Wednesday, October 14, 2009

அந்தரங்க சாட்சியாய்......கவிதை




இந்த இரும்பு பாதை
முடியும் இடத்தில்
ஒரு நகரம்
இருந்தது..

இன்று
அது இல்லை
காற்றில் கலந்திருக்கும்
ரத்த வாசம்
மட்டுமே
மிச்சமாயிருக்கிறது

தினம் விடியலில்
தன்னை
புதுப்பித்துக் கொள்ளும்
அழகான
இயற்கை
மட்டுமே
அந்தரங்க
சாட்சியாயிருக்கிறது..

மெலிதாய்
கேட்டுக்கொண்டிருந்த
முனகல்களும்
அடங்கி விட்டன..

இடமும் வலமுமாய்
நெளியும் இந்த
வழியேதான்
கடைசியாக கடந்து
போனது..ஆர்மி ரயில்

இவைகளுக்குள்
பறிமாறிக்
கொள்ளப்படும்
தடக்..தடக்
மொழியும்
அதிர்வும்
இனி இல்லை..

அந்த நகரம்
முற்றிலுமாய்
அழிக்கப்பட்டு
விட்டது...

நீங்கள்
இந்த பாதையின்
வழியே சென்று
இடதுபுறம்
திரும்பி
பாருங்கள்

அங்கே
இரண்டும்
ஒன்றோடு
ஒன்று
பிண்ணி
பிணைந்திருக்கலாம்
சாரைகளாய்...

40 comments:

Cable சங்கர் said...

நிஜமாகவே அருமை..

பிரபாகர் said...

மனதை நெருடும் கவிதை... அருமை அண்ணா...

பிரபாகர்.

VISA said...

கவிதையில் எங்கோ கூட்டிக்கொண்டு போய்விடுகிறீர்கள். அருமை

vasu balaji said...

மனதை உலுக்கும் வரிகள். அருமைங்க.

சுகுணாதிவாகர் said...

நல்ல வெளிப்பாடு!

வால்பையன் said...

இரண்டாம் உலகபோர் சமயங்களில் பல நகரங்கள் இப்படி தான் காட்சியளித்ததாக சில திரைப்படங்கள் சொல்கின்றன!

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

கவிதை நல்லா இருக்குங்க.

தேவன் மாயம் said...

கவிதையை எளிமையாஅ எழுதுவது எப்படின்னு ஒரு பதிவே போடலாம் நீங்க!!

R.Gopi said...

//இடமும் வலமுமாய்
நெளியும் இந்த
வழியேதான்
கடைசியாக கடந்து
போனது..ஆர்மி ரயில்//

நான்கு பாராக்கள் படித்தும் தெரியாத / தெளியாத இந்த பதிவின் சாரம் இந்த பாரா படிக்கும் போது, தெரிந்தது.... பலே... கூட‌வே க‌ண்ணீரும்... (வேத‌னையில்...)

//அந்த நகரம்
முற்றிலுமாய்
அழிக்கப்பட்டு
விட்டது...//

மிக‌ மிக‌ க‌ன‌மான‌, க‌ல்லையும் க‌ரைய‌ வைக்கும் அற்புத வ‌ரிக‌ள்... வ‌லியினை மிக‌ அழுத்த‌மாக‌ ப‌திவு செய்திருக்கிற‌து...

ரொம்ப‌ ந‌ல்லா எழுதி இருக்கீங்க‌ "த‌ல‌".........

ரவி said...

ஏய் இந்த ஆளை வெச்சு யாரும் காமெடி கீமெடி பண்ணலியே ?

உண்மையிலேயே இது கவிஜையா ? அய்யகோ ?

இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தி உடம்ப ரணகளமாக்கிருவானுங்க மணிஜி...

தமிழ்கூறும் நல்லுலகத்தை ஆசிப் மீரான் தான் காப்பாத்தனும்..

மணிஜி said...

//ஏய் இந்த ஆளை வெச்சு யாரும் காமெடி கீமெடி பண்ணலியே ?

உண்மையிலேயே இது கவிஜையா ? அய்யகோ ?

இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தி உடம்ப ரணகளமாக்கிருவானுங்க மணிஜி...

தமிழ்கூறும் நல்லுலகத்தை ஆசிப் மீரான் தான் காப்பாத்தனும்..//

ரவுடியாக்கறாங்கய்யா....

Ramesh said...

//:தினம் விடியலில்
தன்னை
புதுப்பித்துக் கொள்ளும்
அழகான
இயற்கை
மட்டுமே
அந்தரங்க
சாட்சியாயிருக்கிறது..//

மனதுக்கு இதுவே சாட்சியாய் மனசாட்சி.
பிடித்த வரிகள்,அருமை

அகநாழிகை said...

மணிஜி,
கவிதை நன்றாக வந்திருக்கிறது. நீங்கள் சொல்லும்போது இவ்வளவு அழகாக வந்திருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை.

வரிகளை அதிகம் ஒடிக்காமல் இருந்திருக்கலாம்.

- பொன்.வாசுதேவன்

நையாண்டி நைனா said...

எல்லாரும் சொல்லிட்டாங்க... நான் சொல்றதுக்கு ஒன்னும் வைக்கலே... ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

மண்குதிரை said...

romba nalla irukku

சென்ஷி said...

கவிதை மிகவும் அருமை தண்டோரா!

க.பாலாசி said...

தாங்கள் கையாண்ட வரிகளின் கோர்வை நேர்த்தியாக உள்ளது.

கவிதை நன்று....

T.V.ராதாகிருஷ்ணன் said...

அருமை..

butterfly Surya said...

vote for Maniji...

கலையரசன் said...

நேர்ல பார்த்து பாராட்டனும்!
நாளைக்கு இரவு வர்றேன் அங்க...
தீபாவளி கழிச்சி மீட் பண்ணுவோம்!!

மணிஜி said...

/நேர்ல பார்த்து பாராட்டனும்!
நாளைக்கு இரவு வர்றேன் அங்க...
தீபாவளி கழிச்சி மீட் பண்ணுவோம்//

கலை நாளை காலை நான் காரில் கிளம்புகிறேன்.வடலூர் வழியாக தஞ்சை..பின் ஞாயிறு அல்லது திங்கள் ரிட்டர்ன் அதே வழியாக

ஈரோடு கதிர் said...

மனதைப் பிசைந்து பெருமூச்சு விட வைத்த கவிதை

ஈரோடு கதிர் said...

மனதைப் பிசைந்து பெருமூச்சு விட வைத்த கவிதை

பாலா said...

கான்சப்ட் அருமையா இருக்குங்க தண்டோரா.

ஆனா எண்டர் பட்டன் சரியா வேலை செய்யுதான்னு ஒரு தடவை செக் பண்ணிக்கங்க. :) :) :)

மணிஜி said...

/கான்சப்ட் அருமையா இருக்குங்க தண்டோரா.

ஆனா எண்டர் பட்டன் சரியா வேலை செய்யுதான்னு ஒரு தடவை செக் பண்ணிக்கங்க. :) :) :)//

புரியுது..ஒரு புது உத்தியாக இருக்கடுமேன்னுதான்(சாரி.கொஞ்சம் ஓவர்தான்)

முரளிகண்ணன் said...

அருமை தண்டோரா

Kumky said...

அற்புதம் மணிஜி..

எளிய வார்த்தைகளுனூடேதான் எல்லோர்க்குமான ஆற்றுப்படுத்தல்கள் இருக்கக்கூடும்...

மாதவராஜ் said...

//இந்த இரும்பு பாதை
முடியும் இடத்தில்
ஒரு நகரம்
இருந்தது..

இன்று
அது இல்லை
காற்றில் கலந்திருக்கும்
ரத்த வாசம்
மட்டுமே
மிச்சமாயிருக்கிறது//

இந்த வரிகளை இன்னும் செதுக்கியே இன்னும் உக்கிரமாக கவிதையைக் கொண்டு வந்திருக்க முடியுமே. பிறகு சொல்லப்பட்டவை கவிதையின் அடர்த்தியை வெகுவாக குறைக்கிறது, எனக்கு!

யாத்ரா said...

கவிதை ரொம்பப் பிடித்திருக்கிறது.

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

நல்ல 'கவிதை'தான் மணிஜி.

இன்றைய கவிதை said...

//தினம் விடியலில்
தன்னை
புதுப்பித்துக் கொள்ளும்
அழகான
இயற்கை
மட்டுமே
அந்தரங்க
சாட்சியாயிருக்கிறது..//

எப்டித்தான் வார்த்தை விழுதோ?
கலக்குங்க!

-கேயார்

நர்சிம் said...

எனக்குப் ஃப்ளோ ரொம்பப் பிடித்திருந்தது.

கார்த்திகைப் பாண்டியன் said...

எளிமையான ஆனால் அதே நேரம் வலிமையான கவிதையும் கூட...

Unknown said...

நல்லா இருக்கு தண்டோரா.

மணிஜி said...

வாசித்து கருத்துரைத்த நண்பர்களுக்கு என் நன்றியும்,வந்தனங்களும்

ᾋƈђἷłłἔṩ/அக்கில்லீஸ் said...

கவிதை ரொம்ப அருமையா இருக்குங்கண்ணா.. :))

முத்துகுமார் கோபாலகிருஷ்ணன் said...

நன்றாக இருக்கிறது. கவிதையின் கரு - மனோஜ் நைட் சியாமளனின் திரைக்கதை போல இருக்கிறது..!!

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நல்லா இருக்கு கவிதை. ஆனால், ஏற்கனவே படித்த ஞாபகம். மீள் பதிவா?

அகநாழிகை said...

என்னாச்சு, புதுசா எழுதுங்க தலைவா..

ஆரூரன் விசுவநாதன் said...

நல்ல வரிகள்