Wednesday, September 9, 2009

சுற்றி வளைத்து ஒரு சந்தேகம்........கவிதை



உலக்கையை போட்டு
உள்ளறையில் ஏன்
உட்கார்ந்திருக்கிறாய் அம்மா?

விலக்குடா மகனே

விளங்கவில்லை
யார் வந்து சொன்னார்கள்?

காகம் வந்து
கல்லெடுத்து போடும்
தெரிந்து கொள்வேன்

காகத்துக்கு எப்படி தெரியும்?
யார் சொல்வார்கள்?

அதோ....அந்த
மரக்கிளை

மரக்கிளைக்கு?

அதோ ஓடுதே
அணில் அது சொல்லும்

யார் சொல்வார்
அந்த அணிலுக்கு?

சாமிதான் ராசா
சொல்லும்

அப்ப சாமிக்கு?

அம்மா சற்று யோசித்து
சொன்னாள்..
சாமிக்கு நான் தான்
சொல்வேன்..

தலையை ஆட்டிக்கொண்டேன்
விளங்கினதுக்கு அடையாளமாய்..

35 comments:

Cable சங்கர் said...

/அம்மா சற்று யோசித்து
சொன்னாள்..
சாமிக்கு நான் தான்
சொல்வேன்..
//

suuper

நையாண்டி நைனா said...

What
is
Happening
Here?

Vidhoosh said...

ரொம்ப கேள்வி கேக்குறீங்க. விளங்கிடும்..

--வித்யா

Vidhoosh said...

:) கவிதை நல்லாருக்கு.
--வித்யா

இரும்புத்திரை said...

கவிதைப் படித்த பிறகு புரிந்தது உலகம் உருண்டை தான்

அகநாழிகை said...

கவிதை நன்றாக இருக்கிறது.

கலையரசன் said...

சாமியை விட அம்மாதான் உயர்ந்தவர்!!

அழகு தலைவா...

வால்பையன் said...

அதனாலத்தான் அம்மாவை கடவுள்னு சொல்றாங்களா?

butterfly Surya said...

மணிஜி.. ரெண்டு நாளா கடை பக்கமே போகவில்லையா..??

ஒரே கவிதை மழையா இருக்கு..

butterfly Surya said...

மணிஜி.. ரெண்டு நாளா கடை பக்கமே போகவில்லையா..??

ஒரே கவிதை மழையா இருக்கு..

Raju said...

மொதல்ல, இவர்கிட்டயிருந்து பேனாவப் புடுங்கனும்பா...!

தேவன் மாயம் said...

விளங்கி விட்டது! விளங்கிவிட்டது!!! ஓட்டும் போட்டு விட்டேன்!!

Unknown said...

நல்லா இருக்கு கவிதை. கடைசி இரண்டு வரிகள் இல்லாவிட்டால் கூட நன்றாக இருக்கும்.

துபாய் ராஜா said...

அறியாத வயதில்
புரியாத கேள்விகள்...

முத்துலெட்சுமி/muthuletchumi said...

கவிதை நல்லா இருக்கு..

அன்புடன் அருணா said...

வால்பையன் ...
/அதனாலத்தான் அம்மாவை கடவுள்னு சொல்றாங்களா?/
ரிப்பீடடு!

மணிஜி said...

/Cable Sankar said...
/அம்மா சற்று யோசித்து
சொன்னாள்..
சாமிக்கு நான் தான்
சொல்வேன்..
//

suuper///

நன்றி கேபிள்..சின்ன வயசுல எங்க அம்மா சொன்னதுதான்

மணிஜி said...

/What
is
Happening
Here?//

நத்திங் நைனா

மணிஜி said...

/ Vidhoosh/விதூஷ் said...
:) கவிதை நல்லாருக்கு.
--வித்யா//

நன்றி வித்யா

மணிஜி said...

/இரும்புத்திரை அரவிந்த் said...
கவிதைப் படித்த பிறகு புரிந்தது உலகம் உருண்டை தான்//

அப்படியா தம்பி?

மணிஜி said...

/"அகநாழிகை" பொன்.வாசுதேவன் said...
கவிதை நன்றாக இருக்கிறது//


நன்றி வாசு

மணிஜி said...

/ கலையரசன் said...
சாமியை விட அம்மாதான் உயர்ந்தவர்!!

அழகு தலைவா.//


நன்றி கலை..அப்படியும் அர்த்தமிருக்கா?

மணிஜி said...

/ வால்பையன் said...
அதனாலத்தான் அம்மாவை கடவுள்னு சொல்றாங்களா//


எதுனாலும் அதுதானே உண்மை..நன்றி அருண்

மணிஜி said...

/ butterfly Surya said...
மணிஜி.. ரெண்டு நாளா கடை பக்கமே போகவில்லையா..??

ஒரே கவிதை மழையா இருக்கு.//

நன்றி சூர்யா

மணிஜி said...

/ ♠ ராஜு ♠ said...
மொதல்ல, இவர்கிட்டயிருந்து பேனாவப் புடுங்கனும்பா...//

திருநெல்வேலிக்கேவா?

மணிஜி said...

/தேவன் மாயம் said...
விளங்கி விட்டது! விளங்கிவிட்டது!!! ஓட்டும் போட்டு விட்டேன்//


நன்றி தேவா...

மணிஜி said...

கே.ரவிஷங்கர் said...
நல்லா இருக்கு கவிதை. கடைசி இரண்டு வரிகள் இல்லாவிட்டால் கூட நன்றாக இருக்கும்//

சரிதான் தலைவரே..நன்றி

மணிஜி said...

/ துபாய் ராஜா said...
அறியாத வயதில்
புரியாத கேள்விகள்..//

நன்றி நண்பா

மணிஜி said...

/ முத்துலெட்சுமி/muthuletchumi said...
கவிதை நல்லா இருக்கு.//


மிக்க நன்றி மேடம்..

மணிஜி said...

/ அன்புடன் அருணா said...
வால்பையன் ...
/அதனாலத்தான் அம்மாவை கடவுள்னு சொல்றாங்களா?/
ரிப்பீடடு//


நன்றி

ᾋƈђἷłłἔṩ/அக்கில்லீஸ் said...

கவிதை அருமை... :)

ᾋƈђἷłłἔṩ/அக்கில்லீஸ் said...

கவிதை அருமை... :)

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைபூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
http://www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….

இவண்
உலவு.காம்

கார்த்திகைப் பாண்டியன் said...

பின்னி இருக்கீங்க நண்பா.. முடித்த விதம் அருமை..;-))))

மாதவராஜ் said...

ரசித்தேன்.