நாயருக்கும்,முகர்ஜிக்கும் முட்டை வியாபாரம் சுத்தமாக படுத்துவிட்டது.கடை திறந்து காத்தாடியது.ஒரு சமயம் தாத்தா இல்லைன்னா பெரியம்மா தயவில் முட்டை விற்று வந்த வரதனும்,பாண்டியனும் இப்ப பெரும் குழப்பத்தில் இருக்கிறார்கள்.
டாஸ்மாக்கில் ஒரு ஆளை ரெகுலராக பார்ப்பேன்.பார்ட்டி தண்ணி அடிக்காது..உள்ளே வரும்..2 காலி பாட்டிலை எடுத்து நைசாக பையில் போட்டுகிட்டு வெளியேறிடும்..பின்னால் போய் பார்த்தால் சைக்கிளில் தொங்க விட்டுருந்த பை முழுக்க காலி பாட்டில்..ஒரு கட்டிங் வாங்கி கொடுத்து விசாரித்தால் பார்ட்டிக்கு முழு நேர தொழிலே அதுதான்..ஒரு நாளைக்கு எப்படியும் 200ரூ தேத்திடுமாம்.வீட்டு செலவு இப்படித்தான் ஓடிகிட்டு இருக்காம்.எலேய்..மாட்டினா பின்னிடுவானுகளேன்னா.இது வரைக்கும் மாட்டல.மாட்டினா பார்த்துகிடுவோம்...கிட்ட தட்ட 100 கடை ஒரு நாளைக்கு கவர் பண்றாராம்..சூப்பரப்பு..
கடைசி சொட்டையும்
கவிழ்த்து அடித்த பின்தான்
தெரிந்தது..
காலி பாட்டிலுக்குள்
பொண்டாட்டியின் தாலி..
--------------------------------------------------------------
---------------------------------------------------------------------------
தினத்தந்தி யை படிக்கவே பயமா இருக்கு.விதம்,விதமா கொலை பண்றாங்கப்பா..பணம் இல்லைன்னா கள்ளக்காதல்.அதுலயும் மதுரைல பெத்த புள்ளையையே ஒருத்தி பீஸ் போட்டிருக்கா..சென்னைல ஒரு பெண்..காதல்..வீட்டில் சம்மதிக்கவில்லை..காதலனுடன் வாழ பணம் தேவை..தன் தோழியை மாறு வேடத்தில் வீட்டுக்கு வர சொல்லி தன் தாயின் முகத்தில் மயக்கப் பொடி தூவ வைக்கிறாள்.தானும் மயங்கி விழுவது போல்
நடித்து பின் தாயை உருட்டு கட்டையால் மண்டையை உடைத்து வீட்டிலிருந்த பணம் மற்றும் நகைகளை தோழியிடம் கொடுத்தனுப்பி விட்டாளாம்..என்ன தவம் செய்திருக்கிறாள் அந்த தாய்....
--------------------------------------------------------------------
உடன்பிறவா உபத்திரத்தின் சாராய ஆலையிலிருந்து டாஸ்மாக்கின் தேவையில் 25% கொள்முதல் செய்யும்படி அரசு உத்தரவாம்..என்னய்யா நடக்குது?
--------------------------------------------------------------------
குடி,பீடி,சிகரெட் பழக்கமெல்லாம் இருந்தா முதுமையே வராதாம்.ஒரு சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது...(அட சீக்கிரம் டிக்கெட்டாம்).அதனால நான் இனிமேல் வெள்ளிக்கிழமைல மட்டும் குடிக்கலாம்னு முடிவெடுத்திருக்கேன்.
--------------------------------------------------------------------