Thursday, September 9, 2010

சாரு , வாசு மற்றும் மதுரை



உயிர்மை மதுரை கூட்டத்திற்கு வருகிறாயா என்று பிரபல சிற்றிதழ் உரிமையாளர் திரு . அகநாழிகை பொன்.வாசுதேவன் கேட்டபோது , எனக்கு அம்மாவும் , அருளானாந்தாவும் நினைவுக்கு வந்தார்கள் . அவர்களுக்கும் இலக்கியத்திற்கும் ஸ்நானப்ராப்தி கிடையாது . அவை இரண்டும் மதுரையில் உள்ள பிரபல சாப்பாட்டு கடைகள் .(கேபிள் நோட் இட்) . அப்புறம் சோம மற்றும் சுராபானம் .விடு ஜீட் என்று ரயில் ஏறினோம் . ஏங்க நானும் வேலையை விட்டுட்டேன் . நீங்களும் இப்படி உருப்படாம போறீங்களே என்று தங்கமணி விசனப்பட்டது வேண்டாம் .

குளித்து..அட குளித்து முடித்து சுப்ரீம் ஹோட்டலுக்கு போனோம் . அங்குதான் எழுத்தாளர்”கள்” தங்கியிருந்தார் “கள்” . முதலில் தவறுதலாக பிரபஞ்சனின் அறைக்கதவை தட்டி விட்டு பின் சாருவின் அறைக்குள் நுழைந்தோம் . மனிதர் அடித்துக் கொண்டிருந்தார் . அட.தண்ணீயோ இல்லை அதுவோ இல்லை. டைப் அடித்துக் கொண்டிருந்தார் . சாருவுக்கும் தினம் எதுவாவது எழுதா விட்டால் “சாமி கண்ணை குத்தி விடுமோ என்று தோன்றியது . கேட்டேன் . யார் சொன்னது என்று பதிலுக்கு கேட்டார் . எல்லாம் உங்கள் தொண்டரடிப் பொடியாழ்வார்களில் ஒருவர்தான் என்று அவர் பெயரை சொன்னேன் .சரி இப்ப என்ன பண்ணலாம் என்று கேட்டார் . எது நடக்க வேண்டும் என்று விதி இருக்கிறதோ , அது நடக்கட்டுமே சாரு என்றேன் . நடந்தது .

பத்து மணிக்கு கோயில் வாசல் திறந்தது . நாங்கள் மூன்றாவது ஆள்தான் . அங்கு மீ த பர்ஸ்ட் போட முடியவில்லையே என்று சின்னதாக எனக்கு ஒரு வருத்தம் . வாசு ஒரு சோக ஸ்மைலி போட்டார் . சாரு வழக்கம் போல் ஃபைண்ட் த கேஃப் பிட்வீன் த பிளவுஸ் அண்ட்... பிஸியாக இருந்தார் . அறைக்கு திரும்பினோம் . கிட்ட தட்ட ஒரு மாதம் சந்திர மண்டலத்தில் தங்கி வசிக்க தேவையான பொருட்களுடன் . ஜெர்ரியிடமிருந்து கால் . அண்ணே ..ஆன் தி வே.. சரவணகுமாரும் அக்தே (ஆயுதஎழுத்து வரவில்லை)


முதல் சுற்று பேச்சின்றியும் , இரண்டாம் , மூன்றாம் சுற்றுகள் வாயை மூடாமலும் கழிந்தது . மேட்டூர் அணையின் நீர் மட்டம் குறைந்து கொண்டே வந்தது . இதோ நான் இருக்கிறேன் எடியூரப்பா என்று ஜெர்ரீ வந்தார் . சென்றார் . வென்றோம் . அஞ்சு வருடமாக காய்ந்து கிடைக்கும் அதிமுக காரன் போல் இருந்தோம் . எவ்வளவு வந்தாலும் தீர்ந்து கொண்டே இருந்தது . பிரபஞ்சன் கையில் ஒரு கிளாஸ் பீருடன் வந்தார். அன்பிற்குறிய மனுஷ்யபுத்திரன் வந்தார் . விமர்சகர் ஷாஜி வந்தார் . பேச ஆரம்பித்தார்கள் . நான் ரசிக்க ஆரம்பித்தேன்


சரவணக்குமார். செ வந்தார் . ஜோதியில் அவரும் ஐக்கியமாக சாப்பாடுக்கான முஸ்தீபுகள் ஆரம்பம் . ஜெர்ரீ நான் தான் சாப்பாடு ஏற்பாடு பண்ணுவேன் என்று அடம் பிடிக்க , நானும் அவரும் ஆட்டோ பிடித்தோம் அருளானந்தா மெஸ்சுக்கு. ஒரு டிஸ்கவரி சேனலை அள்ளிக் கொண்டு , அப்படியே மீண்டும் அரசுக்கு வருமானம். ஒரு முழு... அறைக்கு வந்தோம்.. அதகளம் மீண்டும் ஆரம்பமானது..

டிஸ்கி : அருளானாந்தா மெஸ்காரர் ஜெர்ரிக்கு உறவு என்று சொன்னதாக நியாபகம். ஆனால் அவர் அங்கு இன்னொன்றும் சொன்னார்

சென்னையிலிருந்து எழுத்தாள நண்பர்கள் வந்திருக்கிறார்கள் .

“கூட்டு ,பொறியல் எல்லாம் நிறைய கட்டிக் கொடுங்க “


டிஸ்கி : 2

நர்சிம் சொன்னது போல் இல்லை . அந்த ஓட்டல் அங்குதான் இருக்கிறது .
வெயிலான் , முரளிகுமார் , கா.பா . ஸ்ரீ தருமி ஐயா ஆகியோரை சந்தித்ததில் மகிழ்ச்சி ..

17 comments:

அகநாழிகை said...

வாழ்க வளமுடன்..
(இப்ப சந்தோஷமா?)

பாலா said...

அண்ணே.. ஜெர்ரியை பிடிச்சி வைங்க.

தோ.. வந்துட்டேன்.

செ.சரவணக்குமார் said...

//சென்னையிலிருந்து எழுத்தாள நண்பர்கள் வந்திருக்கிறார்கள் .

“கூட்டு ,பொறியல் எல்லாம் நிறைய கட்டிக் கொடுங்க “//

அண்ணே ரெண்டு நாள் சந்தோசமே இந்த ரெண்டு வரியில இருந்துதான் ஆரம்பிக்குது...

யப்பா சாமி சிரிச்சி முடியல.

வாழ்க்கையில மறக்கவே முடியாத ரெண்டு நாள். உங்களுக்கும் வாசு அண்ணனுக்கும் எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல தலைவா.

அந்த கூட்டுப் பொரியல் மேட்டர் ஜென்மத்துக்கும் மறக்காது.. இப்ப வரைக்கும் சிரிச்சிக்கிட்டே இருக்கேன்..

செ.சரவணக்குமார் said...

//ஹாலிவுட் பாலா said...

அண்ணே.. ஜெர்ரியை பிடிச்சி வைங்க.

தோ.. வந்துட்டேன்//

வாங்க பாலாண்ணே..

அமெரிக்கால இருந்து எழுத்தாளர் பாலாண்ணே வந்துருக்காங்கன்னு சொல்லி கூட்டுப் பொரியல் எல்லாம் எச்சா கட்டச்சொல்லலாம். ஜெர்ரி அண்ணன் இருக்காரு நோ ப்ராப்ளம்..

vasu balaji said...

ஆவணிப் பெருக்கா:))

மதுரை சரவணன் said...

மணிஜீ நீங்க ரெம்ப மோசம் ... எல்லாத்தையும் சொன்னீங்க நான் மட்டும் இல்லை.. ஆனாலும் உங்கள் பேச்சு , நக்கல் , நையாண்டி எனக்கு உங்கள் இடுகையைப்போலவே பிடித்திருந்தது... மறக்க முடியாத நிகழ்வு...

pichaikaaran said...

நல்ல பதிவு அண்ணே

பனித்துளி சங்கர் said...

பகிர்ந்தமைக்கு நன்றி

சிநேகிதன் அக்பர் said...

அந்த சமயத்தில் உங்களோட போனில் உரையாடியதில் மிக்க மகிழ்ச்சி. கவிதை சொல்லப் போறேன்னுட்டு சொல்லவே இல்லை :)

Cable சங்கர் said...

நாசமாய் போக...

Jerry Eshananda said...

// அருளானாந்தா மெஸ்காரர் ஜெர்ரிக்கு உறவு என்று சொன்னதாக நியாபகம். ஆனால் அவர் அங்கு இன்னொன்றும் சொன்னார்//
மதுரைல இருக்கிற எல்லா ஹோட்டல் காரங்களும் நம்ம உறவு தாண்ணே.......பழகுறதுல பாசக்கார பயபுள்ள நான்...

Jerry Eshananda said...

வாங்க ஹாலிவுட் பாலா.....உங்களுக்கும் ...கூட்டு ...பொறியல்....ரெடி பண்ணிடலாம்....

Jerry Eshananda said...

கேபிளாரின் சாபம் பலிக்காமல் போகக்கடவது......அடுத்த தடவை கட்டாயம் வாங்கப்பு....வாங்கி கட்டுப்படி ஆகல....அதனால அடுத்ததடவைஎல்லாம் நம்ம பசங்க கிட்ட சொல்லி "சொந்தமா காச்சிரலாம்.".

பத்மா said...

அதகளம் பண்றீங்கப்பா

மணிஜி said...

நண்பர்களுக்கு நன்றி

மதுரை சரவணன்..சாரி ..மறந்து விட்டேன்..(மப்பனை மன்னித்து விடுங்கள்)

'பரிவை' சே.குமார் said...

நல்ல பதிவு அண்ணே...
பகிர்ந்தமைக்கு நன்றி.

butterfly Surya said...

மறக்க முடியாது..

“மதுரை சம்பவம்”