Monday, October 12, 2009

மானசீகமாய்...................கவிதை



எத்தனை முறை
முனை உடைந்தாலும்
மீண்டும் சீவுகிறேன்

உன்னை வேதனை
படுத்துவதில்
எனக்கும் சம்மதமில்லைதான்

இந்த ஓவியத்துக்கு
உயிர் கொடுத்தாக
வேண்டியிருக்கிறதே

மானசீகமாய்
கேட்டுக்கொள்கிறேன்
பென்சிலிடம் மன்னிப்பு

ஒரு பின் குறிப்பு:

எத்தனை காத தூரம்
இடுப்பொடிய
சுமந்து வருகிறேன்
ஒரு குடம் நீரை

என் கால்
கொப்புளங்களின்
வேதனை அறியாமல்
எத்தனை தற்பெருமை
இந்த ஓவியனுக்கு....

28 comments:

கார்த்திகைப் பாண்டியன் said...

படத்துக்காக எழுதின கவிதையா நண்பா.? கடைசி டச் அருமை.. .

முரளிகண்ணன் said...

அருமை தண்டோரா

Cable சங்கர் said...

ஏதோ சொல்ல வர்றீங்க..ன்னு புரியுது.. ஆனா என்னன்னுதான் புரியல..:(

கலையரசன் said...

படம் அருமை! உங்க கவிதையை விட...

நையாண்டி நைனா said...

ennaa solrathu? nallaa irukkungrathai thavira.

தேவன் மாயம் said...

நல்லா இருக்கு!! எதையோ சொல்லி கடைசியில் ஒன்று சேர்த்துவிட்டீர்கள்!!

தேவன் மாயம் said...

மொய் வச்சாச்சு நண்பரே!!

பிரபாகர் said...

எத்தனை முறை படிக்கிறாய்
உன் அண்ணனின்
இனிய கவிதைகளை.
சலிப்பே இல்லையா? மனம் என்னிடம்.
சலிக்கவே சலிக்காது,
மனதிற்கு நான்.

பின்குறிப்பு.

நிறையத்தான் படிக்கிறாய்,
அண்ணனென்றால் மட்டும்
ஏன் அத்தனை ஆர்வம்?
நான் மனத்திடம்.
அத்தனையும் அருமை,
மனம் என்னிடம்.

பிரபாகர்.

ᾋƈђἷłłἔṩ/அக்கில்லீஸ் said...

அருமை அண்ணா... ஓவியமும் சூப்பர்.. :))

vasu balaji said...

ரொம்ப வித்தியாசமான கவிதை. அருமை. பிரபாகரின் பின்னூட்ட கவிதையும்.

இரும்புத்திரை said...

//என் கால்
கொப்புளங்களின்
வேதனை அறியாமல்
எத்தனை தற்பெருமை
இந்த ஓவியனுக்கு.//

anna vanthuten..
padaththula oru kaalai kaanom

Anonymous said...

நல்லா இருக்கு மணி.

மணிஜி said...

//எத்தனை முறை படிக்கிறாய்
உன் அண்ணனின்
இனிய கவிதைகளை.
சலிப்பே இல்லையா? மனம் என்னிடம்.
சலிக்கவே சலிக்காது,
மனதிற்கு நான்.

பின்குறிப்பு.

நிறையத்தான் படிக்கிறாய்,
அண்ணனென்றால் மட்டும்
ஏன் அத்தனை ஆர்வம்?
நான் மனத்திடம்.
அத்தனையும் அருமை,
மனம் என்னிடம்.

பிரபாகர்.//


பிரபா...
பின்னூட்ட கவிதை அருமை
அன்புக்கு நன்றி

மணிஜி said...

//ஏதோ சொல்ல வர்றீங்க..ன்னு புரியுது.. ஆனா என்னன்னுதான் புரியல..:(//

சயந்திரம் பார்ல வச்சு சொல்றேன்

ஈரோடு கதிர் said...

ஆஹா..

அற்புதம்

படம் அழகோ அழகு..

அதற்குச் சமமாய் கவிதையும்

butterfly Surya said...

பிரபாகர் கவிதை அருமை.

ஆனால் உங்களுக்கு ஒட்டு போட்டாச்சு.

R.Gopi said...

விருதிற்கு வாழ்த்துக்கள் "தல"...

தாங்கள் மென்மேலும் இதுபோல் கலக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...

எப்போவும் போல, இந்த பதிவும் பட்டைய கெளப்புதுபா...

ஹேமா said...

கவிதை தொடங்கி முடித்த விதம் மனசைத் தொட்டது.

புலவன் புலிகேசி said...

அருமை நண்பா.

பா.ராஜாராம் said...

அருமையாய் வந்திருக்கு மணிஜி.படத்துடன் ஒன்றும் அழகு!

VISA said...

nach.....

பித்தன் said...

நல்லா இருக்கு

மணிஜி said...

கருத்துரைத்த நண்பர்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்

அகநாழிகை said...

தண்டோரோ,
நன்றாக இருக்கிறது.
‘ஒரு பின் குறிப்பு‘ என்பதை நீக்கிவிட்டால் நன்றாக இருக்கும்.

யாத்ரா said...

ரொம்ப நல்ல கவிதை, ரொம்ப நல்லா இருக்குங்க.

அன்புடன் நான் said...

எத்தனை காத தூரம்
இடுப்பொடிய
சுமந்து வருகிறேன்
ஒரு குடம் நீரை


என் கால்
கொப்புளங்களின்
வேதனை அறியாமல்
எத்தனை தற்பெருமை
இந்த ஓவியனுக்கு....//


ந‌ல்லாயிருக்குங்க‌.

Beski said...

பி.கு. டாப்பு.

ஒரே படத்திற்கு ரெண்டு கவிதை ஐடியாவா?

இன்றைய கவிதை said...

ஒண்ணும் சொல்றதுக்கில்ல...
பெரும்பாலான நேரங்கள் நாம்
கனவோவியங்களில் மயங்கி,
நிஜங்களை மறந்து விடுகிறோம்!

-கேயார்