை இடங்களிலும்இந்த கதிதான்...இந்த சம்பவத்தில் மதுரை ஆட்கள் யாரும்ஈடுபவில்லை...கோர்ட் மூடி விட்டதால் வக்கீல்களுக்கு இந்தபணியை கொடுத்து விடுமாறு அண்ணன் பெருந்தன்மையுடன் கூறிவிட்டதாக அவர் மேலும் கூறினார்.

சம்பவ இடத்தில் பேட்டி அளித்த காவல் துறைதலைவர்..."அனைவரும் அமைதியாக அலறிக் கொண்டே"கலைந்து விட்டதாகவும், நிலைமை இப்போது கட்டுக்குள்இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் அட்டாக் பாண்டி" அண்ணன் ஆணையின்படி 1500 மொபைல் ஹோம் தியேட்டர்கள் தமிழ் நாடுமுழுவதும் உலவிக்கொண்டிருக்கும்.. பொது மக்கள் படம்இலவசமாக ரோபோ வை பார்க்கலாம்... மேலும் படம் பார்க்கும்அனைவருக்கும் ஒரு பவுன் தங்க நாணயம் பரிசாகவழங்கப்படும்..என்றும் அவர் மேலும் கூறினார். மீறி படத்தை யாராவது திரையிட்டால் அவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டம்பாயும் என்றும் கூறினார். காவல் துறை தலைவரும் அதைஆமோதித்தார்.

காற்று கூட எங்கள் இடையில் இனி நுழையாது என்று அழகிரி,மாறன் சகோதரர்களை பற்றி சொன்னது என்னவாயிற்று?? கலவரம்எப்படி நுழைந்தது?? பின் வரும் ரோபோ உருவாக்கம்...பரபரப்புசெய்திகளில்...................

ரோபோ.....திரைக்கு பின்னால்.....

முதலில்
மீண்டும் எப்படி பிரிவு/பிளவு ஏற்பட்டது..


இதற்கு
மூலக் காரணம் ஷங்கர்தான்எங்கின்றனர்..தகவலறிந்தவர்கள்..

சன் பிக்சர்ஸ் லோகோவை சூரியனில் போய் ஷுட் பண்ணலாம் என்று ஷங்கர் பிரியப்பட்டிருக்கிறார்.. இதற்காக திரு. மயில்சாமிஅண்ணாதுரை, திரு.அப்துல் கலாம் ஆகியோரிடமும் ஆலோசனை கேட்கபட்டிருக்கிறது..ஆனால் அருகிலிருந்த தயாநிதிஎன்னது? சூரியனுக்கா..நாங்க இங்கிருந்தே சூரியனை(உதய)சுடுவோம்..தெரியுமில்லே..என்று வாய்த் துடுக்காக சொல்லிவிட்டாராம்..இது அழகிரி காதுக்கு போக ..வந்தது வினை...
"நாங்கள் சிறியவர்கள்தானே, எங்களை மன்னிக்கக் கூடாதா..என்றுசெல்வி மூலம் தூது அனுப்பியதாக ஒரு தகவல்???

ஜில்.. ஜில்.. ஜில்... ஜொள்...ஜொள்... ஜொள்....
ஆர்.டி. எக்ஃஸ்.... உன் விழியில்....
என் மடியில் .... டைனமைட்
அண்டார்டிகாவில் செய்வோம்...லவ் ஃபைட்.
பிப்பெட் நீதான்.... பீயுரெட்.நாந்தான்..
டெஸ்ட் டீயூபில்... ரெஸ்ட் இனி ..அதை
யூ ட்யூபில் கண்டு நீ களி ஹனி.....
கூகுளில் தேடி...... குயிக் டைமில் கூடி...
பிளாக்குகளில் பாடி.....பாரடைஸ் போகலாம்...
என் பிளாக் பெர்ரி நீ வாடி....

கலைமாமணி
,வித்தக கவிஞர் பா.விஜய் ..எழுதிய இந்தப் பாடல்பனிப் பிரதேசமான அண்டார்டிகாவில் நடைபெற்றது...இப்பாடலுக்கு 5000 குளிர்சாதன பெட்டிகள் கொண்டு செட்அமைக்க வேண்டும் என்று ஷங்கர் பிரியப்பட....உடனேகொரியாவிலிருந்து சாம்சங்க் கம்பெனியிலிருந்துவரவழைககபட்டது.


இங்கு
பிரிட்ஜ் விற்ற முதல் கம்பெனி நாங்கள்தான் என்றுஅக்கம்பெனியின் தலைமை

நிர்வாகி சூ சென் பெருமையுடன் கூறினார்..

படபிடிப்பு
முடிந்தவுடன் 5000 குளிர் பெட்டிகளையும் அங்கிருந்தஎஸ்கிமோக்களுக்கு இலவசமாகவே வழங்க வேண்டுமென்றுரஜினி கூறி விட கலாநிதி மாறன் மிகவும் பெருந்தன்மையுடன்சம்மதித்து விட்டார்.


கரு விழி..குரு பார்வை
சுரு..சுரு நாசி..என் பெயரை நீ சுவாசி
செவ செவ அதரம்..நீ என் மதுரம்...
பழ ..மலை...கீழே நூலிடை
அதன் பின் ஆலிலை..

வாலி எழுதிய இந்த பாடலும் சீரோ டிகிரி குளிரில் படமாக்கபட்டபோது ரஜினி எவர் சில்வரில் செய்யபட்ட முழுஆடை அணிந்திருந்தார்( மனிஷ் மல் ஹோத்ரா)..ஐஸ்புதுமையாக(3) இலைகளினால் வடிவமைக்கபட்ட இலக்கிய நயம்சொட்டும் உடை அணிந்திருந்தாராம்.


ஒரு முக்கிய செய்தி...
இயக்குனர் ஷங்கரின் அடுத்த சொந்த படத்தை அவர் உதவியாளர்இயக்குகிறார்.
படபிடிப்பு முழுவதும் "எஸ்" பிக்சர்ஸ் அலுவலகத்திலேயே நடைபெறும்...என்று ஒரு பத்திரிக்கை செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

12 comments:

vasu balaji said...

வலையுலக வரலாற்றிலேயே முதன் முறையாக, இன்னும் திறைக்கு வராமலே ஒரு படத்தை டரியலாக்கும் விமரிசனம்..உங்கள் மணிஜீ வலைப்பூவில்..:)). என்னா அழிம்பு இது

Cable சங்கர் said...

எத்தனையோ வருஷத்துக்கு முன்னாடி எழுதினதை திரும்ப போட்டா தெரியாதா..?:)

Paleo God said...

இது பாங்காக்ல யாரோ எழுதி கொடுத்து போட்டமாதிரி இருக்கே? :))

அபி அப்பா said...

இதல்லாம் ஓவர் அக்கிரமம்! சங்கர் பார்த்து தொலைஞ்சிட போறாரு. பின்ன அடுட்த படத்துக்கு அண்டார்டிகாவிலே ஐஸ்பெட்டி கேட்பாரு. அதுக்குள்ள ஐஸ்வர்யாவை வச்சு ஷூட் பண்ணுவாரு!

Thamira said...

நல்லாயில்லை.

'பரிவை' சே.குமார் said...

//வலையுலக வரலாற்றிலேயே முதன் முறையாக, இன்னும் திறைக்கு வராமலே ஒரு படத்தை டரியலாக்கும் விமரிசனம்//

Vanampadigal ayya karuththutham namathu karuththum.

jokkiri said...

ஏன் தல இப்படி....

எல்லாரும் ஏதாவது சொன்னாங்கன்னு இதுவரை 65% படப்பிடிப்பு முடிந்திருக்கும் “மன்மத அம்பு” கதைய எழுதிடாதீங்க..

நேத்து தான் “3 இடியட்ஸ்” படத்தின் ரீமேக்கில் ஹிந்தியில் அமீர்கான் நடித்த வேடத்தில், தமிழில் விஜய் நடிக்கிறார் என்ற டெர்ரர் நியூஸ் கேட்டு டர்ராகி போயிருக்கேன்...

jokkiri said...

ஏன் தல இப்படி....

எல்லாரும் ஏதாவது சொன்னாங்கன்னு இதுவரை 65% படப்பிடிப்பு முடிந்திருக்கும் “மன்மத அம்பு” கதைய எழுதிடாதீங்க..

நேத்து தான் “3 இடியட்ஸ்” படத்தின் ரீமேக்கில் ஹிந்தியில் அமீர்கான் நடித்த வேடத்தில், தமிழில் விஜய் நடிக்கிறார் என்ற டெர்ரர் நியூஸ் கேட்டு டர்ராகி போயிருக்கேன்...

Unknown said...

எந்திரனும் iTune புரளியும் http://post.ly/q5Oy

ரோஸ்விக் said...

படம் எப்படி இருக்கோ இல்லையோ... ஆனா உங்க கதை போற விதம் சுறுசுறு... பாடல் வரிகள் அதுக்கு மேல. செம டரியல்.... :-))))

Pudhyavan said...
This comment has been removed by the author.
Pudhyavan said...

ஏதோ நானும் எழுதுறேன்னு இப்படி பிதற்ற கூடாது. விமர்சனமுன்னா இப்பிடி இருக்கணும். இந்த வலை பதிவை படிக்கவும்:
http://espradeep.blogspot.com/2010/08/blog-post_17.html