Wednesday, June 10, 2009

கூட்டாஞ்சோறு---10/06/09

சமீபத்தில் ஒரு விளம்பர படபிடிப்புக்காக கும்முடிபூண்டி அருகில் இருக்கும் சிறுவாபுரி என்கிற சிறு கிராமத்துக்கு சென்றிருந்தேன்.அழகான,அமைதியான கிராமம்.பச்சை பசேல் என்று இருந்தது.புகழ் பெற்ற முருகன் கோயில்,இயற்கை உரம் ஓட்டு சாகுபடி செய்யபடும் காய்கறிகள் எல்லாவற்றுக்கும் மேல் வெள்ளந்தியான மக்கள்.சென்னையிலிருந்து நாற்பது கிலோ மீட்டரில் ஒரு பாரதிராஜா கிராமம்.படபிடிப்புக்காக நன்கு விளைந்த வயல் வெளி தேவைப்பட்டது.ஒருவர் என்னை அணுகி தான் உதவுவதாக சொல்லி ஒரு வயலுக்கு அழைத்து சென்றார்.சுமார் ஐம்பது ஏக்கர் நிலம்.பம்புசெட் சகிதம் அமர்க்களமாக இருந்தது.எங்களுக்கு மிக பொருத்தமாகவும் இருக்கவே யாரிடம் அனுமதி கேட்பது என்று அவரிடம் கேட்டேன்.அதெல்லாம் நான் பார்த்து கொள்கிறேன்.கவலை வேண்டாம் என்றார் அவர்.இல்லை முதலில் இந்த இடத்தின் ஓனரை காட்டுங்கள்.நான் பேசி அனுமதி வாங்கிவிடுகிறேன்.உங்களுக்கும் தனியாக எதாவது தொகை தந்துவிடுகிறேன் என்று நான் சொல்ல அவர் சரி அனுமதி கேளூங்கள்..இது என் நிலம்தான் என்றார்.எனக்கு திகைப்பு ஒரு பக்கம் ,அவமானம் ஒருபக்கம்.அவ்ர் மிக,மிக எளிமையாக இருந்தார்.காலில் செருப்பு கூட இல்லை.அவர் ஒரு கூலியாள் என்றே நான் அதுவரை நிணைத்திருந்தேன்.உடன் அதை சொல்லி அவரிடம் மன்னிப்பு கேட்டவுடன் தான் அப்பாடா என்று இருந்தது.(முதல் படத்தில் முன்னால் கைகட்டி நிற்பவர்)

அவர் சொன்னவை: விவசாயம் கட்டுபடியாகவில்லை.ஏற்ற விலை கிடைப்பதில்லை.இலவச மின்சாரம் இல்லையென்றால் எங்கள் குடும்ப தேவை வரை பயிர் செய்து கொள்வோம்.நீங்க எல்லாம் பிஸ்ஸா சாப்பிட வேண்டியதுதான்.


வார்த்தைகள் 10 லட்சத்தை தொடப்போகின்றன. பத்து லட்சமாவது வார்த்தைக்கு கடும் போட்டாபோட்டி நிலவுகிறது. இதில் ஒன்று, ஆஸ்கர் விருதை பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பெற்றுத்தந்த "ஜெய் ஹோ' என்ற வார்த்தை.

ஆங்கில வார்த்தைகளை அங்கீகரித்து, புழக்கத்தில் விடும் பொறுப்பு, அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள "குளோபல் லேங்குவேஜ் மானிட்டர்' என்ற அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பல்வேறு நாட்டு நிபுணர்கள் இதில் உள்ளனர். பல்வேறு நாடுகளில் வெளியாகும் புத்தகங்கள், பாடல்கள், கவிதைகள், இன்டர்நெட், ப்ளாக்குகள் போன்றவற்றில் வெளியாகும் புதுப்புது வார்த்தைகளை இந்த அமைப்பில் உள்ள நிபுணர்கள் ஆராய்ந்து அங்கீகரிப்பர். இந்த வகையில், ஆங்கில வார்த்தைகள் 10 லட்சத்தை தொடத்தயாராகி விட்டது. இன்று பத்து லட்சமாவது வார்த்தையை தேர்வு செய்ய நிபுணர் குழு கூடுகிறது. பத்து லட்சமாவது வார்த்தையாக இடம்பெறும் போட்டியில் மொத்தம் 73 வார்த்தைகள் சேர்ந்துள்ளன. பல்வேறு நாடுகளில் இருந்து, இந்த வார்த்தைகள் அனுப்பப் பட்டுள்ளன.

இதில், இந்தியாவில் இருந்தும் சில வார்த்தைகள் அனுப்பப்பட்டுள்ளன. பெண் கள் அணியும் உள்ளாடை "கட்டீஸ்' என்று சொல்லப்படுகிறது. இந்த வார்த்தையும் தேர்வுக்கு பரிசீலனை செய்யப்படுகிறது.ஆஸ்கர் விருதுகளை குவித்த "ஸ்லம்டாக் மில்லினர்' படத்தின் பெயர் மற்றும் அதில் இடம் பெறும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த "ஜெய் ஹோ' என்ற பாடலில் அந்த வார்த்தையும், பத்து லட்சமாவது வார்த்தை ஆகும் போட்டியில் இடம்பெறுகின்றன. அமெரிக்காவில், டெக்சாஸ் நகரில் இந்திய நேரப்படி இன்றிரவு 8.50க்கு (உள்ளூர் நேரம் காலை 10.20)பத்து லட்சமாவது ஆங்கில வார்த்தை அறிவிக்கப்படுகிறது. ஆஸ்கர் விருது பெற்றதும், இந்தியா மட்டுமின்றி, உலகம் முழுவதும் "ஜெய் ஹோ' என்ற பாடல் பிரபலமானது.

"ஜெய் ஹோ' என்றால் என்ன என்று வெப்சைட்களில் பல லட்சம் பேர் தேடினர். பல பத்திரிக்கைள், புத்தகங்கள், படங்கள் என்று கோடிக் கணக்கில் இந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டது. இப்படி பல கோடி பேரிடை யே பிரபலமான ஒரு வார்த்தை, வழக்கமாக கவுரப்படுத்தப்படுவதுண்டு; அங்கீகரிக்கப்பட்ட ஆங்கில வார்த்தையாக அறிவிக்கப்படுவதுண்டு. ஆங்கிலத்துக்கு சம்பந்தமில்லாத வார்த்தையாக இருந்தாலும், வேற்று மொழி வார்த்தைகள், ஆங்கிலத்தில் இடம்பெறுவதுண்டு. பிரெஞ்சு உட்பட பல்வேறு நாடுகளின் மொழி வார்த்தைகளும் ஆங்கிலத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. அந்த வகையில், "ஜெய் ஹோ' பத்து லட்சமாவது வார்த்தையாகும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது.

சமீபத்தில் ரசித்த குறுஞ்செய்தி:

காதலி :நீ என்னை எவ்வள்வு நேசிக்கிறாய்?
காதலன் : ஷாஜகானைப் போல் நான்..
காதலி : அப்போ எனக்காக தாஜ்மஹால் கட்டுவாயா?
காதலன் ; நிச்சயமாக..இடம் எல்லாம் வாங்கிவிட்டேன்.நீ சாக வேண்டியதுதான் பாக்கி
ஆதலினால் காதல் செய்யாதீர்.

ஒரு "கேபிள் சங்கர்" ஜோக்(அதாங்க ”ஏ”)

இரு நணபர்கள் தத்தம் மனைவிகளுக்கு கார் டிரைவிங் சொல்லி கொடுத்தனர்.ஒரு இரவு ஒருவன் வீட்டை விட்டு வெளியில் வந்து தம் அடித்து கொண்டிருக்க,அடுத்தவனும் வருகிறான்.

முதல் நபர் : காரோட்ட பழக சொன்னது பெரிய தப்பா போச்சு?

ஏன் என்னாச்சு?

“” “” முத கியரை போடுறென்,இரண்டாவது கியரை போடுறேன்னு .வலி தாங்க முடியல..

அட அது பரவாயில்லப்பா...என் பொண்டாட்டி பத்து லிட்டர் ஊத்து..பதினஞ்சு லிட்டர் ஊத்துன்னு ரோதனை..

அப்புறம் என்ன பண்ணே.....

என்ன பண்ண..காத்து மட்டும் அடிச்சு விட்டேன்...

23 comments:

Cable சங்கர் said...

ஏ ஜோக்குக்கு என் பேரை போட்டதை வன்மையா கண்டிக்கிறேன். என் பேரை போட்டு ஜோக்குனு போட்டாலே தெரியாதா..? :)

அக்னி பார்வை said...

அய்யோ அய்யோ

Raju said...

:))

அகநாழிகை said...

‘தல‘ பின்னிட்டீங்க.

கேபிள் ஜோக் ஏற்கனவே கேட்டதுதான்னாலும் சிரிப்பு இப்பவும்.

‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்

ரமேஷ் வைத்யா said...

ஹாஹா...
ரசிக்கத்தக்க கூட்டாஞ்சோறு. தொடர்ந்து வருமா?

மணிஜி said...

ஏ ஜோக்குக்கு என் பேரை போட்டதை வன்மையா கண்டிக்கிறேன். என் பேரை போட்டு ஜோக்குனு போட்டாலே தெரியாதா..? :)
நீங்க யூத் இல்லன்னு சில விஷமிகள் பொய் பரப்புரை பண்ணிட்டுருக்காங்க..அதை முறியடிக்கத்தான்..

மணிஜி said...

அய்யோ அய்யோ..

கொல்றாங்களே..கொல்றாங்களே

மணிஜி said...

டக்ளஸ் ..நீ சின்ன பையானாச்சே

மணிஜி said...

‘தல‘ பின்னிட்டீங்க.

கேபிள் ஜோக் ஏற்கனவே கேட்டதுதான்னாலும் சிரிப்பு இப்பவும்.

‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்

வாசு மறைவாய் சொன்ன கதைகள் எழுதலாமா?

மணிஜி said...

ஹாஹா...
ரசிக்கத்தக்க கூட்டாஞ்சோறு. தொடர்ந்து வருமா?

ஏற்கனஏ இந்த தலைப்புல எழுதியிருக்கேன்..சரி..சாப்பிட்டிங்களா?(சாப்பாடு)

Jackiesekar said...

கூட்டாஞ்சோறு பிரமாதம்....

butterfly Surya said...

முதல் படத்தில் முன்னால் கைகட்டி நிற்பவர்)//????

படத்தை காணவில்லையே..??

ஏ ஜோக் பன்றி காய்ச்சல் போல பரவ ஆரம்பித்து விட்டது..

உபயம்: கேபிள்..

கேபிளாரே நீங்க பெரிய டைரக்டரானாதும் இவரு இண்டர்நெட்ல பலான ஜோக் எழுதி கொண்டு இருந்தவர்டா அப்படின்னு சொல்ல போறாங்க... பாருங்க..

நையாண்டி நைனா said...

எங்க அண்ணன் புகழ் பரப்பும் தண்டோரா வாழ்க...

பத்து லச்சமாவது வார்த்தையாக "கேபிள் சங்கர் ஜோக்" சேர்க்க "வலி" மொழிகிறேன்.

முரளிகண்ணன் said...

கூட்டாஞ் சோறு செம டேஸ்ட். நீங்களும் கேபிள் கால வாரீட்டிங்களே?

(அங்க ஜாக்கியும் வாறீட்டாரு)

மணிஜி said...

வண்ணத்துப்பூச்சியார்,முரளி அனைவருக்கும் மிக்க நன்றி...
நைனா..ஏன் உங்க புது பதிவு ஓப்பன் ஆகவே மாட்டேங்குது?
ஜாக்கி நன்றி

R.Gopi said...

//Cable Sankar June 10, 2009 1:12 AM
ஏ ஜோக்குக்கு என் பேரை போட்டதை வன்மையா கண்டிக்கிறேன். என் பேரை போட்டு ஜோக்குனு போட்டாலே தெரியாதா..? :)//

********

Besh Besh romba nalla irukkuuuuu..

T.V.ராதாகிருஷ்ணன் said...

மிகவும் சுவையாக இருக்கிறது..

மணிஜி said...

மிகவும் சுவையாக இருக்கிறது..

TVR சார்..நன்றி..வருகைக்கு

கலையரசன் said...

ஜெய் ஹோ... தண்டோராவுக்கு ஜெய் ஹோ!
எப்படியோ கூட்டி பெருக்கி, கூட்டாஞ்சோரு ஆக்கிட்டீங்க!
அப்புறம், போட்டோவுல யாரு? வெள்ளை சட்ட மட்டும்
தெரியுது?

இராகவன் நைஜிரியா said...

ஹி.. ஹி...

சங்கர் ஜோக் சூப்பர்ங்க...

புது மொந்தையில் பழைய கள்...

சிறுவாபுரி கோயிலுக்கு இரண்டு வருடம் முன்பு போயிருக்கேன். நல்ல இடம்.

விவசாயி சொன்னது சரிதாங்க..

மணிஜி said...

ராகவன்..வருகைக்கு மிக்க நன்றி..தொடர்ந்து ஊக்குவிக்க வேண்டுகிறேன்

"உழவன்" "Uzhavan" said...

சீக்கிரம் பிட்சா கடை வைக்கவேண்டியதான்.. அப்புதான் நம்ம பொழைக்கமுடியும்

மணிஜி said...

//சீக்கிரம் பிட்சா கடை வைக்கவேண்டியதான்.. அப்புதான் நம்ம பொழைக்கமுடியும்//



உழவுக்கு வந்தனை செய்யாததன் விளைவு..இது.நன்றி நண்பா..