
கவிதை மாதிரி....கவிதையல்ல
எதாவது எழுதுங்கள்
என்ன எழுதுவது...?
எதை பற்றியாவது ....
ம்ம்ம்..எதையும் பற்றி எழுதுவது
என்னால் ஆகாது..
வரவு என்பதே இல்லை..இதில்
பற்று எப்படி வரும்..
பின்..
கொஞ்சம் பொறுமை..
எதையாவது
கற்று பின் பெற்றதை
எழுதுகிறேன்....
ஒரு நகைச்சுவை(கொஞ்சம் பழசுதான்)
இருவர் ஒரு ஹோட்டலுக்கு சாப்பிட போனார்கள்.அங்கே ஒரு பலகையில்"இங்கே நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம்.பணத்தை உங்கள் பேர பிள்ளைகள் செலுத்தினால் போதும்" என்று அறிவிக்க பட்டிருந்தது.நம்ம ஆளுகளுக்கு கேக்கவா வேணும்.வெளுத்து கட்டினார்கள்.பெரிய ஏப்பத்துடன் கையை கழுவி விட்டு வந்தவுடன் சர்வர் ஒரு பெரிய தொகையை பில்லாக கொடுத்தார்.நம்ம ஆளுக்கு கோபம்னா அப்படி ஒரு கோபம்"என்னாங்கடா என்ன எழுதி போட்டு இருக்கு..என்ன இது பில்லு? சர்வர் அமைதியாக சொன்னார்"எல்லாம் சரிதான் ஆனா இது உங்க தாத்தா சாப்பிட்ட பில்லாச்சே....
தலைவரே..நீங்க இப்ப மதுரைல இருக்கணும்..அழகிரி அண்ணன் 3.5 லட்சம் ஓட்டு வித்தியாசத்துல ஜெயிக்கப் போராராம்.
கணக்கு போட்டு பாருங்க.."எத்தனை ஆடு...எம்புட்டு கோழி...ம்ம்ம்..