Saturday, February 21, 2009

இருக்கிறயா?



எங்க இருக்கீங்க? எப்படி இருக்கீங்க? ..
போட்டோ வில் பார்கிறதுதான்..நேரிலே எப்போ?
இங்க நடக்கிறதை பாத்துகிட்டு இருக்கிங்கல்லே
சொந்த வாழ்க்கையும் சொல்லிக்கிற போல இல்லே ..
சோகத்த பங்கு போட ..யாரும் நாதி இல்லே ..
இங்கதான் இப்படி .. அங்க அம்மா வீட்லேயும் ஆறுதல் இல்லே..
பாவம் அங்க அவங்களுக்கே தலைவலியாம் ..
எங்க அய்யா க்கு முதுவலி..பெரியக்கா பஜ்ஜி கடை போட்டு இருக்காம் ..(பச்சை கலர் கேட் வாசல்லே ..)..பிசாவும் விக்கும் போலே ..
எதோ ரெண்டு மாமாங்கரங்க கொஞ்சம் அனுசொரனையா
இருக்காப்லே தெர்யுது?(அதுவும் காரணமாத்தான் )
ரெண்டு பெரிய அய்யாவும் ,ஒரு கைலெ சுத்திஉம் அறிவாளும்
எடுத்துகிட்டு தோட்டத்துக்கு மாம்பழம் பறிக்க போயிஇருக்கங்கலாம் ..
சூப்பர் ,ஞானி ,தளபதி, தலே எல்லாம் ஒரு ஒப்பாரி வைச்சுட்டு
கலைஞ்சுட்டங்க ..
பெரிய டில்லி தாத்தா ஆஸ்பத்திரிலேந்து வந்துட்டாங்க ...
அவங்க எப்பவுமே எதையுமே கண்டிகிட மாட்டாங்க ..மருமக வச்சதுதான் சட்டம் ...(இங்க எங்க தெருவுலே பட்டாசு கடை க்கு சரக்கு சப்ளை பண்ணுறாங்க ..)
சரி ..அத வுடுங்க.. இப்ப உங்க நிலைமையே சரி இல்லையாமே ?
நீங்கதான் நான் னு ஒரு படம் வந்திருக்காமே ??
அதுல வர மாதிரி ..எங்களுக்கு ஏதாவது செய்யுங்க ..
சாமி ஒன்னு கவனிசின்களா?
நீங்க இல்லே ..இல்லேன்னு அடிக்கடி சொல்றவந்தான் உங்க பேரை
நிறைய தடவை சொல்லறான் (மஞ்ச கலர் பையோட இருப்பாங்க இல்லே ..எங்க பெரிய அய்யா (இப்ப கூட ஒடம்பு முடியாம
ஆஸ்பத்திரிலே இருக்காங்க .. இன்னொரு பெரிய யப்பா கருப்பு சட்டை போட்டுக்கிட்டு வீரமா .. கோட்டை வாசலே மணி அடிச்சுகிட்டு இருப்பாங்களே ..அவரு ..நல்லாதானே இருக்காங்க ..

ஆனா மேலுக்குத்தான் உங்களை திட்டறது .

உள்ள பூஜை..புனஸ்காரம் இருக்கும்னு நினைக்கேன்
ஒரே குண்டா பெரிசா போட்டு ..மொத்தமா தீத்துட்டா தேவலைன்னு தோணுது ..

3 comments:

Anonymous said...

kadavulukku oru kaditham?

தேவன் மாயம் said...

எங்க இருக்கீங்க? எப்படி இருக்கீங்க? ..

போட்டோ வில் பார்கிறதுதான்..நேரிலே எப்போ?

இங்க நடக்கிறதை பாத்துகிட்டு இருக்கிங்கல்லே

சொந்த வாழ்க்கையும் சொல்லிக்கிற போல இல்லே ..

சோகத்த பங்கு போட ..யாரும் நாதி இல்லே ..

இங்கதான் இப்படி .. அங்க அம்மா வீட்லேயும் ஆறுதல் இல்லே..//

ஏன் நண்பரே! சோகம் மாறும்!!!

தேவன் மாயம் said...

ஒரு வேலைய் உள்ள்க்குள்ளே இருக்குமோ ..

சரியப்பா நீ அந்த பயலை கொஞ்சம் அனுப்பு ...

கழுத்த கடிக்கையிலே கொஞ்ச பதமா ..சொல்லி அனுப்பு ..

முடிஞ்சா நேர்லே வா ?இல்லேன்னாலும் நாங்க அங்கதானே வரப்போறோம் ?///

சாமிக்குக்கடிதமா? நல்லா இருக்கு!!