Friday, April 9, 2010

பதிவர்களுக்கு சம்திங் ராங்க்...............??


ஆத்திரத்தை அடக்க முடிந்தாலும்
மூத்திரத்தை அடக்க முடியவில்லை...
டயாபட்டிக்..

மூத்திரத்தை அடக்க முயன்றாலும்
ஆத்திரத்தை அடக்க இயலவில்லை...
ஹைபர்டென்ஷன்..

கிழிந்த நைட்டியில்
வழியும் இளமை
கிளர்ச்சியில்லை..
இம்பொடன்ஸ்...

இருட்டினதும் விளக்கை அணைக்கிறேன்...
டிமென் திஷியா..

வாங்கின கடன்
நினைவில் இல்லை..
செலக்டிவ் அம்னீஷீயா...

பல்லவன் படிக்கட்டில்..
ஏற கஷ்டம்
ஆர்த்தரைடிக்ஸ்..

விரல் மரத்து அவஸ்தை..
ஸ்பாண்டிலைட்டிஸ்

சட்டென்று பெயர் மறந்து போகிறது..
அல்சைமர்..

இதெல்லாம் சரிதான்...
இப்போதெல்லாம்
இடுகையிடாமல் இருக்க முடியவில்லை..
சம்திங் ராங்க்...


மேற்கண்ட அறிகுறிகள் உங்களுக்கு இருக்கிறதா? நீங்கள் நிச்சயம் வாருங்கள். ஸ்பெஷலிஸ்ட்களின் ஆலோசனைகள்/ தீர்வுகள் . துறை வல்லுநர்களின் விளக்கங்கள் . கட்டணம் ஏதுமில்லை. காந்திசிலை பின்புறம்/மெரினா கடற்கரை/ மாலை 5.30 மணி அளவில் . சனிக்கிழமை 10/04/10 .

இது ஒரு பொதுவான அழைப்பிதழ்

நிபந்தனைகள் பொருந்தாது.

கிணற்றை காணும் என்போர் புகார் கொடுக்கலாம். ரசீது கொடுக்கப்படும்.

பொக்கை வாய் கிழவனின் காலடியில் மொக்கை போட வாரீர்....வாரீர்...

41 comments:

Beski said...

நன்றி.

Unknown said...

அமெரிக்காவுல இருந்து வர டிக்கெட் அனுப்புவீங்களாண்ணே?

Cable சங்கர் said...

அக்மார்க் மணிஜீ...

Vidhoosh said...

typical தண்டோரா...

யுவா said...

காந்தியா? யாரது என்றால்...
காங்கரசியா.

ராம்ஜி_யாஹூ said...

சந்திப்பு குறித்து டோண்டுவின் பதிவைப் படிக்க ஆசையாய் உள்ளேன். ( டோண்டுவின் கார் சரியாக ஆறு பத்திற்கு காந்தி சிலையை நெருங்கியது...

T.V.ராதாகிருஷ்ணன் said...

:))))

Raju said...

ஒரு ஃபுல் ‘மீள்ஸ்’ சாப்ட்ட உணர்வு..!

அப்பறம், அது காணுமா..? இல்ல காணோமா..?

- யெஸ்.பாலபாரதி said...

தல... ஏதோ கொறையுதே... ஆங்.. பரம்பரை வைத்தியர்களின் லேகியம்.... :))

Raju said...
This comment has been removed by the author.
மங்குனி அமைச்சர் said...

அண்ணே சாமியார் யாரும் அவுக பெண் சீடர்களோட வர்றாகளா

செல்ல நாய்க்குட்டி மனசு said...

வித்தியாசமான அழைப்பிதழ்

சுகுணாதிவாகர் said...

உங்கள் இந்த அறிவிப்பின் நடை எனக்குப் பிடித்திருந்தது. ஆனால் சுயமரியாதையுள்ள பதிவர் என்கிற அடிப்படையில் இந்த சந்திப்பைப் புறக்கணிக்கிறேன்.

தேவன் மாயம் said...

அடுத்த சந்திப்பு வந்து விடுவோம்.

VISA said...

பதிவர்களுக்குள் சர்சை இருக்கலாம் ஆனால் சண்டை இருக்ககூடாது. இருந்தால் காந்தி குச்சியால போடுவார்.

நாமக்கல் சிபி said...

//பொக்கை வாய் கிழவனின் காலடியில்//


எங்கள் பாசமிகு அண்ணன் பாலபாரதிக்கு இப்படியொரு பெயர் இருப்பதை இத்தனை நாள் இருட்டடிப்பு செய்ததை வன்மையாகக் கண்டிக்கிறேன்!

பா.க.ச,
ஒண்டிப்புதூர் கிளை!

அகல்விளக்கு said...

அட்டகாசம்...

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

இந்தக் கவிதையை ஏற்கனவே உங்க பதிவுல படிச்சிருக்கேன் :)

ரமேஷ் வைத்யா said...

mmmmm raighttoo

Unknown said...

no chairs in this meeting please :)

appuram musical chair nu next round padhivugal aarambikkum :)

எல் கே said...

enaku aluvalagam irukum thinamaaga meetingai vaipathai kandikiren

GNU அன்வர் said...

அண்ணே வரேன் கண்டிப்பா

பா.ராஜாராம் said...

:-))

க ரா said...

:)

உமர் | Umar said...

//விரல் மரத்து அவஸ்தை..
ஸ்பாண்டிலைட்டிஸ்//

ஸ்பாண்டிலோசிஸ்

Rajan said...

//பொக்கை வாய் கிழவனின் காலடியில் மொக்கை போட வாரீர்....வாரீர்...//


பைனல் டச் ! சூப்பரு

Radhakrishnan said...

நன்றாக இருக்கிறது.

Prasanna said...

நன்றி :)

ரோஸ்விக் said...

:-))

//பொக்கை வாய் கிழவனின் காலடியில் மொக்கை போட வாரீர்....வாரீர்...//


இது பன்ச்... அருமை அண்ணா...

Jerry Eshananda said...

எப்படியோ "கரை ஏறுனா சரிதான்."
மறந்துட்டு "மலை" எறீறாதீக

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

மீள் பதிவு.

vasu balaji said...

இத்த்த்து தண்டோரா!

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

:)

நாற்காலி போட்டு உக்கார்றதா
தரையா
நல்ல புழுதியா இருக்கும் கடற்கரை!

நன்று!

கலகலப்ரியா said...

dictionary-ku ty maniji... epdi ellaam service panraaynga... avvv..

ரவி said...

:))

Jackiesekar said...

எப்படியோ "கரை ஏறுனா சரிதான்."
மறந்துட்டு "மலை" எறீறாதீக--//

ரிப்பீட்டு............

R.Gopi said...

தலைவா

காளிமுத்து உங்கள தேடறாராம்...

டக்ளஸு சொல்லிட்டு போறாரு!!

Unknown said...

//மேற்கண்ட அறிகுறிகள் உங்களுக்கு இருக்கிறதா?//

நல்லவேளை எனக்கில்லை :-)

selventhiran said...

முன்பே லயித்துச் சிரித்த கவிதைதான்...

கும்கீ, நீர் ஒன்றும் போலி டாக்டர் இல்லையே :)))

உமர் | Umar said...

//கும்கீ, நீர் ஒன்றும் போலி டாக்டர் இல்லையே //

ஸ்பாண்டிலைட்டிஸ், ஸ்பாண்டிலோசிஸ் இரண்டாலும் அவதிப்படுபவன்.

அன்புடன் மலிக்கா said...

கடைசியாக சொன்னது சரிதான் இடுகையிடாமல் இருக்கமுடிவதில்லை.

ஒரு 25 டிக்கெட் அனுப்புனீங்கன்னா
ஒரு பேக் ரவுண்டோடு வருவோமுல்ல.

முன் சீட்டு முன்பதிவு..