Thursday, April 15, 2010

மீதமிருக்கும் கதைகள்.......2


அங்க தேடிப்பாருப்பா
இங்கதானே வச்சிருந்தேன்
அன்னிக்கு கொல்லையில
எரிச்சீங்களே அந்த
பழைய மரப்பொட்டி
அதுல இருந்துச்சோ?
எதுக்கும் பரண் மேல
ஒரு தடவை பாரேன்
கொஞ்சம் மூக்குப்பொடியை
உறிஞ்சியபடி
நிணைவு அடுக்குகளில்
துழாவுகிறார் அப்பா
அவர் தொலைத்தது
எதுவென அறிந்துகொள்ள
இன்னும் கொஞ்சம் நாளாகும்
எனக்கு என்பது மட்டும் புரிந்தது

.........................................................

உனக்கு ஒன்னுமே தெரியலை
அப்பா என்கிறான் மகன்
உனக்கு இப்போது
புரிந்திருக்குமே
என்பது போலிருந்தது
அப்பாவின் பார்வை

20 comments:

Vidhoosh said...

அப்டியா கதை...

எறும்பு said...

ஆமா அண்ணாச்சி உங்களுக்கும் வயசாயிடிச்சி..

:)

Unknown said...

இங்கயும் அப்படியே...

ஹேமா said...

உண்மைதான் !

vasu balaji said...

எனக்குப் புரியுது மணிஜீ. பயம்மாவும் இருக்கு:(. இப்பல்லாம் 35 வயசுலயே வருதாம்.

செல்ல நாய்க்குட்டி மனசு said...

தொலைத்தது இளமை என்பதை அழகாகச் சொல்லி இருக்கிறீர்கள்.

பா.ராஜாராம் said...

நல்லாருக்கு மணிஜி. :-)

அப்புறம்,

பொக்கிஷங்களுக்கு நன்றி.அன்புசார் பொட்டலங்களுக்கும்...

T.V.ராதாகிருஷ்ணன் said...

நல்லாருக்கு மணிஜி.

க ரா said...

நலலாருக்கு மணிஜீ.

Unknown said...

சரிதான்

Santhappanசாந்தப்பன் said...

எனக்கு புருஞ்சிடுச்சி!

Santhappanசாந்தப்பன் said...

எனக்கு புரிஞ்சிடுச்சி!

Sure said...

என்ன சொல்வது , நெகிழ்ந்தேன்
என்பதை தவிர.

Sanjai Gandhi said...

//நிணைவு //

கொஞ்சம் பெரிய நினைவோ மாமா? :)

பனித்துளி சங்கர் said...

புதுமை !
பகிர்வுக்கு நன்றி !
தொடருங்கள் மீண்டும் வருவேன் .

பத்மா said...

புரிந்ததா?

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

இரண்டாவது அருமை.

செ.சரவணக்குமார் said...

ரைட்டு மணிஜீ.

உண்மைத்தமிழன் said...

புரிஞ்சதுண்ணே..! எனக்கும் இப்போல்லாம் அப்படித்தான் இருக்கு..!

இரசிகை said...

2-vathu kavithai pidichchirukku!