Monday, May 31, 2010

நானும் வடை பெறுகிறேன்




அத்வானி மன்மோகனை சந்தித்து வாழ்த்து சொகிறார்..நிதிஷ் லாலு சந்தித்து கொள்கிறார்கள்..ராகுல் அத்வானியிடம் ஆசி பெற்றுக் கொள்கிறார்..அந்த மாதிரி முன்னாள்,இன்னாள் முதல்வர்களை சந்திக்க வைத்தால் என்ன ? என்று ஒரு முயற்சி


அண்ணா சமாதிக்கும்,எம்ஜிஅர் சமாதிக்கும் இடையில் மேடை அமைக்கப் பட்டு இருக்கிறது..கருணநிதி சரியான நேரத்துக்கு வந்து விடுகிறார்..அம்மாவை பற்றி சொல்ல வேண்டுமா?வழக்கம் போல் லேட்டாக வர..கருணா விரல்களால் முகத்தை மூடிக் கொண்டு விரலிடுக்கு வழியாக அம்மையாரை பார்க்கிறார்..

”என்ன என் முகத்தை நேருக்கு நேர் பார்க்க பயமா?

இல்லை அம்மணி “கிரகணத்தை அப்படித்தான் பார்க்கணும்..கேள்விபட்டதில்லையா?

வார்த்தை விளையாட்டு வேண்டாம்..மக்களுக்காக என்ன செஞ்சிருக்கிங்க..

எல்லாருக்கும் எல்லாம் செஞ்சாச்சு..இனி கனி மட்டும்தாம் மீதம்.அதையும் செஞ்சுட்டா என் தலைவலி ஒழியும்..

நான் தமிழக மக்களுக்கு என்ன செஞ்சிங்கன்னு கேட்டேன்..உங்க ஆட்சியில எத்தனை அதிகார மையங்கள்..ஆளாலுக்கு ஆடறாங்க..

அதிகாரம் பரவலாக்கபட வேண்டும் என்பதுதானே அண்ணனின் ஆசையும் கூட..

விலைவாசிய பாத்திங்களா?விலைன்னு எழுதி வாசிக்கத்தான் முடியுது...

அம்மையாரே..மக்களின் வாங்கும் சக்தி அதிகமாகிவிட்டது..அதை விட மக்களை வாங்கும் சக்தியும் அதிகமாகி விட்டது...இந்த தேர்தலில் தெரிந்து கொண்டோம்..

ரொம்ப பீத்திக்காதீங்க...அடுத்த ஆட்சி என்னுடையதே..அப்ப வச்சுக்கறேன்...


அம்மணி....இனி வெற்றி என்பது வாங்கபடவேண்டிய ஒன்று.. 2011 தேர்தலுக்கு நாங்க இப்பவே பட்டுவாடாவை ஆரம்பிச்சுட்டோம்..எப்புடி??

வாக்கு சீட்டு முறை வந்துட்டா நீங்க ஜெயிக்கவே முடியாது..

அறியாமையில் அரற்றுகிறீர்கள்..அது இன்னும் சொர்க்கம்...உங்களுக்கு சுத்தம்..ஒன்னு காந்தி,இல்லன்னா கத்தி..எவனாச்சும் எதிர்ப்பான்?

இடையில் தண்டோரா குறுக்கிட்டு..நீங்க மக்கள் பிரச்சனையை பத்தி ஒன்னுமே பேசலையே..

சிறுதாவூர் சீமாட்டி . .. நம் பிரச்சனை அப்புறம் .முதல்லில் இவனை தீர்த்துவோமா?

ஆமாம் ...அதுதான் முக்கியம்....ஸ்டார்ட் ம்யூசீக்..

கடற்கரையில் பதிவர் சந்திப்பு முடிகிறது...

அக்னிப்பார்வை : அதோ, அங்க முனகல் கேக்குது..தண்டோராவா இருக்குமோ?
அடப்பாவி அவனேதான்..அப்பவே சொன்னென் ..ஆட்டோ வரும்னு..பார்த்தா புல் டோசர் ஏறினமாதிரி இருக்கு..


ரமேஷ் வைத்யா : ஏ அப்பா..யாராச்சும் அவனுக்கு சரக்கு வாங்கி கொடுங்கப்பா..எந்திரிச்சுருவான்..

லக்கிலுக் : உடலெங்கும் இருக்கும் நகக்குறிகளை பார்த்தால் புத்திக்கு புதிதாக ஏதோ படுகிறது...ஆனால் மனசு ஏற்க மறுக்கிறது...

அதிஷா “ஐயா லாலி..லாலி..ஜாலி..ஜாலி...தண்டோர காலி..காலி....

முரளிகண்ணன் : இப்படித்தான் 80களில் வந்த ஒரு திரைப்படத்தில் மோகன் ஹீரோ என்று நினைக்கிறேன்..

கேபிள் :பரங்கிமலை ஜோதி தியேட்டர் போஸ்டர் மாதிரியே இருக்கானே..ஒரு சேஞ்சுக்கு ஹாட் ஸ்பாட்ல போட்றுவமா?

பைத்தியக்காரன் : அதிகார வர்க்கத்தின் உரையாடலில் அற்பர்கள் மூக்கை நுழைத்தால் இப்படித்தான் கட்டுடைந்து போகும்..

ஜ்யோவ்ராம்...: இனியும் ஒவ்வொரு சனியும்

எண்ணெய் தேய்த்து குளியும்..

எழுதும் வாழ்நாள் முழுதும்,

அவர்தமை தொழுதும்

நர்சிம் : எதாவது செய்யணும் பாஸ்..

டோண்டு : என்ன செய்யறது..தொட்டாலே போயிடும்..சமீபத்துல ..இந்த வார்த்தைக்கு காங்கோ மொழில ஒரு கவிதை படிச்சேன்..

வால்பையன் “ “சே..வடை போச்சே..கடைக்கு தனியாத்தான் போகனுமா?

ஜாக்கி சேகர் போட்டோ எடுத்துக் கொண்டு அவசரமாக கிளம்புகிரார்...ஜாக்கி எங்க? பின்ன மீ த பர்ஸ்ட்..போய் சூடா பதிவு போடனுமில்லே. ..

13 comments:

மணிஜி said...

இதை யாருப்பா தமிழ் மணத்துல இணைச்சது?” தலைப்பை பார்க்கலையா?

vasu balaji said...

சரி. 250 ஃபாலோயருக்கு வாழ்த்துகள்:)))

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

கலக்கல் சார்...

Unknown said...

அம்மாவையும்.. ஐயாவையும் வைஞ்சுகிட்டே இருந்தா இப்பிடித்தான்..
உசிர் இருக்குதா.. ஒரு இரங்கற்பா பாடனும்..
யாருகிட்டயாவது மிச்சம் மீதி குவார்டர் இருந்தா குடுப்பா.. அப்பத்தான் ஒப்பாரி நல்லா வரும் ...

butterfly Surya said...

மீள் பதிவா.?

T.V.ராதாகிருஷ்ணன் said...

250 ஃபாலோயருக்கு வாழ்த்துகள்

செ.சரவணக்குமார் said...

மணிஜீ அண்ணா நலமா?

மீள்பதிவா போடுறீங்களேன்னு கேட்டேன்.

கலகலப்ரியா said...

||வானம்பாடிகள் said...
சரி. 250 ஃபாலோயருக்கு வாழ்த்துகள்:))||

மணிஜியும் அந்த லிஸ்ட்ல இருந்தாச் செரி... இல்லைன்னா மணிஜிக்கும் ஒரு வாழ்த்தை சொல்லுங்க சார்...

வாழ்த்துகள் மணிஜி..

க ரா said...

மீள் பதிவா ஜீ. ஏற்கனவே படிச்ச மாதிரி இருக்கு.

Romeoboy said...

போன் பண்ணா எடுக்கணும் .. சொல்லிட்டேன் .

geethappriyan said...

//கருணநிதி சரியான//
அண்ணே காலை விட்டுட்டீங்க!!!

பாலா said...

அண்ணே... உங்கள் கவனத்திற்கு

http://charuonline.com/blog/?p=594

Unknown said...

புதிய பூக்காரிகள் - மாஸ்டர் பப்புவின் மம்மி(சிஸ்டர் ஆஃப் கார்கீ), தமிழ்மொழியின் அம்மா, பரங்கிமலை அதிஷாவோட புதுப் பொண்டாட்டி, நரகல்சிம்மோட பொண்டாட்டி - இப்பவாவது இவனுங்களுக்கு குத்துதான்னு பாப்போம்