Tuesday, May 5, 2009

கத்திரி வெயிலும் ,,அழ்ஷடமத்து சனியும்

எல்லா பதிவர்களூம் திரைபட விமர்சனம் எழுதறாங்க..நானும் ஒண்ணு எழுதலாம்னுதான்.பசங்க,மூன்றாம் விதி இதை பத்தி எல்லாரும் எழுதிட்டாங்க.நா ஏற்கனவே எழுதுன ஒரு மேட்டர கொஞ்சம் தூசு தட்டி..இதோ...




எப்போ? எப்போ? என்று எதிர்பார்த்த எந்திரன் வெளியாகிவிட்டது..ஆனால் ரோபோ? என்ற பெயரில்..(தமிழ் தலைப்புக்கு வரிச்சலுகை கிடையாது..என்ற புதிய அறிவிப்புதான் காரணம்...(என்ன ஒரு தமிழ் பற்று..)சன் டிவி பிரமாண்ட தயாரிப்பு(200 கோடி என்று பேச்சு). இன்னும் ண்டு பிடிக்காத இடங்கள் தவிர எல்லா இடங்களிலும் படம் பிடித்தது.ரஜினி..முன்னாள் உலக அழகி...ஷங்கர்..ஆஸ்கார் ரகுமான்.அதை விட சன் குழுமத்தின் 24 சானல்கலிளும் 24 மணி நேரமும் விளம்பரம் .
பணம் போடுவதற்க்கு ஆள் கிடைத்தால் எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்வேன்.என்று மீண்டும் நிருபீத்திருக்கிறார் காதல்,கல்லுரி,வெய்யில் போன்ற பட்ஜெட் படங்களின் தயாரிப்பாளர் ஷங்கர் 8
ஹெலிகாப்டர்கள்(ஷங்கரின் ராசி எண்) வானில் வட்டமடிக்க,பூனா மும்பை சாலையில் 24 பி.எம்.டபிள்யூ கார்கள் பறக்க(எவன் அப்பன் வீட்டு காசு),ஒரு காரில் ரஜினி உலக அழகியுடன் பறக்க பின்னால் இன்னொரு ரஜினி துரத்த.படம் சூடு பிடிக்கிறது.
தனது வழக்கமான பார்முலாவை தள்ளி வைத்து விட்டு புதிய பாதையில் பயணித்திருக்கிறார் இயக்குனர்.சைன்டிஸ்ட் ரஜினி? அவரை துரத்தி துரத்தி காதலிக்கும் ஐஸ்.....ரஜினி தந்தையாக நாட்டின் தலைவராக சாருஹாஸன்..அவரை கொன்று விட்டு நாட்டை ஆள நினைக்கும் வில்லன்..வில்லனின் திட்டத்தை தெரிந்து கொள்ளும் சாருஹாசன் தான் ஒரு பனிப்புயலில் சிக்கி மறைந்து விட்ட்து போல் ஒரு நாடகம் போடுகிறார்.சந்தானமும்,கருனாசும் இதற்கு உதவுகிறார்கள்...நாட்டின் தலைமை பொறுப்பு ரஜினியிடம் வருகிறது.ஆனால் ரஜினியோ ஐஸை விட்டு பிரிய மனமில்லாமல்(இருவரும் வேறு நாட்டில் படித்து கொண்டிருக்கும்போது காதலிக்கின்றனர்) தன்னை போலவே ஒரு பிம்பத்தை உருவாக்குகிறார்.அதுதான் ரோபோ..???ரோபோவை நாட்டின் தலைவராக இருக்கும்படி ப்ரொக்ராம் செய்து விடுகிறார்.பின் என்ன?ஐஸ்வர்யாவுடன் கும்மாளம்தான்?




முதல் டூயட் பாடலான

"ஐஸ்..ஐஸ்.. வர்ரியா..கிஸ்..கிஸ்..தர்ரியா..
மெர்க்குரி உதடுதான்... ஸ்டிராபெரி கனவுதான்
பாஸ்பரஸ் படுக்கையில் பகலும் இரவும் பாம்பிங்க்தான்..
வாலி எழுதிய இந்த தமிழ் பாடல் 185 நாடுகளில் 186 நாட்கள் படம் பிடிக்கபட்டது...1500 டான்சர்கள்,1501குதிரைகள்,1502 மான்கள்,1503 மயில்கள்...1000 டன் சாம்பிராணி..2000 டன் தக்காளி
மொத்த செலவு 40 கோடி..
சரி ..கதைக்கு வரலாம்...நாட்டை கைப்பற்ற நினைக்கும் வில்லன் ரோபோ வை ரஜினி என்று நினைத்து கொல்ல முயற்சிக்கிறான்..இந்த காட்சிகளில் ஹாலிவுட்டை அசால்ட்டாக முந்தியிருக்கிறார் இயக்குனர்..திடீர் திருப்பமாக ரோபோவின் சாப்ட்வேர் கரப்ட் ஆகி மனிதனை போல் காதல் உணர்வு வந்து விடுகிறது..வில்லன் ஒரு பெண் ரோபோவை (ஐஸ்வர்யாவை போலவே)உருவாக்கி ரஜினி ரோபோவுடன் நெருங்க விடுகிறார்கள்..நாட்டுக்கு ஐஸூடன் ரகசியமாக வரும் ரஜினி இரண்டு ரோபோக்களும் நெருக்கமாக இருப்பதை பார்த்து விடுகிறார்....தான் செய்த ப்ரொக்ராம் மாறி விட்டது என்று உணருகிறார்...(முதல் பாதி முடிவு)

இடைவேளை வரை ரோபோ விமர்சனம் பார்த்திருப்பீர்கள்..மன்னிக்கவும் நண்பர்களே.நான் அதுவரைதான் படம் பார்த்தேன்..அதன் பின்......கறுப்பு சட்டை அணிந்த குண்டர்களின் தடியடி,ஆசிட் முட்டை வீச்சு.....பெட்ரோல் குண்டுகள் வீச்சு..எங்கும் கலவரம்.....ரத்த ஆறு...????காரணம்..அஞ்சா நெஞ்சன் அழகிரி.... மதுரை மா நகராட்சி பொறுப்பு குழு உறுப்பினர் மாண்புமிகு "அட்டாக்" பாண்டி தலைமையில் வந்த கும்பல்...ரோபோ திரையிடப்பட்டிருந்த அத்தனை இடங்களிலும் இந்த கதிதான்...இந்த சம்பவத்தில் மதுரை ஆட்கள் யாரும் ஈடுபவில்லை...கோர்ட் மூடி விட்டதால் வக்கீல்களுக்கு இந்த பணியை கொடுத்து விடுமாறு அண்ணன் பெருந்தன்மையுடன் கூறி விட்டதாக அவர் மேலும் கூறினார்.

.சம்பவ இடத்தில் பேட்டி அளித்த காவல் துறை தலைவர்..."அனைவரும் அமைதியாக அலறிக் கொண்டே" கலைந்து விட்டதாகவும்,நிலைமை இப்போது கட்டுக்குள் இருப்பதாகவும் தெரிவித்தார்.மேலும் அட்டாக் பாண்டி" அண்ணன் ஆணையின்படி 1500 மொபைல் ஹோம் தியேட்டர்கள் தமிழ் நாடு முழுவதும் உலவிக்கொண்டிருக்கும்..பொது மக்கள் படம் இலவசமாக ரோபோ வை பார்க்கலாம்...மேலும் படம் பார்க்கும் அனைவருக்கும் ஒரு பவுன் தங்க நாணயம் பரிசாக வழங்கப்படும்..என்றும் அவர் மேலும் கூறினார்.மீறி படத்தை யாராவது திரையிட்டால் அவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும் என்றும் கூறினார்.காவல் துறை தலைவரும் அதை ஆமோதித்தார்.

காற்று கூட எங்கள் இடையில் இனி நுழையாது என்று அழகிரி, மாறன் சகோதரர்களை பற்றி சொன்னது என்னவாயிற்று??கலவரம் எப்படி நுழைந்தது??பின் வரும் ரோபோ உருவாக்கம்...பரபரப்பு செய்திகளில்...................

ரோபோ.....திரைக்கு பின்னால்.....
முதலில் மீண்டும் எப்படி பிரிவு/பிளவு ஏற்பட்டது..
இதற்கு மூலக் காரணம் ஷங்கர்தான் எங்கின்றனர்..தகவலறிந்தவர்கள்..
சன் பிக்சர்ஸ் லோகோ வை சூரியனில் போய் ஷுட் பண்ணலாம் என்று ஷங்கர் பிரியப்பட்டிருக்கிறார்..இதற்காக திரு. மயில்சாமி அண்ணாதுரை, திரு.அப்துல் கலாம் ஆகியோரிடமும் ஆலோசனை கேட்கபட்டிருக்கிறது..ஆனால் அருகிலிருந்த தயாநிதி என்னது?சூரியனுக்கா..நாங்க இங்கிருந்தே சூரியனை(உதய) சுடுவோம்..தெரியுமில்லே..என்று வாய்த் துடுக்காக சொல்லி விட்டாராம்..இது அழகிரி காதுக்கு போக ..வந்தது வினை...
"நாங்கள் சிறியவர்கள்தானே, எங்களை மன்னிக்கக் கூடாதா..என்று செல்வி மூலம் தூது அனுப்பியதாக ஒரு தகவல்???

ஜில்.. ஜில்.. ஜில்... ஜொள்...ஜொள்... ஜொள்....
ஆர்.டி. எக்ஃஸ்.... உன் விழியில்....
என் மடியில் .... டைனமைட்
அண்டார்டிகாவில் செய்வோம்...லவ் ஃபைட்.
பிப்பெட் நீதான்.... பீயுரெட்.நாந்தான்..
டெஸ்ட் டீயூபில்... ரெஸ்ட் இனி ..அதை
யூ ட்யூபில் கண்டு நீ களி ஹனி.....
கூகுளில் தேடி...... குயிக் டைமில் கூடி...
பிளாக்குகளில் பாடி.....பாரடைஸ் போகலாம்...
என் பிளாக் பெர்ரி நீ வாடி....
கலைமாமணி,வித்தக கவிஞர் பா.விஜய் ..எழுதிய இந்தப் பாடல் பனிப் பிரதேசமான அண்டார்டிகாவில் நடை பெற்றது...இப்பாடலுக்கு 5000 குளிர்சாதன பெட்டிகள் கொண்டு செட் அமைக்க வேண்டும் என்று ஷங்கர் பிரியப்பட....உடனே கொரியாவிலிருந்து சாம்சங்க் கம்பெனியிலிருந்து வரவழைககபட்டது.
இங்கு பிரிட்ஜ் விற்ற முதல் கம்பெனி நாங்கள்தான் என்று அக்கம்பெனியின் தலைமை
நிர்வாகி சூ சென் பெருமையுடன் கூறினார்..
படபிடிப்பு முடிந்தவுடன் 5000 குளிர் பெட்டிகளையும் அங்கிருந்த எஸ்கிமோக்களுக்கு இலவசமாகவே வழங்க வேண்டுமென்று ரஜினி கூறி விட கலாநிதி மாறன் மிகவும் பெருந்தன்மையுடன் சம்மதித்து விட்டார்.

கரு விழி..குரு பார்வை
சுரு..சுரு நாசி..என் பெயரை நீ சுவாசி
செவ செவ அதரம்..நீ என் மதுரம்...
பழ ..மலை...கீழே நூலிடை
அதன் பின் ஆலிலை..

வாலி எழுதிய இந்த பாடலும் சீரோ டிகிரி குளிரில் படமாக்கபட்டபோது ரஜினி எவர் சில்வரில் செய்யபட்ட முழு ஆடை அணிந்திருந்தார்(மனிஷ் மல் ஹோத்ரா)..ஐஸ் புதுமையாக(3) இலைகளினால் வடிவமைக்கபட்ட இலக்கிய நயம் சொட்டும் உடை அணிந்திருந்தாராம்.


ஒரு முக்கிய செய்தி...
இயக்குனர் ஷங்கரின் அடுத்த சொந்த படத்தை அவர் உதவியாளர் இயக்குகிறார்.
படபிடிப்பு முழுவதும் "எஸ்" பிக்சர்ஸ் அலுவலகத்திலேயே நடை பெறும்...என்று ஒரு பத்திரிக்கை செய்தி குறிப்பில் கூறப் பட்டுள்ளது.


கத்திரி வெய்யில் நேத்துதான் ஆரம்பிச்சுச்சு..

6 comments:

குடந்தை அன்புமணி said...

மண்டை காய்ந்து போச்சுங்க...!

மணிஜி said...

Navarathna oil rompa nallathu

Cable சங்கர் said...

தலைவா.. மீள் பதிவு என்றாலும் நல்லாத்தான் இருக்கு

மணிஜி said...

போன பின்னுட்டத்துல படத்துக்கு போகும் போது கூப்பிடுங்கனு சொன்னேன்..விட்டுடு போய் 3 ம் விதி பாத்துட்டிங்க..எப்போ அடுத்த செஷன்..(சைதாபேட்டை கேட்டு கிட்ட)

அப்பாவி தமிழன் said...

ஏன் இப்டி

ரமேஷ் வைத்யா said...

ஏன் இந்த காண்டு? அத்தனை பாடல்களும் சூப்பர் ஹிட். காலர் ட்யூன் நம்பர் தரவும்.